அமித்து அம்மா ஆரம்பிச்சு, வித்யா தொடர்ந்து அப்புறம் என்னையும் இழுத்து விட்டுட்டாங்க இதுல. ஓக்கே என்னோட கொசுவத்தி இல்லை அனுபவங்கள் எப்படியாவது எடுத்துக்கோங்க!
உண்மையில் ஒரு பதிவு எழுதத்தான் நினைத்திருந்தேன் வழக்கம்போல பப்புவை பற்றி! வில் பப்பு ஃபாலோ அ ரிலீஜியன், அப்படின்னு! ஏன்னா, ரிலீஜயனை விட ஸ்பிரிச்சுவலா இருக்கறதுதான் முக்கியம்ன்றது என்னோடக் கருத்து! அந்தப் பத்தி அப்புறம் பார்ப்போம்!
நான், ஒரு தமிழ்நாட்டு பெண்ணுக்குரிய அடையாளங்களான, நீள முடி, பூ வைக்கிறது, கொலுசு போட்டுக்கிறது, கை நிறைய வளையல் இதெல்லாம் இல்லாத ஒருத்தி. ஏனோ அதெல்லாம், சீரியல்லயும் சினிமாலயும் வர்றவங்களுக்குத்தான் எனும் நினைப்பு! பெண்ணுக்கு படிப்பும் அறிவும் இருந்தாப் போதும்ன்ற நினைப்பாக் கூட இருக்கலாம்! உண்மை-ன்னு ஒரு புத்தகம் எஙக் வீட்டுக்கு வரும். அதை ஐந்தாவது படிக்கும்போதிலிருந்து படிக்க ஆரம்பிச்சேன். அதுல படிச்சு, சின்ன வயசுலயே மனசில பதிந்ததனாலேயே என்னவோ எனக்கு நகை, அப்புறம் பூ மேலல்லாம் ஈர்ப்பு இல்லாமயே போய்டுச்சு! பூ ரொம்ப பிடிக்கும், ஆனா பறிக்கப் பிடிக்காது. ஏன்னா, ஒருதடவை கோகுலத்தில், “பூ எனக்குப் பிடிக்கும், ஆனா அதை பறிச்சு ஜாடியில் வைக்கப் பிடிக்காது, குழந்தைகள் கூடத்தான் அழகு. அதனால், அவர்களின் தலைகளை வெட்டியா வைச்சிக்கறோம்-”ன்ற மாதிரி ஒரு பொன்மொழி படிச்சேன். அதிலேர்ந்து பூக்களை பறிக்கறது இல்லை. அதுவுமில்லாம, பூவை தலையில் வைக்க அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்ததில்லை நான். ஒருமுறை, மதுரை பஸ் நிலையத்தில் ஒரு பெண் நின்று ஓரத்தில் இருந்த கடையில் பூவாங்கி தலையில் வைத்துக் கொண்டு பஸ் ஏறிச் சென்றதை மிகுந்த வியப்போடு பார்த்தேன் நான்!
வீட்டுல எனக்கு நகை வாங்கினாக் கூட நான் போட்டுக்கவே மாட்டேன். மேலும் அதெல்லாம் எனக்குத் தெரியாமலே வச்சிருந்தாங்க. (காலேஜ் போனப்பறம்தான் ஆகா, இவ்ளோ இருக்கான்னு தெரிஞ்சது. அதிகமில்லை, குட்டி குட்டியா கம்மல்கள்)எனக்கு அதெல்லாம் வேணாம்னு தொடவே மாட்டேன். நானே சம்பாரிச்சுதான் போட்டுக்கணும்னு ஒரு வைராக்கியம். மேலும் நகை மேல அப்படி ஒன்னும் பெரிய ஆசையெல்லாமும் இல்லை. வீட்டிலயும், எனக்கு நகை ஆசை வராதமாதிரிதான் பார்த்துக்கிட்டாங்க. நகை-னு ஒண்ணு போட்டுக்கணும்னு தோணினது, கல்யாணத்துக்கு அப்புறம்தான்! உறவினர் கல்யாணம், விசேஷங்கள்-னு போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம், அம்மா கொடுத்த நகைகளை பூட்டி வைக்காம அப்போ மட்டும் போட்டுக்க ஆரம்பிச்சேன். மேலும், இன் லாஸ்-க்கு நாம் போட்டுக்கலன்னா அது பிரஸ்டீஜ் பிராப்ளம்! அதுவும், ரொம்ப சிம்பிளாதான், அப்போ மட்டும் அமித்து அம்மாவோட அம்மன் எஃபக்ட் கொடுப்பேன் நான். புடவைக் கட்டி, கை நிறைய மேட்சிங் வளையல் போட்டு, தொங்கல் கம்மல், இல்லேன்னா இருக்கவே இருக்கு முத்துக்கள். பூ மட்டும் நோ சான்ஸ், ஏன்னா எனக்கு இருக்கற முடியில் வைக்க முடியாதே!
கல்யாணம் நிச்சயமானபின் முடி வெட்டாம விட்டுட்டேன் வளரட்டும்ன்னு, முகிலின் பாட்டி வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டதால! கல்யாணத்திற்கு அப்புறம், ட்ரிம் பண்ணிட்டேன், கொஞ்சமா பின்னல் போடறமாதிரி. அப்போ எங்க மாமியார் வந்திருந்தாங்க ஊரிலிருந்து. நான் ஆபிஸ் கிளம்பும்போது, நான் தலை சீவறேம்மான்னாங்க. யார் என் தலையில்
கைவச்சாலும் எனக்கு பிடிக்காது. ஆனா, நோ சொல்லதான் நமக்கு தெரியாதே. சோ, பின்னி விட்டுட்டு,பிரிட்ஜிலிருந்து பூ எடுத்துட்டு வந்தாங்க. கனகாம்பரம். மஞ்சள் கனகாம்பரம்.
அன்னைக்குன்னு பார்த்து, என் கூட வேலை செய்ற பிரண்டு வேற நான் ஆட்டோலதான் போறேன், ரெடியா இரு, பிக்கப் பண்ணிக்க வரேன் ஒண்ணா போலாம்னு வேற சொல்லியிருந்தா. ஆகா, பிரண்ட்ஸ்-எல்லாம் பார்த்தா கிண்டல் பண்ணியே நம்மளை காலி பண்ணிடுவாங்க்ளேன்னு ஒரு கிலி வேறே! ஆனா, வைச்சிக்காம இருந்தா அவங்க ஹர்ட் ஆகிடுவாங்கன்னும் தோணுது. என்ன பண்ணறது! என் பிரண்டு வர்றா, அவளுக்கு வேணும்னு கட் பண்ணி வைச்சிட்டு, போகும்போது வச்சிக்கறேன் ஆண்ட்டி-ன்னு சொன்னா நானே வச்சிடுறேம்மான்னு வைச்சிவிட்டுட்டாங்க, பார்த்தா அப்பவும், சடையை விட நீளமா தொங்குது பூ! அப்புறம், என்ன ரெண்டு பேரும் மஞ்சள் கனகாம்பரம் வச்சிக்கிட்டு சியன்னா ஸ்விட்ச் பக் பிக்ஸ் பண்ணக் கிளம்பினோம். ஆட்டோவில் போகும்போது ரெண்டு பேரும் எடுத்து ஹாண்ட் பேகில் வைச்சிக்கிட்டோம், அந்தப் பூவை!!
மெட்டிப் போட்டுக்க பிடிக்கும் எனக்கு. ஆனா சில சமயம், செருப்புகளோட ஒத்துப் போகாது, உறுத்தும். ஆனா, பப்பு ஒரு வயசா இருக்கும்போதிலிருந்து அதை கழட்ட முயற்சி செஞ்சு ஒன்றரை வயசுக்குள்ள வெற்றியும் பெற்று விட்டாள். கையில் வச்சிருந்து முழுங்கிட்டா என்ன பண்றதுன்னு, அதையும் கழட்டி வைச்சதுதான், இன்னும் போடலை. எங்கம்மாவும் திட்டித் திட்டி பார்த்துட்டாங்க. நாமதான் சொன்னா செய்ய மாட்டோமே! ஒருவேளை சொல்லாம இருந்திருந்தா போட்டிருப்பேனோ என்னவோ!
கொலுசு போட்டும் பழக்கமில்லை எனக்கு. ஆனா யாராவது போட்டிருந்தா பார்க்கப் பிடிக்கும்.
கல்யாணத்தின் போது, அம்மா ஒரு செட்டும், கல்யாணத்திற்கு அப்புறமும் மாமியார் ஒரு செட்டும் கொடுத்தாங்க. ஆனா, நாந்தான் போட்டுக்க மாட்டேனே.வழக்கம் போல மாமனார் கொலுசு போடும்மா ந்னு சொன்னார். ரொம்ப சத்தம் வரும் அங்கிள், ஆபிஸ்-ல் எல்லாரும் என்னையே பார்க்கற மாதிரி பீலிங் ந்னு சொன்னது,, அந்த மணிகளை மட்டும் எடுத்திட்டு கொடுத்தார். அப்புறம் அவங்க ஊருக்குப் போனப்பறம் கழட்டி வைக்கிறது, அவங்க நாளைக்கு வராங்க இன்னைக்கு நைட் எடுத்து போட்டுக்கறதுன்னு ரெண்டு மூனு தடவை நடந்துச்சு. நம்ம கொள்கைகள், விருப்பங்கள் அடுத்தவங்களை காயப் படுத்திடக்கூடாதுன்னு! அப்புறம், முகில் இதைப் பார்த்திட்டு, உனக்கு இஷ்டமில்லேன்னா போடாதே, நான் கேட்டா சொல்லிக்கறேன் அப்படின்னு சொல்லிட்டாங்க. சோ, அதுக்கும் டாடா!!
நகையெல்லாம், சிட்டில வீட்டுல இருந்தா பயம்ன்னு, லாக்கர்ல கொஞ்சம், எங்க மாமியார் வீட்டுல கொஞ்சம்னு இருக்கும். ஏன்னா, சில சமயம் அது ஹிந்தி ட்யூசன் படிக்கப் போகும். அதேசமயம், ஊரில விசேஷம்னா, அங்க இருக்கும் நகையை போட்டுக்கிட்டு போகலாம். மத்தபடி தாலி போட்டிருக்கும் செயின் மட்டும்தான்! கொத்துக் கொத்தா போட்டுக்கற வழக்கமும் கிடையாது. இப்போ சுத்தமா வளையலும் கிடையாது, போட்டிருந்தா இப்படி டைப் அடிக்கமுடியுமா என்ன! காலேஜ் டே, சாரி டே மாதிரி வந்தா மட்டும் பேஷனபிளா போட்டுப்பேன். அவ்வளவுதா, ஆனா சின்ன வயசுல எக்கச்சக்கமா பான்ஸி வளையல்கள் போட்டிருக்கேன். அதுக்கு அப்புறம் பிரெஸ்லெட்தான். ஏனோ தங்க வளையல் என் கைக்கு நல்லாயில்லாத மாதிரி பீலிங். சின்ன வயசுலே ஒரு தடவை, குடும்ப நண்பர் கல்யாணத்தில், செயினையோ கம்மலையோ வேற தொலைச்சுட்டேன்! அவ்ளோதான், அதுவும் கட். அதுவும் இல்லாம, காலேஜ் படிச்சது ஹாஸ்டல், அதுவும் கொடைக்கானல். பனிரெண்டு மணிநேர பயணம். அதனாலேயே காதுல போட்டுக்க சின்னச் சின்ன கம்மலா கலெக்ஷன் வச்சிருப்பேன். உயிருக்கே ஆபத்தாயிடக்கூடாது இல்லையா! அப்படியே போட்டு போட்டு, இப்போ எனகிட்ட இருக்கறதெல்லாம் லைட் வெயிட் மாடல்கள் தான்!
பதிவு ரொம்ப நீளமா போய்கிட்டிருக்கு!
முடிவா என்னன்னா, சாதாரணமான நாட்கள், அலுவலகம் செல்லும் போது கம்மல்,
தாலி போட்டிருக்கும் செயின். வளையல், பூ நோ எண்ட்ரி! புடவை, அதான் சொன்னேனே, கல்யாணம் அதுவும் காலை முகூர்த்ததிற்கு போனால் மட்டுமே. ரிசப்ஷன் என்றால் சல்வார்! இப்படியிருக்கும் நான், என்னோட அடுத்த தலைமுறைக்கு என்ன கத்துக் கொடுக்கப் போறேன்னு நினைக்கறீங்க? உனக்கு இஷ்டமிருந்தா இதெல்லாம் போட்டுக்கோ, வற்புறுத்தவோ தலையிடவோ மாட்டேன். ஆனா, உனக்கு பிடிச்சமாதிரி வேணுங்கறதை நீ சம்பாரிச்சுதான் வாங்கிக்கணும்!
பி.கு:
இதுக்கு எல்லாம் காரணம், அமித்து அம்மாவோட போட்டோ பார்த்து ஒன்னைக் காட்டினாங்க..பார்த்தா, கையில் ஒரு வேல் வைச்சி, ஏதாவதொரு பூவுக்குள்ள நிக்கவோ உட்காராவோ வைச்சு அம்மன் படம் தோத்துது போங்க, அந்த ரேஞ்சுல இருந்தாங்க!! அதைப் பத்தி பேசிக்கிட்டே இருந்தப்போ இதைப் பத்தி பதிவு போடலாமான்னு பேசினது, இப்போ இந்த நெலமையில் இருக்கு. யாராவது இந்தப் பதிவை தொடர்ந்தா நல்லாயிருக்கும்!
Saturday, December 06, 2008
சென்னை : குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்
குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்பு அம்மாக்கள் பதிவுகளில்.
Friday, December 05, 2008
திருந்திய மனம்
பள்ளி படிக்கும் வயதில், கதைகளும் ஜோக் என்ற பெயரில் ஒரு சில அறுவைகளும் எழுதியிருக்கிறேன், கவிதைகளோடுகூட! அந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் எல்லாமே எனது கஸின்ஸின் பெயர்கள்! நல்லவேளை, அப்போ அவங்கள்ளாம் இதை படிச்சிருந்தா என்னை பின்னியெடுத்திருப்பாங்க!! ஓக்கே..ஒன்னொன்னா ரிலீஸ் பண்றேன்..இது எழுதினப்போ நான் 11வது படிச்சிக்கிட்டிருந்தேன்னு என்னோட நோட்டு சொல்லுது!!

திருந்திய மனம்
கயல்விழி படித்துக் கொண்டிருந்தாள். ஐந்தரை மணியாகிக் இருந்தது. இன்று அவளுக்குப் பரிட்சை! பத்தாம் வகுப்புத் தேர்வு!பிளாஸ்க்கிலிருந்து ஊற்றப்பட்ட காபி ஆறிப் போய்விட்டிருந்தது. திடீரென கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
அவள் மனம் திக் என்றது.இந்த நேரத்தில் கதவைத் தட்டுவது யாராயிருக்கும் என்றெண்ணியவாறு நாற்காலியிலிருந்து எழுந்தாள். கதவைத் திறந்தபோது அங்கு அமுதமொழி நின்றிருந்தாள்.
கயல்விழி அவளை வரவேற்று என்னவென்று விசாரித்தாள். அமுதமொழி தன் கையிலிருந்த தாளைக் காட்டி ' “கயல்விழி, இதோ சயன்ஸ் கொசின் பேப்பர். அவுட்டாயிடுச்சி, அவா, நாம் ரெண்டு பேரும் படிக்கலாம். ஒரு கொசின்பேப்பர் 50 ரூபாய்னு நம்ம ஸ்கூலுக்குப் பக்கத்தில இருக்கற கடையில வித்தாங்க. அதான் இப்ப வாங்கிட்டு நேரா இங்க வந்தேன்”.
கயல்விழி ஒன்றும் பேசாமல் மௌனித்தாள். பின்னர் அமுதாவிடமிருந்தது வினாத்தாளை வாங்கிக் கிழித்துப் போட்டாள். சொன்னாள்,” அமுதா, நாம் எப்பவும் நேரான வழியிலதன் போணும். குறுக்கு வழியில போகக் கூடாது. நாம உழைச்சதுக்கேற்ற பலன் கிடைக்கும். நநாம இப்ப இதைப் படிச்சு எழுதினா நம்ம உழைப்புக்கே, ஏன் நம்ம படிப்புக்கே மதிப்பில்லாம போய்டும். நேர்மையா படிச்ச பசங்கள்ளாம் எப்படி வேதனைப்படுவாங்க. நாம படிச்சதுக்கேற்ப மார்க் கிடைக்கும். வா, நாம ரெண்டு பேருமே படிக்கலாம்”, என்று இருவரும் படிக்கத் தொடங்கினர்.
(கயல்விழி, அமுதமொழி இருவரும் என் பெரிய மாமா, சின்ன மாமா பெண்கள். இருவருமே இப்போதைக்கு இதைப் படிக்க நோ சான்ஸ்! இன்னும் சமூக நலன் கதையெல்லாம் கூட இருக்கு! மெதுவா வலையேற்றுகிறேன்!!)

திருந்திய மனம்
கயல்விழி படித்துக் கொண்டிருந்தாள். ஐந்தரை மணியாகிக் இருந்தது. இன்று அவளுக்குப் பரிட்சை! பத்தாம் வகுப்புத் தேர்வு!பிளாஸ்க்கிலிருந்து ஊற்றப்பட்ட காபி ஆறிப் போய்விட்டிருந்தது. திடீரென கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
அவள் மனம் திக் என்றது.இந்த நேரத்தில் கதவைத் தட்டுவது யாராயிருக்கும் என்றெண்ணியவாறு நாற்காலியிலிருந்து எழுந்தாள். கதவைத் திறந்தபோது அங்கு அமுதமொழி நின்றிருந்தாள்.
கயல்விழி அவளை வரவேற்று என்னவென்று விசாரித்தாள். அமுதமொழி தன் கையிலிருந்த தாளைக் காட்டி ' “கயல்விழி, இதோ சயன்ஸ் கொசின் பேப்பர். அவுட்டாயிடுச்சி, அவா, நாம் ரெண்டு பேரும் படிக்கலாம். ஒரு கொசின்பேப்பர் 50 ரூபாய்னு நம்ம ஸ்கூலுக்குப் பக்கத்தில இருக்கற கடையில வித்தாங்க. அதான் இப்ப வாங்கிட்டு நேரா இங்க வந்தேன்”.
கயல்விழி ஒன்றும் பேசாமல் மௌனித்தாள். பின்னர் அமுதாவிடமிருந்தது வினாத்தாளை வாங்கிக் கிழித்துப் போட்டாள். சொன்னாள்,” அமுதா, நாம் எப்பவும் நேரான வழியிலதன் போணும். குறுக்கு வழியில போகக் கூடாது. நாம உழைச்சதுக்கேற்ற பலன் கிடைக்கும். நநாம இப்ப இதைப் படிச்சு எழுதினா நம்ம உழைப்புக்கே, ஏன் நம்ம படிப்புக்கே மதிப்பில்லாம போய்டும். நேர்மையா படிச்ச பசங்கள்ளாம் எப்படி வேதனைப்படுவாங்க. நாம படிச்சதுக்கேற்ப மார்க் கிடைக்கும். வா, நாம ரெண்டு பேருமே படிக்கலாம்”, என்று இருவரும் படிக்கத் தொடங்கினர்.
(கயல்விழி, அமுதமொழி இருவரும் என் பெரிய மாமா, சின்ன மாமா பெண்கள். இருவருமே இப்போதைக்கு இதைப் படிக்க நோ சான்ஸ்! இன்னும் சமூக நலன் கதையெல்லாம் கூட இருக்கு! மெதுவா வலையேற்றுகிறேன்!!)
Wednesday, December 03, 2008
பப்பு டைம்ஸ்
மழையின் காரணமாக பள்ளி செல்லமுடியாமல் பப்பு பள்ளியை மிகவும் மிஸ் செய்தாள்!
அதன் உச்சகட்டமாக, எல்லா பொம்மைகளையும் அவளைச் சுற்றி உட்கார வைத்து பாடல்கள் சொல்லித்தர ஆரம்பித்தாள். அப்புறம் இப்போ வொக் பண்ணனும் என்று பொம்மைகளைப் படுத்திக் கொண்டிருந்தாள். பொம்மைகள் என்று சொன்னால் கோபம் வரும். அவை அவளது பள்ளி நண்பர்கள். ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயருண்டு. சஞ்சய், வெண்மதி, ஆகாஷ் என்று. அந்த பெரிய ஆரஞ்சு கலர் பொம்மை பவன் கார்த்தி (பவன் கார்த்தியின் பெற்றோர் இதை படிக்க நேர்ந்தால் மன்னிக்கவும்.!) ஏனென்று பப்புவுக்குத் தான் தெரியும்!! அப்புறம், அவள் கை வைத்திருப்பதுதான் பப்புவாம். நாந்தான் மோதி ஆன்ட்டி என்று்ம் சொல்லிக்கொண்டாள்! அவளது வகுப்பறையில் ஆங்கிலத்தில்தான் பேசுகிறாள்..."கம் ஹியம்" என்பதும், "ஸ்நாக்ஸ் டைம்" என்பதும்!!

அன்றொரு நாள் பப்புவுக்கு அவள் யார் யாரோடு பழகலாம் அல்லது வெளியேச் செல்லலாமென்ற எல்லையை விளக்க எண்ணி பேச்சைத் துவக்கினேன். எப்போது தனியே செல்லலாமென்றும்!
"பப்பு, யாராவது புது ஆண்ட்டி அங்கிள்-ல்லாம் கூப்பிட்டா பேசக்கூடாது!
ஏன் பேசக்கூடாது?
ரைடிங் ஹூட் கதையில் என்ன சொன்னேன்? அந்த ஓநாய் வந்து ரைடிங் ஹூட்டோட
ஆயாவை கட்டிப் போட்டுச்சு இல்ல? ஏன்? பாப்பா ஓநாய்கிட்ட பேசுச்சு,
நான் எங்க ஆயாவை பார்க்கப் போறேன்ன்னு சொல்லுச்சு, அதாலதான்!
யாராவது உன்னை வா, தூக்கறேன் - ன்னு சொன்னா, வேணாம்-னு சொல்லிடனும்!
ஏன் தூக்கக்கூடாதுன்னு சொல்லனும்?
ஆமா பப்பு, அம்மா, அப்பா, ஆயா, தாத்தா-தான் உன்னைத் தூக்கணும்.
"முருகன் மாமா?" (பப்புவின் தாத்தாவின் கார் ஓட்டுனர், முகிலின் தூரத்து உறவினர்)
முருகன் மாமா தூக்கினா, நானே நடந்து வருவேன் - னு சொல்லணும்! நீதான் வளர்ந்துட்டே இல்ல, உன்னால நடக்க முடியும் இல்ல...ஃபாஸ்டா!!
"நான் தயிர் சாதம் சாப்பிட்டு, பெரிய பொண்ணாயிட்ட உடனே தனியா போலாமா?"
(ஆம் என்று சொன்னால், நாந்தான் பெரிய பொண்ணாயிட்டேனே, இப்போவே தனியா போறேன் என்று சொல்வாள் என்றெண்ணி, ம்..அம்மாகூட போலாம் என்று சொன்னேன்!)
அந்தப் பதில் அவளது தன்னம்பிக்கையை, செல்ப்-எஸ்டீமை காயப்படுத்திவிட்டது போல. she felt offended!
"நான் தனியாத்தான் போவேன் ", என்றாள் அதிகாரமான கோபத்துடன்!!
"பப்பு, யாராவது புது ஆண்ட்டி அங்கிள்-ல்லாம் கூப்பிட்டா பேசக்கூடாது!
ஏன் பேசக்கூடாது?
ரைடிங் ஹூட் கதையில் என்ன சொன்னேன்? அந்த ஓநாய் வந்து ரைடிங் ஹூட்டோட
ஆயாவை கட்டிப் போட்டுச்சு இல்ல? ஏன்? பாப்பா ஓநாய்கிட்ட பேசுச்சு,
நான் எங்க ஆயாவை பார்க்கப் போறேன்ன்னு சொல்லுச்சு, அதாலதான்!
யாராவது உன்னை வா, தூக்கறேன் - ன்னு சொன்னா, வேணாம்-னு சொல்லிடனும்!
ஏன் தூக்கக்கூடாதுன்னு சொல்லனும்?
ஆமா பப்பு, அம்மா, அப்பா, ஆயா, தாத்தா-தான் உன்னைத் தூக்கணும்.
"முருகன் மாமா?" (பப்புவின் தாத்தாவின் கார் ஓட்டுனர், முகிலின் தூரத்து உறவினர்)
முருகன் மாமா தூக்கினா, நானே நடந்து வருவேன் - னு சொல்லணும்! நீதான் வளர்ந்துட்டே இல்ல, உன்னால நடக்க முடியும் இல்ல...ஃபாஸ்டா!!
"நான் தயிர் சாதம் சாப்பிட்டு, பெரிய பொண்ணாயிட்ட உடனே தனியா போலாமா?"
(ஆம் என்று சொன்னால், நாந்தான் பெரிய பொண்ணாயிட்டேனே, இப்போவே தனியா போறேன் என்று சொல்வாள் என்றெண்ணி, ம்..அம்மாகூட போலாம் என்று சொன்னேன்!)
அந்தப் பதில் அவளது தன்னம்பிக்கையை, செல்ப்-எஸ்டீமை காயப்படுத்திவிட்டது போல. she felt offended!
"நான் தனியாத்தான் போவேன் ", என்றாள் அதிகாரமான கோபத்துடன்!!

கடந்தவாரத்தில் மழையின்காரணமாக ஊர் கிளம்ப எத்தனித்து செல்லவியலாமல் ஆகிவிட்டது பெரிம்மாவுக்கு. பப்பு அவளது துணிகள் வைக்கப்பட்டிருந்த கூடையினை கொண்டுவந்து வைத்து அவளது பையில் துணிகளை அடைத்துக் கொண்டிருந்தாள். ”எங்கே போறே”? என்றதற்கு,
நான் எங்க ஊருக்குப் போறேன்!!
ஆகா, ஆரம்பித்துவிட்டதா என்று ஆச்சர்யத்துடன், எந்த ஊருக்கு என்று வினவ,
“நான் எங்க மாமியார் ஊருக்கு போறேன்!”
நாங்கள் எல்லாரும் எங்கிருந்து கற்றிருப்பாள் என்ற ஆச்சர்யமும், அப்படின்னா யார் என்று அவள் புரிந்து வைத்திருக்கிறாள் என்று அறியும் நோக்குடனும் ”யார்டா மாமியார்?” என்று கேட்க,
“இதோ, எங்க ஊர்ல எங்க மாமியார் இருக்காங்க, அவங்களைப் பார்க்க போணும்” என்றால் ஹாலின் அந்த மூலையை காட்டியவாறு! நாங்கள் சிரிப்பதைப் பார்த்து தான் ஏதோ நகைச்சுவையாக சொல்லிவிட்டோமென்று புரிந்து அவளுக்கும் ஒரே சிரிப்பு!
(அதாவது ஹாலின் ஒரு பகுதி ஊர் என்றும், கடை எனறும், மெயின் ரோடு என்றும் மாறிக்கொண்டே இருக்கும் அவளது கற்பனைக்குத் தக்கவாறு)
மாமியார் என்றொரு காரெக்டர் "வீட்டுக்கு வீடு லூட்டி" எனும் தொடரில் வருவதாம். ஆனந்தம், கோலங்கள் மட்டும்தான் பார்ப்பதாக ஆயா சொன்னது இரவில் மட்டும் பார்க்கும் தொடர்கள் என்பதும் நிருபணமாகியிருக்கிறது! ;-)
Tuesday, December 02, 2008
ரைம் டைம்
சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து வாயை சிரிப்பது போல் காட்டுவதைப் பார்த்து யோசிக்கிறீர்களா? அந்த அனிமேடட் பாடலில் வரும் பொம்மை பாப்பா சொல்லிவிட்டு அப்படி புன்னகைக்கும். அதுதான் இது!! ( . - இ-திருஷ்டிப் பொட்டு) ;-)
”ஆயாம்மா டைனி ” என்று பப்பு பாடும் பாடலைப் பற்றி இங்கே சொல்லியிருந்தேன். அது கொஞ்சம் முன்னேறி இதோ இப்படி ஆகியிருக்கிறது!!
போட்டி அறிவிப்பு
உங்கள் வீட்டு சுட்டிக்கு 7வயதிலிருந்து 12 வயதுக்குள்ளா? எண்கள் குறித்து ஆர்வமுண்டா?
அவர்களின் வேகத்தையும் சமன்படுத்தும் துல்லியத்தையும் கண்டுபிடிக்க இங்கே செல்லவும்!
சுட்டிகளுக்கு வாழ்த்துக்கள்!
அவர்களின் வேகத்தையும் சமன்படுத்தும் துல்லியத்தையும் கண்டுபிடிக்க இங்கே செல்லவும்!
சுட்டிகளுக்கு வாழ்த்துக்கள்!
Monday, December 01, 2008
சின்ன Incy makoda!!
ஆங்கில வெர்ஷன்:
Incy Wincy spider climbing up the spout
Down came the rain and washed the spider out
Out came the sun and dried up all the rain
Now Incy Wincy spider went up the spout again!
தமிழ் வெர்ஷன்;
சின்ன சின்ன சிலந்தி மேலே ஏறிச்சாம்
மழை வந்ததாம்,சிலந்தி கீழே விழுந்ததாம்
வெயில் வந்ததாம்,சிலந்தி மேலே ஏறிச்சாம்.
இந்தி வெர்ஷன்
chota mota makoda oopar chad gaya
Barish bari aaya,makoda gir gaya
Suraj bahar nikala pani sookh gaya
phir chota mota makoda oopar chad gaya.
பப்பு வெர்ஷன்:
incy wincy spider, climbing up the spout,
Down came the rain and washed the spider out
Suraj bahar nikala pani sookh gaya
phir chota mota makoda oopar chad gaya.
chota mota makoda oopar chad gaya
மழை வந்ததாம் makoda gir gaya
(இன்னும் இது போன்ற வித்தியாச வெர்ஷன்கள் கிடைக்கும் இந்தப் பாட்டுக்கு! we have not opted for Hindi in her school though!)
Incy Wincy spider climbing up the spout
Down came the rain and washed the spider out
Out came the sun and dried up all the rain
Now Incy Wincy spider went up the spout again!
தமிழ் வெர்ஷன்;
சின்ன சின்ன சிலந்தி மேலே ஏறிச்சாம்
மழை வந்ததாம்,சிலந்தி கீழே விழுந்ததாம்
வெயில் வந்ததாம்,சிலந்தி மேலே ஏறிச்சாம்.
இந்தி வெர்ஷன்
chota mota makoda oopar chad gaya
Barish bari aaya,makoda gir gaya
Suraj bahar nikala pani sookh gaya
phir chota mota makoda oopar chad gaya.
பப்பு வெர்ஷன்:
incy wincy spider, climbing up the spout,
Down came the rain and washed the spider out
Suraj bahar nikala pani sookh gaya
phir chota mota makoda oopar chad gaya.
chota mota makoda oopar chad gaya
மழை வந்ததாம் makoda gir gaya
| spider.WAV |
(இன்னும் இது போன்ற வித்தியாச வெர்ஷன்கள் கிடைக்கும் இந்தப் பாட்டுக்கு! we have not opted for Hindi in her school though!)
Friday, November 28, 2008
தகிட்ட தரிகிட்ட குதிக்கும் பந்து
இந்தப் புத்தகத்தின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு கையில் எடுத்து என் மகளின் கண்களால் வாசிக்கத் தொடங்கினேன். 16 பக்கங்கள். முடிக்கும்போது, நான் ஒருவித தாள-லயத்துடன் படித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
வெகு எளிமையான புத்தகம். கோட்டுச்சித்திரங்கள் போன்ற எளிமையான படங்களுடன் இயல்பான வார்த்தைகளுடன் கூடியப் புத்தகம். அபுவின் பந்து உதைக்கப் படும்போது அது பயணிக்கும் திசைகளில் சுழன்று விழும் இடங்களையும் சுவைப்பட சொல்லிச்
செல்கிறது ஒருவித தாள கதியில்.
மீதியை படிக்க இங்கே செல்லவும்.
Thursday, November 27, 2008
'பாம்'பாய்!!
என்னதான் வேண்டும் அவர்களுக்கு? அப்பாவிகளின் உயிரை பறிப்பதன்மூலம் சாதித்துவிட போவதென்ன?
இதுவரை 100-க்கு மேற்பட்டவர்கள் பலியாகியிருப்பதாய் சொல்கிறார்கள்.
மரணிப்பதற்கு முன் அவர்கள் மனதில் என்ன ஓடியிருக்கும்? எவ்வளவு எதிர்காலத் திட்டங்கள் இருந்திருக்கும் அவர்களின் மனத்தில்? தீவிரவாதிகளின் பிடியில் இருப்பவர்களின்
மன உளைச்சல்?
தீவிரவாதிகளை எதிர்த்து சென்ற காவலர்களின் மனதிற்குள் எனன் ஓடியிருக்கும்?
இப்படி ஆதங்கப்படுவதைத் தவிர இதைத் தடுகக் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் டீவியை பார்த்துக்கொண்டிருப்பதுதான் எவ்வளவு கொடுமையானது!!
இதுவரை 100-க்கு மேற்பட்டவர்கள் பலியாகியிருப்பதாய் சொல்கிறார்கள்.
மரணிப்பதற்கு முன் அவர்கள் மனதில் என்ன ஓடியிருக்கும்? எவ்வளவு எதிர்காலத் திட்டங்கள் இருந்திருக்கும் அவர்களின் மனத்தில்? தீவிரவாதிகளின் பிடியில் இருப்பவர்களின்
மன உளைச்சல்?
தீவிரவாதிகளை எதிர்த்து சென்ற காவலர்களின் மனதிற்குள் எனன் ஓடியிருக்கும்?
இப்படி ஆதங்கப்படுவதைத் தவிர இதைத் தடுகக் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் டீவியை பார்த்துக்கொண்டிருப்பதுதான் எவ்வளவு கொடுமையானது!!
Tuesday, November 25, 2008
Friends 4 லைப்!!
எனக்கு ஒரு தோழி இருந்தாள் கல்லூரியில், ஒரு சில பழக்கவழக்கங்கள் இருவருக்கும் ஒன்றாக! ஜீன்ஸூம், முக்கால் பேண்டும், செமஸ்டருக்கு ஒரு ஹேர்ஸ்டைலும் எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கையின் மேல் தீராக்காதலுடனும்(crazy over life?!)!
பட்டங்கள் பெற்று அவள் மனித வள நிர்வாகத்தின் பக்கமும், நான் கணினி பயன்பாட்டுவியலுமாகப் பாதைகள் பிரிந்தன! நடுவில் ஒருமுறை ஃப்ரெண்ட்ஷிப் டே கெட் டூ கெதரில் சந்தித்தப் பிறகு ஒரு பெரிய இடைவெளி. நீண்ட பிரிவிற்கு சமீபத்தில் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறோம் - கிண்டலும், கேலியும்,அவரவர்களின் எடையைப் பற்றியும், குழந்தைகளப் பற்றிய விசாரிப்புகளுமாய்! whoa! ஒன்று மட்டும் மாறவேயில்லை..attitude towards life! அவளும் நானும் அப்படியேதான் இருக்கிறோம்..வாழ்க்கையின் மீதான ரசனைகளில்..சின்னச்சின்ன ஆசைகளில்...பற்பல மாற்றங்களுக்குப்பின்னும்!
ஒருசில விஷயங்கள் மாறுவதில்லை!!
பட்டங்கள் பெற்று அவள் மனித வள நிர்வாகத்தின் பக்கமும், நான் கணினி பயன்பாட்டுவியலுமாகப் பாதைகள் பிரிந்தன! நடுவில் ஒருமுறை ஃப்ரெண்ட்ஷிப் டே கெட் டூ கெதரில் சந்தித்தப் பிறகு ஒரு பெரிய இடைவெளி. நீண்ட பிரிவிற்கு சமீபத்தில் விட்ட இடத்திலிருந்து தொடர்கிறோம் - கிண்டலும், கேலியும்,அவரவர்களின் எடையைப் பற்றியும், குழந்தைகளப் பற்றிய விசாரிப்புகளுமாய்! whoa! ஒன்று மட்டும் மாறவேயில்லை..attitude towards life! அவளும் நானும் அப்படியேதான் இருக்கிறோம்..வாழ்க்கையின் மீதான ரசனைகளில்..சின்னச்சின்ன ஆசைகளில்...பற்பல மாற்றங்களுக்குப்பின்னும்!
ஒருசில விஷயங்கள் மாறுவதில்லை!!
Monday, November 24, 2008
சில அம்மாக் கணங்கள்!!
”நீயும் நானும் ப்ரெண்ட்ஸ்”
- பப்பு என்னிடம் சொன்னபோது சிரிப்பு வந்தது. அதை விட அவளின் செய்கை..ப்ரெண்ட்ஸ்-ன்னா தோளில் கைப் போட்டு கொள்ள வேண்டுமாம். இருவரும் தோளில் கைப்போட்டுக் கொண்டு Jataka tales பார்த்தோம்!
ம்ம்..ஆமாம் பப்பு, எப்போதும் உன் ப்ரெண்டாகவே இருக்க விரும்புகிறேன்!
“பப்புவுக்கு ஆச்சி பிடிக்கும், ஆச்சிக்கு பப்பு பிடிக்கும்!”
-இதுவும் பப்புவால் அடிக்கடி சொல்லப்படும் வார்ததைகள். முதன்முறை சொன்னபோது,
ஆச்சிக்கு பப்பு பிடிக்கும், பப்புக்கு பப்பு பிடிக்கும்!” என்று. :-)) பின்னர் அவளாகவே சரி செய்துக் கொண்டாள்! அப்படி சொல்லும்போது ரெக்கார்ட் செய்துக்கொள்ளலாமென்று தோன்றும், அவளது டோனுக்காவாவது! :-)
உன் அன்பு கொடுக்கும் இதமான உணர்வு அலாதியானது!
பப்பு போனில் தொடர்ச்சியாக பேசுவது இல்லை என்று நாங்கள் கவலைப் பட்டதுபோய், இப்போது ஒரு மணி அடித்தால் எடுப்பது அவள்தான். வைப்பதே இல்லை. :-)
அப்படி ஒரு நாள் மதியம் பள்ளியிலிருந்து வந்துவிட்டாளா என்றறிய நான் போன் செய்தபோது எடுத்த பப்புவிடம்,
“என்ன பண்றே?” என்று கேட்டேன்.
நான் ட்ரெஸ் போடாம இருக்கேன்! (I dont want to embarass pappu here, but i am reserving a future laugh. :-))
- பப்பு என்னிடம் சொன்னபோது சிரிப்பு வந்தது. அதை விட அவளின் செய்கை..ப்ரெண்ட்ஸ்-ன்னா தோளில் கைப் போட்டு கொள்ள வேண்டுமாம். இருவரும் தோளில் கைப்போட்டுக் கொண்டு Jataka tales பார்த்தோம்!
ம்ம்..ஆமாம் பப்பு, எப்போதும் உன் ப்ரெண்டாகவே இருக்க விரும்புகிறேன்!
“பப்புவுக்கு ஆச்சி பிடிக்கும், ஆச்சிக்கு பப்பு பிடிக்கும்!”
-இதுவும் பப்புவால் அடிக்கடி சொல்லப்படும் வார்ததைகள். முதன்முறை சொன்னபோது,
ஆச்சிக்கு பப்பு பிடிக்கும், பப்புக்கு பப்பு பிடிக்கும்!” என்று. :-)) பின்னர் அவளாகவே சரி செய்துக் கொண்டாள்! அப்படி சொல்லும்போது ரெக்கார்ட் செய்துக்கொள்ளலாமென்று தோன்றும், அவளது டோனுக்காவாவது! :-)
உன் அன்பு கொடுக்கும் இதமான உணர்வு அலாதியானது!
பப்பு போனில் தொடர்ச்சியாக பேசுவது இல்லை என்று நாங்கள் கவலைப் பட்டதுபோய், இப்போது ஒரு மணி அடித்தால் எடுப்பது அவள்தான். வைப்பதே இல்லை. :-)
அப்படி ஒரு நாள் மதியம் பள்ளியிலிருந்து வந்துவிட்டாளா என்றறிய நான் போன் செய்தபோது எடுத்த பப்புவிடம்,
“என்ன பண்றே?” என்று கேட்டேன்.
நான் ட்ரெஸ் போடாம இருக்கேன்! (I dont want to embarass pappu here, but i am reserving a future laugh. :-))
Phase D
...has hit us now!!
பப்புவின் வளர்ச்சிகளை மகிழ்ச்சியோடு பதிவதுபோலவே இதையும் பதிகிறேன்! பப்பு ஒரு புதிய சொல்லாடலை கற்றுக் கொண்டிருக்கிறாள்!
அது ஒரு தவறான பிரயோகம் என்பது தெரிந்திருக்கிறது!!
எந்த நேரத்தில் (அவளுக்கு பிடிக்காததை நாம் செய்யும்போது, கோபப்படும் போது) உபயோகிப்பது என்பதையும் அறிந்திருக்கிறாள்!!
நாம் திருப்பி “என்ன சொன்னே?! “ என்றுக் கேட்டால், திரும்பச் சொல்கிறாள். (மறைக்கத் தெரியவில்லை..:-)!)
பப்பு “டி” போட்டு பேசக் கற்றுக் கொண்டிருக்கிறாள், வீட்டில் அப்படி ஒரு சொல்லாடல் வழக்கத்தில் இல்லாத போதும்! And she thinks its fun! பப்புவின் சைக்காலஜி, எதை செய்யாதே என்று சொல்கிறோமோ அதை செய்வதுதான்! அதனால், “இதுவும் கடந்து போகும்” என்று பொறுமையுடன் காத்திருக்கிறோம்...பதில் பேசும்போது நாங்களும் வாங்க, போங்க என்று அவளிடம் பேசுகிறோம் அல்லது கண்டுக் கொள்ளாமல் விட்டுவிடுகிறோம்(அப்படிதான் ராஸ்கல் என்று சொல்வது மறைந்துப் போயிற்று)!
இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் ஒரு பெற்றோர் எனில் இதே போன்ற சூழலை கையாண்டிருக்கிறீர்கள் எனில் பகிர்ந்துக் கொள்ளவும். இதைவிட நல்ல வழிமுறைகளை எதிர்நோக்கி!!
பப்புவின் வளர்ச்சிகளை மகிழ்ச்சியோடு பதிவதுபோலவே இதையும் பதிகிறேன்! பப்பு ஒரு புதிய சொல்லாடலை கற்றுக் கொண்டிருக்கிறாள்!
அது ஒரு தவறான பிரயோகம் என்பது தெரிந்திருக்கிறது!!
எந்த நேரத்தில் (அவளுக்கு பிடிக்காததை நாம் செய்யும்போது, கோபப்படும் போது) உபயோகிப்பது என்பதையும் அறிந்திருக்கிறாள்!!
நாம் திருப்பி “என்ன சொன்னே?! “ என்றுக் கேட்டால், திரும்பச் சொல்கிறாள். (மறைக்கத் தெரியவில்லை..:-)!)
பப்பு “டி” போட்டு பேசக் கற்றுக் கொண்டிருக்கிறாள், வீட்டில் அப்படி ஒரு சொல்லாடல் வழக்கத்தில் இல்லாத போதும்! And she thinks its fun! பப்புவின் சைக்காலஜி, எதை செய்யாதே என்று சொல்கிறோமோ அதை செய்வதுதான்! அதனால், “இதுவும் கடந்து போகும்” என்று பொறுமையுடன் காத்திருக்கிறோம்...பதில் பேசும்போது நாங்களும் வாங்க, போங்க என்று அவளிடம் பேசுகிறோம் அல்லது கண்டுக் கொள்ளாமல் விட்டுவிடுகிறோம்(அப்படிதான் ராஸ்கல் என்று சொல்வது மறைந்துப் போயிற்று)!
இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் ஒரு பெற்றோர் எனில் இதே போன்ற சூழலை கையாண்டிருக்கிறீர்கள் எனில் பகிர்ந்துக் கொள்ளவும். இதைவிட நல்ல வழிமுறைகளை எதிர்நோக்கி!!
Friday, November 21, 2008
ஜிங்கிள்ஸ் ஆஃப் கோழிக்குஞ்சு!!
ஏற்கெனவே இந்தப் பதிவில் சொல்லியிருந்தபடி பாடல்கள் மட்டும்!
jingle bells :
Shorter version of கோழிகுஞ்சு பாடல்!
கொஞ்சம் அதிகமாவே மசாலா தடவியிருக்காங்க பப்பு, கண்டுக்காதீங்க! :-)
jingle bells :
| jingle bells-1.WAV |
Shorter version of கோழிகுஞ்சு பாடல்!
கொஞ்சம் அதிகமாவே மசாலா தடவியிருக்காங்க பப்பு, கண்டுக்காதீங்க! :-)
| kozhi.WAV |
Thursday, November 20, 2008
லோஷன்: அந்த குழந்தை தேடுமே - தூயாவின் பதிவோடு!
லோஷனின் பதிவுகளை படித்திருக்கிறேன். அவரது கைது குறித்த செய்தியை டிசே மற்றும் பெயரிலி பதிவுகளின் வாயிலாக அறிந்தப் போது மனம் கனத்துப் போயிற்று. எனக்கு மனதில் சட்டென்று தோன்றியது...அவரது வலைப்பூவில் அவரது குட்டிக் குழந்தையின் படம் போட்டிருப்பாரே...அந்த குழந்தை கஷ்டப்படுமே என்றுதான்! அவரது, ஏங்க வைக்கிறாய் மகனே.. பதிவை ரசித்துப் படித்திருக்கிறேன்!
தூயாவின் லோஷன்: அந்த குழந்தை தேடுமே பார்த்ததும், எழுதத் தோன்றியது!
யாவும் நலம்பெற பிரார்த்தனைகளைத் தவிர என்னால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை...ஆனால் பிரார்த்தனைகளால் செய்யக் கூடாதது ஒன்றுமில்லை!! (இதுவே எனது நம்பிக்கை!!)
தூயாவின் லோஷன்: அந்த குழந்தை தேடுமே பார்த்ததும், எழுதத் தோன்றியது!
யாவும் நலம்பெற பிரார்த்தனைகளைத் தவிர என்னால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை...ஆனால் பிரார்த்தனைகளால் செய்யக் கூடாதது ஒன்றுமில்லை!! (இதுவே எனது நம்பிக்கை!!)
Wednesday, November 19, 2008
யார் சொன்னது pappu can't dance!!
(9 மாதங்களுக்கு முன் எடுத்தது. ஏனோ தெரியவில்லை..இப்போதெல்லாம் நாங்கள் டீவி பார்க்கும் வழக்கம் குறைந்து விட்டது..ஞாயிறு மட்டுமே கொஞ்சம் அதிகம் பார்க்கிறோம். பாடல் பார்க்கும் வழக்கமும் குறைந்துவிட்டது டீவியில்!!பள்ளி செல்ல ஆரம்பித்ததில் இருந்து இந்த மாற்றமென்று நினைக்கிறேன். I am juz remembering the days we used to spend infront of TV, just to watch/record pappu dancing!!)
நன்றி கானாஸ்! பப்பு கான்ட் டான்ஸ் என்ற பாடலில் வரியை அப்படியே வெட்டி ஒட்டி விட்டேன்!
ம்ம்..என்ன சொல்வேன் நான்?
எல்லாக் கதவுகளையும் தாளிட்டுவிட்டாலும் படுப்பதற்கு முன் ஒருமுறை சரிப்பார்ப்பதற்கு அன்று விடுபட்டுபோயிற்று! பப்புவிற்கு பொறுப்பு வர வைக்கலாமென்று
"பப்பு, கதவு பூட்டியிருக்கா பார்த்துட்டு வா, பப்பு" - என்றேன்!
நாளைக்கு பார்க்கறேன், ஆச்சி!
நாளைக்கு பார்க்கச் சொல்வேனோவென்று சந்தேகம் வந்துவிட்டது போல,
பெரிய பொண்ணாயிட்டு பார்க்கறேன், ஆச்சி!
நான் இப்போதெல்லாம் அடிக்கடி "பப்பு, நீதான் பெரிய பொண்ணாயிட்டேயில்ல பப்பு" என்று சொன்னது நினைவுக்கு வந்திருக்கும் போல..
நான் இப்போ குட்டி பெரிய பொண்ணா இருக்கேன் இல்ல..பெரிய்ய (கைகளை உயரே உயர்த்திய படி) பொண்ணாயிட்டு பார்க்கறேன், சரியா?!
அடுத்த நாளுக்கான காய்கறிகளை கழுவி வைக்கும்போது கண்ணில் பட்ட மாங்காயை ஒரு துண்டு வெட்டி சாப்பிட்டுக் கொண்டே சமையலறையிலிருந்து வந்தேன். அதைப்பார்த்த பப்பு,
"நீ சாப்பிட்டுட்டு எனக்கு தருவியா, ஆச்சி?"
என்றபோதுதான் உறைத்தது..கடவுளே, எப்படி விட்டேன் இவளை என்று!
அதைவிட அவள் கேட்ட விதம் எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. உனக்கு இல்லையென்று சொல்லிவிட முடியாத ஒரு கேள்வி!
ஆச்சி, எனக்கு தா என்று சொல்லியிருந்தால் என் குற்றவுணர்ச்சி அதிகமாயிருந்திருக்கும். ஆனால், மிகவும் பாசிடிவாக, அடுத்து அவளுக்குத்தான் தருவேன் என்ற நம்பிக்கையோடு கேட்ட அவளதுத் தொனி காதுகளில் இன்னும் ஒலிக்கிறது!!
"பப்பு, கதவு பூட்டியிருக்கா பார்த்துட்டு வா, பப்பு" - என்றேன்!
நாளைக்கு பார்க்கறேன், ஆச்சி!
நாளைக்கு பார்க்கச் சொல்வேனோவென்று சந்தேகம் வந்துவிட்டது போல,
பெரிய பொண்ணாயிட்டு பார்க்கறேன், ஆச்சி!
நான் இப்போதெல்லாம் அடிக்கடி "பப்பு, நீதான் பெரிய பொண்ணாயிட்டேயில்ல பப்பு" என்று சொன்னது நினைவுக்கு வந்திருக்கும் போல..
நான் இப்போ குட்டி பெரிய பொண்ணா இருக்கேன் இல்ல..பெரிய்ய (கைகளை உயரே உயர்த்திய படி) பொண்ணாயிட்டு பார்க்கறேன், சரியா?!
அடுத்த நாளுக்கான காய்கறிகளை கழுவி வைக்கும்போது கண்ணில் பட்ட மாங்காயை ஒரு துண்டு வெட்டி சாப்பிட்டுக் கொண்டே சமையலறையிலிருந்து வந்தேன். அதைப்பார்த்த பப்பு,
"நீ சாப்பிட்டுட்டு எனக்கு தருவியா, ஆச்சி?"
என்றபோதுதான் உறைத்தது..கடவுளே, எப்படி விட்டேன் இவளை என்று!
அதைவிட அவள் கேட்ட விதம் எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. உனக்கு இல்லையென்று சொல்லிவிட முடியாத ஒரு கேள்வி!
ஆச்சி, எனக்கு தா என்று சொல்லியிருந்தால் என் குற்றவுணர்ச்சி அதிகமாயிருந்திருக்கும். ஆனால், மிகவும் பாசிடிவாக, அடுத்து அவளுக்குத்தான் தருவேன் என்ற நம்பிக்கையோடு கேட்ட அவளதுத் தொனி காதுகளில் இன்னும் ஒலிக்கிறது!!
Tuesday, November 18, 2008
பப்பு சீன்ஸ்!!
சீன் - 1
சோபாவில் அமர்ந்து எதிரில் நாற்காலில் காலை நீட்டியபடி அமர்ந்திருந்தேன். பெரிம்மா வந்து உட்கார்வத்ற்காக நாற்காலியின் ஓரத்தில் கை வைத்தபோது காலை எடுத்துக் கொண்டேன். அதுவரை அங்கே நின்றபடி டீவி பார்த்துக் கொண்டிருந்த பப்பு, பெரிம்மாவிடமிருந்த நாற்காலியை இழுத்து என் காலருகே வைத்ததுமல்லாமல், என் காலைத் தூக்கி அந்த நாற்காலியில் வைத்தாள். :-)
சீன் - 2
ஏதோ பேசிக்கொண்டிருந்த போது, “எனக்குத் தெரியாது பெரிம்மா” என்றுக் குரலில் சலிப்போடு சொன்னேன். விளையாடிக்கொண்டிருந்த பப்பு, வேகமாய் பெரிம்மாவிடம் வந்து,
“ஏன் ஆச்சியை திட்டீனீங்க?” என்று கோபமாய்/வேகமாய் கேட்டாள்.
பெரிம்மா, ”நான் திட்டல பப்பு, சும்மா கேட்டேன்” என்றபோது, சமாதானமாகாமல்,
”சாரி சொல்லுங்க...சாரி சொல்லுங்க” என்று பெரிம்மா சாரி சொன்னப்பின் அமைதியானாள்.
இதைத் தான் சொல்வார்களோ, சொர்க்கம் என்று, to get pampered by my mom and pappu?!
***************
சீன் - 3
பெரிம்மா ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். கதவருகில் வைத்திருந்ததை அவர்கள் பை காணவில்லை. பப்புவின் வேலை!! அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு அறையில் வைத்துவிட்டிருந்தாள். பையை எடுக்க முற்படுகையில், ஊருக்கு போக வேண்டாமென்று அரற்றத் தொடங்கினாள். அப்போது நான் சொன்னேன், ”பாரு நீ சாப்பிடலையில்ல அதான் ஊருக்குப் போறாங்க” என்றபோது ”நான் சாப்பிடறேன்” என்று ரசம் சாதம் போட்டுத் தர சாப்பிட்டாள்! சாப்பிட்டுவிட்டாலும், அவர்கள் ஊருக்கு கிளம்பிவிடுவார்கள் என்றறியாமல் சாப்பிடும் பப்புவை பார்க்க கஷ்டமாயிருந்தது. ஆனால், என்ன செய்வது? அடுத்த வாரம் வருவாங்க என்று சமாதானப் படுத்தி “பை” சொல்ல வைக்கவேண்டியதாயிருந்தது!
முன்பெல்லாம், போகாதீங்க என்று மட்டும் சொன்ன பப்பு, பையை இழுத்துக் கொண்டு ரூமில் வைத்த பப்பு, இப்போது பையை தூக்கி ஒளித்து வைக்குமளவிற்கு வளர்ந்ததை பார்த்து புன்னகைக்கிறேன்!!
ஒருநாள் இந்தப் பெண் கல்லூரிக்கோ,வேலைக்கோ, உலகத்தை explore செய்ய பையைத் தூக்கி செல்லப் போகிறாள்..அப்போது நான் என்ன செய்யப் போகிறேன்?! ஏன் நான் இவ்வளவு உணர்ச்சிவசப் படுகிறேன்?! (ம்ம்..அடுத்த போஸ்ட்டுக்கு மேட்டர் ரெடி!!)
சோபாவில் அமர்ந்து எதிரில் நாற்காலில் காலை நீட்டியபடி அமர்ந்திருந்தேன். பெரிம்மா வந்து உட்கார்வத்ற்காக நாற்காலியின் ஓரத்தில் கை வைத்தபோது காலை எடுத்துக் கொண்டேன். அதுவரை அங்கே நின்றபடி டீவி பார்த்துக் கொண்டிருந்த பப்பு, பெரிம்மாவிடமிருந்த நாற்காலியை இழுத்து என் காலருகே வைத்ததுமல்லாமல், என் காலைத் தூக்கி அந்த நாற்காலியில் வைத்தாள். :-)
சீன் - 2
ஏதோ பேசிக்கொண்டிருந்த போது, “எனக்குத் தெரியாது பெரிம்மா” என்றுக் குரலில் சலிப்போடு சொன்னேன். விளையாடிக்கொண்டிருந்த பப்பு, வேகமாய் பெரிம்மாவிடம் வந்து,
“ஏன் ஆச்சியை திட்டீனீங்க?” என்று கோபமாய்/வேகமாய் கேட்டாள்.
பெரிம்மா, ”நான் திட்டல பப்பு, சும்மா கேட்டேன்” என்றபோது, சமாதானமாகாமல்,
”சாரி சொல்லுங்க...சாரி சொல்லுங்க” என்று பெரிம்மா சாரி சொன்னப்பின் அமைதியானாள்.
இதைத் தான் சொல்வார்களோ, சொர்க்கம் என்று, to get pampered by my mom and pappu?!
***************
சீன் - 3
பெரிம்மா ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். கதவருகில் வைத்திருந்ததை அவர்கள் பை காணவில்லை. பப்புவின் வேலை!! அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு அறையில் வைத்துவிட்டிருந்தாள். பையை எடுக்க முற்படுகையில், ஊருக்கு போக வேண்டாமென்று அரற்றத் தொடங்கினாள். அப்போது நான் சொன்னேன், ”பாரு நீ சாப்பிடலையில்ல அதான் ஊருக்குப் போறாங்க” என்றபோது ”நான் சாப்பிடறேன்” என்று ரசம் சாதம் போட்டுத் தர சாப்பிட்டாள்! சாப்பிட்டுவிட்டாலும், அவர்கள் ஊருக்கு கிளம்பிவிடுவார்கள் என்றறியாமல் சாப்பிடும் பப்புவை பார்க்க கஷ்டமாயிருந்தது. ஆனால், என்ன செய்வது? அடுத்த வாரம் வருவாங்க என்று சமாதானப் படுத்தி “பை” சொல்ல வைக்கவேண்டியதாயிருந்தது!
முன்பெல்லாம், போகாதீங்க என்று மட்டும் சொன்ன பப்பு, பையை இழுத்துக் கொண்டு ரூமில் வைத்த பப்பு, இப்போது பையை தூக்கி ஒளித்து வைக்குமளவிற்கு வளர்ந்ததை பார்த்து புன்னகைக்கிறேன்!!
ஒருநாள் இந்தப் பெண் கல்லூரிக்கோ,வேலைக்கோ, உலகத்தை explore செய்ய பையைத் தூக்கி செல்லப் போகிறாள்..அப்போது நான் என்ன செய்யப் போகிறேன்?! ஏன் நான் இவ்வளவு உணர்ச்சிவசப் படுகிறேன்?! (ம்ம்..அடுத்த போஸ்ட்டுக்கு மேட்டர் ரெடி!!)
Saturday, November 15, 2008
இந்த சிம்டம்ஸ் உங்களிடம் இருந்தால்..
உங்கள் வீட்டில் ஒரு வாண்டாவது இருக்கிறதென்று அர்த்தம்..அர்த்தம்!!
1. அவர்கள் பாடும் குழந்தைப்பாடல்களை(ரைம்ஸ்) உங்களையறிமலேயே முணுமுணுக்கத் தொடங்கியிருப்பீர்கள், அவர்கள் அருகிலில்லாத போதும்!!
2. டூத் பிரஷோ, அல்லது வீட்டுக்கு தேவையான தொங்கும் அலங்காரப் பொருட்களோ, சிறு சாமான்களோ தேர்ந்தெடுக்க நேர்ந்தால் நீங்கள் வாங்கியது ஆரஞ்ச்/மஞ்சள் ப்ளோரசண்ட் கலர்களில் இருக்கும்!!
3. மளிகை சாமான்கள் வாங்கும்போது, எதனுடன் இலவசமாக பெரிய பாட்டில்கள், கண்டெய்னர்கள் வருகிறதென்று பார்த்து வாங்குவீர்கள், குட்டீஸின் விளையாட்டு சாமான்கள் போட உபயோகமாகுமென்று!
4. புத்தகக் கடைக்குச் செல்வீர்கள், வாங்கவேண்டியவற்றை மனதில் நினைத்துக் கொண்டு! ஆனால், நேராக குழந்தைகள் பகுதிக்குச் சென்று நிற்பீர்கள். கடைசியில், இன்னொரு நாள் பார்க்கலாம் என்று பில் போடும்போது நினைத்துக் கொள்வீர்கள்!!
5. புதிதாக முளைக்கும் குழந்தைகளுக்கான கடைகளை உள்ளே சென்று பார்த்துவிட ஆசையிருக்கும், வாங்குவத்ற்கு ஒன்றுமில்லாவிட்டாலும்!!
1. அவர்கள் பாடும் குழந்தைப்பாடல்களை(ரைம்ஸ்) உங்களையறிமலேயே முணுமுணுக்கத் தொடங்கியிருப்பீர்கள், அவர்கள் அருகிலில்லாத போதும்!!
2. டூத் பிரஷோ, அல்லது வீட்டுக்கு தேவையான தொங்கும் அலங்காரப் பொருட்களோ, சிறு சாமான்களோ தேர்ந்தெடுக்க நேர்ந்தால் நீங்கள் வாங்கியது ஆரஞ்ச்/மஞ்சள் ப்ளோரசண்ட் கலர்களில் இருக்கும்!!
3. மளிகை சாமான்கள் வாங்கும்போது, எதனுடன் இலவசமாக பெரிய பாட்டில்கள், கண்டெய்னர்கள் வருகிறதென்று பார்த்து வாங்குவீர்கள், குட்டீஸின் விளையாட்டு சாமான்கள் போட உபயோகமாகுமென்று!
4. புத்தகக் கடைக்குச் செல்வீர்கள், வாங்கவேண்டியவற்றை மனதில் நினைத்துக் கொண்டு! ஆனால், நேராக குழந்தைகள் பகுதிக்குச் சென்று நிற்பீர்கள். கடைசியில், இன்னொரு நாள் பார்க்கலாம் என்று பில் போடும்போது நினைத்துக் கொள்வீர்கள்!!
5. புதிதாக முளைக்கும் குழந்தைகளுக்கான கடைகளை உள்ளே சென்று பார்த்துவிட ஆசையிருக்கும், வாங்குவத்ற்கு ஒன்றுமில்லாவிட்டாலும்!!
Friday, November 14, 2008
பப்பு டைம்ஸ்
சம்பந்தியம்மா..என்னா சம்பந்தியம்மா!!
பப்பு இப்படித்தான் என்னை எதிர்கொண்டாள் கடந்த வாரத்தில் ஒருநாள் மாலையில் நான் வீடு திரும்பியதும்!! திகைப்பும், ஆச்சரியமும், எங்கிருந்துக் கற்றுக் கொண்டாளிவள் என்ற ஆர்வமும் மேலிட ஆயாவை நோக்கினேன்! ம்ம்..புரிந்தது, ஆனந்தம் எனும் தொடர்நாடகம் விட்டுச் சென்ற மிச்சம்!!
பப்புவிற்கு பேனாக்கள் மேது அலாதி பிரியம். மர அலமாரிகளும், சுவர்களும், நோட்டுகளும் நிரம்புகின்றன், அவள் எழுத்துருக்களாலும், வட்டங்களாலும். எத்தனை பேனாக்கள் இருந்தாலும் எல்லாம் அவளுடையதாகி விடுகின்றன. கையில் ஒரு கொத்துப் பேனாக்களுடன் தான் இருப்பாள், சில சமயம். அப்படி ஒரு இரவு, பேனாக்களை படுக்கையில் போட்டுவிட்டு தூங்கிவிட்டாள். காலையில் எழுந்தவுடன், அவற்றை கைகளில் எடுத்துக் கொண்டபோது, ஆயா பேனாவே இல்லையென்று சொன்ன நினைவு வந்தவளாக அவளிடம் சொன்னேன்,
ஆயாகிட்டே பேனாவை கொடுத்திடலாம், பப்பு!
இது என்னோட பேனாதானே..? - பப்பு.
ஆமா
அப்புறம் ஏன் ஆயாகிட்டே கொடுக்கணும்? நானே வச்சிக்கறேன் என் பேனாவை- பப்பு.
***********
கற்பனைகளும், பள்ளி நண்பர்களும், கேள்விகளும், தூக்கத்தில் கனவுகளும் நிரம்பியதாயிருக்கிறது அவளது நாட்கள்!! ஆனால், என் சின்னஞ்சிறு மூளை நினைவு வைத்துக்கொள்ள திணறுகிறது..:-(..அந்த நேரத்து ரசிப்போடு கடந்துப் போகிறது அக்கணங்கள்!!
************
புதிதாக Fox என்ற வார்த்தையைக் கற்றுக் கொண்டிருந்தாள். இதுநாள் வரை தமிழில்தான் சொல்லிக் கொடுத்திருந்தோம். இப்போது இரண்டு மொழிகளிலும் விலங்குகளை அடையாளம் காண்கிறாள்! Fox என்று சொல்லிவிட்டு, என்னது Six-ஆ என்றாள்! ரைமிங் வார்த்தைகள்..:-))!
சிலசமயம் நான் கோபப்படும்போது அல்லது சத்தமாக வீட்டினருடன் பேசுவதைக் கேட்டால்,
ஏன் கஷ்ஷ்ட்ட்ப்படறே ஆச்சி? - என்று மிகவும் கரிசனத்துடன் கேட்பதில் கோபம் மறந்து சிரித்துவிடுகிறேன் நான்!
பப்புவுக்கும் மற்ற அனைத்து குழந்தைகளுக்கும் "குழந்தைகள் தின வாழ்த்துக்கள்"!!
பப்பு இப்படித்தான் என்னை எதிர்கொண்டாள் கடந்த வாரத்தில் ஒருநாள் மாலையில் நான் வீடு திரும்பியதும்!! திகைப்பும், ஆச்சரியமும், எங்கிருந்துக் கற்றுக் கொண்டாளிவள் என்ற ஆர்வமும் மேலிட ஆயாவை நோக்கினேன்! ம்ம்..புரிந்தது, ஆனந்தம் எனும் தொடர்நாடகம் விட்டுச் சென்ற மிச்சம்!!
பப்புவிற்கு பேனாக்கள் மேது அலாதி பிரியம். மர அலமாரிகளும், சுவர்களும், நோட்டுகளும் நிரம்புகின்றன், அவள் எழுத்துருக்களாலும், வட்டங்களாலும். எத்தனை பேனாக்கள் இருந்தாலும் எல்லாம் அவளுடையதாகி விடுகின்றன. கையில் ஒரு கொத்துப் பேனாக்களுடன் தான் இருப்பாள், சில சமயம். அப்படி ஒரு இரவு, பேனாக்களை படுக்கையில் போட்டுவிட்டு தூங்கிவிட்டாள். காலையில் எழுந்தவுடன், அவற்றை கைகளில் எடுத்துக் கொண்டபோது, ஆயா பேனாவே இல்லையென்று சொன்ன நினைவு வந்தவளாக அவளிடம் சொன்னேன்,
ஆயாகிட்டே பேனாவை கொடுத்திடலாம், பப்பு!
இது என்னோட பேனாதானே..? - பப்பு.
ஆமா
அப்புறம் ஏன் ஆயாகிட்டே கொடுக்கணும்? நானே வச்சிக்கறேன் என் பேனாவை- பப்பு.
***********
கற்பனைகளும், பள்ளி நண்பர்களும், கேள்விகளும், தூக்கத்தில் கனவுகளும் நிரம்பியதாயிருக்கிறது அவளது நாட்கள்!! ஆனால், என் சின்னஞ்சிறு மூளை நினைவு வைத்துக்கொள்ள திணறுகிறது..:-(..அந்த நேரத்து ரசிப்போடு கடந்துப் போகிறது அக்கணங்கள்!!
************
புதிதாக Fox என்ற வார்த்தையைக் கற்றுக் கொண்டிருந்தாள். இதுநாள் வரை தமிழில்தான் சொல்லிக் கொடுத்திருந்தோம். இப்போது இரண்டு மொழிகளிலும் விலங்குகளை அடையாளம் காண்கிறாள்! Fox என்று சொல்லிவிட்டு, என்னது Six-ஆ என்றாள்! ரைமிங் வார்த்தைகள்..:-))!
சிலசமயம் நான் கோபப்படும்போது அல்லது சத்தமாக வீட்டினருடன் பேசுவதைக் கேட்டால்,
ஏன் கஷ்ஷ்ட்ட்ப்படறே ஆச்சி? - என்று மிகவும் கரிசனத்துடன் கேட்பதில் கோபம் மறந்து சிரித்துவிடுகிறேன் நான்!
பப்புவுக்கும் மற்ற அனைத்து குழந்தைகளுக்கும் "குழந்தைகள் தின வாழ்த்துக்கள்"!!
Wednesday, November 12, 2008
உன்னை நான் அறிவேன்!!
பப்புவிற்கு என்ன பிடிக்கும் என்றும் அவளைப் பற்றியும் எனக்குத்தான் தெரியும் என்று சிலசமயங்களில் பெருமை/பூரிப்பு எல்லாம் வருவதுண்டு! எல்லா அம்மாக்களுக்குமே அந்த பெருமை..நினைப்பு உண்டென்று அறிந்திருக்கிறேன்.
ஏனெனில் யார் வீட்டிற்காவது செல்லும்போது “அவளுக்கு காரம் பிடிக்காது, வேண்டாங்க, அதெல்லாம் சாப்பிட மாட்டா” என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்..ஆனால், அவர்கள் முன் நாம் அந்த சாப்பாட்டு ஐட்டங்களை வெளுத்து வாங்கிக் கொண்டிருப்போம்!! அப்போது ஒரு பார்வை வருமே..அப்போது அம்மா/பெரிம்மாவிடமிருந்து!!:-))
ஆம்பூரிலிருந்து பெரிம்மா வரும்போதெல்லாம் பிரியாணியும், மக்கப் பேடாவும் வாங்கி வருவது வழக்கம். இனிப்புப் பெட்டியைப் பிரித்து எல்லாருக்கும் கொடுத்துவிட்டு, நானும் உண்ணத் துவங்கினேன்..பாதி சாப்பிட்ட பப்பு, மீதியை என் வாயில் திணித்தாள். நான் தான் வச்சிருக்கேனே பப்பு, நீ சாப்பிடு என்ற போது,
“நீ சாப்பிடு ஆச்சி, உனக்குத்தானே பிடிக்கும்!!” -என்றாள்!!
பப்புவிற்கு ஜிராஃப்பும், சிங்கமும், முயலும் மானும் பிடிக்குமெம்று அறிந்திருக்கிறேன்.
மொறு மொறு தின்பண்டங்கள் பிரியமென்று அறிந்திருக்கிறேன்..ஆனால், எனக்கு என்ன பிடிக்குமென்றும் அவள் அறிந்திருக்கிறாள் என்பதை இன்று அறிந்துக்கொண்டேன்!!
ஒரு சின்னக் கடி: அறிவாள்மனை வெங்காயத்தை பார்த்து பாடினால் என்னப் பாடும்?
யோசிங்க..
யோசிங்க...
விடை:
தலைப்பைப் பார்க்கவும்!! :-))
ஏனெனில் யார் வீட்டிற்காவது செல்லும்போது “அவளுக்கு காரம் பிடிக்காது, வேண்டாங்க, அதெல்லாம் சாப்பிட மாட்டா” என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்..ஆனால், அவர்கள் முன் நாம் அந்த சாப்பாட்டு ஐட்டங்களை வெளுத்து வாங்கிக் கொண்டிருப்போம்!! அப்போது ஒரு பார்வை வருமே..அப்போது அம்மா/பெரிம்மாவிடமிருந்து!!:-))
ஆம்பூரிலிருந்து பெரிம்மா வரும்போதெல்லாம் பிரியாணியும், மக்கப் பேடாவும் வாங்கி வருவது வழக்கம். இனிப்புப் பெட்டியைப் பிரித்து எல்லாருக்கும் கொடுத்துவிட்டு, நானும் உண்ணத் துவங்கினேன்..பாதி சாப்பிட்ட பப்பு, மீதியை என் வாயில் திணித்தாள். நான் தான் வச்சிருக்கேனே பப்பு, நீ சாப்பிடு என்ற போது,
“நீ சாப்பிடு ஆச்சி, உனக்குத்தானே பிடிக்கும்!!” -என்றாள்!!
பப்புவிற்கு ஜிராஃப்பும், சிங்கமும், முயலும் மானும் பிடிக்குமெம்று அறிந்திருக்கிறேன்.
மொறு மொறு தின்பண்டங்கள் பிரியமென்று அறிந்திருக்கிறேன்..ஆனால், எனக்கு என்ன பிடிக்குமென்றும் அவள் அறிந்திருக்கிறாள் என்பதை இன்று அறிந்துக்கொண்டேன்!!
ஒரு சின்னக் கடி: அறிவாள்மனை வெங்காயத்தை பார்த்து பாடினால் என்னப் பாடும்?
யோசிங்க..
யோசிங்க...
விடை:
தலைப்பைப் பார்க்கவும்!! :-))
Tuesday, November 11, 2008
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு?!
jingle bells பாடல் பப்புவுக்கு மிகவும் விருப்பம். இருவரும் ஒன்றாகச் சேர்ந்துப் பாட கற்றுக் கொண்டிருக்கிறோம். ஒரு ஸ்டான்சாதான்! (விரைவில்
ஒலிபதிவேற்றப்படும்!! :-))
Oh, jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh
Jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh
எங்களின் இன்னொரு விருப்பப் பாடல்,
முட்டைக்குள்ளே இருக்கும்போது
முட்டைக்குள்ளே இருக்கும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
றெக்கையை பிக்கும்போது
றெக்கையை பிக்கும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
ஹேர்கட் பண்ணிக்கறேன்
ஹேர்கட் பண்ணிக்கறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
மசாலாத் தடவும்போது
மசாலாத் தடவும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
மேக்கப்பு போட்டுக்கறேன்
மேக்கப்பு போட்டுக்கறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
எண்ணெய்க்குள்ள போடும்போது
எண்ணெய்க்குள்ள போடும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
ஆயில்பாத் எடுத்துக்கறேன்
ஆயில்பாத் எடுத்துக்கறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
வாய்க்குள்ள போடும்போது
வாய்க்குள்ள போடும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
சாதாரண sing-song ட்யூன்தான்! பாடுவதற்கு எளிதாகவும், விளையாட்டாகவும் இருக்கும்!!
ஒலிபதிவேற்றப்படும்!! :-))
Oh, jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh
Jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh
எங்களின் இன்னொரு விருப்பப் பாடல்,
முட்டைக்குள்ளே இருக்கும்போது
முட்டைக்குள்ளே இருக்கும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
றெக்கையை பிக்கும்போது
றெக்கையை பிக்கும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
ஹேர்கட் பண்ணிக்கறேன்
ஹேர்கட் பண்ணிக்கறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
மசாலாத் தடவும்போது
மசாலாத் தடவும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
மேக்கப்பு போட்டுக்கறேன்
மேக்கப்பு போட்டுக்கறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
எண்ணெய்க்குள்ள போடும்போது
எண்ணெய்க்குள்ள போடும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
ஆயில்பாத் எடுத்துக்கறேன்
ஆயில்பாத் எடுத்துக்கறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
வாய்க்குள்ள போடும்போது
வாய்க்குள்ள போடும்போது
என்னதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
நான்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
உலகத்தைப் பார்க்கப் போறேன்
என்றுதான் சொல்லுச்சாம் கோழிக்குஞ்சு!
சாதாரண sing-song ட்யூன்தான்! பாடுவதற்கு எளிதாகவும், விளையாட்டாகவும் இருக்கும்!!
Saturday, November 08, 2008
ஞானம் பிறந்த”தடி”!!
ஏதோ விளையாடிக்கொண்டிருக்கும்போது, பப்புவைக் குழந்தை என்று சொன்னேன்!
பப்பு கேட்டாள், ஏன் என்னை குழந்தைன்னு சொன்னே?
என்ன சொல்வதென்று யோசித்துக்கொண்டிருக்கும்போது
"தெரியாம சொல்லிட்டியா?"
ம்ம்..ஆமா பப்பு, ஏன் குழந்தைன்னு சொன்னா என்ன? நீ குழந்தை தானே!
நான் குழந்தை இல்லை, பப்பு! சொல்லு, நான் பப்பு!!
****************************************************************
பப்புவை அதிகம் அடிப்பதில்லை. ஆனால் சில நேரங்களில் அப்படி நேர்ந்துவிடும், அதாவது அவள் செய்வது சரியல்ல என்று உண்ர்த்த! அன்றும் அப்படித்தான் ஒரு அடி பின்னால் கொடுத்தேன்! வழக்கம்போல் அடித்தவுடன் ஓடி வருபவள்/அழுபவள், வந்து என்னை அடித்தாள்! நச்-சென்று வேகமாய் ஒரு அடி! அடித்தது மட்டுமல்ல..அடித்துவிட்டு சொன்னாள்..”வலிக்கும் இல்ல”!!
பப்புக் கற்றுக்கொண்டாள்...அடிக்கு பதிலடி கொடுக்க! அதற்கு மேலாய் உணர்ந்ததை சொல்லவும்!!
ஓக்கே!இனி இந்தபாடம் உதவாது !
சோ, இப்போது tantrums தாங்க முடியாது போனால், அவள் மன்னிப்பு கேட்பது வரை யாரும் எதுவும் கேட்பது இல்லை..சிறிது நேரம் கழித்து பொறுமையாக எடுத்துச் சொல்கிறேன் ”அது நல்ல பழக்கமல்ல பப்பு” என்று!!
பப்பு கேட்டாள், ஏன் என்னை குழந்தைன்னு சொன்னே?
என்ன சொல்வதென்று யோசித்துக்கொண்டிருக்கும்போது
"தெரியாம சொல்லிட்டியா?"
ம்ம்..ஆமா பப்பு, ஏன் குழந்தைன்னு சொன்னா என்ன? நீ குழந்தை தானே!
நான் குழந்தை இல்லை, பப்பு! சொல்லு, நான் பப்பு!!
****************************************************************
பப்புவை அதிகம் அடிப்பதில்லை. ஆனால் சில நேரங்களில் அப்படி நேர்ந்துவிடும், அதாவது அவள் செய்வது சரியல்ல என்று உண்ர்த்த! அன்றும் அப்படித்தான் ஒரு அடி பின்னால் கொடுத்தேன்! வழக்கம்போல் அடித்தவுடன் ஓடி வருபவள்/அழுபவள், வந்து என்னை அடித்தாள்! நச்-சென்று வேகமாய் ஒரு அடி! அடித்தது மட்டுமல்ல..அடித்துவிட்டு சொன்னாள்..”வலிக்கும் இல்ல”!!
பப்புக் கற்றுக்கொண்டாள்...அடிக்கு பதிலடி கொடுக்க! அதற்கு மேலாய் உணர்ந்ததை சொல்லவும்!!
ஓக்கே!இனி இந்தபாடம் உதவாது !
சோ, இப்போது tantrums தாங்க முடியாது போனால், அவள் மன்னிப்பு கேட்பது வரை யாரும் எதுவும் கேட்பது இல்லை..சிறிது நேரம் கழித்து பொறுமையாக எடுத்துச் சொல்கிறேன் ”அது நல்ல பழக்கமல்ல பப்பு” என்று!!
Thursday, November 06, 2008
ஓபாமா!!
அமெரிக்க அரசியலைப் பற்றி எனக்கு அலசத் தெரியாவிட்டாலும், அதைப் பற்றி ஆராயத் தெரியாவிட்ட்டாலும்,இவர் charismatic leader என்று மட்டும் உணர்கிறேன்! ஜான் F கென்னடி, பில் கிளிண்டன் போன்றோரைப் பார்த்தும் எனக்கு இதே போல் தோன்றியிருக்கிறது!
நன்றி வெயிலான் சுட்டி பகிர்ந்தமைக்கு!!
இதுபோல் young and energetic-ஆக கம்பீரத்தோடு ஒரு பிரதமர் நமக்கு இருந்தால் நன்றாக இருக்கும்! உடனே தேசீயம் அப்படி இப்படின்னு கமெண்ட் போடாதீங்க! என் மனசுல பட்டதைச் சொன்னேன்!!
நன்றி வெயிலான் சுட்டி பகிர்ந்தமைக்கு!!
இதுபோல் young and energetic-ஆக கம்பீரத்தோடு ஒரு பிரதமர் நமக்கு இருந்தால் நன்றாக இருக்கும்! உடனே தேசீயம் அப்படி இப்படின்னு கமெண்ட் போடாதீங்க! என் மனசுல பட்டதைச் சொன்னேன்!!
கிளாஸ் ரூம் விளையாட்டுகள் : ஜாலிபாஸ், FLAMES இன்னபிற
அமித்து அம்மா போட்டிருக்கும் இந்த போஸ்ட் என் நினைவுகளையும் கிளறிவிட்டது. விளையாட்டுக்காக, இந்த போஸ்ட்!இது கிளாஸ் ரூமில் விளையாடும் விளையாட்டுகளைப் பற்றி! டீச்சர் வருவதற்குள்ளாகவோ, அல்லது பாடம் டீச்சருக்குத் தெரியாமலோ விளையாடப் படுபவை! ஒன்பதாம் வகுப்பு வரை இவற்றை விளையாடியதாக நினைவு!
ஜாலிபாஸ் : இது இடது/வலது உள்ளங்கையின் ஒரத்தில் பேனாவினால் வட்டவடிவத்தில் பொட்டு போல வைத்துக் கொள்ளவேண்டும்.அருகிலிருப்பவரிடம் அதைக் காட்டவேண்டும். அவர்கள் கையிலும் அதே போல் இருந்தால் ஜாலி என்று சொல்லிவிட்டு விட்டுவிட வேண்டும்.அப்படி அவர்கள் கையில் இல்லையென்றால் நமக்கு சாக்லேட் வாங்கித் தரவேண்டும்!! இதற்காக, காலை பிரேயர் முடித்த கிளாஸ் ரூம் வந்தவுடன் மார்க் வைத்துக் கொள்வோம்! அதன் விளைவு இன்றும் status meeting-ல் போரடிக்கும் போது மார்க் செய்துக் கொள்கிறேன்! ஆனால் அருகிலிருப்பவருக்கு தெரியவேண்டுமே இவ்விளையாட்டு! ;-)
புக் கிரிக்கெட் : பாட புத்தகத்தை திருப்பிக் கொண்டே வந்து ஏதாவதொரு பக்கத்தில் நிறுத்த வேண்டும். வலது பக்கத்தின் கடைசி எண்தான் நீங்கள் எடுத்த ரன். பையன்களிடம் தான் இவ்விளையாட்டு பேமஸ்,வழக்கம்போல !
FLAMES : இதில் இருவரது பெயர்கள் தேவை.அதாவது விளையாடுபவர் மற்றும், அவரது தோழனோ/தோழியோ அவரது பெயர்!இது அவர்களுக்கிடையே உள்ள உறவை கண்டுபிடிக்கும் விளையாட்டு! இருவரின் பெயர்களை எழுதி, பொதுவாக இருக்கும் எழுத்துகளைஅடித்துக் கொண்டே வர வேண்டும். ஆனால், எப்படிக் கண்டுபிடிப்போம் என்பது மறந்து போய் விட்டது! யாருக்காவது தெரியுமா?
F - FriendL = LoveA = AdoreM = MarriageE = Enemy S = Sister.
எழுத்து விளையாட்டு : Name, Place, Animal, Thing
ஒரு எழுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் Name, Place, Animal, Thing எழுத வேண்டும்.நான்காம் வகுப்பில் இது ரொம்ப பேமஸ்! x அல்லது e வந்தால் கொடுமை!
வேறு ஏதேனும் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள்!!அநேகமாக 80களில் 90களில் பள்ளி முடித்தவர்கள்இதையெல்லாம் மிஸ் செய்திருக்கமுடியாது!! :-)
ஜாலிபாஸ் : இது இடது/வலது உள்ளங்கையின் ஒரத்தில் பேனாவினால் வட்டவடிவத்தில் பொட்டு போல வைத்துக் கொள்ளவேண்டும்.அருகிலிருப்பவரிடம் அதைக் காட்டவேண்டும். அவர்கள் கையிலும் அதே போல் இருந்தால் ஜாலி என்று சொல்லிவிட்டு விட்டுவிட வேண்டும்.அப்படி அவர்கள் கையில் இல்லையென்றால் நமக்கு சாக்லேட் வாங்கித் தரவேண்டும்!! இதற்காக, காலை பிரேயர் முடித்த கிளாஸ் ரூம் வந்தவுடன் மார்க் வைத்துக் கொள்வோம்! அதன் விளைவு இன்றும் status meeting-ல் போரடிக்கும் போது மார்க் செய்துக் கொள்கிறேன்! ஆனால் அருகிலிருப்பவருக்கு தெரியவேண்டுமே இவ்விளையாட்டு! ;-)
புக் கிரிக்கெட் : பாட புத்தகத்தை திருப்பிக் கொண்டே வந்து ஏதாவதொரு பக்கத்தில் நிறுத்த வேண்டும். வலது பக்கத்தின் கடைசி எண்தான் நீங்கள் எடுத்த ரன். பையன்களிடம் தான் இவ்விளையாட்டு பேமஸ்,வழக்கம்போல !
FLAMES : இதில் இருவரது பெயர்கள் தேவை.அதாவது விளையாடுபவர் மற்றும், அவரது தோழனோ/தோழியோ அவரது பெயர்!இது அவர்களுக்கிடையே உள்ள உறவை கண்டுபிடிக்கும் விளையாட்டு! இருவரின் பெயர்களை எழுதி, பொதுவாக இருக்கும் எழுத்துகளைஅடித்துக் கொண்டே வர வேண்டும். ஆனால், எப்படிக் கண்டுபிடிப்போம் என்பது மறந்து போய் விட்டது! யாருக்காவது தெரியுமா?
F - FriendL = LoveA = AdoreM = MarriageE = Enemy S = Sister.
எழுத்து விளையாட்டு : Name, Place, Animal, Thing
ஒரு எழுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் Name, Place, Animal, Thing எழுத வேண்டும்.நான்காம் வகுப்பில் இது ரொம்ப பேமஸ்! x அல்லது e வந்தால் கொடுமை!
வேறு ஏதேனும் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள்!!அநேகமாக 80களில் 90களில் பள்ளி முடித்தவர்கள்இதையெல்லாம் மிஸ் செய்திருக்கமுடியாது!! :-)
Wednesday, November 05, 2008
அனைடா(Anaida)- Nazuk Nazuk லட்கி

அனைடா (Anaida) - இன்னொரு பாப் இளவரசி!
இவரும் 90-சில் அறிமுகமாகி ஒரு ரவுண்ட் வந்தவர். ஐந்து அல்லது ஆறு ஆல்பங்களும், படங்களில் பின்னணியும் பாடியவர். என்ன சிறப்பென்றால், தனியாக ஆல்பங்கள் செய்தார். அலிஷாவுக்கு ஒரு பித்து(Biddu) கிடைத்தது போல!! அவ்வளவாக அவரது இசை என்னை இம்பெரஸ் செய்யா விட்டாலும், ஒரு சில பாட்டுகளை விட்டுவிட முடியாது! ஷூக்ரி (Shukri) எனும் அரேபிய பாடகருடன் ஒரு அராபிக் ஆல்பத்தை வெளியிட்டார்.(didi பாடிய காலித்-ஐ மறக்க முடியுமா!)

பாபா சேகலுடன், லயன் கிங் படத்துக்கு ஒரு பாடலை பாடினார். அந்த இரண்டை தவிர ஒவ்வொரு ஆல்பத்திலும் ஒரு பாடல் மட்டுமே என்னை ஈர்த்தது. மிகவும் மைல்டான லுக்..gentle and innocent பார்ப்பதற்கு! Love Today Hai Nahi Aasaa - முதல் பாடல்.
அடுத்த ஆல்பத்தில், Nazuk Nazuk main ladki.
oova oova பாடலும் நன்றாக இருக்கும்.
ஷூக்ரியுடன் o malu malu,
அரபியின் அர்த்தம் புரியாவிட்டாலும், பாடுவது மிகவும் இனிமையாக இருக்கிறது! How sweet the language is!!
Funky பாபாவுடன் Hakuna Matata,
| Hakuna Matata.mp3 |
பப்பு நினைக்கிறாள்....
நான் அழகாய் இருக்கியிருக்கிறேனென்று...
நான் கார் ஓட்ட வேண்டுமென்று...
.
.
.
.
அவளின் எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் விடை இருக்குமென்று!
எல்லாவற்றுக்கும் மேலாக,
அவளுக்குத்தான் என்னை அதிகமாக பிடிக்குமென்றும்!!
பி.கு: பப்பு என் தம்பியிடம் கேட்டாள், "உனக்கு ஆச்சியை(வீட்டில் என் செல்லப் பெயர்) பிடிக்குமா?". ஆமாம் என்று அவன் சொல்ல, அவனுக்கு இரண்டு அடிகள் கொடுத்துவிட்டு சொன்னாள்,
"எனக்குதான் ஆச்சியை பிடிக்கும்!"
yes my dear, nobody loved me the way you love me :-)!!
நான் கார் ஓட்ட வேண்டுமென்று...
.
.
.
.
அவளின் எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் விடை இருக்குமென்று!
எல்லாவற்றுக்கும் மேலாக,
அவளுக்குத்தான் என்னை அதிகமாக பிடிக்குமென்றும்!!
பி.கு: பப்பு என் தம்பியிடம் கேட்டாள், "உனக்கு ஆச்சியை(வீட்டில் என் செல்லப் பெயர்) பிடிக்குமா?". ஆமாம் என்று அவன் சொல்ல, அவனுக்கு இரண்டு அடிகள் கொடுத்துவிட்டு சொன்னாள்,
"எனக்குதான் ஆச்சியை பிடிக்கும்!"
yes my dear, nobody loved me the way you love me :-)!!
Monday, November 03, 2008
சும்மா டைம் பாஸ்
நாம பள்ளிக்கூடத்தில் கண்டிப்பாக பிரேயர் டைமில் கீழே இருப்பதை சொல்லியிருப்போம்!
"India is my country and all Indians are my brothers and sisters."
ஆனா, தன்னுடைய வாழ்க்கையில் இதை உண்மையிலேயே கடைப்பிடித்தவர் யார்?
"India is my country and all Indians are my brothers and sisters."
ஆனா, தன்னுடைய வாழ்க்கையில் இதை உண்மையிலேயே கடைப்பிடித்தவர் யார்?
Sunday, November 02, 2008
ஆட்டோகிராப் aka டைரி ரீவிசிட்டட்!!
12-ஆம் வகுப்பு படிக்கும்போது நான் வைத்திருந்த டைரியை ஊருக்குச் சென்றபோது கண்டெடுத்தேன். அதுவே எனது ஆட்டோகிராப் புத்தகமாயும் இருந்தது. டைரிக் குறிப்புகள் என்றால், இன்று இந்த ப்ராக்டிகல்ஸ் செய்தேன், இந்த சால்ட் வந்திருந்தது...எனக்குப் பிடித்த சில பாடல்கள், அதன் வரிகள்!! எல்லோருடைய ஆட்டோகிராப் எண்ட்ரிகளில் இருந்தது எதைப் பற்றியென்றால், நான் சொல்லும் கடி ஜோக்குகளைப் பற்றியும், என்னுடைய புன்னகையும்தான்..மேலும், சிரித்தால் குழி விழுவதைப் பற்றியும்!! எல்லாவற்றுக்கும் மேலாக அனைவரும் வாழ்த்தியிருந்தது புன்னகை வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் மாறிவிடக்கூடாதென்று! yes friends, the smile still remains the same with me, come what may the situations!!
ரீடர்ஸ் டைஜஸ்ட்-டிலிருந்து பிடித்த சில quotes-ம் எழுதி வைத்திருக்கிறேன், ஆவியிலிருந்ததும் சில கவிதைகளை!! அதைவிட சுவாரசியம், நானே கூட கவிதைகள் எழுதியிருக்கிறேன்..:-)). And I managed to get some interesting stickers with funny messages. ஆண்ட்ரி அகாஸியின் ஹைட், வெயிட், அட்ரஸ், சொத்து பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன! :(..ம்ம்ம்! ஒவ்வொரு பக்கத்திலும், ஏதாவதொரு ஸ்டிக்கர்/ரெயின்போ இருக்கிறது..நான் அப்பொழுதே ப்லாக் எழுத ஆரம்பித்துவிட்டேன் போலிருக்கிறாது!! அப்புறம் கோட் வேர்ட்ஸ் நிறையக் இருக்கிறது..ஆட்டோகிராப் என்ற பெயரில் கொஞ்சம் அட்வைஸ் வேறு!எதுகை மோனைகளிலும், உவமைகளிலும் மக்கள்ஸ் பின்னியெடுத்திருக்கிறார்கள்!எழுத்துப் பிழைகள் வேறு!
கொஞ்சம் சுமாராயிருக்கிறது என்று நான் எண்ணுகிற கவிதையை..
வாழ்வை
ஊடுருவிப்
பார்த்தபோது..!
எண்ணமுட்டை வெடித்து
வண்ணக்கனவுகள்
வானுயர வளர்ந்து நிற்கும்!
கனவுகள் கரியாய் மரித்து
உண்மைகள் இயல்பாய் புரிய
மனம் இயலாமையில்
சூம்பிப் போகும்!
நடப்புகளை கிரகிக்க
சக்தியற்ற மனம்
வெதும்பி வெதும்பி ஏங்கும்..
இனிமையாய் கழித்த
இளம்பிராயத்துக்காக....!
(அநேகமா எங்க பாட்டி ஏதாவது என்னைத் திட்டியிருப்பாங்க, அதுக்கு நான் இவ்ளோ பெரிய கவிதை எழுதியிருப்பேன்ன்னு நினைக்கிறேன்..காலையில் எழுந்து படிக்காததற்காக!சத்தியமா எதுக்கு இப்படியெல்லாம் எழுதினேன்னு இப்போ ஒன்னும் புரியல!!:-)))
ரீடர்ஸ் டைஜஸ்ட்-டிலிருந்து பிடித்த சில quotes-ம் எழுதி வைத்திருக்கிறேன், ஆவியிலிருந்ததும் சில கவிதைகளை!! அதைவிட சுவாரசியம், நானே கூட கவிதைகள் எழுதியிருக்கிறேன்..:-)). And I managed to get some interesting stickers with funny messages. ஆண்ட்ரி அகாஸியின் ஹைட், வெயிட், அட்ரஸ், சொத்து பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன! :(..ம்ம்ம்! ஒவ்வொரு பக்கத்திலும், ஏதாவதொரு ஸ்டிக்கர்/ரெயின்போ இருக்கிறது..நான் அப்பொழுதே ப்லாக் எழுத ஆரம்பித்துவிட்டேன் போலிருக்கிறாது!! அப்புறம் கோட் வேர்ட்ஸ் நிறையக் இருக்கிறது..ஆட்டோகிராப் என்ற பெயரில் கொஞ்சம் அட்வைஸ் வேறு!எதுகை மோனைகளிலும், உவமைகளிலும் மக்கள்ஸ் பின்னியெடுத்திருக்கிறார்கள்!எழுத்துப் பிழைகள் வேறு!
கொஞ்சம் சுமாராயிருக்கிறது என்று நான் எண்ணுகிற கவிதையை..
வாழ்வை
ஊடுருவிப்
பார்த்தபோது..!
எண்ணமுட்டை வெடித்து
வண்ணக்கனவுகள்
வானுயர வளர்ந்து நிற்கும்!
கனவுகள் கரியாய் மரித்து
உண்மைகள் இயல்பாய் புரிய
மனம் இயலாமையில்
சூம்பிப் போகும்!
நடப்புகளை கிரகிக்க
சக்தியற்ற மனம்
வெதும்பி வெதும்பி ஏங்கும்..
இனிமையாய் கழித்த
இளம்பிராயத்துக்காக....!
(அநேகமா எங்க பாட்டி ஏதாவது என்னைத் திட்டியிருப்பாங்க, அதுக்கு நான் இவ்ளோ பெரிய கவிதை எழுதியிருப்பேன்ன்னு நினைக்கிறேன்..காலையில் எழுந்து படிக்காததற்காக!சத்தியமா எதுக்கு இப்படியெல்லாம் எழுதினேன்னு இப்போ ஒன்னும் புரியல!!:-)))
Saturday, November 01, 2008
வாங்க பழகலாம், குழந்தைகளிடம்!!!
ஏதாவதொரு இடத்திற்கு திருமணத்திற்கோ அல்லது கெட் டூகெதருக்கோ செல்கிறோம்...அறிமுகமில்லாத பலர் குழுமியிருக்கிறார்கள். எத்தனை பேரிடம், புதிதாய் இருப்பவரிடம் நாம் சென்று பேசுகிறோம் அல்லது பழகுகிறோம்?

(நன்றி : படம் - www)
குழந்தைகளும் அதே போல்தான்! பழகிய முகங்கள், இடங்களைத் தவிர அவர்கள் எல்லாரிடமும் பாய்ந்து சென்று விட மாட்டார்கள் அல்லது அவர்களிடம் பேசி விடமாட்டார்கள். சில குழந்தைகள் அப்படியும் இருக்கலாம், ஆனால் இது அவர்களைப் பற்றியது அல்ல! ;-). ஆனால், ஏதாவது பொது இடத்திற்குச் சென்றால், நமது குழந்தைகள் எல்லாரிடமும் பயமின்றி, தயக்கமின்றி பழக வேண்டுமென்று ஒரு எழுதப் படாத விதி/எதிர்பார்ப்பு இருக்கிறது.
பப்பு பொதுவாக புதியவர்களிடம்(குழந்தைகள்பெரியவர்கள்) பழக தயக்கம் காட்டுவாள்! சிறிது நேரம் ஆக ஆக, கொஞ்சம் புன்னகை வரும், அவ்வளவுதான். யாராவது அவளிடம் வலிய வந்து பேசினால் மட்டுமே ஓரிரு வார்த்தைகள் பேசுவாள்.அதுவும், one at a time! ஆனால் அமைதியாக அப்சார்ப் செய்துக் கொண்டிருப்பாள். வீட்டிற்கு வந்த பிறகு அவர்களைப் பற்றி கேட்டுக் கொண்டிருப்பாள். அவர்களை அடுத்தமுறை பார்த்தால் கொஞ்சம் பரிச்சயம் ஏற்படும்!!
”பேச மாட்டாளா?” அல்லது ”என்ன மிங்கிள் ஆக மாட்டாளா?” என்று சிலர் என்னிடம் கேட்பதுண்டு. அதுக்கு பதில் சொல்வது அவசியமா என்று என் மனதிற்குத் தோன்றினாலும், “இல்ல, கொஞ்சம் நேரம் ஆகும், பழகணும்” என்று கூறியிருக்கிறேன். இப்போது நானே ஒரு பார்க்குக்கு செல்கிறேன், அதற்காக, பார்க்கும் மனிதர்களிடமெல்லாம்
பேசிக் கொண்டா இருக்கிறேன்? எனக்குத் தெரிந்தவர்களிடம் மட்டும் தானே!! நமக்கே இப்படி என்றால், குழந்தைகள்..they come with the enviroment!
பப்பு, அமைதியாக இருக்க முடிவெடுத்திருந்தால், அதை மாற்ற நான் யார்! அவள் பேச/பழக் வேண்டுமா என்று முடிவெடுப்பது அவளது உரிமை. அதே சமயம், அவளுக்கு பேச/பழக வேண்டுமென தோன்றினாலும் அதை தடுப்பதும் என்னால் இயலாத காரியம்! சில சமயங்களில், நானுமே அவளை பிறருக்காக அவளை வற்புறுத்தியிருக்கிறேன், ஆனால் எனக்கு மனமில்லாமல்! ஆனால் எனக்குத் தெரியும் அவள் வீட்டில் எப்படியென்று, அதே சமயம் அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளிடம் எப்படி பழகுகிறாள் என்று!! பின் ஏன் கவலைப்படவேண்டுமென்றும் தோன்றியதுண்டு! இப்போது பள்ளியில் கேள்விப்படுகிறேன், அவளுக்கென்று ஒரு க்ரூப் இருக்கிறது...வெண்மதி, ஆகாஷ், சஞ்சய், தண்ணொளி,பவன் கார்த்தி!! அது அவளுக்கான ஒரு comfortable circle. பக்கத்து வீட்டு ஆதி, மோனேஷ், நவீன்,சிந்து மற்றும் உறவினர்களின் குழந்தைகள் என்று இன்னொமொரு வட்டம்! ஒருவேளை அவளுக்கு ஒரு பெரிய நண்பர்கள் வட்டம் தேவைப்படாமலிருக்கலாம், ஒரே ஒரு பெஸ்ட் ஃப்ரெண்ட் மட்டும் போதுமாயிருக்கலாம். அப்படி ஒரு நட்பைவட்டத்தை தேடிக்கொள்ளும் நம்பிக்கை அவளுக்குண்டு! அதுவரை நான் செய்யக்கூடயதெல்லாம் ,socialize ஆகும்படி வற்புறுத்த மாட்டேன். புதியவரிடம் தயக்கமின்றி பழகினால், ஊக்கப்படுத்துவேன்!!
கடவுளே..பப்புவை வளர்க்க பொறுமையையும் ஞானத்தையும் கொடு..அவள் இருக்கிறவண்ணமாகவே ஏற்றுக்கொள்ளுகிற மனப்பக்குவதைக் எனக்குக் கொடு!!
நீண்ட நாட்களாக இதைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்திருந்தது, இன்றுதான் முடிந்தது!!
The irony is, பேசி பழகவே மாட்டேனென்கிறார்கள் என்று கவலைப்படுபவர்கள் பிற்காலத்தில் அப்படி என்னதான் பேசுவாங்களோ என்று கவலைப்படுகிறார்கள், இல்லையா!!

(நன்றி : படம் - www)
குழந்தைகளும் அதே போல்தான்! பழகிய முகங்கள், இடங்களைத் தவிர அவர்கள் எல்லாரிடமும் பாய்ந்து சென்று விட மாட்டார்கள் அல்லது அவர்களிடம் பேசி விடமாட்டார்கள். சில குழந்தைகள் அப்படியும் இருக்கலாம், ஆனால் இது அவர்களைப் பற்றியது அல்ல! ;-). ஆனால், ஏதாவது பொது இடத்திற்குச் சென்றால், நமது குழந்தைகள் எல்லாரிடமும் பயமின்றி, தயக்கமின்றி பழக வேண்டுமென்று ஒரு எழுதப் படாத விதி/எதிர்பார்ப்பு இருக்கிறது.
பப்பு பொதுவாக புதியவர்களிடம்(குழந்தைகள்பெரியவர்கள்) பழக தயக்கம் காட்டுவாள்! சிறிது நேரம் ஆக ஆக, கொஞ்சம் புன்னகை வரும், அவ்வளவுதான். யாராவது அவளிடம் வலிய வந்து பேசினால் மட்டுமே ஓரிரு வார்த்தைகள் பேசுவாள்.அதுவும், one at a time! ஆனால் அமைதியாக அப்சார்ப் செய்துக் கொண்டிருப்பாள். வீட்டிற்கு வந்த பிறகு அவர்களைப் பற்றி கேட்டுக் கொண்டிருப்பாள். அவர்களை அடுத்தமுறை பார்த்தால் கொஞ்சம் பரிச்சயம் ஏற்படும்!!
”பேச மாட்டாளா?” அல்லது ”என்ன மிங்கிள் ஆக மாட்டாளா?” என்று சிலர் என்னிடம் கேட்பதுண்டு. அதுக்கு பதில் சொல்வது அவசியமா என்று என் மனதிற்குத் தோன்றினாலும், “இல்ல, கொஞ்சம் நேரம் ஆகும், பழகணும்” என்று கூறியிருக்கிறேன். இப்போது நானே ஒரு பார்க்குக்கு செல்கிறேன், அதற்காக, பார்க்கும் மனிதர்களிடமெல்லாம்
பேசிக் கொண்டா இருக்கிறேன்? எனக்குத் தெரிந்தவர்களிடம் மட்டும் தானே!! நமக்கே இப்படி என்றால், குழந்தைகள்..they come with the enviroment!
பப்பு, அமைதியாக இருக்க முடிவெடுத்திருந்தால், அதை மாற்ற நான் யார்! அவள் பேச/பழக் வேண்டுமா என்று முடிவெடுப்பது அவளது உரிமை. அதே சமயம், அவளுக்கு பேச/பழக வேண்டுமென தோன்றினாலும் அதை தடுப்பதும் என்னால் இயலாத காரியம்! சில சமயங்களில், நானுமே அவளை பிறருக்காக அவளை வற்புறுத்தியிருக்கிறேன், ஆனால் எனக்கு மனமில்லாமல்! ஆனால் எனக்குத் தெரியும் அவள் வீட்டில் எப்படியென்று, அதே சமயம் அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளிடம் எப்படி பழகுகிறாள் என்று!! பின் ஏன் கவலைப்படவேண்டுமென்றும் தோன்றியதுண்டு! இப்போது பள்ளியில் கேள்விப்படுகிறேன், அவளுக்கென்று ஒரு க்ரூப் இருக்கிறது...வெண்மதி, ஆகாஷ், சஞ்சய், தண்ணொளி,பவன் கார்த்தி!! அது அவளுக்கான ஒரு comfortable circle. பக்கத்து வீட்டு ஆதி, மோனேஷ், நவீன்,சிந்து மற்றும் உறவினர்களின் குழந்தைகள் என்று இன்னொமொரு வட்டம்! ஒருவேளை அவளுக்கு ஒரு பெரிய நண்பர்கள் வட்டம் தேவைப்படாமலிருக்கலாம், ஒரே ஒரு பெஸ்ட் ஃப்ரெண்ட் மட்டும் போதுமாயிருக்கலாம். அப்படி ஒரு நட்பைவட்டத்தை தேடிக்கொள்ளும் நம்பிக்கை அவளுக்குண்டு! அதுவரை நான் செய்யக்கூடயதெல்லாம் ,socialize ஆகும்படி வற்புறுத்த மாட்டேன். புதியவரிடம் தயக்கமின்றி பழகினால், ஊக்கப்படுத்துவேன்!!
கடவுளே..பப்புவை வளர்க்க பொறுமையையும் ஞானத்தையும் கொடு..அவள் இருக்கிறவண்ணமாகவே ஏற்றுக்கொள்ளுகிற மனப்பக்குவதைக் எனக்குக் கொடு!!
நீண்ட நாட்களாக இதைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்திருந்தது, இன்றுதான் முடிந்தது!!
The irony is, பேசி பழகவே மாட்டேனென்கிறார்கள் என்று கவலைப்படுபவர்கள் பிற்காலத்தில் அப்படி என்னதான் பேசுவாங்களோ என்று கவலைப்படுகிறார்கள், இல்லையா!!
Friday, October 31, 2008
கொடுத்துத் தீரவில்லை முத்தம்..

அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட துணிகளில் அடியிருந்ததை இழுத்த போது, தென்பட்டது இது!
அவசரத்திற்கு, அல்லது உடனே பத்திரப்படுத்தப்படும்படியான பொருட்களை துணிகளில் அடியில் வைப்பது வழக்கம். இதுவும் அப்படி நான் பத்திரப்படுத்தியதுதான்!! இருவாரங்களுக்கு முன், கடுமையான தலைவலியென்று அலுவலகத்திலிருந்து வந்ததும் படுத்திருந்தேன். பாட்டியிடம் எப்போதும் க்ரோசின் ஸ்டாக் உண்டு. பப்பு பாட்டியிடம் சென்று, ஒரு அட்டையை வாங்கி வந்து, ஒரு மாத்திரையை பிரித்து எனக்கு எடுத்துக் கொடுத்தாள். வீட்டில் யார் மாத்திரை சாப்பிட்டாலும், அவர்கள் வாயில் மாத்திரையை கொடுப்பது பப்புவின் வழக்கம். அன்று எனக்கும் அப்படியே ஆயிற்று. மாத்திரை உட்கொண்ட உடனேயே,
"தலவலி சரியாய்டுச்சா?"என்று பப்பு.!!
"இல்ல பப்பு, இப்போதானே சாப்பிட்டிருக்கேன், தூங்கினாதான் சரியாகும்" - தூங்கவிட்டால் போதுமென்ற நிலையில் நான்.
"அப்போ, இதை மட்டும் சாப்பிடேன் " என்று கையில் இன்னொரு மாத்திரையை பிரித்துவிட்டாள்.
வேணாம், பப்பு ஒன்னுதான் சாப்பிடனும்!!
ப்ளீஸ், இது மட்டும் சாப்பிடேன் என்று கெஞ்சும் தொனியில்.
நான் ஒன்றும் பேசவில்லை.!!
"சரி, அப்போ இதுல பாதி மட்டும் சாப்பிடு, மீது ஆயா(வு)க்கு கொடுத்துடலாம் -"பப்பு.
ரெண்டுலாம் சாப்பிடக்கூடாது பப்பு, போய் ஆயாகிட்டே கொடுத்துட்டு வா!!
"இதை மட்டும் சாப்பிட்டுடேன்!! " - என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.
சரி, இப்போதானே சாப்பிட்டேன், காலையில் எழுந்ததும் சாப்பிடறேன், கொடு என்று வாங்கி தலையணை அடியில் வாங்கி வைத்தேன். அதன்பிறகுதான் அவளது நச்சரிப்பு ஓய்ந்தது.
ஆனால், காலையில் எழுந்ததும், என் தலையணையின் அடியில் கைவிட்டு எடுத்து, "இப்போ சாப்பிடு" என்றபோதுதான், "எனக்கு சரியாய்டுச்சி" என்று சொல்லி வாங்கி பத்திரபடுத்தினேன்!! சாதாரண க்ரோசின் தானே என்று விட்டுவிட முடியாமல், அதன் மதிப்பு இப்போது மிகப் பெரிதாய் தோன்றியது எனக்கு...
Wednesday, October 29, 2008
நன்றிகள்

நினைவு வைத்திருந்து வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் பப்புவின் சார்பாக நன்றி!
அழகிய ஈ-கார்டு அனுப்பிய ராமலஷ்மி- க்கும், மொபைலில் அழைத்து வாழ்த்திய அமித்து அம்மாவுக்கும், பதிவில் வாழ்த்திய பூந்தளிர் தீஷூவிற்க்கும், அருமையான வாழ்த்துக்கள் அனுப்பிய வெயிலானுக்கும், தமிழ்ப் பிரியனுக்கும்,
மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றிகள் பல!
விலங்குகளின் டாக்டர் பவுடர்பில்!
இது சிறார்களுக்கான ரஷ்யக் கதை. பப்புவின் தற்போதைய பேவரிட். குழந்தைகளுக்கு சொல்வதற்கு, யாருக்கேனும் பயன்படலாமென்று பகிர்ந்துக்கொள்கிறேன்!!

டாக்டர் பௌடர்பில்,
உடல்நலமில்லையா, வயிற்றுவலியா..
அணுகிடுவீர் டாக்டர் பவுடர்பில்லை!!
எல்லா விலங்கினமும், பறவைகளும் ,
புழுக்களும் வண்டுகளும், ஓநாய்களும்
மாடுகளும்,ஆடுகளும் தேடி வருமே
அவரது கவனிப்புக்காக!!
தமிழ்படுத்தலாமென்று முயன்றது இது..அப்புறம் ஏன் ”படுத்தனும்”என்று கூகுளிட்ட போது கிடைத்தது கதை!!

கதை சொல்வதென்பது ஒரு கலை!! பப்புவுக்காக, ஒரு கதை சொல்லும் செஷனில் சேர்ந்திருக்கிறோம். வாரத்திற்கு ஒருமுறையென..மூன்று வாரங்களாகியிருக்கிறது.
ஜீவா ரகுநாத். ஒரு இண்டர்நேஷனல் ஸ்டோரி டெல்லர். இவரது புத்தகங்களை வாங்கியதன் மூலம் இவரைப் பற்றி அறிந்தேன்.நாம் ஒரு வாக்கியத்தில் சொல்வதை, நடித்துக் காட்டிவிடுகிறார். அவரது கதை சொல்ல ஆரம்பித்த வுடனே, முயல்கள் துள்ளி ஓடுகின்றன், தவளைகள் கத்துகின்றன், சைக்கிள் மணி ஒலிக்கின்றது, இளவரசன் குதிரையில் வருகிறான்..குழந்தைகள் குதூகலத்தில் துள்ளுகின்றனர். நமக்குமே ஆசை வருகிறது, அப்படி கதை சொல்ல!! :-)..

6 வயதினற்கு மேற்பட்டவருக்கு,
hansel & gretel-லில் நடத்துகிறார், இந்த நவம்பர் மாத வாரயிறுதிகளில்!!

ஜீவாவின் ஸ்பெஷாலிடி, அவர் சொல்லும் போது தம்மையும் மறந்து குழந்தைகள் அவரின் ஆக்ஷன்களை தம்மையறியாமல் செய்வதுதான்.
டாக்டர் பௌடர்பில்,
உடல்நலமில்லையா, வயிற்றுவலியா..
அணுகிடுவீர் டாக்டர் பவுடர்பில்லை!!
எல்லா விலங்கினமும், பறவைகளும் ,
புழுக்களும் வண்டுகளும், ஓநாய்களும்
மாடுகளும்,ஆடுகளும் தேடி வருமே
அவரது கவனிப்புக்காக!!
தமிழ்படுத்தலாமென்று முயன்றது இது..அப்புறம் ஏன் ”படுத்தனும்”என்று கூகுளிட்ட போது கிடைத்தது கதை!!
கதை சொல்வதென்பது ஒரு கலை!! பப்புவுக்காக, ஒரு கதை சொல்லும் செஷனில் சேர்ந்திருக்கிறோம். வாரத்திற்கு ஒருமுறையென..மூன்று வாரங்களாகியிருக்கிறது.
ஜீவா ரகுநாத். ஒரு இண்டர்நேஷனல் ஸ்டோரி டெல்லர். இவரது புத்தகங்களை வாங்கியதன் மூலம் இவரைப் பற்றி அறிந்தேன்.நாம் ஒரு வாக்கியத்தில் சொல்வதை, நடித்துக் காட்டிவிடுகிறார். அவரது கதை சொல்ல ஆரம்பித்த வுடனே, முயல்கள் துள்ளி ஓடுகின்றன், தவளைகள் கத்துகின்றன், சைக்கிள் மணி ஒலிக்கின்றது, இளவரசன் குதிரையில் வருகிறான்..குழந்தைகள் குதூகலத்தில் துள்ளுகின்றனர். நமக்குமே ஆசை வருகிறது, அப்படி கதை சொல்ல!! :-)..
6 வயதினற்கு மேற்பட்டவருக்கு,
hansel & gretel-லில் நடத்துகிறார், இந்த நவம்பர் மாத வாரயிறுதிகளில்!!
ஜீவாவின் ஸ்பெஷாலிடி, அவர் சொல்லும் போது தம்மையும் மறந்து குழந்தைகள் அவரின் ஆக்ஷன்களை தம்மையறியாமல் செய்வதுதான்.
Tuesday, October 28, 2008
பிறந்த நாள் கலாட்டா!
பப்புவின் பிறந்தநாளுக்கான எங்களதுத் திட்டங்கள்,
1. ஒரு விளையாட்டு
2. இரு போட்டோ ஆல்பங்கள்
3. மூன்று கொண்டாட்டங்கள்
ஒரு விளையாட்டு:
பப்புவுக்காக நாங்கள் வாங்கிய பரிசினை சுவாரசியமாய் அவளிடம் கொடுக்க் நினைத்தோம்.அதனால், treasure hunt with two clues. இரண்டாவது துருப்புச் சீட்டு, பரிசுப் பொருளைக்கான இடத்தைக் குறிக்கும்.

பொம்மையின் கையில் இருக்கும் முதல் சீட்டினுள் சைக்கிளின் படம் இருக்கும். அவள் சைக்கிளிடம் செல்ல வேண்டும்.சைக்கிள் கூடையில் இருக்கும் சீட்டு, வீட்டினுள் இருக்கும் ஒரு அலமாரியின் படம் கொண்டிருக்கும்.அந்த அலமாரி அவளது விளையாட்டுப் பொருட்கள் வைக்குமிடம். (அந்த இடத்தை தேர்ந்தெடுக்கக் காரணம், she hardly uses that place! :-)))இதுதான் ப்ளான். நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியது! இன்னும் கொஞ்சம் எப்பெக்டிவ்வாகவும் இருந்திருக்கலாம். (so, i am reserving this game with more clues for next year too!)
லேண்ட்மார்க் கவரில் இருக்கும் இருக்கும் பரிசுபொருள், ஒரு ட்ரெயின் செட்! அவளுக்கு ட்ரெயின், மற்றும் கார் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு.அந்த செட் அவளுக்கு பிடித்திருந்தது. பிற்காலத்தில் உண்மையை அவள் சொல்லக்கூடும் ;-)!! 28அம் தேதி அவளுக்கு பள்ளி இருந்ததாலும், ட்ரெய்னை செட் செய்து விளையாடுவாள் என்ற காரணத்தினாலும், birthday eve அன்று இந்த ஈவெண்ட் நடந்தது !!
இரண்டு ஆல்பங்கள்
”The terrific twos” - இதுதான் ஒரு ஆல்பத்தின் பெயர். கடந்து சென்ற இரண்டாம் வருடத்தில்/வயதில் அவள் செய்த ”எல்லா முதல்”கள்.. முதல் விசிட் டூ த ஜூ, தனியாய் விளையாடின முதல் சறுக்கல் etc! இந்த ஆல்பத்திற்கு இன்ஸிபிரேஷ்ன் நிலா பாப்பாவின் போட்டோஸ் தான்! நன்றி நிலா பாப்பாவிற்கும், போட்டோ டிப்ஸ் வழங்கிய நிலா அப்பாவிற்கும்! போட்டோக்கள் எடுத்ததென்னவோ, போட்டோக்ராபர்தான். ஆனால், www-வில் தேடி, எக்ஸ்க்ளூசிவ் குழந்தைகள் போட்டோஸ் தேடி, ஐடியா கொடுத்து, நன்றாக வந்திருக்கிறது ஆல்பம்!!
படங்கள் அடுத்த போஸ்டில்!!
இன்னொரு ஆல்பம், எல்லா உறவினர்களோடும் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்களோடும்! படங்கள் எடுத்தாகிவிட்டது, album is under making now.
மூன்று கொண்டாட்டங்கள்
மூன்று வயது, மூன்றுக் கொண்டாட்டங்கள் என்றும் கொள்ளலாம்! (நான்கு வயது என்றால், நான்கு கொண்டாட்டங்கள் என்று அர்த்தம் அல்ல!! ஆயில்ஸ், உடனே தான் எத்தனை கொண்டாட வேண்டுமென்று கணக்குப் போடவேண்டாம்!)
ரோஷினி ஹோம் @ பள்ளிக்கரணை
ரோஷினி ஹோம், அவ்வப்போது/ இயலும்போது கம்பெனி மூலமாகவும், எங்கள் அலுவலகத்தின் பெண்கள் க்ரூப்பின் மூலமாகவும் உதவி வரும் ஒரு
குழந்தைகள் காப்பகம். நாற்பது சிறார்கள், தங்கி படித்து வருகிறார்கள்! 3 வயதிலிருந்து 18 வயது வரை! ஞாயிறுக்கிழமை செல்வதாக ஏற்பாடு!

ஞாயிறு மதியம் மூன்று மணிக்கு சென்றோம். வீட்டில் இரு டீச்சர்கள் இருக்கும்போது சிறார்களை எண்டெர்டெயின் செய்யும் கவலை விட்டது! பெரிம்மா, சிறார்களுக்கான் விளையாட்டுக்கள் (டீம் பில்டிங் மாதிரியான) நடத்த எல்லாரும் குதித்து விளையாட, கலகலப்பாய் இருந்தது ஹோம்! யாரும் தயக்கம் இல்லாமல் எங்களிடம் ஒட்டி கொண்டனர், விளையாட்டுக்கள், கைத்தட்டல்கள் என்று உற்சாகமாயிருந்தது! பப்புவிற்கு அவ்வளவாய் புரியாவிட்டாலும், எல்லாரும் ஓடும் போது ஓடிக்கொண்டிந்தாள்! பின்னர், அம்மா, சிறார்களுக்கான பாடல்கள் பாடி ஆக்ச்ஷனுடன் கற்றுத் தந்தார்! மிகவும் ஆர்வமாக கற்றுக் கொண்டனர்! அம்மா பாடல்கள் கற்றுக் கொடுக்கும்போது, உணவுப் பண்டங்களை அடுக்குவதில் இருந்த்தால், சரியான படம் இல்லை! :-(
விளையாட்டுகள் முடிந்து, "பாப்பா பேரு குறிஞ்சி மலர், நாளன்னிக்கு பாப்பாவுக்கு பர்த் டே, அதை உங்க கூட சேர்ந்து கொண்டாடலாம்னுதான் வந்திருக்கிறோம்-"என்று சொன்னபோது அனைவரும் ஹேப்பி பர்த் டே பாடினர்! நெகிழ்வாய் இருந்தது..பாடல் முடிந்தபோது ஒரு சிறுவன் "பாப்பாவுக்கு எத்தனை வயது?" என்று கேட்க "மூன்று" என்றதும்
மூன்று முறை கை தட்டினர்! ஏனோ கண்கள் பனித்தன!!
கப்கேக்குகளும், உருளைகிழங்கு சிப்ஸ் மற்றும் மாம்பழம், ஆரஞ்சு பழ ஸ்க்வாஷ்-ம் மெனு!அதன்பின், அவர்கள் ஒரு சிறு நாடகம் மற்றும் பிரமிடு, யோகா செய்துக் காட்டினர்! வாழ்த்திவிட்டு வீடு திரும்பினோம்! நிறைவாய் இருந்தது மனது, அதே சமயத்தில் பாரமாயும்!
பள்ளி :
28ஆம் தேதி பட்டுப் பாவாடையுடன் காலை பள்ளி! பப்பு பள்ளியில் நோ ஸ்வீட்ஸ், நோ சாக்லேட்ஸ்! ஏதாவது ஹெல்த்தியான உணவுப் பொருட்கள் மட்டும்!! ம்ம்..சீட்லெஸ் பேரீச்சம் பழம்! இதுவும் வித்தியாசமாகத்தான் இருந்தது! :-).
வீடு:

உறவினர்கள் சூழ, வெகு ஆவலாய் எதிர்ப்பார்க்கப் பட்ட டோரா கேக் வெட்டப்பட்டது!
வெட்டும் வரை அதை பாதுக்காப்பது பெருங்காரியமாய் இருந்தது. ஐ டோரா கண்ணு, டோரா வாய் என்று கையை விட்டு எடுக்கப் போய்...kids are always kids..:-)!
காம்பவுண்டில் இருக்கும் குழந்தைகள் அனைவரோடும் பட்டாசு வெடித்து, இப்படியாக முடிந்தது, மூன்றாம் பிறந்தநாள்!!
பப்பு,
உன் வருகைக்குப் பின் மிகவும் சுவாரசியமாய் இருக்கிறது எங்கள் வாழ்க்கை, முன்பை விடவும்! உன் சுட்டித்தனமான பேச்சுக்களாலும், செய்கைகளாலும், எங்களை வியப்பிலாழ்த்திக் கொண்டிருக்கிறாய் நீ! சில சமயங்களில் உன் “ஏன்” களாலும்!!
பப்பு, நீ மிகவும் அன்பானவள்..உன் வயதுக்கேயுரிய குறும்புகள் நிறைந்தவள்..ஆர்வம் படைத்தவள், இவை எல்லாவற்றினால் மட்டுமே நான் உன்னை நேசிக்கவில்லை, உண்மை என்னவெனில், இவற்றில் எதுவும் இல்லாமற் போனாலும் உன்னை நேசிப்பேன்!!
சில சமயங்களில் உன் வயதை மீறிய பொறுமையையும், வளர்ச்சியையும் உன்னிடம் நான் எதிர்பார்த்திருக்கிறேன்! மன்னித்து விடு!
வாழ்த்துக்கள், பப்பு, இன்னும் நிறைய குறும்புகளோடும், பள்ளியில் நிறைய நண்பர்களோடும் இந்த வருடம் உனக்கு எல்லா செல்வங்களையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்!
இனி வரும் வருடத்தில், ஒருவருக்கொருவர் இன்னும் கவனமாய் உற்றுக் கேட்டுக்கொள்வோம்..நீ என்ன சொல்ல வருகிறாய் என நானும், நான் சொல்ல வருவதை நீயும்..நிறைய விளையாடுவோம்...நிறையக் கற்றுக் கொள்வோம்!!
அம்மா!
1. ஒரு விளையாட்டு
2. இரு போட்டோ ஆல்பங்கள்
3. மூன்று கொண்டாட்டங்கள்
ஒரு விளையாட்டு:
பப்புவுக்காக நாங்கள் வாங்கிய பரிசினை சுவாரசியமாய் அவளிடம் கொடுக்க் நினைத்தோம்.அதனால், treasure hunt with two clues. இரண்டாவது துருப்புச் சீட்டு, பரிசுப் பொருளைக்கான இடத்தைக் குறிக்கும்.

பொம்மையின் கையில் இருக்கும் முதல் சீட்டினுள் சைக்கிளின் படம் இருக்கும். அவள் சைக்கிளிடம் செல்ல வேண்டும்.சைக்கிள் கூடையில் இருக்கும் சீட்டு, வீட்டினுள் இருக்கும் ஒரு அலமாரியின் படம் கொண்டிருக்கும்.அந்த அலமாரி அவளது விளையாட்டுப் பொருட்கள் வைக்குமிடம். (அந்த இடத்தை தேர்ந்தெடுக்கக் காரணம், she hardly uses that place! :-)))இதுதான் ப்ளான். நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியது! இன்னும் கொஞ்சம் எப்பெக்டிவ்வாகவும் இருந்திருக்கலாம். (so, i am reserving this game with more clues for next year too!)
லேண்ட்மார்க் கவரில் இருக்கும் இருக்கும் பரிசுபொருள், ஒரு ட்ரெயின் செட்! அவளுக்கு ட்ரெயின், மற்றும் கார் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு.அந்த செட் அவளுக்கு பிடித்திருந்தது. பிற்காலத்தில் உண்மையை அவள் சொல்லக்கூடும் ;-)!! 28அம் தேதி அவளுக்கு பள்ளி இருந்ததாலும், ட்ரெய்னை செட் செய்து விளையாடுவாள் என்ற காரணத்தினாலும், birthday eve அன்று இந்த ஈவெண்ட் நடந்தது !!
இரண்டு ஆல்பங்கள்
”The terrific twos” - இதுதான் ஒரு ஆல்பத்தின் பெயர். கடந்து சென்ற இரண்டாம் வருடத்தில்/வயதில் அவள் செய்த ”எல்லா முதல்”கள்.. முதல் விசிட் டூ த ஜூ, தனியாய் விளையாடின முதல் சறுக்கல் etc! இந்த ஆல்பத்திற்கு இன்ஸிபிரேஷ்ன் நிலா பாப்பாவின் போட்டோஸ் தான்! நன்றி நிலா பாப்பாவிற்கும், போட்டோ டிப்ஸ் வழங்கிய நிலா அப்பாவிற்கும்! போட்டோக்கள் எடுத்ததென்னவோ, போட்டோக்ராபர்தான். ஆனால், www-வில் தேடி, எக்ஸ்க்ளூசிவ் குழந்தைகள் போட்டோஸ் தேடி, ஐடியா கொடுத்து, நன்றாக வந்திருக்கிறது ஆல்பம்!!
படங்கள் அடுத்த போஸ்டில்!!
இன்னொரு ஆல்பம், எல்லா உறவினர்களோடும் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்களோடும்! படங்கள் எடுத்தாகிவிட்டது, album is under making now.
மூன்று கொண்டாட்டங்கள்
மூன்று வயது, மூன்றுக் கொண்டாட்டங்கள் என்றும் கொள்ளலாம்! (நான்கு வயது என்றால், நான்கு கொண்டாட்டங்கள் என்று அர்த்தம் அல்ல!! ஆயில்ஸ், உடனே தான் எத்தனை கொண்டாட வேண்டுமென்று கணக்குப் போடவேண்டாம்!)
ரோஷினி ஹோம் @ பள்ளிக்கரணை
ரோஷினி ஹோம், அவ்வப்போது/ இயலும்போது கம்பெனி மூலமாகவும், எங்கள் அலுவலகத்தின் பெண்கள் க்ரூப்பின் மூலமாகவும் உதவி வரும் ஒரு
குழந்தைகள் காப்பகம். நாற்பது சிறார்கள், தங்கி படித்து வருகிறார்கள்! 3 வயதிலிருந்து 18 வயது வரை! ஞாயிறுக்கிழமை செல்வதாக ஏற்பாடு!

ஞாயிறு மதியம் மூன்று மணிக்கு சென்றோம். வீட்டில் இரு டீச்சர்கள் இருக்கும்போது சிறார்களை எண்டெர்டெயின் செய்யும் கவலை விட்டது! பெரிம்மா, சிறார்களுக்கான் விளையாட்டுக்கள் (டீம் பில்டிங் மாதிரியான) நடத்த எல்லாரும் குதித்து விளையாட, கலகலப்பாய் இருந்தது ஹோம்! யாரும் தயக்கம் இல்லாமல் எங்களிடம் ஒட்டி கொண்டனர், விளையாட்டுக்கள், கைத்தட்டல்கள் என்று உற்சாகமாயிருந்தது! பப்புவிற்கு அவ்வளவாய் புரியாவிட்டாலும், எல்லாரும் ஓடும் போது ஓடிக்கொண்டிந்தாள்! பின்னர், அம்மா, சிறார்களுக்கான பாடல்கள் பாடி ஆக்ச்ஷனுடன் கற்றுத் தந்தார்! மிகவும் ஆர்வமாக கற்றுக் கொண்டனர்! அம்மா பாடல்கள் கற்றுக் கொடுக்கும்போது, உணவுப் பண்டங்களை அடுக்குவதில் இருந்த்தால், சரியான படம் இல்லை! :-(
விளையாட்டுகள் முடிந்து, "பாப்பா பேரு குறிஞ்சி மலர், நாளன்னிக்கு பாப்பாவுக்கு பர்த் டே, அதை உங்க கூட சேர்ந்து கொண்டாடலாம்னுதான் வந்திருக்கிறோம்-"என்று சொன்னபோது அனைவரும் ஹேப்பி பர்த் டே பாடினர்! நெகிழ்வாய் இருந்தது..பாடல் முடிந்தபோது ஒரு சிறுவன் "பாப்பாவுக்கு எத்தனை வயது?" என்று கேட்க "மூன்று" என்றதும்
மூன்று முறை கை தட்டினர்! ஏனோ கண்கள் பனித்தன!!
கப்கேக்குகளும், உருளைகிழங்கு சிப்ஸ் மற்றும் மாம்பழம், ஆரஞ்சு பழ ஸ்க்வாஷ்-ம் மெனு!அதன்பின், அவர்கள் ஒரு சிறு நாடகம் மற்றும் பிரமிடு, யோகா செய்துக் காட்டினர்! வாழ்த்திவிட்டு வீடு திரும்பினோம்! நிறைவாய் இருந்தது மனது, அதே சமயத்தில் பாரமாயும்!
பள்ளி :
28ஆம் தேதி பட்டுப் பாவாடையுடன் காலை பள்ளி! பப்பு பள்ளியில் நோ ஸ்வீட்ஸ், நோ சாக்லேட்ஸ்! ஏதாவது ஹெல்த்தியான உணவுப் பொருட்கள் மட்டும்!! ம்ம்..சீட்லெஸ் பேரீச்சம் பழம்! இதுவும் வித்தியாசமாகத்தான் இருந்தது! :-).
வீடு:
உறவினர்கள் சூழ, வெகு ஆவலாய் எதிர்ப்பார்க்கப் பட்ட டோரா கேக் வெட்டப்பட்டது!
வெட்டும் வரை அதை பாதுக்காப்பது பெருங்காரியமாய் இருந்தது. ஐ டோரா கண்ணு, டோரா வாய் என்று கையை விட்டு எடுக்கப் போய்...kids are always kids..:-)!
காம்பவுண்டில் இருக்கும் குழந்தைகள் அனைவரோடும் பட்டாசு வெடித்து, இப்படியாக முடிந்தது, மூன்றாம் பிறந்தநாள்!!
பப்பு,
உன் வருகைக்குப் பின் மிகவும் சுவாரசியமாய் இருக்கிறது எங்கள் வாழ்க்கை, முன்பை விடவும்! உன் சுட்டித்தனமான பேச்சுக்களாலும், செய்கைகளாலும், எங்களை வியப்பிலாழ்த்திக் கொண்டிருக்கிறாய் நீ! சில சமயங்களில் உன் “ஏன்” களாலும்!!
பப்பு, நீ மிகவும் அன்பானவள்..உன் வயதுக்கேயுரிய குறும்புகள் நிறைந்தவள்..ஆர்வம் படைத்தவள், இவை எல்லாவற்றினால் மட்டுமே நான் உன்னை நேசிக்கவில்லை, உண்மை என்னவெனில், இவற்றில் எதுவும் இல்லாமற் போனாலும் உன்னை நேசிப்பேன்!!
சில சமயங்களில் உன் வயதை மீறிய பொறுமையையும், வளர்ச்சியையும் உன்னிடம் நான் எதிர்பார்த்திருக்கிறேன்! மன்னித்து விடு!
வாழ்த்துக்கள், பப்பு, இன்னும் நிறைய குறும்புகளோடும், பள்ளியில் நிறைய நண்பர்களோடும் இந்த வருடம் உனக்கு எல்லா செல்வங்களையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்!
இனி வரும் வருடத்தில், ஒருவருக்கொருவர் இன்னும் கவனமாய் உற்றுக் கேட்டுக்கொள்வோம்..நீ என்ன சொல்ல வருகிறாய் என நானும், நான் சொல்ல வருவதை நீயும்..நிறைய விளையாடுவோம்...நிறையக் கற்றுக் கொள்வோம்!!
அம்மா!
Friday, October 24, 2008
அது ஒரு மழைக்காலம்
பல ஆண்டுகளுக்கு முன் ஆம்பூரில் ஒரு சிறுமி இருந்தாள். அவளுக்கு மழைக்காலங்கள் மிகவும் இஷ்டம்! மழை பெய்யும்போது ஜன்னல் கம்பிகளினூடாக மழையை ரசிப்பதும், மழைத் தூறலில் நனைவதும், மரங்களின் கிளைகளை அசைத்திழுத்து விட்டு வரும் சாரலில் நனைவதும் அவளின் மிக உன்னத மழைத் தருணங்கள்!
(படம் உதவி : கூகிள்)

காலையில் ஆரம்பிக்கும் மழை, இன்னைக்கு லீவுதான் என்றுத் தோன்றவைக்கும் மழை மிகச் சரியாய் ஒன்பது மணிக்கு நின்று போகும். மிகச் சோம்பலாய் அவள் சிறிய சிறிய மழைத் தேங்கல்களில் குதித்தும் ஓடியும் பள்ளிக்குச் செல்வாள் அவள்!திடீரென முளைத்த காளான்களும், மழைக்கு பூத்த லில்லி மலர்கள், மெதுவாய் நரும் நத்தைகளும் அவள் பள்ளிக்கு செல்லும் நேரத்தை தின்னும்!!
விடாது மழை பெய்தாலும் அடாது பள்ளிக்கு சென்றிருக்கிறாள்..அன்று பள்ளிக்கு விடுமுறை என்றறிய!! ஏனெனில் அவளது பெரிம்மாவும் அந்த பள்ளியில் ஆசிரியை! யார் போனாலும்
போகாவிட்டாலும் அவள் கிளம்பித்தானாக வேண்டும்! மொபைல் போன்களோ, மெயிலோ..இல்லாத இரண்டு போன்களுடன் இயங்கிய பள்ளி!! வீட்டுக்கு திரும்புவதில் அத்தனை மகிழ்ச்சி..படிக்கத்தான் அத்தனை கதைப்புத்தகங்களுண்டே அவளிடம்!! அதோடு சூடான பஜ்ஜிகளும், வெங்காய பக்கோடாக்களும் மாலைநேரங்களில் லெமன் டீயும்/இஞ்சி டீயும் மழையை வேடிக்கைப் பார்க்க பலகணியில் ஒரு சிறு இருக்கையும்!!
rainy days and mondays from Carpenters
நன்றி : esnips.com
பப்புவுக்கு இரண்டாவது நாளாக பள்ளி விடுமுறை, மழையின் நிமித்தம்!
நான் ஆபீஸ் செல்வதில் அவளுக்குத் துளியும் விருப்பமில்லை!!
(படம் உதவி : கூகிள்)

காலையில் ஆரம்பிக்கும் மழை, இன்னைக்கு லீவுதான் என்றுத் தோன்றவைக்கும் மழை மிகச் சரியாய் ஒன்பது மணிக்கு நின்று போகும். மிகச் சோம்பலாய் அவள் சிறிய சிறிய மழைத் தேங்கல்களில் குதித்தும் ஓடியும் பள்ளிக்குச் செல்வாள் அவள்!திடீரென முளைத்த காளான்களும், மழைக்கு பூத்த லில்லி மலர்கள், மெதுவாய் நரும் நத்தைகளும் அவள் பள்ளிக்கு செல்லும் நேரத்தை தின்னும்!!
விடாது மழை பெய்தாலும் அடாது பள்ளிக்கு சென்றிருக்கிறாள்..அன்று பள்ளிக்கு விடுமுறை என்றறிய!! ஏனெனில் அவளது பெரிம்மாவும் அந்த பள்ளியில் ஆசிரியை! யார் போனாலும்
போகாவிட்டாலும் அவள் கிளம்பித்தானாக வேண்டும்! மொபைல் போன்களோ, மெயிலோ..இல்லாத இரண்டு போன்களுடன் இயங்கிய பள்ளி!! வீட்டுக்கு திரும்புவதில் அத்தனை மகிழ்ச்சி..படிக்கத்தான் அத்தனை கதைப்புத்தகங்களுண்டே அவளிடம்!! அதோடு சூடான பஜ்ஜிகளும், வெங்காய பக்கோடாக்களும் மாலைநேரங்களில் லெமன் டீயும்/இஞ்சி டீயும் மழையை வேடிக்கைப் பார்க்க பலகணியில் ஒரு சிறு இருக்கையும்!!
rainy days and mondays from Carpenters
நன்றி : esnips.com
|
பப்புவுக்கு இரண்டாவது நாளாக பள்ளி விடுமுறை, மழையின் நிமித்தம்!
நான் ஆபீஸ் செல்வதில் அவளுக்குத் துளியும் விருப்பமில்லை!!
Thursday, October 23, 2008
0..1..2..முத்தான மூன்றை நெருங்குகையில்!!

வரும் 28ஆம் தேதியிலிருந்து பப்பு மூன்றாம் வயதில் அடி எடுத்து வைக்கிறாள். நாட்கள் ஓடும் வேகத்தில், நினைவுகளை, நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க முடிவதில்லை.நேரம் இருக்கும்போதே, கடந்தகாலத்தை அசை போட எண்ணி பதிவைத் தொடங்குகிறேன் நான்!அடுத்த வாரம் இந்த நேரம் பப்பு,, நீ மூன்று வயதை எட்டியிருப்பாய்..
இந்த படத்தில் இருக்கும் பப்புவின் ஒவ்வொரு படமும் அவளது அந்தந்த அகவை நிறைவன்று எடுக்கப்பட்டது! கூட்டுப்புழுவிலிருந்து வண்ணத்துபூச்சியாக மாறுவதுப் போல், மொட்டிலிருந்து பூ மலர்வதுப் போல் என் பப்பு ஒவ்வொரு கட்டத்திலும்....
முதல் படம், பப்பு பிறந்த ஒரு சில கணங்களில் எடுக்கப் பட்டது. ஆனால் நான் பப்புவை பார்த்தது இரண்டாவது நாளில் தான்.மூன்று நாட்கள் வரை, தினமும் கொஞ்ச நேரம் எங்களிடம் காட்டிவிட்டு, இன்குபேட்டரில் வைத்து விடுவார்கள். என்னைத் தவிர எல்லாரும் அடிக்கடி போய் பார்த்து விட்டு வருவார்கள். இப்படி அமைதியாக தூங்கியது இந்த போட்டோவில் மட்டும்தான். ஒருவயது வரை தூங்கவும் இல்லை, தூங்கவிடவுமில்லை. :-). அந்தந்த கணங்களுக்கேயுரிய மகிழ்ச்சிகளை எங்களுக்குக் கொடுக்க தவறியதேயில்லை பப்பு!
இரண்டாவதாக இருக்கும் போட்டோ பப்புவின் ஒருவயது நிறைந்த போது எடுத்தது!
Just after the mottai! அந்த பிறந்தநாள் விழாவை பெரிதாக கொண்டாட வேண்டுமா என்று
நானும் பப்புவின் அப்பாவும் மிகவும் யோசித்தோம். அவளை சுற்றி நடப்பதை அவளால் புரிந்துக் கொள்ளமுடியாது, நிறைய புதிய முகங்கள்..எல்லாரும் அவளைக் தூக்க விரும்புவார்கள்..etc..etc!! மிகவும் தெரிந்த சுற்றத்தாருடன் மட்டும் அவளுக்கே அவளுக்கேயான ஸ்பெஷல் நேரமாக என்று!! ஆனால், பிறந்தநாளுக்கு முதல் நாளன்று ஜுரம் வந்து, பிறந்த நாளன்று காலையில் மருத்துவமனை செல்லும்படி ஆயிற்று.
மூன்றாவது படம், இரண்டாம் பிறந்தநாளன்று!! பப்பு, உனக்குத் தெரியுமா..உன் ஓவ்வொரு பிறந்த நாளன்றும் வானம் பூ மழை பொழிந்து உனை வாழ்த்தும்..வானவில் தோரணத்தோடு!
அன்றும் அப்படித்தான்! ஆனால் இந்த முறை ஜூரம் இல்லை...ஆனால் ஜலதோஷம் மட்டும்!!
உற்றத்தோடும், சுற்றத்தோடும் கழிந்தது உனது நாள்!
இதோ, இப்போது மூன்றாம் பிறந்தநாள்..அன்போடும், மனதில் ஏகப்பட்ட கனவுகளோடும் உனக்காக இன்னோரு ஸ்பெஷல் நாளை திட்டமிட்டிருக்கிறோம், நானும் உன் அப்பாவும்! இப்போது உனக்குத் தெரியும், பிறந்தநாள் எனது என்ன மற்றும் அதன் கொண்டாட்டங்கள்....பிறந்தநாள் நீ பிறந்ததானாலல்ல..ஆனால் எல்லாரும் உனக்கு 'ஹேப்பி பேத் டே தூ யூ" என்றும், "மெழுகோத்தி"யை ஊதவும்..மற்றும் கேக் கட் செய்வதுமென்று!!
இதோ, இப்போதும் உன் பிறந்தநாளையொட்டி உன் தோழி உரத்த தாளங்களோடு
வந்து விட்ட்டாள்..நகரெங்கும் தோரணம் கட்டியிருக்கிறது மழை! எங்களின் ஏற்பாடுகளை நீ
எஞ்சாய் செய்வாய் மற்றும் இந்த நாளின் நினைவுகள் என்றும் உன் மனதில் தங்கும் என்ற நம்பிக்கையுடன்...
மூன்று வயதான உன் அம்மா...
(அம்மாவாகி எனக்கும் மூன்று வயதுதானே!!)
Wednesday, October 22, 2008
கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி?
பப்புவுக்கு ஓட்ஸ் மிகவும் பிடிக்கும்..சும்மா சாப்பிட! ஆனால் ஆயா அதை அனுமதிப்பதில்லை.
(அதுவும் அவளுக்குத் தெரியும்.) ஆயாவுக்கு கஞ்சி வைப்பதற்காக ஓட்ஸ் டப்பாவை திறந்தேன். என் பின்னாலேயே வந்த பப்பு, அதை எடுப்பதைப் பார்த்து,
ஓட்ஸ் வேணும், பௌல்ல போட்டுக் கொடு!
போட்டுக் கொடுத்தேன்!
ஹாலில், அவள் சாப்பிடுவதைப் பார்த்த ஆயா,
என்ன சாப்பிடறே? ஓட்ஸா?
ம்ம்..அம்மா என்னை கொஞ்சமா ஓட்ஸ் சாப்பிடுன்னு பௌல்ல போட்டுக் கொடுத்தாங்க!
மானுப்புலேஷன்?!
(அதுவும் அவளுக்குத் தெரியும்.) ஆயாவுக்கு கஞ்சி வைப்பதற்காக ஓட்ஸ் டப்பாவை திறந்தேன். என் பின்னாலேயே வந்த பப்பு, அதை எடுப்பதைப் பார்த்து,
ஓட்ஸ் வேணும், பௌல்ல போட்டுக் கொடு!
போட்டுக் கொடுத்தேன்!
ஹாலில், அவள் சாப்பிடுவதைப் பார்த்த ஆயா,
என்ன சாப்பிடறே? ஓட்ஸா?
ம்ம்..அம்மா என்னை கொஞ்சமா ஓட்ஸ் சாப்பிடுன்னு பௌல்ல போட்டுக் கொடுத்தாங்க!
மானுப்புலேஷன்?!
Monday, October 20, 2008
என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே?!

பேவரிட்ஸில் என்ன இருக்கு, இன்பாக்ஸில் என்ன இருக்குன்னெல்லாம் டேக் வந்துதுன்னா, ஆயில்ஸ் அவ்வளவுதான்!! :-))
நான் அழைக்க விரும்பும் பதிவர்கள்
கானாபிரபா
புதுகை அப்துல்லா
பூந்தளிர் தீஷூ
மாதினி
Friday, October 17, 2008
matrix ஞாபகம் இருக்கா? படம் இல்லீங்க...
பாடம்!!கண்டு பிடிங்க!
டெடிகேடட் டூ சின்ன பாண்டி, பெரிய பாண்டி!!
பி.கு: இது ரொம்ப பேமஸ்...எங்க ஸ்கூல்ல!!
a h g
h b f
g f c
டெடிகேடட் டூ சின்ன பாண்டி, பெரிய பாண்டி!!
பி.கு: இது ரொம்ப பேமஸ்...எங்க ஸ்கூல்ல!!
Tuesday, October 14, 2008
சினிமா சினிமா.....என்னோட ரெண்டு பைசா!!
சினிமா பற்றி எங்கிட்டே கேட்டிருக்கிற ஆயில்ஸை நினைச்சா எனக்கு அழறதா, சிரிக்கறதான்னுக் கூட தெரியல..ஏன்னா எனக்கும் சினிமாவுக்குமான சம்பந்தம் அப்படி!
சினிமா/சினிமாப் பாடல்கள் பொதுவாக எங்கள் வீட்டில் தடா! அதுவும் தியேட்டருக்கு போவது பற்றி கேட்கவே வேண்டாம். ”அந்த மூனு மணிநேரத்தில நீ எவ்வளவோ செய்யலாம்(ம்ம்..என்னத்தை செஞ்சி,அதை விடுங்க,,வேற கதை!!),மரத்தை சுற்றி அவனுங்க
டூயட் பாடுறத பார்க்கணூமா” என்று எங்கள் வீட்டினரால் அது ஒரு நல்ல காரியமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தக் கட்டுப்பாட்டினாலேயே,நான் ஹிந்திக்கு மாறினேன்..ஏன்னா, தமிழ் படம் பார்த்ததான திட்டுறாங்க, ஹிந்தின்னா விட்டுவாங்க..ஆனா இதைவிட மோசமா இருக்கும் அதில, ஆனா வீட்டுல இருக்கறவங்களுக்குப் மெயினா பாட்டிக்குப் புரியாதே!!இதுதான், நான் இந்திப் பாடல்களை/ஆல்பங்களை ரசிக்க முதல் காரணம். பள்ளி முடிக்கறவரைக்கும் அவங்கதான் என் எதிரி. ஆனா, இப்போதான், அதுவும் நான் ஒரு குழந்தையோட எதிர்காலத்துக்கு பொறுப்பாளின்னு ஆனதுக்கு அப்புறம்தான், அவங்க நிலைமை புரியுது!!
எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்
அதாவது எனக்கு ரொம்ப சின்ன வயதில..அநேகமா இரண்டு வயது இருக்கும்போது சகலகலா வல்லவன், தியேட்டரில் பார்த்ததாக என் பாட்டி சொல்கிறார்கள். ஏன்னா, அப்போ அந்த சினிமாவால எனக்கு எந்த பாதிப்பும் வரக் கூடிய பாதகம் இல்லைன்னு நினைச்சிருக்கலாம். அப்போ நாங்க ஆம்பூரில் ஐந்து குடித்தனக்காரர்கள் இருந்த வீட்டில் இருந்தோம்.அப்போ வேலைக்கு போகிறவர்களை அனுப்பிவிட்டு வீட்டிலிருக்கும் பெண்கள் எல்லாருமாக மாட்டினிக் காட்சிக்குக் கிளம்பிப் போயிருக்கிறார்கள்.
ஆனால் நினைவு தெரிந்து பார்த்த சினிமா என்றால், மை டியர் குட்டிச்சாத்தான் பார்த்தது, அதுவும் ஐஸ்கிரீம் மற்றும் பலூன் பிடிக்க கை நீட்டியது மங்கலாக நினவில் இருக்கிறது. அதிலும் முன்சீட்-டில் இருப்பவர்கள் பிடித்துவிட போகிறார்கள் என்று எண்ணியது அதைவிட நன்றாக நினைவிருக்கிறது.
அந்த வயதில் என்ன பீல் பண்ணினேன் என்றால், சொன்னால் சிரிப்பு வரும்..நேராகவே யாராவது வந்து பேசுவார்கள், அப்புறம் போய் வேறே ட்ரெஸ் செய்துக் கொண்டு வருவார்கள் என்றுதான் நீண்டநாள் நினைத்திருந்தேன். அதுவும், ஃப்ளாசஷ்பாக் வந்ததென்றால், அவர்கள் சின்ன வயதாயிருக்கையிலே எடுத்துவிடுவார்கள் போல என்றும் மனதிற்கும் எண்ணியிருக்கிறேன். ஆனால்,இதுவரை இந்த நினைவை என் கல்லூரி நண்பர்கள் தவிர வேறு யாரிடமும் பகிர்ந்தததில்லை. (இந்த மாதிரி மொக்கைத்தனமாக யோசிப்பதில் நான் கில்லாடியாக்கும்!!)
மை டியர்...க்கு அப்புறம் ஒரு ஆங்கில சினிமா..டாம் சாயர், ஹல்வா வாலா ஆகையா பாடல் வரும் இந்தி படம் இவை பார்த்து அடுத்ததாக நான் தியேட்டரில் பார்த்த படம்
அஞ்சலி!!அஞ்சலிக்கு அப்புறமா நான் தியேட்டரில் போய் பார்த்தது ஜூராசிக் பார்க்!! எவ்ளோ பெரிய கேப்!!இப்போது புரிந்திருக்குமே, எங்கள் வீட்டைப் பற்றி!!அதே தான்..சினிமா பார்த்து பசங்க கெட்டுப் போயிடுவாங்க என்ற மைண்ட் செட் உள்ள ஒரு நடுத்தரக் வர்க்க குடும்பம்!!
ஆனால் இதற்கு எல்லாம் சேர்த்து கல்லூரி காலத்தில் ஈடு கட்டிவிட்டேன்!! வாரத்துக் ரெண்டு சினிமா பார்த்து பார்த்து சினிமாவே பிடிக்காம போனது வேறு கதை!
கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
அஞ்சாதே! உறவினர்கள் யாராவது வந்தால் பப்புவை விட்டுவிட்டு முகிலுடன் சத்யம் தியேட்டரில் நைட் ஷோ!
ப்லாக் ரெவ்யூ பார்த்துவிட்டு அல்லது ஒரு சில இயக்குநர்களின் படம் என்றால் பார்க்கப் போவது என்றாகி விட்டது!பெரும்பாலும் லக்கியின் ரெவ்யூவிற்கு எங்கள் வீட்டில் மரியாதை உண்டு..ஆனால் இப்போதெல்லாம் லக்கி மொக்கைப் படங்களுக்கும் நல்ல கமெண்ட் கொடுத்துவிடுகிறார்! அஞ்சாதே பற்றி நல்லா எழுதுவாரென்று நினைத்தேன்,ஆனால் கிழிகிழியென்று கிழித்துவிட்டார்! :-).
கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ம்ம்..டவுன்லோடு செய்து பார்த்த ஆண்பாவம். சிரிசிரியென்று சிரித்தேன். எந்த மாதிரியும் பொல்யூஷனும் (வன்முறை, வுமென் எக்ஸ்ப்ளாய்ட்டேஷனோ என்று பொருள் கொள்க!) இல்லாத படம். ஒரு சண்டைக் காட்சி வரும், அதுவும் சிரிப்பாகவே இருக்கும்!
மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
பருத்திவீரன்! பார்த்து ரெண்டு மூன்று நாட்களுக்கு சரியாக தூக்கம் இல்லாமல், அமீருக்கு லெட்டர் எழுதப் போறேனென்று, முகிலிடம் புலம்ப வைத்தது.
மடிப்பாக்கம் வேலன்/வெற்றிவேலனோ என நினைக்கிறேன்! அப்புறம் ஒன்பது ரூபாய் நோட்டு, சொல்ல மறந்த கதை! தங்கரின் படங்கள் எதையும் மிஸ் பண்ணக் கூடாதென எண்ணியிருக்கிறேன்.
அப்புறம் நகைச்சுவைக்காக, தில்லுமுல்லு, சென்னை-28 என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட்.
உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?
ரஜினி மன்னிப்பு கேட்டது!!
தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இப்போ ஆனந்த விகடனில் என்ன இருக்குன்னு நினைக்கறீங்க..சினிமா, சினிமா நடிக/நடிகையர் பற்றி செய்திகள்தானே! சினிமாவையே வேறு வடிவத்தில் பார்ப்பது
போல் இருக்கிறது சில நேரம்! எங்கள் வீட்டில் இருக்கும் பழைய ஆ.வி.யை கம்பேர் செய்யும்போத்யு இன்றைய ஆ.வியில் சினிமா தூக்கலாக இருப்பது உண்மை!!
தமிழ் சினிமா இசை?
இதுவும் நான் சினிமா பார்த்த கதைதான். அதாவது ஒன்று நினைவு தெரியாத வயதாயிருக்கையில் வாங்கிய கேசட்டுகள்/ஒலித்த பாடல்கள். அதுவும் உனக்கு நான், எனக்கு நீ என்று பாடல்கள் வந்தால் அது கட்.ஏதோ ஒளியும் ஒலியும் புண்ணியம் கட்டிக்கொண்டது!ஆனால், ஒருசில பாடல்கள் என் சித்தப்பா போட்டுக் கேட்பார் இது ஒரு பொன்மாலை பொழுது...மாதிரியான ஹிட்ஸ். ஆனால், வீட்டில் எனக்குத் தெரிந்து ஒலித்தவை போனி எம், அபா, எரப்ஷன், பீட்டில்ஸ் இன்னபிற. ஆனால், நான் வளர ஆரம்பித்த பின், எங்கள் வீட்டு பெரியவர்கள் சினிமா/பாட்டு பார்த்த/கேட்டது மில்லை விட்டதுமில்லை... :(..அதனால்தான் இப்போது ரேடியோஸ்பதியின் ஒரு பதிவினை விடுவதில்லை...ஆனால் வேலைக்கு வந்தபின்/திருமணத்திற்கு பின் கேட்பவை முழுவதும் இந்த ம்யூசிக் சானல்கள்தான்!
தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இந்தியில் ப்ளாக், தாரே..! ஆங்கிலத்தில சவுண்ட் ஆஃப் ம்யூசிக், கான் வித் த விண்ட். சவுண்ட் ஆஃப் ம்யூசிக் எப்பவுமே பார்க்கப் பிடிக்கும்.
அப்புறம் ஷாருக்கின் படங்கள் in 90s!
தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
அப்படியெல்லாம் எதுவும் இல்லாம இருக்கறதே, தமிழ் சினிமா மேம்பட உதவும்!
தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இதுக்கு குசும்பனோட பதில்தான் ரொம்பப் பொருத்தம். ரொம்ப சிரிச்சேன், அதைப் படிச்சிட்டு!
அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
:-)). நான் 13 வருடங்களாக(என் பால்ய காலத்தை) வாழ்ந்த வாழ்வை எல்லாருமே வாழ்வீர்கள்! தமிழில் நிறைய இசை ஆல்பங்கள் வரலாமென எதிர்பார்க்கிறேன். ஆல்பத்தின் பாடல்களிலியே ஒரு சினிமாவை அடக்கிவிடலாம்!
அழைத்த ஆயில்ஸுக்கு நன்றி! நான் அழைக்கும் ஐந்து பேர்!!
அமிர்தவர்ஷினி அம்மா
தாமிரா
பிரேம்குமார்
சிநேகிதி
அமுதா
சினிமா/சினிமாப் பாடல்கள் பொதுவாக எங்கள் வீட்டில் தடா! அதுவும் தியேட்டருக்கு போவது பற்றி கேட்கவே வேண்டாம். ”அந்த மூனு மணிநேரத்தில நீ எவ்வளவோ செய்யலாம்(ம்ம்..என்னத்தை செஞ்சி,அதை விடுங்க,,வேற கதை!!),மரத்தை சுற்றி அவனுங்க
டூயட் பாடுறத பார்க்கணூமா” என்று எங்கள் வீட்டினரால் அது ஒரு நல்ல காரியமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தக் கட்டுப்பாட்டினாலேயே,நான் ஹிந்திக்கு மாறினேன்..ஏன்னா, தமிழ் படம் பார்த்ததான திட்டுறாங்க, ஹிந்தின்னா விட்டுவாங்க..ஆனா இதைவிட மோசமா இருக்கும் அதில, ஆனா வீட்டுல இருக்கறவங்களுக்குப் மெயினா பாட்டிக்குப் புரியாதே!!இதுதான், நான் இந்திப் பாடல்களை/ஆல்பங்களை ரசிக்க முதல் காரணம். பள்ளி முடிக்கறவரைக்கும் அவங்கதான் என் எதிரி. ஆனா, இப்போதான், அதுவும் நான் ஒரு குழந்தையோட எதிர்காலத்துக்கு பொறுப்பாளின்னு ஆனதுக்கு அப்புறம்தான், அவங்க நிலைமை புரியுது!!
எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்
அதாவது எனக்கு ரொம்ப சின்ன வயதில..அநேகமா இரண்டு வயது இருக்கும்போது சகலகலா வல்லவன், தியேட்டரில் பார்த்ததாக என் பாட்டி சொல்கிறார்கள். ஏன்னா, அப்போ அந்த சினிமாவால எனக்கு எந்த பாதிப்பும் வரக் கூடிய பாதகம் இல்லைன்னு நினைச்சிருக்கலாம். அப்போ நாங்க ஆம்பூரில் ஐந்து குடித்தனக்காரர்கள் இருந்த வீட்டில் இருந்தோம்.அப்போ வேலைக்கு போகிறவர்களை அனுப்பிவிட்டு வீட்டிலிருக்கும் பெண்கள் எல்லாருமாக மாட்டினிக் காட்சிக்குக் கிளம்பிப் போயிருக்கிறார்கள்.
ஆனால் நினைவு தெரிந்து பார்த்த சினிமா என்றால், மை டியர் குட்டிச்சாத்தான் பார்த்தது, அதுவும் ஐஸ்கிரீம் மற்றும் பலூன் பிடிக்க கை நீட்டியது மங்கலாக நினவில் இருக்கிறது. அதிலும் முன்சீட்-டில் இருப்பவர்கள் பிடித்துவிட போகிறார்கள் என்று எண்ணியது அதைவிட நன்றாக நினைவிருக்கிறது.
அந்த வயதில் என்ன பீல் பண்ணினேன் என்றால், சொன்னால் சிரிப்பு வரும்..நேராகவே யாராவது வந்து பேசுவார்கள், அப்புறம் போய் வேறே ட்ரெஸ் செய்துக் கொண்டு வருவார்கள் என்றுதான் நீண்டநாள் நினைத்திருந்தேன். அதுவும், ஃப்ளாசஷ்பாக் வந்ததென்றால், அவர்கள் சின்ன வயதாயிருக்கையிலே எடுத்துவிடுவார்கள் போல என்றும் மனதிற்கும் எண்ணியிருக்கிறேன். ஆனால்,இதுவரை இந்த நினைவை என் கல்லூரி நண்பர்கள் தவிர வேறு யாரிடமும் பகிர்ந்தததில்லை. (இந்த மாதிரி மொக்கைத்தனமாக யோசிப்பதில் நான் கில்லாடியாக்கும்!!)
மை டியர்...க்கு அப்புறம் ஒரு ஆங்கில சினிமா..டாம் சாயர், ஹல்வா வாலா ஆகையா பாடல் வரும் இந்தி படம் இவை பார்த்து அடுத்ததாக நான் தியேட்டரில் பார்த்த படம்
அஞ்சலி!!அஞ்சலிக்கு அப்புறமா நான் தியேட்டரில் போய் பார்த்தது ஜூராசிக் பார்க்!! எவ்ளோ பெரிய கேப்!!இப்போது புரிந்திருக்குமே, எங்கள் வீட்டைப் பற்றி!!அதே தான்..சினிமா பார்த்து பசங்க கெட்டுப் போயிடுவாங்க என்ற மைண்ட் செட் உள்ள ஒரு நடுத்தரக் வர்க்க குடும்பம்!!
ஆனால் இதற்கு எல்லாம் சேர்த்து கல்லூரி காலத்தில் ஈடு கட்டிவிட்டேன்!! வாரத்துக் ரெண்டு சினிமா பார்த்து பார்த்து சினிமாவே பிடிக்காம போனது வேறு கதை!
கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
அஞ்சாதே! உறவினர்கள் யாராவது வந்தால் பப்புவை விட்டுவிட்டு முகிலுடன் சத்யம் தியேட்டரில் நைட் ஷோ!
ப்லாக் ரெவ்யூ பார்த்துவிட்டு அல்லது ஒரு சில இயக்குநர்களின் படம் என்றால் பார்க்கப் போவது என்றாகி விட்டது!பெரும்பாலும் லக்கியின் ரெவ்யூவிற்கு எங்கள் வீட்டில் மரியாதை உண்டு..ஆனால் இப்போதெல்லாம் லக்கி மொக்கைப் படங்களுக்கும் நல்ல கமெண்ட் கொடுத்துவிடுகிறார்! அஞ்சாதே பற்றி நல்லா எழுதுவாரென்று நினைத்தேன்,ஆனால் கிழிகிழியென்று கிழித்துவிட்டார்! :-).
கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ம்ம்..டவுன்லோடு செய்து பார்த்த ஆண்பாவம். சிரிசிரியென்று சிரித்தேன். எந்த மாதிரியும் பொல்யூஷனும் (வன்முறை, வுமென் எக்ஸ்ப்ளாய்ட்டேஷனோ என்று பொருள் கொள்க!) இல்லாத படம். ஒரு சண்டைக் காட்சி வரும், அதுவும் சிரிப்பாகவே இருக்கும்!
மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
பருத்திவீரன்! பார்த்து ரெண்டு மூன்று நாட்களுக்கு சரியாக தூக்கம் இல்லாமல், அமீருக்கு லெட்டர் எழுதப் போறேனென்று, முகிலிடம் புலம்ப வைத்தது.
மடிப்பாக்கம் வேலன்/வெற்றிவேலனோ என நினைக்கிறேன்! அப்புறம் ஒன்பது ரூபாய் நோட்டு, சொல்ல மறந்த கதை! தங்கரின் படங்கள் எதையும் மிஸ் பண்ணக் கூடாதென எண்ணியிருக்கிறேன்.
அப்புறம் நகைச்சுவைக்காக, தில்லுமுல்லு, சென்னை-28 என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட்.
உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?
ரஜினி மன்னிப்பு கேட்டது!!
தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இப்போ ஆனந்த விகடனில் என்ன இருக்குன்னு நினைக்கறீங்க..சினிமா, சினிமா நடிக/நடிகையர் பற்றி செய்திகள்தானே! சினிமாவையே வேறு வடிவத்தில் பார்ப்பது
போல் இருக்கிறது சில நேரம்! எங்கள் வீட்டில் இருக்கும் பழைய ஆ.வி.யை கம்பேர் செய்யும்போத்யு இன்றைய ஆ.வியில் சினிமா தூக்கலாக இருப்பது உண்மை!!
தமிழ் சினிமா இசை?
இதுவும் நான் சினிமா பார்த்த கதைதான். அதாவது ஒன்று நினைவு தெரியாத வயதாயிருக்கையில் வாங்கிய கேசட்டுகள்/ஒலித்த பாடல்கள். அதுவும் உனக்கு நான், எனக்கு நீ என்று பாடல்கள் வந்தால் அது கட்.ஏதோ ஒளியும் ஒலியும் புண்ணியம் கட்டிக்கொண்டது!ஆனால், ஒருசில பாடல்கள் என் சித்தப்பா போட்டுக் கேட்பார் இது ஒரு பொன்மாலை பொழுது...மாதிரியான ஹிட்ஸ். ஆனால், வீட்டில் எனக்குத் தெரிந்து ஒலித்தவை போனி எம், அபா, எரப்ஷன், பீட்டில்ஸ் இன்னபிற. ஆனால், நான் வளர ஆரம்பித்த பின், எங்கள் வீட்டு பெரியவர்கள் சினிமா/பாட்டு பார்த்த/கேட்டது மில்லை விட்டதுமில்லை... :(..அதனால்தான் இப்போது ரேடியோஸ்பதியின் ஒரு பதிவினை விடுவதில்லை...ஆனால் வேலைக்கு வந்தபின்/திருமணத்திற்கு பின் கேட்பவை முழுவதும் இந்த ம்யூசிக் சானல்கள்தான்!
தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இந்தியில் ப்ளாக், தாரே..! ஆங்கிலத்தில சவுண்ட் ஆஃப் ம்யூசிக், கான் வித் த விண்ட். சவுண்ட் ஆஃப் ம்யூசிக் எப்பவுமே பார்க்கப் பிடிக்கும்.
அப்புறம் ஷாருக்கின் படங்கள் in 90s!
தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
அப்படியெல்லாம் எதுவும் இல்லாம இருக்கறதே, தமிழ் சினிமா மேம்பட உதவும்!
தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இதுக்கு குசும்பனோட பதில்தான் ரொம்பப் பொருத்தம். ரொம்ப சிரிச்சேன், அதைப் படிச்சிட்டு!
அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
:-)). நான் 13 வருடங்களாக(என் பால்ய காலத்தை) வாழ்ந்த வாழ்வை எல்லாருமே வாழ்வீர்கள்! தமிழில் நிறைய இசை ஆல்பங்கள் வரலாமென எதிர்பார்க்கிறேன். ஆல்பத்தின் பாடல்களிலியே ஒரு சினிமாவை அடக்கிவிடலாம்!
அழைத்த ஆயில்ஸுக்கு நன்றி! நான் அழைக்கும் ஐந்து பேர்!!
அமிர்தவர்ஷினி அம்மா
தாமிரா
பிரேம்குமார்
சிநேகிதி
அமுதா
பள்ளிகள் : வேளச்சேரி & தாம்பரம்
Monday, October 13, 2008
ஒரு குர(ற)ள் கொடுத்துக்கறோம்....
எழுத நிறைய இருந்தாலும் நேரம் இடங்கொடுக்காத்தால்.... இப்போதைக்கு சவுண்டு மட்டும்!!
|
Thursday, October 09, 2008
முரண்
போதும், வா..பைப்பை மூடிட்டு வா - ஆயா.
.....
பப்பு, ரொம்ப நேரம் தண்ணில விளையாடாதே..சீக்கிரம் வா..அம்மா திட்டுவாங்க!! - ஆயா
பி.கு. : ஆம்பூரில், பழைய வீட்டில் பாத்ரூமில் தொட்டியில் தண்ணீர் நிரம்பியிருக்கும். அந்த தண்ணீரில் கை விட்டு, முகத்தை கவிழ்த்துக் கொண்டு விளையாடுவது மிகவும் எனக்கு மிகவும் இஷ்டம். அப்படி நீண்ண்ண்ண்ண்ண்டட நேரம் விளையாடி ஒருநாள் என் பாட்டியிடம் நன்றாக அடிவாங்கியது இன்றுவரை நினைவிருக்கிறது.
தண்ணீரில் விளையாட நான் யாருக்கு பயந்தேனோ அதே பாட்டி, இப்போது எனக்குப் பயப்படுகிறார்கள்!!
.....
பப்பு, ரொம்ப நேரம் தண்ணில விளையாடாதே..சீக்கிரம் வா..அம்மா திட்டுவாங்க!! - ஆயா
பி.கு. : ஆம்பூரில், பழைய வீட்டில் பாத்ரூமில் தொட்டியில் தண்ணீர் நிரம்பியிருக்கும். அந்த தண்ணீரில் கை விட்டு, முகத்தை கவிழ்த்துக் கொண்டு விளையாடுவது மிகவும் எனக்கு மிகவும் இஷ்டம். அப்படி நீண்ண்ண்ண்ண்ண்டட நேரம் விளையாடி ஒருநாள் என் பாட்டியிடம் நன்றாக அடிவாங்கியது இன்றுவரை நினைவிருக்கிறது.
தண்ணீரில் விளையாட நான் யாருக்கு பயந்தேனோ அதே பாட்டி, இப்போது எனக்குப் பயப்படுகிறார்கள்!!
மாண்டிசோரி புத்தகங்கள்
பரிந்துரைத்த பூந்தளிர் - தீஷூ அம்மாவுக்கு நன்றி.
தேவைப்படுவோருக்கு பயன் தரவும் ,புத்தகங்களின் பெயர்களை சேமிக்கவும் இந்தப் பதிவு..
1. Teaching Montessori in the home : the pre-school years by Elizabeth Hainstock.
2. How to raise an amazing child the Montessori Way by Tim Seldin
3. Teach me to do it myself: Montessori activities for you and your child by Maja Pitamic
4. Montessori play and learn: a parent's guide to purposeful play from two to six by Lesley Britton
5. Montessori today : a comprehensive approach to education from birth to adulthood by Paula Polk Lillard
6. Montessori and your child : A primer for Parents by Terry Malloy
தேவைப்படுவோருக்கு பயன் தரவும் ,புத்தகங்களின் பெயர்களை சேமிக்கவும் இந்தப் பதிவு..
1. Teaching Montessori in the home : the pre-school years by Elizabeth Hainstock.
2. How to raise an amazing child the Montessori Way by Tim Seldin
3. Teach me to do it myself: Montessori activities for you and your child by Maja Pitamic
4. Montessori play and learn: a parent's guide to purposeful play from two to six by Lesley Britton
5. Montessori today : a comprehensive approach to education from birth to adulthood by Paula Polk Lillard
6. Montessori and your child : A primer for Parents by Terry Malloy
Wednesday, October 08, 2008
ரவுண்ட் அப்
கடந்தவாரம் ஆம்பூருக்கு சென்றிருந்தோம். என் தம்பி விஐடி-யில் படித்து கொண்டிருந்ததால், தற்காலிகமாக வீட்டை காட்பாடியில் மாற்றியிருந்தோம்.இப்போது அவனது படிப்பு முடிந்துவிட்டதால், திரும்ப ஆம்பூருக்கு குடிவந்துவிட்டோம். பப்பு ஆம்பூருக்கு செல்வது இதுவே முதன்முறை. காட்பாடி ஆயா என்பது பப்பு என் பெரிம்மாவுக்கு வைத்திருக்கும் பெயர்.அவளது மொழியில் ஆம்பூர் இப்போது ”புது காட்பாடி”யாகிவிட்டிருக்கிறது. :-).
வீட்டினுள் நுழைந்தவுடன், மீன் தொட்டியை பார்த்த பப்பு உடனடியாக சொன்னாள்,
“இந்த மீன் தான் எங்க வீட்டுல இல்ல!!!
மை காட்!!
தூங்கும் சமயத்தில், “வீட்டுக்கு போலாம்,அம்மா!!”.
”இதானே பப்பு, வீடு. எங்க இருக்கோம், நாம? வீட்டுலதானே இருக்கோம்!!” - நான்.
இல்ல, நம்ம வீட்டுக்கு, பப்பி, ஆதில்லாம் இருப்பானே!!”
ம்ம்...how clear the message is!
எனது வீடு ( என்று நான் நினைத்துக் கொண்டிருப்பது) வேறு, பப்புவின் வீடு வேறு!!
நான் கவனித்ததில் இன்னொன்று, எந்த புதிய, அல்லது அவளைக் கவரக் கூடிய பொருளைப் பார்த்தாலும், “ஆயா, இது எனக்கா?” அல்லது “இது என்னுதா?” என்று கேட்பது.
ஆமாம், இது உன்னோடதுதான் என்று பதில் வரும்வரை அந்த கேள்வி ஓயாது!! :-)
சொத்துப் பிரிச்சிட்டோம்ல

பப்பு டாக்டராகவோ அல்லது ஏதாவது பெரிய ஆளாக வேண்டுமென்பதைவிட, ஒன்றே ஒன்று அவளுக்கு வர வேண்டுமென்று விரும்புவேன. அது, புத்தகங்கள் மேல் பிரியம். என்னிடம் நிறையக் கதைப்புத்தகங்கள் உண்டு. என் சிறுவயதிலிருந்து இன்றுவரை. அவையெல்லாமே பத்திரமாக பாதுகாக்கப் பட்டுவந்திருக்கின்றன. (கோகுலம்,பூந்தளிர்,
பாப்பா மஞ்சரி, அம்புலிமாமா, சம்பக் இவையெல்லாம் தெரிந்தவர்களுக்கு கொடுக்கப் பட்டுவிட்டன!!) யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று வீட்டில் சண்டைப்போட்டு, சிறுவயதுக் கதைப்புத்தகங்களை அட்டைபெட்டிகளில் பத்திரமாக பரணில் வைத்திருந்தேன். எடுத்து வைக்கும் போது எனது அடுத்த தலைமுறைக்கு வேண்டும் என்ற தொலைநோக்கு எல்லாம் கிடையாது. அவை என்னுடையவை. ஒருபோதும் அவற்றை இழக்க எனக்கு மனமில்லை. என்னைப் பொறுத்தவரை அவை எனது பழைய நண்பர்கள் மாதிரி .ஆனால், இன்று அவை பப்புவின்
உடமையாகிவிட்டன. அவற்றை அவளுக்கு கொடுத்தபோது, மகிழ்ச்சியே எனக்கு மேலோங்கியிருந்தது.

அதில் பெரும்பகுதி, ரஷ்ய, உலக நாடோடிக் கதைகள். ராதுகா பதிப்பகம் அல்லது நியு செஞ்சுரி பதிப்பகம்! இப்போதும் அவற்றை வெளியிடுகிறார்களா எனத் தெரியவில்லை!! மேலும், ஒரு தலையணை சைஸ் தேவதைக் கதைகள் புத்தகம் என்னிடம் ஊண்டு.அதைப் படிக்க பப்பு இன்னும் வளர வேண்டும். (அதுவரை, அது எனக்கு!! :-)))) ஏழுநிறப் பூ என்றொரு புத்தகம்.
என் ஆல் டைம் பேவரிட். அதில் வரும் பெண்ணான ஷேன்யாவின் பெயரையே பப்புவுக்கு
சூட்ட விரும்பினேன்!!
என்னுடைய ஃபேவரிட்டான, அந்தோன் சேகவின், பள்ளத்து முடுக்கில், அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, அலெக்ஸ் ஹேலியின் ஏழு தலைமுறைகள் (The roots), குஷ்வந்த்சிங், ஆர்.கே.நாராயண் புத்தகங்களையும் எடுத்து வந்தேன். எல்லா விடுமுறைக் காலங்களில், அவை தவறாமல் படிக்கப் பட்டுவிடும். ஒருசில புத்தகங்களை திரும்ப திரும்ப படிப்பதில் ஒரு சுகம்!! ஏழு தலைமுறைகள், மனதை கனக்க வைக்கும் புத்தகம். கிண்ட்டாவும், கிஜ்ஜியும், கோழி ஜ்யார்ஜூம்...சிறுவயதிலிருந்து ஆப்பிரிக்கா மீது ஈர்ப்பு வர இப் புத்தகமும் ஒரு காரணமாக இருக்கலாம்!!
படிப்பதின் அலாதி சுகத்தை பப்புவுக்கு அறிமுகப் படுத்துவதே எனது நோக்கமாயிருந்தது. விளையாட்டுச் சாமாங்கள் வாங்கும்போதெல்லாம், கண்டிப்பாக புத்தகம் வாங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். பல கிழிந்துவிட்டன. ஆனால், இப்போது அவளுக்கு புத்தகத்தை மதிக்கத் தெரிந்திருக்கிறது. கொண்டாடத் தெரிந்திருக்கிறது. வரும் கால எப்படியோ..ஆனால் இப்போது "வா அம்மா, படிக்கலாம்!" என்று அந்தப் பழையப் புத்தகங்களை வாரியணைத்தப்படி என்னை இழுததப்போது என் கண்களில் பனி படர்ந்ததை தவிர்க்கமுடியவில்லை!!
வீட்டினுள் நுழைந்தவுடன், மீன் தொட்டியை பார்த்த பப்பு உடனடியாக சொன்னாள்,
“இந்த மீன் தான் எங்க வீட்டுல இல்ல!!!
மை காட்!!
தூங்கும் சமயத்தில், “வீட்டுக்கு போலாம்,அம்மா!!”.
”இதானே பப்பு, வீடு. எங்க இருக்கோம், நாம? வீட்டுலதானே இருக்கோம்!!” - நான்.
இல்ல, நம்ம வீட்டுக்கு, பப்பி, ஆதில்லாம் இருப்பானே!!”
ம்ம்...how clear the message is!
எனது வீடு ( என்று நான் நினைத்துக் கொண்டிருப்பது) வேறு, பப்புவின் வீடு வேறு!!
நான் கவனித்ததில் இன்னொன்று, எந்த புதிய, அல்லது அவளைக் கவரக் கூடிய பொருளைப் பார்த்தாலும், “ஆயா, இது எனக்கா?” அல்லது “இது என்னுதா?” என்று கேட்பது.
ஆமாம், இது உன்னோடதுதான் என்று பதில் வரும்வரை அந்த கேள்வி ஓயாது!! :-)
சொத்துப் பிரிச்சிட்டோம்ல
பப்பு டாக்டராகவோ அல்லது ஏதாவது பெரிய ஆளாக வேண்டுமென்பதைவிட, ஒன்றே ஒன்று அவளுக்கு வர வேண்டுமென்று விரும்புவேன. அது, புத்தகங்கள் மேல் பிரியம். என்னிடம் நிறையக் கதைப்புத்தகங்கள் உண்டு. என் சிறுவயதிலிருந்து இன்றுவரை. அவையெல்லாமே பத்திரமாக பாதுகாக்கப் பட்டுவந்திருக்கின்றன. (கோகுலம்,பூந்தளிர்,
பாப்பா மஞ்சரி, அம்புலிமாமா, சம்பக் இவையெல்லாம் தெரிந்தவர்களுக்கு கொடுக்கப் பட்டுவிட்டன!!) யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று வீட்டில் சண்டைப்போட்டு, சிறுவயதுக் கதைப்புத்தகங்களை அட்டைபெட்டிகளில் பத்திரமாக பரணில் வைத்திருந்தேன். எடுத்து வைக்கும் போது எனது அடுத்த தலைமுறைக்கு வேண்டும் என்ற தொலைநோக்கு எல்லாம் கிடையாது. அவை என்னுடையவை. ஒருபோதும் அவற்றை இழக்க எனக்கு மனமில்லை. என்னைப் பொறுத்தவரை அவை எனது பழைய நண்பர்கள் மாதிரி .ஆனால், இன்று அவை பப்புவின்
உடமையாகிவிட்டன. அவற்றை அவளுக்கு கொடுத்தபோது, மகிழ்ச்சியே எனக்கு மேலோங்கியிருந்தது.
அதில் பெரும்பகுதி, ரஷ்ய, உலக நாடோடிக் கதைகள். ராதுகா பதிப்பகம் அல்லது நியு செஞ்சுரி பதிப்பகம்! இப்போதும் அவற்றை வெளியிடுகிறார்களா எனத் தெரியவில்லை!! மேலும், ஒரு தலையணை சைஸ் தேவதைக் கதைகள் புத்தகம் என்னிடம் ஊண்டு.அதைப் படிக்க பப்பு இன்னும் வளர வேண்டும். (அதுவரை, அது எனக்கு!! :-)))) ஏழுநிறப் பூ என்றொரு புத்தகம்.
என் ஆல் டைம் பேவரிட். அதில் வரும் பெண்ணான ஷேன்யாவின் பெயரையே பப்புவுக்கு
சூட்ட விரும்பினேன்!!
என்னுடைய ஃபேவரிட்டான, அந்தோன் சேகவின், பள்ளத்து முடுக்கில், அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, அலெக்ஸ் ஹேலியின் ஏழு தலைமுறைகள் (The roots), குஷ்வந்த்சிங், ஆர்.கே.நாராயண் புத்தகங்களையும் எடுத்து வந்தேன். எல்லா விடுமுறைக் காலங்களில், அவை தவறாமல் படிக்கப் பட்டுவிடும். ஒருசில புத்தகங்களை திரும்ப திரும்ப படிப்பதில் ஒரு சுகம்!! ஏழு தலைமுறைகள், மனதை கனக்க வைக்கும் புத்தகம். கிண்ட்டாவும், கிஜ்ஜியும், கோழி ஜ்யார்ஜூம்...சிறுவயதிலிருந்து ஆப்பிரிக்கா மீது ஈர்ப்பு வர இப் புத்தகமும் ஒரு காரணமாக இருக்கலாம்!!
படிப்பதின் அலாதி சுகத்தை பப்புவுக்கு அறிமுகப் படுத்துவதே எனது நோக்கமாயிருந்தது. விளையாட்டுச் சாமாங்கள் வாங்கும்போதெல்லாம், கண்டிப்பாக புத்தகம் வாங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். பல கிழிந்துவிட்டன. ஆனால், இப்போது அவளுக்கு புத்தகத்தை மதிக்கத் தெரிந்திருக்கிறது. கொண்டாடத் தெரிந்திருக்கிறது. வரும் கால எப்படியோ..ஆனால் இப்போது "வா அம்மா, படிக்கலாம்!" என்று அந்தப் பழையப் புத்தகங்களை வாரியணைத்தப்படி என்னை இழுததப்போது என் கண்களில் பனி படர்ந்ததை தவிர்க்கமுடியவில்லை!!
Sunday, October 05, 2008
முதல் டெர்ம்...
முடிந்தது வெற்றிகரமாக!!
(முதல் டெர்மின் கடைசி நாளன்று எடுத்தது )
தேர்வுகள் அல்லது முன்னேற்ற அட்டை (progress card!!) எதுவும் இல்லை..
ஆனால், பப்புவிடம் நான் பார்க்கும் சில மாற்றங்கள்..
1. பள்ளிக்கு செல்வதற்கு அழுவதில்லை. தயக்கம் காட்டுவது இல்லை. உடம்பு சரியில்லாத நாட்களில், அவளது வகுப்பறை வீட்டிற்கு வந்துவிடுகிறது. அவள், மோதி ஆண்ட்டி-யாகி விடுகிறாள்..எதிரில் பிள்ளைகள் அமர்ந்திருப்பதுப் போல் கற்பனையுடன்!! ”யெஸ் ஆண்ட்டி சொல்லு” என்பது முதல் பாடல்கள் கற்பித்து, “ஆகாஷ், ஏன் வெண்மதியை கிள்றே?” வரை!! மண்டே சின்ட்ரோம் சிலசமயங்களில் உண்டு, தட்ஸ் ஒக்கே!!
2.விளையாடி முடித்ததும் அவளது பாயை நான் மடிக்கும்போது உதவுகிறாள். பாயை சுருட்டி தூக்கமுடியாமல் தூக்கி கீழே விழுந்தாலும் (பாய்தான்!!)
எடுத்து ஓரமாக வைக்கிறாள்.
3. கை துடைக்கும் துண்டுகள் (நாப்கின்ஸ்), சிறிய துண்டுகளை மடித்து வைத்து விடுகிறாள். (இந்த கடமை உணர்ச்சிக்கு எல்லையில்லாமல் போய்கொண்டிருக்கிறது!உபயோகித்த துண்டுகளும் மடிக்கப் பட்டுவிடுகின்றன!!)
4.பட்டன்கள், சாக்ஸ்கள் அவளாகவே போட்டுக் கொள்கிறாள்.(ஆனால், உடை போட்டுக்கொள்ள மறுத்து ஆர்ப்பாட்டம் செய்யும் ஒருசிலதருணங்கள் விதிவிலக்கு!!) ட்ரேயில் 10 காகித தம்ளர்கள் வைத்து காபி குடிங்க என்று நீட்டுகிறாள்.
5.புத்தகங்கள் படித்தவுடன் அதற்குரிய இடத்தில் வைக்கப்ப்டுகின்றன ஒரு சில சமயங்களில்!!
7. எல்லாவற்றிற்கும் மேலாக, அவளாகவே கரண்டியினால் சாப்பிடுகிறாள்.இது, பள்ளி செல்லவாரம்பித்த ஒன்றிரண்டு வாரங்களிலிருந்து இந்தப் பழக்கத்தில் முன்னேற்றம்!!
மாண்டிசோரி அம்மையாருக்கும் அவளதுப் பள்ளிக்கும் நன்றிகள் பல!!
எனது சந்தேகங்களை தீர்த்து, சில விளக்கங்களையும் கொடுத்த புதுகைத் தென்றலுக்கும் நன்றிகள்!! அவரது மாண்டிசோரி பற்றிய பதிவுகள் எனக்கு உதவியாயிருந்தது!!
(முதல் டெர்மின் கடைசி நாளன்று எடுத்தது )தேர்வுகள் அல்லது முன்னேற்ற அட்டை (progress card!!) எதுவும் இல்லை..
ஆனால், பப்புவிடம் நான் பார்க்கும் சில மாற்றங்கள்..
1. பள்ளிக்கு செல்வதற்கு அழுவதில்லை. தயக்கம் காட்டுவது இல்லை. உடம்பு சரியில்லாத நாட்களில், அவளது வகுப்பறை வீட்டிற்கு வந்துவிடுகிறது. அவள், மோதி ஆண்ட்டி-யாகி விடுகிறாள்..எதிரில் பிள்ளைகள் அமர்ந்திருப்பதுப் போல் கற்பனையுடன்!! ”யெஸ் ஆண்ட்டி சொல்லு” என்பது முதல் பாடல்கள் கற்பித்து, “ஆகாஷ், ஏன் வெண்மதியை கிள்றே?” வரை!! மண்டே சின்ட்ரோம் சிலசமயங்களில் உண்டு, தட்ஸ் ஒக்கே!!
2.விளையாடி முடித்ததும் அவளது பாயை நான் மடிக்கும்போது உதவுகிறாள். பாயை சுருட்டி தூக்கமுடியாமல் தூக்கி கீழே விழுந்தாலும் (பாய்தான்!!)
எடுத்து ஓரமாக வைக்கிறாள்.
3. கை துடைக்கும் துண்டுகள் (நாப்கின்ஸ்), சிறிய துண்டுகளை மடித்து வைத்து விடுகிறாள். (இந்த கடமை உணர்ச்சிக்கு எல்லையில்லாமல் போய்கொண்டிருக்கிறது!உபயோகித்த துண்டுகளும் மடிக்கப் பட்டுவிடுகின்றன!!)
4.பட்டன்கள், சாக்ஸ்கள் அவளாகவே போட்டுக் கொள்கிறாள்.(ஆனால், உடை போட்டுக்கொள்ள மறுத்து ஆர்ப்பாட்டம் செய்யும் ஒருசிலதருணங்கள் விதிவிலக்கு!!) ட்ரேயில் 10 காகித தம்ளர்கள் வைத்து காபி குடிங்க என்று நீட்டுகிறாள்.
5.புத்தகங்கள் படித்தவுடன் அதற்குரிய இடத்தில் வைக்கப்ப்டுகின்றன ஒரு சில சமயங்களில்!!
7. எல்லாவற்றிற்கும் மேலாக, அவளாகவே கரண்டியினால் சாப்பிடுகிறாள்.இது, பள்ளி செல்லவாரம்பித்த ஒன்றிரண்டு வாரங்களிலிருந்து இந்தப் பழக்கத்தில் முன்னேற்றம்!!
மாண்டிசோரி அம்மையாருக்கும் அவளதுப் பள்ளிக்கும் நன்றிகள் பல!!
எனது சந்தேகங்களை தீர்த்து, சில விளக்கங்களையும் கொடுத்த புதுகைத் தென்றலுக்கும் நன்றிகள்!! அவரது மாண்டிசோரி பற்றிய பதிவுகள் எனக்கு உதவியாயிருந்தது!!
Monday, September 29, 2008
இந்த அக்டோபரை மகிழ்ச்சியோடு...
நான் எதிர்நோக்குவதற்கான மூன்று காரணங்கள்!!
வாரயிறுதியை ஒட்டி வரும் விடுமுறை தினங்கள்
ஊருக்கு செல்ல பயண ஏற்பாடுகள்/திட்டங்கள்
எல்லாவற்றுக்கும் மேலாக
மாதக்கடைசியில் வரும் பப்புவின் பிறந்தநாள்
அனைவருக்கும் அட்வான்ஸ்ட் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!!
வாரயிறுதியை ஒட்டி வரும் விடுமுறை தினங்கள்
ஊருக்கு செல்ல பயண ஏற்பாடுகள்/திட்டங்கள்
எல்லாவற்றுக்கும் மேலாக
மாதக்கடைசியில் வரும் பப்புவின் பிறந்தநாள்
அனைவருக்கும் அட்வான்ஸ்ட் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!!
பாலும் தெளிதேனும் - இன் பப்புஸ் வாய்ஸ்!!
|
ரெக்கார்ட் செய்ததை தவிர என் பங்கு இதில் ஒன்றுமில்லை.
அம்மாவுக்கு நன்றிகள்!!
Sunday, September 28, 2008
பப்பு அப்டேட்
பப்புவுக்கு இன்றோடு 35 மாதங்கள் நிறைவடைகின்றன. இனி மாதாந்திர பிறந்தநாளை கவுண்ட் செய்வதை நிறுத்திக்கொள்ள எண்ணியிருக்கிறேன். :-)...
பப்புவின் முதல் (அஃபிஷியலி )ஹேர்கட்
நேற்று!! இதுவரைமுடி வெட்ட அவசியமேற்படவில்லை. ஏனெனில், மூன்று மொட்டைகளையும் 2 வயது 4 மாதங்களுக்குள்ளாகவே முடித்துவிட்டோம். இப்போதைய ஸ்டைல், டோரா கட் போல இருக்கிறது கொஞ்சம்!!
கதைப்புத்தகங்கள் - சில டிப்ஸ்
புத்தகங்கள் படிப்பது பப்புவுக்கு ரொம்ப இஷ்டம்...அதாவது, நான் அவளுக்காக, கதைப்புத்தகங்கள் படித்துக் காட்டுவது!! ஒரு நாளில் ஒரு தடவையாவது அவளுடைய எல்லாக் கதைப்புத்தகங்களை (அட்லீஸ்ட் ஒரு புத்தகத்திலிருந்து ஒரு கதையாவது அவளுக்குப் படித்துக் காட்டுவது..) வழக்கமாக வைத்திருந்தேன் முதலில். இப்போது, அவளாகவே, எல்லா புத்தகங்களையும் எடுத்து வந்து படிக்கச் சொல்கிறாள்.
இதை எதற்கு சொல்கிறேனென்றால், தானாகவே ஏதோ விளையாடிக்கொண்டிருந்த போது, நான் படித்த அந்த கதை வாக்கியங்களை அதே மாடுலேஷனோடு சொல்லிக்கொண்டிருந்தாள். :-)..எனக்கு ஆச்சரியம்!!
உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால்,
புத்தகங்களை படித்துக்காட்டுங்கள், தினமும் ஒரு பதினைந்து நிமிடங்களாவது.
சத்தமாக(பக்கத்து வீட்டுக்கு கேட்கிற மாதிரி இல்லை!!), உணர்ச்சிகளோடு, பாவனைகளோடு, மற்றும் குரல் ஏற்ற இறக்கங்களோடு!
கதைக் கேட்கும் குழந்தைகளையும் இன்வால்வ் செய்யுங்கள்! ஒருமுறை நீங்கள் சொன்னால், திரும்ப சொல்ல சொல்லும்போது, சில இடங்களில் அவர்களை சொல்ல சொல்லலாம், அதில் இருக்கும் ஒரு கேரக்டராக கற்பனை மாற்றி சொல்ல சொல்வது!!
இதன்பின், அவள் வார்த்தைகளைக் கற்றுக் கொள்வது//நீண்ட வாக்கியங்களை சொல்வது மிக வேகமாக இருப்பதுப்போல் எனக்கு ஃபீலிங்!!
பப்புவின் முதல் (அஃபிஷியலி )ஹேர்கட்
நேற்று!! இதுவரைமுடி வெட்ட அவசியமேற்படவில்லை. ஏனெனில், மூன்று மொட்டைகளையும் 2 வயது 4 மாதங்களுக்குள்ளாகவே முடித்துவிட்டோம். இப்போதைய ஸ்டைல், டோரா கட் போல இருக்கிறது கொஞ்சம்!!
கதைப்புத்தகங்கள் - சில டிப்ஸ்
புத்தகங்கள் படிப்பது பப்புவுக்கு ரொம்ப இஷ்டம்...அதாவது, நான் அவளுக்காக, கதைப்புத்தகங்கள் படித்துக் காட்டுவது!! ஒரு நாளில் ஒரு தடவையாவது அவளுடைய எல்லாக் கதைப்புத்தகங்களை (அட்லீஸ்ட் ஒரு புத்தகத்திலிருந்து ஒரு கதையாவது அவளுக்குப் படித்துக் காட்டுவது..) வழக்கமாக வைத்திருந்தேன் முதலில். இப்போது, அவளாகவே, எல்லா புத்தகங்களையும் எடுத்து வந்து படிக்கச் சொல்கிறாள்.
இதை எதற்கு சொல்கிறேனென்றால், தானாகவே ஏதோ விளையாடிக்கொண்டிருந்த போது, நான் படித்த அந்த கதை வாக்கியங்களை அதே மாடுலேஷனோடு சொல்லிக்கொண்டிருந்தாள். :-)..எனக்கு ஆச்சரியம்!!
உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால்,
புத்தகங்களை படித்துக்காட்டுங்கள், தினமும் ஒரு பதினைந்து நிமிடங்களாவது.
சத்தமாக(பக்கத்து வீட்டுக்கு கேட்கிற மாதிரி இல்லை!!), உணர்ச்சிகளோடு, பாவனைகளோடு, மற்றும் குரல் ஏற்ற இறக்கங்களோடு!
கதைக் கேட்கும் குழந்தைகளையும் இன்வால்வ் செய்யுங்கள்! ஒருமுறை நீங்கள் சொன்னால், திரும்ப சொல்ல சொல்லும்போது, சில இடங்களில் அவர்களை சொல்ல சொல்லலாம், அதில் இருக்கும் ஒரு கேரக்டராக கற்பனை மாற்றி சொல்ல சொல்வது!!
இதன்பின், அவள் வார்த்தைகளைக் கற்றுக் கொள்வது//நீண்ட வாக்கியங்களை சொல்வது மிக வேகமாக இருப்பதுப்போல் எனக்கு ஃபீலிங்!!
Friday, September 26, 2008
பப்பு பேச்சு கேட்க வா(ங்க)!!
1. Fan மாய்ஞ்சு மாய்ஞ்சு சுத்துது, பாருங்க!!
2. சிறிது நேரம் தூக்கியபின், "போது பப்பு கீழே இறங்கு" என்றபோது மாட்டேன் என்றாள்.
" கை வலிக்குது பப்பு, போதும் இறங்கு" என்றபோது, "உனக்கு கை வலிக்குதுன்னா எனக்கு கால் வலிக்குது, தூக்கு!"!
3.பிறிதொரு நேரத்தில் தூக்கச்சொன்னபோது, "நீதான் பெரிய பொண்ணு ஆகிட்டல்ல, பப்பு! குட்டி பாப்பா இருக்கறவங்களைத்தான் தூக்குவாங்க!" என்றபோது,
"நான் ஹைட்டாயிட்டதும் நீ பப்புவாயிடு. அப்போ நான் உன்னை தூக்கிக்கறேன்! இப்போ நீ என்னை தூக்கு!"
4. பப்பு. ஸ்கூல்ல என்ன சொல்லிகொடுத்தாங்க இன்னைக்கு?
"அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்" என்று இரண்டு வரிகளை பாடுகிறாள்!
5. ஸ்கூல்ல என்ன பண்ணே இன்னைக்கு?
நீட்டுப் பொட்டு பையன் என்கிட்ட தண்ணி கேட்டான். நான் அடிச்சிட்டேன்..அவன் கையைக் கிள்ளீஈஈஈஈ சாப்பிட்டுட்டேன்!!
(நீட்டுப் பொட்டு பையன் : விபூதி இட்டுக் கொண்டு வரும் பையன் என்று பின்னர் தெரிந்துக் கொண்டேன்!!)
பிறிதொரு நேரத்தில் அதே கேள்விக்கு
ஆன்ட்டியை அடிச்சேன்..அவங்க அழுதாங்க..கஷ்டப்பட்டு அழுதாங்க..ஹூ ஹூன்னு!!
எங்கள் வீட்டில் நாந்தான் இந்தமாதிரி கதை சொல்வதெற்க்கெல்லாம் பெயர்ப்போனவள். பப்பு என்னை விஞ்சிவிடுவாள் போலிருக்கிறது!!
நியூஸ் :
வனிலா பிளேஸில் 3-6 வயதினருக்கான ஒர்க் ஷாப் இந்த தசரா விடுமுறையை ஒட்டி நடத்தப்படுகின்றது!!
3ஆம் வகுப்பு - 12ஆம் வகுப்பினருக்கான கடிதம் எழுதும் போட்டி Tamilnadu Postal circle நடத்துகிறது!!
2. சிறிது நேரம் தூக்கியபின், "போது பப்பு கீழே இறங்கு" என்றபோது மாட்டேன் என்றாள்.
" கை வலிக்குது பப்பு, போதும் இறங்கு" என்றபோது, "உனக்கு கை வலிக்குதுன்னா எனக்கு கால் வலிக்குது, தூக்கு!"!
3.பிறிதொரு நேரத்தில் தூக்கச்சொன்னபோது, "நீதான் பெரிய பொண்ணு ஆகிட்டல்ல, பப்பு! குட்டி பாப்பா இருக்கறவங்களைத்தான் தூக்குவாங்க!" என்றபோது,
"நான் ஹைட்டாயிட்டதும் நீ பப்புவாயிடு. அப்போ நான் உன்னை தூக்கிக்கறேன்! இப்போ நீ என்னை தூக்கு!"
4. பப்பு. ஸ்கூல்ல என்ன சொல்லிகொடுத்தாங்க இன்னைக்கு?
"அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்" என்று இரண்டு வரிகளை பாடுகிறாள்!
5. ஸ்கூல்ல என்ன பண்ணே இன்னைக்கு?
நீட்டுப் பொட்டு பையன் என்கிட்ட தண்ணி கேட்டான். நான் அடிச்சிட்டேன்..அவன் கையைக் கிள்ளீஈஈஈஈ சாப்பிட்டுட்டேன்!!
(நீட்டுப் பொட்டு பையன் : விபூதி இட்டுக் கொண்டு வரும் பையன் என்று பின்னர் தெரிந்துக் கொண்டேன்!!)
பிறிதொரு நேரத்தில் அதே கேள்விக்கு
ஆன்ட்டியை அடிச்சேன்..அவங்க அழுதாங்க..கஷ்டப்பட்டு அழுதாங்க..ஹூ ஹூன்னு!!
எங்கள் வீட்டில் நாந்தான் இந்தமாதிரி கதை சொல்வதெற்க்கெல்லாம் பெயர்ப்போனவள். பப்பு என்னை விஞ்சிவிடுவாள் போலிருக்கிறது!!
நியூஸ் :
வனிலா பிளேஸில் 3-6 வயதினருக்கான ஒர்க் ஷாப் இந்த தசரா விடுமுறையை ஒட்டி நடத்தப்படுகின்றது!!
3ஆம் வகுப்பு - 12ஆம் வகுப்பினருக்கான கடிதம் எழுதும் போட்டி Tamilnadu Postal circle நடத்துகிறது!!
Thursday, September 25, 2008
நினைவுகளின் பிரதிபலிப்புகள்
மளிகை வாங்கிக்கொண்டு பில் போடுவதற்காக கார்டோடு நின்றுக்கொண்டிருந்தேன்.
ஏதோ இடித்த மாதிரி இருந்தது..இன்னொரு கார்ட்!! அதில், லாக்டோஜன் II ,
செரிலாக் மற்றும் பாம்பர்ஸ் என்று நிரம்பியிருந்தது!! புரிகிறது பெண்ணே...
இரண்டு மணி நேரங்களுக்குள் போக வேண்டும் என்ற உன் அவசரம்!!
இரண்டு வருடங்களுக்குமுன் நானும் இருந்திருக்கிறேன் அந்நிலையில்!!
இரவு நேர விழிப்புகள், நான்கு மணிக்கொருமுறை பால் கலந்து, அதிகாலை ஹக்கீஸ் மாற்றி,
weight management..எல்லாம் கண்முன் வந்துப்போயின ஒருமுறை!!
ஏதோ இடித்த மாதிரி இருந்தது..இன்னொரு கார்ட்!! அதில், லாக்டோஜன் II ,
செரிலாக் மற்றும் பாம்பர்ஸ் என்று நிரம்பியிருந்தது!! புரிகிறது பெண்ணே...
இரண்டு மணி நேரங்களுக்குள் போக வேண்டும் என்ற உன் அவசரம்!!
இரண்டு வருடங்களுக்குமுன் நானும் இருந்திருக்கிறேன் அந்நிலையில்!!
இரவு நேர விழிப்புகள், நான்கு மணிக்கொருமுறை பால் கலந்து, அதிகாலை ஹக்கீஸ் மாற்றி,
weight management..எல்லாம் கண்முன் வந்துப்போயின ஒருமுறை!!
Wednesday, September 24, 2008
தமிழ் அகராதிக்கு ஒரு புது வரவு
தரையில பெயிண்டை சிந்தினா உனக்கு இனிமே பெயிண்ட் பாக்ஸ் கெடையாது, பப்பு!!
கெடையும்..எனக்குக் கெடையும்!!
கெடையும்..எனக்குக் கெடையும்!!
Tuesday, September 23, 2008
பப்பு டைம் பாஸ்
Activity புத்தகங்கள்
3D புத்தகங்களை பப்புவுக்கு அறிமுகப்படுத்தினோம்.
(சிங்கப்பூரிலிருந்து வரும் சித்தப்பாக்களும், குடும்ப நண்பர்களும் மறக்காம்ல் வாங்கி வரும் ஸ்கேல்..அதை நேராகவும், சாய்வாகவும் மாற்றினால் படங்கள் அசைவதுபோல் தெரியுமே!!)
வழக்கமான புத்தகங்களைவிட இது சுவாரசியமாய் இருந்தது.
ஸ்டிக்கர் புத்தகங்கள்
இதுவும் கதைப் புத்தகந்தான். ஆனால், கதையின் வாக்கியங்களில் வீடு/பூக்கள் என்று வரும் வார்த்தைகளுக்குப் பதிலாக, அவற்றின் உருவப்படங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதறகான ஸ்டிக்கர் புத்தகத்தின் கடைசி/முதல் பக்கங்களில் இருக்கும். குழந்தைகள் சரியான ஸ்டிக்கரை எடுத்து ஒட்ட வைக்க வேண்டும். கதை கேட்பதோடு இல்லாமல்,கற்பனையையும்
தூண்டுவதாக இருந்தது. குழந்தைகளின் ஈடுபாடும் இருப்பதால், மிகுந்த உற்சாகத்தோடும் பொழுதும் போகும். இந்த ஸ்டிக்கர் புத்தககங்கள், பப்புவை நன்றாக என்கேஜ் செய்கின்றன்!
நன்றி, இப்படி ஒன்றை கண்டுப்பிடித்தவருக்கு!!
வண்ணம் தீட்டுதல்
மாதிரிப் படங்கள் வண்ணங்கள் தீட்டப்பட்டு இருக்கும். அடுத்த பக்கத்தில் இருக்கும் அதே போன்ற படத்தில் வண்ணங்கள் தீட்டவேண்டும். But this was an utter flop for us.
Not so happy as with free hand!!
3D புத்தகங்களை பப்புவுக்கு அறிமுகப்படுத்தினோம்.
(சிங்கப்பூரிலிருந்து வரும் சித்தப்பாக்களும், குடும்ப நண்பர்களும் மறக்காம்ல் வாங்கி வரும் ஸ்கேல்..அதை நேராகவும், சாய்வாகவும் மாற்றினால் படங்கள் அசைவதுபோல் தெரியுமே!!)
வழக்கமான புத்தகங்களைவிட இது சுவாரசியமாய் இருந்தது.
ஸ்டிக்கர் புத்தகங்கள்
இதுவும் கதைப் புத்தகந்தான். ஆனால், கதையின் வாக்கியங்களில் வீடு/பூக்கள் என்று வரும் வார்த்தைகளுக்குப் பதிலாக, அவற்றின் உருவப்படங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதறகான ஸ்டிக்கர் புத்தகத்தின் கடைசி/முதல் பக்கங்களில் இருக்கும். குழந்தைகள் சரியான ஸ்டிக்கரை எடுத்து ஒட்ட வைக்க வேண்டும். கதை கேட்பதோடு இல்லாமல்,கற்பனையையும்
தூண்டுவதாக இருந்தது. குழந்தைகளின் ஈடுபாடும் இருப்பதால், மிகுந்த உற்சாகத்தோடும் பொழுதும் போகும். இந்த ஸ்டிக்கர் புத்தககங்கள், பப்புவை நன்றாக என்கேஜ் செய்கின்றன்!
நன்றி, இப்படி ஒன்றை கண்டுப்பிடித்தவருக்கு!!
வண்ணம் தீட்டுதல்
மாதிரிப் படங்கள் வண்ணங்கள் தீட்டப்பட்டு இருக்கும். அடுத்த பக்கத்தில் இருக்கும் அதே போன்ற படத்தில் வண்ணங்கள் தீட்டவேண்டும். But this was an utter flop for us.
Not so happy as with free hand!!
Sunday, September 21, 2008
திண்ணை நினைவுகள்
திண்ணை நினைவுகள் பற்றி எழுத டேக் செய்த பிரேம்குமாருக்கு நன்றி.
இரண்டாம் வகுப்பு படிக்கும் வரை, ஆம்பூரில், ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம்.
அந்த வீடு திண்ணை, ஐந்து குடித்தனக்காரர்கள் வசிக்குமளவிற்கு பெரிய வீடு.
இருபுறமும் திண்ணை இருக்கும். வலது புறம் திண்ணை மாதிரி..அதாவது சிங்கிள் சீட்டர்.
இடதுப்புறம் வீட்டின் நீளத்திற்கு ஒருபுறம் திண்டு வைத்து திண்ணை இருக்கும்.
வீட்டினுள் கடந்துச் செல்ல மூன்று வாசல்கள் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு கதவும்,
பெரிதாய் ஏதோ அரண்மனை கதவு போல் இருக்கும்.
திண்ணை காலை வேளைகளில் ரொம்ப பிசியாக இருக்கும்.
கீரைக்காரம்மா, பால்காரர் முதல், துணி தேய்ப்பவர் வரை காலை வேளைகளில் வியாபாரம் அங்கேதான். ஐஸ்கட்டி மழை பெய்தபோது, திண்னையில் கைநீட்டிய படி நின்றது நினைவுக்கு வருகிறது. அந்த தெருவில் இருந்த வீடுகளில் அநேகமாக எல்லா வீடுகளிலும் திண்ணை இருந்தது. ஆனால் இரண்டு வீடுகளில்தான் சிறுவர்கள் விளையாடுமவிற்கு திண்ணை இருந்தடு. மற்ற வீடுகளில் காம்பவுண்டுக்குள் திண்ணை இருந்தது. அந்த இரண்டு
வீடுகளில் ஒரு வீடு நாங்கள் குடியிருந்த வீடு. மற்றொன்று, மூக்குப்பொடி தாத்தாவினுடையது. அந்தத் தாத்தா, எப்போதும் வெளியே திண்ணையில் உட்கர்ந்திருப்பாரானதால், அங்கு விளையாட வாய்ப்பு கிடப்பதரிது.
ஆனால், தாத்தா, தூங்கும் மதிய வேளைகளில் அங்கு விளையாடுவோம். சிலவேளைகளில் திட்டுக் கூட கிடைக்கும், அந்தப் பாட்டியிடமிருந்து. அதனால், ஏதாவது நாங்கள் கத்திவிட்டு, அல்லது வீட்டுக் கதவை தட்டிவிட்டு ஓடி வந்து விடுவோம். :-)).
ஆனால், அவர்கள் வீட்டில் குழந்தை கிடையாது. பாவம் என்று எல்லாரும் பேச கேட்டிருக்கிறேன்.
அப்போது க்ரிஸ்டல் கொலுசு பேமஸாக இருந்தது. அது வேலூரில் மட்டுமே கிடைப்பதாகவும் செய்தி. பள்ளி ஆண்டு விழாவில் க்ரிஸ்டல் கொலுசு போட்டு நடனம் ஆட நாங்கள் வேலூர் சென்று வாங்கிவர திட்டம் தயாரானது அந்த திண்ணையில்தான். நால்வர் இருந்த அந்த அணியின் சராசரி வயது 8 அல்லது 9. நல்லவேளை அப்படியெல்லாம்
வாங்கப் போகவில்லை, எல்லாம் தொலைந்துப் போய்விடுவோம் என்ற பயம்தான்!
நான் எட்டாவது படிக்கும் போது, அந்த மூக்குப் பொடித் தாத்தா இறந்துப் போய்விட்டார், கொலை செய்யப்பட்டு!! அவரை கொலை செய்தது, நாங்கள் குடியிருந்த வீட்டில், குணா அக்காவின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்த சசி அக்காவின் அண்ணன், பாட்டியின் நகைகளுக்கு ஆசைப்பட்டு!!
யோசித்துப்பார்த்தால், ரொம்பவெல்லாம் திண்ணை பற்றி எனக்கு ஞாபகமோ செண்டிமெண்டல் அட்டாச்மெண்டோ இருந்ததில்லை.மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, நாங்கள் ஹவுஸிங் போர்ட் குடியிருப்புக்கு வந்து விட்டோம்.
அங்கு திண்ணை இல்லை...ஆனால் பலகணி இருந்தது. பலகணி நினைவுகள் என்று வேண்டுமானால் எழுதலாம். ;-) ஆனால், ஒன்று மட்டும் நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்..அது, தெருவில் விளையாடுவது. அந்த வயதில், அதிகமாக நேரம் கழித்தது, திண்ணையில் எல்லா வீட்டு சிறுவர் சிறுமிகளுடன் சேர்ந்து
விளையாடித்தான். சாயங்கால வேளைகளில், சனி, ஞாயிறுகளில் அங்கே அமர்ந்துதான் வேடிக்கை பார்த்தது, சொப்பு வைத்து விளையாடியது, மற்றும் ராஜா, ராணி, திருடன் போலிஸ் விளையாட்டு எல்லாம். (இப்பொழுதும் அந்த விளையாட்ட யாராவது விளையாடுகிறார்களா தெரியவில்லை..ஒவ்வொருவருக்கும் ஒரு பாயிண்ட்
பேப்பரில் இருக்கும்.மறந்துப் போய்விட்டது!!)
இப்போதெல்லாம் தெருவில் விளையாடுவதென்பதே மறக்கப் பட்டுவிட்டது போல் தோன்றுகிறது. பப்புவை நான் விளையாட அனுப்ப தயாரென்றாலும், தெருவில் இருக்கும் வேறு பிள்ளைகளோ, பெற்றோரோ தயாரில்லை!! :(
பிரேம், உங்க அளவிற்கு இல்லையென்றாலும், ஏதோ எனக்கு இருக்கும் நினைவுகளை(!) எழுதி இருக்கிறேன். விருப்பமிருப்பவர்கள், இந்த டேகை தொடரலாம். நான் ஓப்பனா விட்டுவிடுகிறேன்.
இரண்டாம் வகுப்பு படிக்கும் வரை, ஆம்பூரில், ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம்.
அந்த வீடு திண்ணை, ஐந்து குடித்தனக்காரர்கள் வசிக்குமளவிற்கு பெரிய வீடு.
இருபுறமும் திண்ணை இருக்கும். வலது புறம் திண்ணை மாதிரி..அதாவது சிங்கிள் சீட்டர்.
இடதுப்புறம் வீட்டின் நீளத்திற்கு ஒருபுறம் திண்டு வைத்து திண்ணை இருக்கும்.
வீட்டினுள் கடந்துச் செல்ல மூன்று வாசல்கள் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு கதவும்,
பெரிதாய் ஏதோ அரண்மனை கதவு போல் இருக்கும்.
திண்ணை காலை வேளைகளில் ரொம்ப பிசியாக இருக்கும்.
கீரைக்காரம்மா, பால்காரர் முதல், துணி தேய்ப்பவர் வரை காலை வேளைகளில் வியாபாரம் அங்கேதான். ஐஸ்கட்டி மழை பெய்தபோது, திண்னையில் கைநீட்டிய படி நின்றது நினைவுக்கு வருகிறது. அந்த தெருவில் இருந்த வீடுகளில் அநேகமாக எல்லா வீடுகளிலும் திண்ணை இருந்தது. ஆனால் இரண்டு வீடுகளில்தான் சிறுவர்கள் விளையாடுமவிற்கு திண்ணை இருந்தடு. மற்ற வீடுகளில் காம்பவுண்டுக்குள் திண்ணை இருந்தது. அந்த இரண்டு
வீடுகளில் ஒரு வீடு நாங்கள் குடியிருந்த வீடு. மற்றொன்று, மூக்குப்பொடி தாத்தாவினுடையது. அந்தத் தாத்தா, எப்போதும் வெளியே திண்ணையில் உட்கர்ந்திருப்பாரானதால், அங்கு விளையாட வாய்ப்பு கிடப்பதரிது.
ஆனால், தாத்தா, தூங்கும் மதிய வேளைகளில் அங்கு விளையாடுவோம். சிலவேளைகளில் திட்டுக் கூட கிடைக்கும், அந்தப் பாட்டியிடமிருந்து. அதனால், ஏதாவது நாங்கள் கத்திவிட்டு, அல்லது வீட்டுக் கதவை தட்டிவிட்டு ஓடி வந்து விடுவோம். :-)).
ஆனால், அவர்கள் வீட்டில் குழந்தை கிடையாது. பாவம் என்று எல்லாரும் பேச கேட்டிருக்கிறேன்.
அப்போது க்ரிஸ்டல் கொலுசு பேமஸாக இருந்தது. அது வேலூரில் மட்டுமே கிடைப்பதாகவும் செய்தி. பள்ளி ஆண்டு விழாவில் க்ரிஸ்டல் கொலுசு போட்டு நடனம் ஆட நாங்கள் வேலூர் சென்று வாங்கிவர திட்டம் தயாரானது அந்த திண்ணையில்தான். நால்வர் இருந்த அந்த அணியின் சராசரி வயது 8 அல்லது 9. நல்லவேளை அப்படியெல்லாம்
வாங்கப் போகவில்லை, எல்லாம் தொலைந்துப் போய்விடுவோம் என்ற பயம்தான்!
நான் எட்டாவது படிக்கும் போது, அந்த மூக்குப் பொடித் தாத்தா இறந்துப் போய்விட்டார், கொலை செய்யப்பட்டு!! அவரை கொலை செய்தது, நாங்கள் குடியிருந்த வீட்டில், குணா அக்காவின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்த சசி அக்காவின் அண்ணன், பாட்டியின் நகைகளுக்கு ஆசைப்பட்டு!!
யோசித்துப்பார்த்தால், ரொம்பவெல்லாம் திண்ணை பற்றி எனக்கு ஞாபகமோ செண்டிமெண்டல் அட்டாச்மெண்டோ இருந்ததில்லை.மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, நாங்கள் ஹவுஸிங் போர்ட் குடியிருப்புக்கு வந்து விட்டோம்.
அங்கு திண்ணை இல்லை...ஆனால் பலகணி இருந்தது. பலகணி நினைவுகள் என்று வேண்டுமானால் எழுதலாம். ;-) ஆனால், ஒன்று மட்டும் நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்..அது, தெருவில் விளையாடுவது. அந்த வயதில், அதிகமாக நேரம் கழித்தது, திண்ணையில் எல்லா வீட்டு சிறுவர் சிறுமிகளுடன் சேர்ந்து
விளையாடித்தான். சாயங்கால வேளைகளில், சனி, ஞாயிறுகளில் அங்கே அமர்ந்துதான் வேடிக்கை பார்த்தது, சொப்பு வைத்து விளையாடியது, மற்றும் ராஜா, ராணி, திருடன் போலிஸ் விளையாட்டு எல்லாம். (இப்பொழுதும் அந்த விளையாட்ட யாராவது விளையாடுகிறார்களா தெரியவில்லை..ஒவ்வொருவருக்கும் ஒரு பாயிண்ட்
பேப்பரில் இருக்கும்.மறந்துப் போய்விட்டது!!)
இப்போதெல்லாம் தெருவில் விளையாடுவதென்பதே மறக்கப் பட்டுவிட்டது போல் தோன்றுகிறது. பப்புவை நான் விளையாட அனுப்ப தயாரென்றாலும், தெருவில் இருக்கும் வேறு பிள்ளைகளோ, பெற்றோரோ தயாரில்லை!! :(
பிரேம், உங்க அளவிற்கு இல்லையென்றாலும், ஏதோ எனக்கு இருக்கும் நினைவுகளை(!) எழுதி இருக்கிறேன். விருப்பமிருப்பவர்கள், இந்த டேகை தொடரலாம். நான் ஓப்பனா விட்டுவிடுகிறேன்.
Wednesday, September 17, 2008
பப்பு டைம்ஸ்
அரசியல்
"ராஸ்கல்" சொல்லு - பப்பு என்னிடம்.
"ராஸ்கல்"
ஆயா, இங்க பாருங்க அம்மா ராஸ்கல் சொல்றாங்க!!
ம்ம்ம்...!
(aaya is tour moral police @ home. Pappu is aaya's lil helper now!!)
Lateral thinking
பப்புவின் புத்தகங்களைப் பார்த்து கதைசொல்லும்போது, புத்தகத்தை
வைத்துக் கொள்வது அவளது பொறுப்பு. ஒவ்வொரு பக்கமும் முடிந்த பின்
அவள்தான் திருப்புவாள்.
அந்த பக்கத்திற்கான கதை முடிந்தபின்,
பப்பு, திருப்பு..
புத்தகத்தை திருப்பினாள், தலைகீழாக!
கேள்வி கார்னர்:
இது என்னா? - பப்பு
இது புருவம். சொல்லு..புருவம்.
ப(பு)ருவம்....இது ஏன் இங்க இல்ல? (என் மூக்குக்குக் கீழ் காட்டி)
ஏன் இங்க இல்ல..(என் முழங்கையைக் காட்டியபடி)
புருவம் அங்கல்லாம் இருக்காது. கண்ணுக்கு மேலதான் இருக்கும்.
blah...blah..
முடி ஏன் கருப்பா இருக்கு?
முடி கருப்பாதான் இருக்கும், பப்பு.
இந்தியால இருக்கறவங்களுக்கு கருப்பாதான் இருக்கும்.
ஏன் தலைல கருப்பா இருக்கு?
கூகுளிட்டு, முடி கருப்பாயிருக்கக் காரணம் எமெலானின் என்ற பொருள்தான் காரணம் என்றறிந்து சொன்னபோது எழுந்ததுதான் மேலிருக்கும் கேள்வி!!
"ராஸ்கல்" சொல்லு - பப்பு என்னிடம்.
"ராஸ்கல்"
ஆயா, இங்க பாருங்க அம்மா ராஸ்கல் சொல்றாங்க!!
ம்ம்ம்...!
(aaya is tour moral police @ home. Pappu is aaya's lil helper now!!)
Lateral thinking
பப்புவின் புத்தகங்களைப் பார்த்து கதைசொல்லும்போது, புத்தகத்தை
வைத்துக் கொள்வது அவளது பொறுப்பு. ஒவ்வொரு பக்கமும் முடிந்த பின்
அவள்தான் திருப்புவாள்.
அந்த பக்கத்திற்கான கதை முடிந்தபின்,
பப்பு, திருப்பு..
புத்தகத்தை திருப்பினாள், தலைகீழாக!
கேள்வி கார்னர்:
இது என்னா? - பப்பு
இது புருவம். சொல்லு..புருவம்.
ப(பு)ருவம்....இது ஏன் இங்க இல்ல? (என் மூக்குக்குக் கீழ் காட்டி)
ஏன் இங்க இல்ல..(என் முழங்கையைக் காட்டியபடி)
புருவம் அங்கல்லாம் இருக்காது. கண்ணுக்கு மேலதான் இருக்கும்.
blah...blah..
முடி ஏன் கருப்பா இருக்கு?
முடி கருப்பாதான் இருக்கும், பப்பு.
இந்தியால இருக்கறவங்களுக்கு கருப்பாதான் இருக்கும்.
ஏன் தலைல கருப்பா இருக்கு?
கூகுளிட்டு, முடி கருப்பாயிருக்கக் காரணம் எமெலானின் என்ற பொருள்தான் காரணம் என்றறிந்து சொன்னபோது எழுந்ததுதான் மேலிருக்கும் கேள்வி!!
Subscribe to:
Posts (Atom)
