வெகுநாட்களுக்கு முன் அவளுக்குத் தெரியாமல் எடுத்தது - ஒரு வருடத்துக்கு முன் இருக்கலாம்! ஆங்கிலத்தில் மேல் அளவு கடந்த ஆசை வந்து அவள் பேசுவதெல்லாம் ஆங்கிலம் என்று அவளாக நினைத்துக்கொண்டிருந்த காலகட்டம்! :)) No, pink tower, long rod, ok -தான் எனக்கு புரிந்தது!!
தற்போது உதிர்க்கும் ஆங்கில முத்துகள் சில
see here..out will not come - வெளிலே வராது பாரு என்பது அர்த்தம். (பெயிண்ட் ட்யூபை அழுத்தச் சொன்னபோது!)
hereonly you go - இங்கேயே இரு என்பதன் ஆங்கில வடிவம் - (மழையின் நிமித்தம் அவளுக்கு விடுமுறை இருந்த நாளில் நான் அலுவலகம் கிளம்பிய போது!)
i no your friend - நான் உன் ப்ரெண்ட் இல்லை என்று கா விட்ட நேரத்தில்!
Monday, November 09, 2009
talk in English : Walk in English
Sunday, November 08, 2009
ஜீன்
I almost see her daily. லிஃப்டில் செல்ல காத்திருக்கும் நேரத்தில், அதே லிஃப்டில் இறங்கி வருவார். அவர் யாரையும் பொருட்படுத்தாமல்தான் கடந்துச் செல்வார். ஆனால், அவர் கடந்து சென்றதும், லிஃப்டில் பயணிப்பவர்கள், லிஃப்ட் உதவியாளர் முதல் பிற அலுவலக ஊழியர்கள் வரை உள்ளாகும்/காண்பிக்கும் உணர்ச்சிகள் இருக்கிறதே....அவர்களுக்குள் பார்த்து கண்சிமிட்டிக்கொள்வதும், சிரித்துக்கொள்வதும், பேசிக்கொள்வதும்!!!
”அவளுக்கு ரெண்டு பசங்கடா”
“டேய், அந்தப் பொண்ணு ஸ்மோக் பண்ணும்டா, தெரியுமா!!”
இன்னும் அந்த பெண் எந்த ஏரியாவிலிருந்து வருகிறாள், பூர்வீகம் எல்லாம் ஆராயப்படும்! ஏன் அந்தப் பொண்ணு ஜீன்ஸ்லியேதான் வருது - இப்படியாக!! அதுவும் அந்தபெண் ஸ்லீவ்லெஸ்-ல் வந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம்!
ஏன் இவங்களாலே ஒரு பொண்ணு ஸ்மோக் பண்ணறதை இயல்பா எடுத்துக்கமுடியலை, ஆண்கள் புகைப்பிடிப்பதைபோல?
அதே புகைபிடிக்கும் இடத்துக்கு ஒரு ஃபாரினர் லேடி போனா இவங்க யாரும் கண்டுக்கிறதேயில்லையே!
ஒரு அயல்நாட்டு பெண் (சல்வாரிலேதான்) தினமும் புகைபிடிக்க வருவார். ஆனால், யாரும் அவரை இந்தளவுக்குப் சட்டை செய்தது போல் தெரியவில்லை!! (ஒருவேளை சல்வார் போட்டுக்கிட்டு புகைத்தால் ஒன்னும் பேசிக்க மாட்டாங்களோ என்னவோ!?!)
புகைப்பதை ஆதரிப்பதாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன் - அதைப் பொதுவில் வைப்போம் என்றே சொல்ல வருகிறேன் - புகைப்பதையோ அல்லது புகைக்க வேண்டாமென்று சொல்வதையோ!!
ஆனால், ஒரு பெண் ஜீன்ஸ் அணிவதோ அல்லது ஸ்லீவ்லெஸ் அணிவதோ ஏன் ஒரு பொருட்டாக வேண்டும்? ஒரு பெண் அணியும் உடை, கலாச்சாரத்திற்கு, பாரம்பரியத்திற்கு, குடும்பத்திற்கு, குடும்பத்தின் மானமாக இன்னும் என்னவெல்லமோவாக பார்க்கப்படுகிறது - ஆனால் அது அணிபவருக்கு, உடுத்துபவரின் வசதியாக இருக்கவேண்டுமென்பதைத் தவிர!!
உண்மையில் ஜீன்ஸ் அணிந்துக்கொள்ள வசதியானது. பராமரிக்க எளிதானது.
ஆண்கள், வசதியாக பாண்ட்களுக்கும், அரைக்கால் சட்டைகளுக்கும் மாறிவிட பெண்கள் எந்த காலநிலையாக இருந்தாலும் புடவையை கட்டிக்கொண்டு அழ நேர்ந்த காலகட்டம் எதுவென்றுதான் தெரியவில்லை. எனது பல தோழிகள் திருமணத்திற்குபின் நிரந்தர புடவைவாசிகளாக மாறிவிட்டார்கள் - குடும்பத்தினரின் விருப்பத்திற்காக. ஒரு காலத்தில், அம்மாவின் புடவையை எடுத்து சல்வார் தைத்துக்கொண்டவர்கள், அதே புடவைக்குள் தன்னை கஷ்டப்படுத்தி திணித்துக்கொண்டவர்கள் இவர்கள்!
இந்தப்புடவையைக் குறித்துதான் எத்தனை கண்ணோட்டங்கள் - முழுதுமாக உடலை மறைக்கிறது என்றும், உணர்ச்சிகளை தூண்டக்கூடியதாக இருக்கிறதென்றும்!! எது எப்படியாயினும், புடவைதான் பெண்ணுக்கு அழகு - புடவை அணிந்தவளே இந்திய பெண் - தமிழ் பெண் - நமது கோலிவுட்,டோலிவுட், பாலிவுட் எல்லாம் சுற்றி வளைத்துச் சொல்வதும் இதையே!!
”பாவாடை அணிந்தவள் - ஃப்ரி உமன்”!
”ஜீன்ஸ் அணிபவள் - எதற்கும் துணிந்தவள்”!!
”ஜீன்ஸ் அணிந்தவர்கள் - ஸ்லீவ்லெஸ் அணிந்தவர்கள் நமது கலாசாரத்திற்கு பங்கம் உண்டாக்கக் கூடியவர்கள்”
பெண்களின் உடை குறித்துதான் எத்தனை கண்ணோட்டங்கள்!!
பெண்கள் நீங்கலாக, மற்ற இந்தியர்கள் அனைவரும் அவரவர் வசதிக்கேற்ப உடையுடுத்தும்போது கேடடையாத இந்த கலாச்சாரம் மிகுந்த வியப்பூட்டுகிறது!!
Friday, November 06, 2009
ஆயாத்துவங்கள்!!
நம்பிக்கைகள்தானே வாழ்க்கையை சுவாரசியமாக்குகின்றன! கீழே இருப்பவை சிறுவயதிலிருந்து நேற்றுவரை என் ஆயாவிடம் பல்வேறு தருணங்களில் நான் கேட்டவை. ஓவர் டூ ஆயா'ஸ்!
பாத்திரங்களை கழுவுவதற்காக சிங்கில் போடும்போது : பாத்திரத்தைக் காய விடக்கூடாது...தண்ணி ஊத்திவைக்கணும்..இல்லேன்னா வயிறு காயும்!
ஆள்காட்டி விரலை நீட்டிக்கொண்டு (ஸ்டைலுக்காக) சாப்பிடும் பழக்கம் இருந்தபோது:
சாப்பிடும் போது அஞ்சு விரலும் குவிச்சு வைச்சுதான் சாப்பிடணும் - இல்லாட்டி அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போய்டும்!!
ஊருக்குப் போகும்போது தலைக்கு எண்ணெய் வச்சு தலைகுளிக்கக்கூடாது! (ஆனா, தலை குளிச்சாத்தானே பஃப்-னு அழகா இருக்கும் என்ற பிடிவாதத்திற்குப்பின் சீயக்காய் வைத்து தலைகுளிக்க வேண்டாம், ஷாம்பூ உபயோகப்படுத்தலாமென்று தளர்த்தப்பட்டது!)
வீடு இன்னைக்கு துடைக்க வேண்டாம் - ஊருக்குப் போய் இருக்காங்க, வந்தப்புறம் துடைச்சுக்கலாம்.
செவ்வாய்க்கிழமை வெளியாட்களுக்கு காசு கொடுக்க வேண்டாம். (அவங்க சம்பளப் பணம்தான்!)
புது ட்ரெஸ் புதன்கிழமை போடணும். (புதன்கிழமையெல்லாம் புதுட்ரெஸ்தான் போடணும்னு சொன்னா எப்படி இருக்கும்!!)
நகத்தைக் கடிக்காதே - தரித்திரம்.
வேலைக்காரம்மாவுக்கு சாப்பாடு முதலில் வைக்கக் கூடாது. ஒரு நாலு சாதம் எடுத்து வாயிலே போட்டுக்கிட்டு அப்புறம் கொடு.
வடக்குப் பார்த்து உட்கார்ந்து சாப்பிடாதே! கஷ்டம் வந்து சேரும். ('இதுக்கும்மேலயா?!!)
உப்பு கொட்டினியா, துப்பை கொட்டினியா? - (உப்பை கொட்டும்போது கண்டிப்பாக இதை சொல்லிவிட வேண்டும். சோ, துப்பைக் கொட்டியதாக ஆகாது!)
இருட்டினப்புறம் நகம் வெட்டாதே!
ஊரிலேர்ந்து முருங்கைக்காய் எடுத்துட்டு வராதே!
ஊருக்கு நான்-வெஜ் எடுத்துட்டு போனா ஒரு அடுப்புக்கரித்துண்டு போட்டு அனுப்பு.
கிழக்குப்பக்கம் தலை வச்சு படு.
சாதத்தை வேஸ்ட் பண்ணா பிற்காலத்துலே சாப்பாடு கிடைக்காது. (அந்த பிற்காலம் எனக்கு 20 வயசுலேயே ஆரம்பிக்கும்னு தெரியாது!)
சாயங்காலத்துலே தூங்கக் கூடாது..படிப்பு வராது.
சாயங்காலத்துலே சாதம் சாப்பிடக் கூடாது...படிப்பு வராது. (நொறுக்குத்தீனி சாப்பிடலாம்)
அன்ரூல்டு பேப்பரிலே எழுதும்போது எழுத்து கீழ்நோக்கி போகக்கூடாது. படிப்புலே கீழே போய்டுவே!
யாருக்காவது காசு கொடுக்கும்போது வாசல்படிலே நின்னுக்கிட்டு கொடுக்காதே. ஒன்னு அவங்களை உள்ளே கூப்பிட்டு கொடு, இல்லேன்னா நீ வெளிலே போய் கொடு!
குறிப்பு: இதெல்லாம், எங்க ஆயாவுடைய 'நம்பிக்கைகள்' இல்லேன்னா 'வாழ்க்கை அனுபவங்கள்' இல்லேன்னா 'இந்திய பண்பாடு' இல்லேன்னா 'இந்திய கலாச்சாரம்' இப்படி எதுவேனா வச்சுக்கலாம்!இதேபோல, உங்கள் ஆயாவும் உங்களுக்குச் சொல்லியிருந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்களேன் - பின்னூட்டமாகவோ, பதிவாகவோ!!
அடுத்த இடுகையில் ”ஆயாவின் அட்டகாசங்கள்” !!! ;-)))
Thursday, November 05, 2009
கோணலா இருந்தாலும்....
பப்புவோடதாக்கும்!!
இடம் : ஆயாவின் கை
உபயம் : சொல்லனுமா என்ன?
டிசைன் யுவர் கேப்
வெற்று பேப்பரில் தொப்பிகளை ஸ்டேப்ளர் பின் கொண்டு செய்து வைத்திருந்தேன். பார்ட்டியில் ஆர்ட் ஆக்டிவிட்டியாக செய்வதற்காக. ஆனால், குட்டீஸ் எல்லோரும் பஸில்கள், மற்ற விளையாட்டுகளில் மூழ்கிவிட்டதால் செய்ய முடியவில்லை. போரடித்த பொழுதொன்றில் பப்பு டிசைன் செய்தது - இது!
சக்கரத்தின் தடங்களும், ஆரஞ்சு வண்ண ஆக்டோபஸூம்!
(பழைய படங்கள்தான். பொறுத்துக்கொள்ளுங்கள், ஆர்ட் ஆக்டிவிக்ட்டிகள் செய்து கனநாட்களாகின்றன. இனி மெதுவாக தொடங்குவோமென்று எண்ணுகிறேன்!)
Wednesday, November 04, 2009
சச் கா சாம்னா
ஆச்சி, ஏன் நம்ப்ளுக்கு ரெண்டு கைதான் இருக்கு...மூணு கை இல்லே?
தெரியலையே பப்பு...
ஏன் ரெண்டு கண்ணு, ரெண்டு காலு இருக்கு? மூணு இல்லே?
தெரியல..பப்பு..ஏன் இல்ல?
ஒனக்கு தெரியும்..நீ அம்மாடி!! சொல்லு!!!
பப்பு...அந்த உண்மை உனக்கும் சீக்கிரத்திலேயே தெரியப்போகுதுன்னு நினைக்கும் போதுதான்...அவ்வ்வ்!!!
பிறந்தநாள் - ரவுண்ட் அப்
கடந்த வருடத்தின் இந்த இடுகையில் கடைசியாக வந்த பின்னூட்டமே இந்தப்பதிவை எழுத இயலாமல் செய்து விட்டது! தங்களின் கேள்விக்கு என்னிடம் விடையில்லாவிட்டாலும் கூட, தங்களின் மனவருத்தத்தை எனது இடுகைகளால் தூண்டியிருக்கிறேனென்பது என்னை சங்கடத்துக்குள்ளாக்குகிறது! மன்னிக்க வேண்டுகிறேன்! தங்களுக்காகவும், தங்களின் மகனுக்காகவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்! கண்டிப்பாக தங்கள் மகன் கேள்விக்கணைகளால் தங்களைத் துளைத்தெடுக்கும் நாள் தொலைவில் இல்லை!!
'சித்திரக்கூடம்' பப்புவின் செய்கைகளையும் நான் ரசிக்கும் கணங்களையும் பதிந்துக்கொள்ளும் ஒரு ஆன்லைன் ஜர்னல் என்ற சமாதானத்துடன் தொடர்கிறேன்!
இந்த வருடத்தின் திட்டம்
1. ஒரு ஃபோட்டோ ஆல்பம் - Troublesome Threes
2. ஒரு பரிசு - மீன் தொட்டி
3. நான்கு செலிபிரேஷன்கள் (நாங்களாக பிளான் செய்யாவிட்டாலும் அமைந்து விட்டது!)
ஃபோட்டோ ஆல்பம் - Troublesome Threes
கடந்தவருடத்தில் க்ரேஸியான மணித்துளிகள் - வழக்கம் போல சில 'முதல்'கள்- இன்னும் ஆல்பம் கைக்கு வரவில்லை.
ஒரு பரிசு - மீன் தொட்டி
இது ‘எதையாவது_வளர்க்கலாம்_மேனியா'வுக்காக. குறிப்பாக மீன்கள் வளர்ப்பதை ஆயாவும் விரும்புவது இல்லை. எனக்கும் தொல்லை. மீன்கள் உயிரிழப்பதை தாங்க இயலாது ஆயாவால். எனக்கோ அதை சுத்தம் செய்ய வேண்டிய வேலை. ஆனால், பப்புவுக்காக பெரிம்மா ஆம்பூர் செல்லும் போதெல்லாம் மீன் தொட்டியை சரி செய்து வைத்திருப்பார். அதிலிருந்து பப்புவுக்கு இஷ்டமானது மீன்களும் மீந்தொட்டியும்!
நான்கு கொண்டாட்டங்கள்
1. முதல் கேக் கட்டிங்
2. பிறந்தநாளன்று பள்ளியில் - பள்ளிக்கு சாக்லேட் அனுமதி இல்லை. பள்ளியில் அனைவருக்கும் டிரை ஃப்ரூட்ஸும், அவளது வகுப்பினருக்கு ஸ்கெட்ச் பேனாக்களும். பப்பு இன் பாவாடை சட்டை.
3. ரோஷினி ஹோம் @ பள்ளிக்கரணை - சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும். அங்கிருந்த அனைவரும் நன்றாக நினைவு வைத்திருந்தனர். சென்ற முறை கற்றுக்கொண்ட பாடல்களையும் அடிக்கடி நினைவுகூர்வதாகக் கூறினர். இந்த முறை பப்பு தயக்கமில்லாமல் பாடல்கள் பாடினாள். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் விளையாடி, பாடல்கள் பாடி நேரம் செலவழித்தோம். பின்னர், கொண்டு சென்றிருந்த நொறுக்குத்தீனிகளை பகிர்ந்துக்கொண்டோம்.
(ஆரஞ்சு வண்ண உடையில் பப்பு - சிறார்களை பெரிம்மா விளையாட்டை நடத்திக்கொண்டிருக்கும்போது)
4.வீட்டில் நண்பர்களுடனும், அண்டை வீட்டாருடனும். வழக்கம்போல pin the tail கேம்.
வர்ஷினி, வெண்மதி குடும்பத்துடன் வந்திருந்தனர். குட்டீஸ் எல்லோரும் ஓடியாடினர் வண்ணந்தீட்டினர்.கூச்சலிட்டனர். பப்புவுக்கு இருக்கும் இன்னொரு முகம் வெளிப்பட்டது.
வர்ஷினியோ, வெண்மதியோ வீட்டிற்குக் கிளம்புவதை விரும்பவில்லை. பப்புவும் விரும்பவில்லை. ”வீட்டுக்கு போய் ட்ரெஸ் எடுத்துட்டு வந்துடலா'மென்ற சமாதானத்துடன் கிளம்பிச் சென்றனர். பதிவர்களில் g3 வந்திருந்தார். குட்டீஸோடு குட்டீஸாகவே மாறிவிட்டார். :-)
மின் வாழ்த்தட்டைகள் அனுப்பியும், தொலைபேசியிலும், பதிவுகளிலும் வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு பப்புவின் சார்பாக நன்றி!
Sunday, November 01, 2009
பிடித்தவர்; பிடிக்காதவர் - தொடர் விளையாட்டு
தொடர்பதிவுக்கு அழைத்த மாதவராஜ் அவர்களுக்கு நன்றி!
1.அரசியல் தலைவர்
பிடித்தவர் :கக்கன்
பிடிக்காதவர்: ஜெயலலிதா
2.எழுத்தாளர்
பிடித்தவர் : அம்பை
பிடிக்காதவர் : ரமணிச்சந்திரன்
3.கவிஞர்
குறிப்பிட்ட கவிஞரென்று தேடிப்பிடித்து படிப்பதில்லை..கண்ணில் பட்ட கவிதைகளை வாசிப்பதோடு சரி!
4.இயக்குனர்
பிடித்தவர் : தங்கர் பச்சான்,
பிடிக்காதவர்: பாக்யராஜ்
5.நடிகர்
பிடித்தவர் : லொள்ளு சபா மனோகர்
பிடிக்காதவர் : எம்ஜிஆர்
6.நடிகை
பிடித்தவர் : சுவலஷ்மி
பிடிக்காதவர் : நமீதா
7 . இசையமைப்பாளர்
பிடித்தவர் : ஏ.ஆர்.ரஹ்மான்
பிடிக்காதவர் : அப்படி யாரும் இல்லை..மற்றவர் இசையமைப்பில் ஏதாவது ஒரு பாடலாவது பிடித்துதானே இருக்கிறது!
இந்த தொடரை தொடர அழைப்பது,
க.பாலாசி
சஞ்சய்
தீஷூ
பா.ராஜாராம்
Friday, October 30, 2009
கல்நாயக்!
இது ஒரு பண்டோராவின் பெட்டி போல. வல்லியம்மாவின் மங்கையராய் பிறப்பதற்கே இடுகையே என்னையும் எழுதத் தூண்டியது! ”எனக்கும் இப்படி நடந்திருக்கிறது” என்று!
அவரது இடுகையை மேலோட்டமாக புரிந்துக்கொண்டு பின்னூட்டமிட்டுவிட்டேன். ஆனால், அதன்பின் நீண்ட நேரம் இடுகையைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருவேளை அவருடைய இடத்தில் நானிருந்தால், என்னால் என்ன செய்திருக்கக்கூடுமென்று!! அல்லது என்ன செய்திருப்பேனென்று! எதுவும் தோன்றவில்லை, ஆனால், சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது! சிறுவயதிலிருந்து நான் கடந்து வந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனதில் வந்து போகிறது..அதனோடு, அவை தந்த வலிகளும்!!
பள்ளிககூடத்திற்குச் செல்ல, எங்கள் குடியிருப்பைத் தாண்டி மெயின் ரோடிற்கு வரவேண்டும். அங்கே ஒரு ஆட்டோ ஸ்டேண்டை கடந்துதான் மெயின் ரோடிற்கு கடந்துவர முடியும். எட்டாவது வகுப்பு, சென்றபின்னர் எனக்கு அந்த ஆட்டோ ஸ்டேண்டை கடப்பது நைட் மேராக இருந்தது. காலையில், தலையை வாரி, பையை எடுக்கும்போதே அந்த ஆட்டோ ஸ்டேண்ட் கிலி பிடித்துக்கொள்ளும்! ஒருமாதிரி பயம் என் வயிறு முழுதும் பரவும்! எல்லாம் எதற்காக..அங்கே கிராஸ் செய்யும்போது கேட்கும் சீழ்க்கையொலிகள், கிண்டல், கேலி குரல்களுக்காக,! இதற்காகவே, கவிதாவுடன் ஒன்றாக செல்ல ஆரம்பித்தேன்- ஒரு தைரியத்துக்காக!
கிண்டல், கேலி அல்லது சினிமா பாடல்வரிகள்தன்...ஆனாலும் அந்த street harassment கொடுத்த வலி என் சிறு வயதின் மனதினில் பதிந்தது...கல்லூரி சென்றும், யாரேனும் என் பின்னால் சாதாரணமாக நடந்து வந்தால் கூட இதயம் படபடவென்று அடித்துக்குமளவிற்கு ஆனது! எல்லாமே 'நீ ஒரு பெண்..சதையாளானவள்..நாங்கள் பார்க்கவும், பார்த்து உணரவும், வார்த்தைகளால் சீண்டவும், முடிந்தால் தொட்டு சீண்டவும் நீ உண்டாக்கப்பட்டவள்' என்று சொல்லிக்கொண்டே இருப்பது போல இருந்தது!
மதுரையிலிருக்கும்போது நிகழ்ந்தது இது. நானும், சீதாவும் சிம்மக்கல் செல்லும் நகரப்பேருந்தில் சென்றோம். பேருந்து மிகுந்த கூட்டமாக இருந்தது. எங்களுக்கு எப்படியோ உட்கார இடம் கிடைத்துவிட்டது. எங்களுக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவன் அருகில் நின்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடந்துக்கொள்ள ஆரம்பித்தான். அந்த ஜனக்கூட்டத்தில் யாரும் இதைக்கண்டுக்கொண்ட மாதிரியே தெரியவில்லை. அவரவர் இறங்கும் இடம் எப்போதடா வருமென்று தவித்துக்கொண்ட மாதிரி இருந்தது. என்னருகில் அமர்ந்திருந்த சீதா கொஞ்சம் முன்நகர்ந்து அந்த ஆளின் தலையை பிடித்து இழுத்து ஆட்டினாள். அடுத்த நிமிடமே அந்த ஆள் எழுந்து அந்த கூட்டத்திலும் நகர்ந்து வாயிற்படியினருகில் நின்றுக்கொண்டான். நிறுத்தம் வருவதற்குள்ளாகவே இறங்கியும் சென்றுவிட்டான்.
இது நிகழ்ந்து நீண்ட நாட்களுக்கு அடிக்கடி நினைவில் வந்துக்கொண்டிருந்தது! என்னை நானே மிக அருவறுப்பாக உணர்ந்தேன். எனக்கு நிகழ்ந்தது போல, அதை நினைத்துக்கொண்ட போதெல்லாம் குளிக்கத் தொடங்கினேன், என் தோலையே கழட்டிவிடுவதுபோல!! அதிலிருந்து பேருந்தில் செல்வதை தவிர்க்கத் தொடங்கினேன். ரயிலில், யாராவது என்னை, எனது பெயரை, படிக்கும் கல்லூரியை பற்றி விசாரிக்கத் துவங்கினால் (நட்பாகக்கூட்!), பெயரை மாற்றிக்கூறினேன். தவறான கல்லூரியை குறிப்பிட்டேன்! அடுத்த செமஸ்டர் வந்தபின்னரே கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தேன்! மதுரை என்றில்லை..எந்த நகரத்திலும் ஒரு பெண்ணுக்கு நிகழக்கூடியதுதான் இது...!!
ஒரு டவுனிலிருந்து, எல்லோரையும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு சிறு ஊரிலிருந்து, வழியில் உங்கள் சைக்கிள்செயின் கழன்றால் உடனே வந்து சரிசெய்து ‘டீச்சர் பொண்ணுதானேம்மா' என்று கேட்டுவிட்டு செல்லும் நபர்கள் நிறைந்த ஊரிலிருந்து வந்த எனக்கு இந்த சம்பவம் நடுக்கத்தையே, திடுக்கிடலையே தந்தது!!
சீதாவிற்கு அந்த தைரியம் வர..அது ஒரு நீண்ட பயணமாக இருந்திருக்க வேண்டும்! பயத்தை..அதிர்ச்சியை..ஒரு உடலாக உணரப்பட்ட தருணத்தை..உதறி அந்த ஆளின் முடியைப் பிடிக்க அவள் இதையெல்லாம் கடந்து வந்திருக்கவேண்டும்! நமக்காக யாரும் குரல் உயர்த்த மாட்டார்கள், இதுபோன்ற சந்தர்ப்பங்களில்! நாம்தான் நமக்காக எழுந்து நிற்க வேண்டும்! வல்லியம்மாவின் அனுபவம் உணர்த்துவதும் அதைத்தான்!
.jpg)

