சித்திரக்கூடம்
ஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...
Monday, May 20, 2013
Thursday, May 16, 2013
"குரங்குலேருந்து வந்த பெண் எங்கே?"
பப்பு,
நேற்று ஒரு கதைப்புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாள். அதிலிருந்த
படத்தில், ராணிக்கு ஒருவர் சாமரம் வீசிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்ததும்,
பப்புவுக்கு புரியவில்லை. அதுதான் சாமரம், காத்து வரனும்னு வீசுவாங்க
என்றதும், ' அது பாக்கறது நம்ம வீட்டுல இருக்கிற ஒட்டடை குச்சி மாதிரியே
இருக்கு(அவ்வ்வ்வ்வ்!!),அவங்களுக்கு கை வலிக்குமா வலிக்காதா? வலிச்சா?'
என்றாள்.
'ஆமா,வலிக்கும், வலிச்சா வேற ஒருத்தங்க வந்து வீசுவாங்க. அவங்க வரைஞ்சிருக்கிறது பார்க்க அப்படி தெரியுது. ' என்றதோடு நிறுத்தியிருக்கலாம். கூட 'அது மயிலோட இறகுல செஞ்சிருப்பாங்க, அந்த காலத்துல ஃபேன்,ஏசில்லாம் கண்டுபிடிக்கலைல்ல' என்று சொல்லிவிட்டேன். அதிலிருந்து ஆரம்பித்தது.
"அந்த காலத்துல எல்லாம் நேச்சுரலா இருந்தது, இப்போதான் எல்லாம் டூப்ளிகேட்" என்றாள் மேலே சுத்தும் ஃபேனைக்காட்டியபடி.
"ஏன் அப்படி சொல்றே,அந்த காலத்துல பவர் இல்ல, இருட்டுலதான் இருக்கணும். எப்படி இருக்கும்? இப்போ ஜாலியா இருக்கு இல்ல, ஏசி இல்லாம தூங்க முடியுதா? கம்ப்யூட்டர், பஸ், ட்ரெயின் அதெல்லாம் வேணும்தானே, அப்போதானே ஈசியா இருக்கு?" என்றேன். ஆயாவுக்காக அவரது அறையில் ஏசி மாட்டியிருந்தோம். வெயிலின் கொடுமை தாளாமல், அவரது அறையில்தான் கொஞ்ச நாட்களாக எங்கள் தூக்கம்.
"அந்த காலத்துல நேச்சுரலா காத்து வந்துது, மரம்,காடுலேருந்து. ஊஞ்சல் கூட நேச்சுரலா இருந்தது.இப்போ, செயின் போட்டு கட்டி..இது அதுன்னு" என்றாள், ஒரு பெரிய கிழவி மாதிரி!
"நேச்சுரலா ஊஞ்சல் எங்க இருந்துது? " என்றதும், சமீபத்தில் காட்டுக்கு சவாரி போனதை நினைவூட்டினாள். அது ஒரு டீப் ஜங்கிள் சஃபாரி. காட்டு மரங்களிடையே, ஊஞ்சல்கயிறு போல, பெரிய பெரிய கிளைகள் அங்குமிங்கும் தாழ்ந்து தொங்கின.அதுதான் நேச்சுரல் ஊஞ்சலாம். சில நேச்சுரல் ஊஞ்சல்களில் குரங்குகளும் தாவி ஓடி விளையாடின. அதிலிருந்து ஆரம்பித்து, பேச்சு, குரங்கிலிருந்து வந்த மனிதன் பற்றிய டாபிக்குக்கு வந்தது. ஆரம்பத்தில், குரங்கு மனிதன் ,கொஞ்சம் கொஞ்சமாக எப்படி இன்றைய மனிதனாக மாறினான் என்பதை பற்றி கொஞ்சம் வகுப்பெடுத்தாள். (ஸ்ஸ்...ப்பா!!)

ஒவ்வொரு ஸ்டேஜிலும் எப்படி மாற்றங்கள் வந்தது (வெளித் தோற்றத்தில்தான்) என்று நடித்து வேறு காட்டினாள். அதுதான் ஒரு படம் இருக்குமே, நான்கைந்து ஸ்டேஜுகளில், மனிதன் எப்படி நிமிர்ந்து நடக்கத் துவங்கினான் என்பது போல! நடுவில் எனக்கு டெஸ்ட் வேறு, குரங்கு மரத்தின் மேல் குட்டி போடுமா, மரத்தின் கீழே குட்டி போடுமா என்று! (என்னடா, குரங்குக்கு வந்த சோதனை...ச்சே...என்னோட பொது அறிவுக்கு வந்த சோதனை!!) மரத்தின் கீழேதான் குட்டி போடும், மேலே குட்டி போட்டால் குட்டி விழுந்துடுமே!! ஹிஹி.... அப்புறம், குரங்கிலிருந்து படிப்படியாக, வந்த அந்த மனிதன், எப்படி குகைகளில் வாழ்ந்தான், ஆடிப்பாடினான்,நெருப்பைக் கண்டு பிடித்தான்,குடும்பத்தோடு வாழ்ந்தான் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
குடும்பம் என்றதும், பப்புவுக்கு திடீரென்று, ஒரு சந்தேகம் வந்துவிட்டது. (குடும்பம் என்றாலே குழப்பம்தான் போல!!) "ஆச்சி, பாய் மட்டும் இருந்தா குழந்தை வருமாப்பா, கேர்ல்லருந்துதானே குழந்தைங்க பொறக்கும்? அப்போ, குரங்குலேருந்து மனுசந்தானே வந்தான், குழந்தைங்க எப்படி பொறந்துது, காரணம் சொல்லு" (காரணமா? அவ்வ்வ்வ்...ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டா, பப்பு இப்படிதான், சம்பந்தமேயில்லாத வார்த்தையை சொல்லிவிடுவாள்!)
'என்ன காரணம் சொல்லணும்...புரியலையே' என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.நடுவில், 'புரியலை' என்று சொல்லிவிட்டால், 'உனக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள பொழுதே விடிஞ்சிடும்" என்று அலுத்துக்கொண்டு போய்விடுவாள். அதனால், சமாளிப்பதற்காக, 'ம்ம்ம்ம்' என்று மொபைலை நோண்டிக்கொண்டிருந்தேன். 'புரியலை, இன்னொரு தடவை சொல்லு' என்றெல்லாம் தொணதொணக்காமல்,கொஞ்சம் அமைதியாக இருந்தால், சிலசமயம் அவளே விளக்குவாள். "குரங்குலேருந்து பாய்தான் வந்தான் இல்ல, பாய்க்கு குழந்தை பொறக்குமா? இல்லதானே"
அவ்வ்வ்வ்!! புரிந்துவிட்டது!
யப்பா புண்ணியவான்களா, கொஞ்சம் அந்த குரங்குலேருந்து மனிதன் வந்த படத்தில், ஒரு பெண்ணையும் சேர்த்துதான் வரைந்து வையுங்களேன்!! என்னமாதிரியெல்லாம் நாங்க கன்ஃபியூஸ் ஆக வேண்டியிருக்கிறது!!
'ஆமா,வலிக்கும், வலிச்சா வேற ஒருத்தங்க வந்து வீசுவாங்க. அவங்க வரைஞ்சிருக்கிறது பார்க்க அப்படி தெரியுது. ' என்றதோடு நிறுத்தியிருக்கலாம். கூட 'அது மயிலோட இறகுல செஞ்சிருப்பாங்க, அந்த காலத்துல ஃபேன்,ஏசில்லாம் கண்டுபிடிக்கலைல்ல' என்று சொல்லிவிட்டேன். அதிலிருந்து ஆரம்பித்தது.
"அந்த காலத்துல எல்லாம் நேச்சுரலா இருந்தது, இப்போதான் எல்லாம் டூப்ளிகேட்" என்றாள் மேலே சுத்தும் ஃபேனைக்காட்டியபடி.
"ஏன் அப்படி சொல்றே,அந்த காலத்துல பவர் இல்ல, இருட்டுலதான் இருக்கணும். எப்படி இருக்கும்? இப்போ ஜாலியா இருக்கு இல்ல, ஏசி இல்லாம தூங்க முடியுதா? கம்ப்யூட்டர், பஸ், ட்ரெயின் அதெல்லாம் வேணும்தானே, அப்போதானே ஈசியா இருக்கு?" என்றேன். ஆயாவுக்காக அவரது அறையில் ஏசி மாட்டியிருந்தோம். வெயிலின் கொடுமை தாளாமல், அவரது அறையில்தான் கொஞ்ச நாட்களாக எங்கள் தூக்கம்.
"அந்த காலத்துல நேச்சுரலா காத்து வந்துது, மரம்,காடுலேருந்து. ஊஞ்சல் கூட நேச்சுரலா இருந்தது.இப்போ, செயின் போட்டு கட்டி..இது அதுன்னு" என்றாள், ஒரு பெரிய கிழவி மாதிரி!
"நேச்சுரலா ஊஞ்சல் எங்க இருந்துது? " என்றதும், சமீபத்தில் காட்டுக்கு சவாரி போனதை நினைவூட்டினாள். அது ஒரு டீப் ஜங்கிள் சஃபாரி. காட்டு மரங்களிடையே, ஊஞ்சல்கயிறு போல, பெரிய பெரிய கிளைகள் அங்குமிங்கும் தாழ்ந்து தொங்கின.அதுதான் நேச்சுரல் ஊஞ்சலாம். சில நேச்சுரல் ஊஞ்சல்களில் குரங்குகளும் தாவி ஓடி விளையாடின. அதிலிருந்து ஆரம்பித்து, பேச்சு, குரங்கிலிருந்து வந்த மனிதன் பற்றிய டாபிக்குக்கு வந்தது. ஆரம்பத்தில், குரங்கு மனிதன் ,கொஞ்சம் கொஞ்சமாக எப்படி இன்றைய மனிதனாக மாறினான் என்பதை பற்றி கொஞ்சம் வகுப்பெடுத்தாள். (ஸ்ஸ்...ப்பா!!)

ஒவ்வொரு ஸ்டேஜிலும் எப்படி மாற்றங்கள் வந்தது (வெளித் தோற்றத்தில்தான்) என்று நடித்து வேறு காட்டினாள். அதுதான் ஒரு படம் இருக்குமே, நான்கைந்து ஸ்டேஜுகளில், மனிதன் எப்படி நிமிர்ந்து நடக்கத் துவங்கினான் என்பது போல! நடுவில் எனக்கு டெஸ்ட் வேறு, குரங்கு மரத்தின் மேல் குட்டி போடுமா, மரத்தின் கீழே குட்டி போடுமா என்று! (என்னடா, குரங்குக்கு வந்த சோதனை...ச்சே...என்னோட பொது அறிவுக்கு வந்த சோதனை!!) மரத்தின் கீழேதான் குட்டி போடும், மேலே குட்டி போட்டால் குட்டி விழுந்துடுமே!! ஹிஹி.... அப்புறம், குரங்கிலிருந்து படிப்படியாக, வந்த அந்த மனிதன், எப்படி குகைகளில் வாழ்ந்தான், ஆடிப்பாடினான்,நெருப்பைக் கண்டு பிடித்தான்,குடும்பத்தோடு வாழ்ந்தான் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
குடும்பம் என்றதும், பப்புவுக்கு திடீரென்று, ஒரு சந்தேகம் வந்துவிட்டது. (குடும்பம் என்றாலே குழப்பம்தான் போல!!) "ஆச்சி, பாய் மட்டும் இருந்தா குழந்தை வருமாப்பா, கேர்ல்லருந்துதானே குழந்தைங்க பொறக்கும்? அப்போ, குரங்குலேருந்து மனுசந்தானே வந்தான், குழந்தைங்க எப்படி பொறந்துது, காரணம் சொல்லு" (காரணமா? அவ்வ்வ்வ்...ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டா, பப்பு இப்படிதான், சம்பந்தமேயில்லாத வார்த்தையை சொல்லிவிடுவாள்!)
'என்ன காரணம் சொல்லணும்...புரியலையே' என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.நடுவில், 'புரியலை' என்று சொல்லிவிட்டால், 'உனக்கு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள பொழுதே விடிஞ்சிடும்" என்று அலுத்துக்கொண்டு போய்விடுவாள். அதனால், சமாளிப்பதற்காக, 'ம்ம்ம்ம்' என்று மொபைலை நோண்டிக்கொண்டிருந்தேன். 'புரியலை, இன்னொரு தடவை சொல்லு' என்றெல்லாம் தொணதொணக்காமல்,கொஞ்சம் அமைதியாக இருந்தால், சிலசமயம் அவளே விளக்குவாள். "குரங்குலேருந்து பாய்தான் வந்தான் இல்ல, பாய்க்கு குழந்தை பொறக்குமா? இல்லதானே"
அவ்வ்வ்வ்!! புரிந்துவிட்டது!
யப்பா புண்ணியவான்களா, கொஞ்சம் அந்த குரங்குலேருந்து மனிதன் வந்த படத்தில், ஒரு பெண்ணையும் சேர்த்துதான் வரைந்து வையுங்களேன்!! என்னமாதிரியெல்லாம் நாங்க கன்ஃபியூஸ் ஆக வேண்டியிருக்கிறது!!
Sunday, May 12, 2013
பப்பு டைம்ஸ்
என்முன் வந்து நாக்கை சப்புக்கொட்டி காட்டிக்கொண்டிருந்தாள் பப்பு.
என்னன்னு கேட்டதுக்கு, கையிலிருந்து எடுத்து சாப்பிடுவது போல ஆக்சன்! "ஆ!!
பாயாசமா?" என்றதும் மேலும் கீழும் தலையை ஆட்டினாள். "எனக்கு? எனக்கும் போய்
எடுத்துட்டு வாப்பா?" என்றதும்,
"பாயாசம்? ஆர் பாய்சன்?" என்று கேள்வி வருகிறது....அவ்வ்வ்வ்வ்..(இத்தனைக்கும் குரலை ரொம்ப சாஃப்டாக வைத்துக்கொண்டுதான் கேட்டேன்...ஹிஹி)
"ஆயா, ஆச்சிக்கு ஒரு கப்-ல பாய்சன் வேணுமாம்" என்று கத்தியபடி சமையலறைக்கு ஓடிவிட்டாள்!
"நீயெல்லாம் ஒரு அம்மாவா, நீ ஒரு டப்பி" என்று பல்பு வாங்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் 'பிரகாசமான டப்பி தின வாழ்த்துகள்'!!
************************************
ஒரு பெண், தன் கைகளில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை ஏந்தியிருப்பதைப் போன்ற படத்தை வழியில் பார்த்தோம்.ரியல் எஸ்டேட் விளம்பரமாக இருக்கலாம்.
"ஆச்சி, அவங்க பில்டிங்கை கையில வைச்சிருக்காங்க பாரு. பில்டிங்கையே கையில தூக்கிட்டாங்களா?! அவங்க ஜையன்ட்டா ஆச்சி? அப்போ, நாம அவங்களுக்கு எலி மாதிரி இருப்போமா? நமக்கு எலி எலி.அவங்களுக்கு நாம எலி!எப்படி ஆச்சி?!! எலிக்கு நாம ஜையன்ட். அவங்க நமக்கு ஜையன்ட். எலிக்கு அவங்க எப்படி இருப்பாங்க?!! " #interpretations #ஒருசின்னவிளம்பரம் Vs ஒருசின்னஞ்சிறுமூளை
"பாயாசம்? ஆர் பாய்சன்?" என்று கேள்வி வருகிறது....அவ்வ்வ்வ்வ்..(இத்தனைக்கும் குரலை ரொம்ப சாஃப்டாக வைத்துக்கொண்டுதான் கேட்டேன்...ஹிஹி)
"ஆயா, ஆச்சிக்கு ஒரு கப்-ல பாய்சன் வேணுமாம்" என்று கத்தியபடி சமையலறைக்கு ஓடிவிட்டாள்!
"நீயெல்லாம் ஒரு அம்மாவா, நீ ஒரு டப்பி" என்று பல்பு வாங்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் 'பிரகாசமான டப்பி தின வாழ்த்துகள்'!!
************************************
ஒரு பெண், தன் கைகளில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை ஏந்தியிருப்பதைப் போன்ற படத்தை வழியில் பார்த்தோம்.ரியல் எஸ்டேட் விளம்பரமாக இருக்கலாம்.
"ஆச்சி, அவங்க பில்டிங்கை கையில வைச்சிருக்காங்க பாரு. பில்டிங்கையே கையில தூக்கிட்டாங்களா?! அவங்க ஜையன்ட்டா ஆச்சி? அப்போ, நாம அவங்களுக்கு எலி மாதிரி இருப்போமா? நமக்கு எலி எலி.அவங்களுக்கு நாம எலி!எப்படி ஆச்சி?!! எலிக்கு நாம ஜையன்ட். அவங்க நமக்கு ஜையன்ட். எலிக்கு அவங்க எப்படி இருப்பாங்க?!! " #interpretations #ஒருசின்னவிளம்பரம் Vs ஒருசின்னஞ்சிறுமூளை
Saturday, April 27, 2013
ஏழு ஒரு காலத்துல ஈவன் நம்பரா இருந்திருக்குமா??
பப்புவின் பள்ளியில், விடுமுறையில் செய்வதற்கு வீட்டுப்பாடம் கொடுத்துவிடுவார்கள். ஒவ்வொரு பாடத்திலும், தேதிவாரியாக ஒருநாளுக்கு ஒரு பக்கம் வீதம், குறைந்தது இரண்டுவாரங்களுக்கு. இதற்கு சில பெற்றோர்கள் வந்து சண்டை போடுவார்கள். 'விடுமுறை என்பது குழந்தைகள் விளையாடுவதற்கும் உறவினர்கள் வீட்டுக்குச் செல்வதற்குமே. அப்போது கூட ஹோம்ஒர்க் செய்யவேண்டுமா' என்பது மாதிரி. அவர்கள் கேட்பது நியாயம்தான் என்றாலும், ஹோம் ஒர்க் கொடுப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.குறைந்தபட்சம் மறக்காமல் இருக்கவாவது உதவுமே!
அதோடு, தினமும் காலையில் எழுதுவது ஒரு பழக்கமாகவாவது இருக்கட்டுமே என்று நினைத்துக்கொள்வேன். காலையில் படிக்கும் வழக்கம் இப்போதைய குழந்தைகளுக்கு இல்லவே இல்லைபோல தோன்றுகிறது. காலைபொழுது முழுதும், எழுந்து கிளம்பவும், ஏழரை/எட்டுமணிக்கே பள்ளிக்குச் செல்லவுமே சரியாக இருக்கிறது. இதில், காலையில், ஃப்ரெஷ்ஷான மனதுடன் படிப்பது என்பதே கேள்விக்குறிதான். இரவில் ஹோமொர்க் செய்வது பெரும்பாலும் அரைத்தூக்கத்தில்! அதிலும், பப்புவுக்கு பேசவே நேரம் சரியாக இருக்கும்!! அதனால், விடுமுறையில் ஹோம் ஒர்க் கொடுப்பது தவறாக படவில்லை.
அப்படி கொடுக்கப்பட்டதில், கணித பாடத்தை செய்துக்கொண்டிருந்தோம். subtraction chart II. அதில் வரும் patterns பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.even number யிலிருந்து பாதியாக கழித்தால் வரும் எண்கள் அமைக்கும் pattern பாரு, என்று 18 - 9=9, 16-8=8, 14-7 =7.....4-2 = 2 -1 =1 சொல்லிக்கொண்டிருந்தாள்.
சொல்லிவிட்டு, "எனக்கு ஈவன் நம்பர்ஸ்தான் பிடிக்கும் ஆச்சி." என்றாள்.சில தினங்கள் முன்பு அவள் என்னிடம் கேட்டது கிளிக்காகி இருக்க வேண்டும். என் ஃபேவரிட் நம்பர் என்னவென்று கேட்டபோது, ஏழு என்று சொன்னதும் என்னோட பேவரிட் நம்பரும் ஏழுதான் ஆச்சி என்று சொல்லியிருந்தாள். அது உடனே நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.
"பட், எனக்கு ஏழு கூட பிடிக்கும். எப்படி,ஆச்சி? உனக்கும் எனக்கும் ஏழு பிடிக்குது? டி என் ஏ!! இல்ல??"
அவ்வ்வ்வ்வ்வ்.....'ஹிஹி' என்று ஒரு சிரிப்பு மட்டும் சிரித்து வைத்தேன்.
"ஆமா,ஆச்சி, ஏழு ஒரு காலத்துல ஈவன் நம்பரா இருந்திருக்கும்,இல்ல?!!"- பப்பு
(அவ்வ்வ்வ்...எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!! ம்ம்..டூ மச் ஆஃப் ஃபோர்ட்ஸ்/மியூசியம்ஸ் அன்ட் பேலஸ்சஸ்! 'ஒரு காலத்துல இங்க கப்பல் வந்திருக்கும்'...'ஒரு காலத்துல இங்க ராஜாவும் மந்திரிங்களும் உட்கார்ந்திருப்பாங்க'...'ஒரு காலத்துல இங்க வார் நடந்திருக்கும்'...'ஒரு காலத்துல இங்க பீரங்கி குண்டு விழுந்துருக்கும்' ...ஒரு காலத்துல இங்க முத்துல்லாம் எடுத்திருப்பாங்க!...) அது மாதிரி ஒரு காலத்துல ஏழு கூட ஈவன் நம்பரா இருந்திருக்கும்தானே! :-))
அதோடு, தினமும் காலையில் எழுதுவது ஒரு பழக்கமாகவாவது இருக்கட்டுமே என்று நினைத்துக்கொள்வேன். காலையில் படிக்கும் வழக்கம் இப்போதைய குழந்தைகளுக்கு இல்லவே இல்லைபோல தோன்றுகிறது. காலைபொழுது முழுதும், எழுந்து கிளம்பவும், ஏழரை/எட்டுமணிக்கே பள்ளிக்குச் செல்லவுமே சரியாக இருக்கிறது. இதில், காலையில், ஃப்ரெஷ்ஷான மனதுடன் படிப்பது என்பதே கேள்விக்குறிதான். இரவில் ஹோமொர்க் செய்வது பெரும்பாலும் அரைத்தூக்கத்தில்! அதிலும், பப்புவுக்கு பேசவே நேரம் சரியாக இருக்கும்!! அதனால், விடுமுறையில் ஹோம் ஒர்க் கொடுப்பது தவறாக படவில்லை.
அப்படி கொடுக்கப்பட்டதில், கணித பாடத்தை செய்துக்கொண்டிருந்தோம். subtraction chart II. அதில் வரும் patterns பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.even number யிலிருந்து பாதியாக கழித்தால் வரும் எண்கள் அமைக்கும் pattern பாரு, என்று 18 - 9=9, 16-8=8, 14-7 =7.....4-2 = 2 -1 =1 சொல்லிக்கொண்டிருந்தாள்.
சொல்லிவிட்டு, "எனக்கு ஈவன் நம்பர்ஸ்தான் பிடிக்கும் ஆச்சி." என்றாள்.சில தினங்கள் முன்பு அவள் என்னிடம் கேட்டது கிளிக்காகி இருக்க வேண்டும். என் ஃபேவரிட் நம்பர் என்னவென்று கேட்டபோது, ஏழு என்று சொன்னதும் என்னோட பேவரிட் நம்பரும் ஏழுதான் ஆச்சி என்று சொல்லியிருந்தாள். அது உடனே நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.
"பட், எனக்கு ஏழு கூட பிடிக்கும். எப்படி,ஆச்சி? உனக்கும் எனக்கும் ஏழு பிடிக்குது? டி என் ஏ!! இல்ல??"
அவ்வ்வ்வ்வ்வ்.....'ஹிஹி' என்று ஒரு சிரிப்பு மட்டும் சிரித்து வைத்தேன்.
"ஆமா,ஆச்சி, ஏழு ஒரு காலத்துல ஈவன் நம்பரா இருந்திருக்கும்,இல்ல?!!"- பப்பு
(அவ்வ்வ்வ்...எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!! ம்ம்..டூ மச் ஆஃப் ஃபோர்ட்ஸ்/மியூசியம்ஸ் அன்ட் பேலஸ்சஸ்! 'ஒரு காலத்துல இங்க கப்பல் வந்திருக்கும்'...'ஒரு காலத்துல இங்க ராஜாவும் மந்திரிங்களும் உட்கார்ந்திருப்பாங்க'...'ஒரு காலத்துல இங்க வார் நடந்திருக்கும்'...'ஒரு காலத்துல இங்க பீரங்கி குண்டு விழுந்துருக்கும்' ...ஒரு காலத்துல இங்க முத்துல்லாம் எடுத்திருப்பாங்க!...) அது மாதிரி ஒரு காலத்துல ஏழு கூட ஈவன் நம்பரா இருந்திருக்கும்தானே! :-))
Tuesday, April 23, 2013
பப்புவும் கண்ணகியும்
பப்புவுக்கு கண்ணகி கதையை சொல்லியிருந்தோம். கேரளாவுக்குச் சென்றபோது,
அருகில் கண்ணகி கோயில் இருப்பதாகவும், அங்கு செல்ல வருடத்தில் ஒருமுறை
மட்டுமே அனுமதிப்பதாகவும் சொல்லியிருந்தார்கள். சமீபத்தில், அண்ணா சாலை
வழியே வரும்போது கண்ணகி சிலையையும் காட்டியிருந்தேன். எல்லாம் நிகழ்ந்தது
ஓரிரு வார காலத்துக்குள்ளேயே! ஆனாலும், கண்ணகி பப்புவை ரொம்பவே டிஸ்டர்ப்
செய்து விட்டாள்.
கண்ணகியை பிடிக்கவில்லை என்று ஒரே பொருமல்! தாங்க முடியவில்லை.முக்கியமாக கண்ணகி மதுரையை எரித்ததுதான் அவளால் தாங்க இயலாமல் இருக்கிறது. "அப்புறம், இப்போ எப்படி மதுரை இருக்கு" என்று கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டு பொருமி தள்ளிவிட்டாள்.
"அவளை யாரு எரிக்க சொன்னாங்க? அவளோட ஹஸ்பெண்ட கொன்னுட்டாங்கன்னா, வேற ஹஸ்பென்ட் வைச்சுக்க வேண்டியதுதானே!!"
அவ்வ்வ்வ் என்று ஜெர்க்காகி, "அவ இவன்னு சொல்லக்கூடாது பப்பு, அவங்கன்னுதான் சொல்லணும்" என்றதும்,
"அவங்க எதுக்கு மதுரையை எரிக்கணும்? அந்த ஊர்லே எத்தனை குழந்தைங்க இருப்பாங்க?அவங்கல்லாம் பாவம் இல்ல? அவங்களும்தானே எரிஞ்சிருப்பாங்க. கண்ணகி, அவங்க அம்மா ஊரை போய் எரிக்க வேண்டியதுதானே?" - பச்சைமொளகா ரொம்ப கோபத்துடன் படபடத்தது.
சுனாமியில்,போரில்,நில நடுக்கத்தில் குழந்தைகள் பாதிக்கப்படுவது பப்புவால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று!!
"அவங்க அம்மா ஊரை மட்டும் எரிக்கலாமா?" என்றேன், லாஜிக்காக கேட்டுவிட்ட பெருமையுடன்! அப்புறம்தான் புரிந்தது, பப்புவின் எண்ணத்தில், யாரும் தன் அம்மா இருக்கும் ஊரை எதுவும் செய்துவிட மாட்டார்கள் என்பது!!
"அதான், அவங்க அம்மா இருக்க ஊரை எரிக்கலைல்ல? ஆமா, ராஜாகிட்டேருந்து அவங்க நேரா எங்க போனாங்க? வத்திக்குச்சி வாங்க கடைக்கு போனாங்களா? ஏன் வத்திக்குச்சி கொடுத்தாங்க அவங்களுக்கு? குடுத்தே இருக்கக்கூடாது!!" - பப்பு
அவ்வ்வ்வ்வ்வ்!
"எரிச்சுட்டு எங்க போனாங்க?அவங்களை யாரும் திட்டலையா?" - பப்பு
"அதான் எல்லாரும் எரிஞ்சிபோயிட்டாங்களே!எரிச்சுட்டு கேரளா போயிட்டாங்க"
"அங்க யாரும் எதுவும் சொல்லலையா?" - பப்பு
"அவங்க, அப்புறம் 'புஷ்பக விமானத்துல' வானத்துக்கு போயிட்டாங்களாம்!"
"ஓ! அதான் இப்போ ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்ல்லாம் அவங்களை தேடிக்கிட்டு இருக்காங்களா?!! - பப்பு
எப்படியும், நைட் சாப்பாடு கண்ணகி புண்ணியத்தில் ஓடிவிடும்! :-)
ஐயம் வெரி சாரி இளங்கோவடிகள்! நீதி இப்படி backfire ஆகும்னு எதிர்பார்க்கவேயில்லை!! ;-) ;-)
கண்ணகியை பிடிக்கவில்லை என்று ஒரே பொருமல்! தாங்க முடியவில்லை.முக்கியமாக கண்ணகி மதுரையை எரித்ததுதான் அவளால் தாங்க இயலாமல் இருக்கிறது. "அப்புறம், இப்போ எப்படி மதுரை இருக்கு" என்று கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டு பொருமி தள்ளிவிட்டாள்.
"அவளை யாரு எரிக்க சொன்னாங்க? அவளோட ஹஸ்பெண்ட கொன்னுட்டாங்கன்னா, வேற ஹஸ்பென்ட் வைச்சுக்க வேண்டியதுதானே!!"
அவ்வ்வ்வ் என்று ஜெர்க்காகி, "அவ இவன்னு சொல்லக்கூடாது பப்பு, அவங்கன்னுதான் சொல்லணும்" என்றதும்,
"அவங்க எதுக்கு மதுரையை எரிக்கணும்? அந்த ஊர்லே எத்தனை குழந்தைங்க இருப்பாங்க?அவங்கல்லாம் பாவம் இல்ல? அவங்களும்தானே எரிஞ்சிருப்பாங்க. கண்ணகி, அவங்க அம்மா ஊரை போய் எரிக்க வேண்டியதுதானே?" - பச்சைமொளகா ரொம்ப கோபத்துடன் படபடத்தது.
சுனாமியில்,போரில்,நில நடுக்கத்தில் குழந்தைகள் பாதிக்கப்படுவது பப்புவால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று!!
"அவங்க அம்மா ஊரை மட்டும் எரிக்கலாமா?" என்றேன், லாஜிக்காக கேட்டுவிட்ட பெருமையுடன்! அப்புறம்தான் புரிந்தது, பப்புவின் எண்ணத்தில், யாரும் தன் அம்மா இருக்கும் ஊரை எதுவும் செய்துவிட மாட்டார்கள் என்பது!!
"அதான், அவங்க அம்மா இருக்க ஊரை எரிக்கலைல்ல? ஆமா, ராஜாகிட்டேருந்து அவங்க நேரா எங்க போனாங்க? வத்திக்குச்சி வாங்க கடைக்கு போனாங்களா? ஏன் வத்திக்குச்சி கொடுத்தாங்க அவங்களுக்கு? குடுத்தே இருக்கக்கூடாது!!" - பப்பு
அவ்வ்வ்வ்வ்வ்!
"எரிச்சுட்டு எங்க போனாங்க?அவங்களை யாரும் திட்டலையா?" - பப்பு
"அதான் எல்லாரும் எரிஞ்சிபோயிட்டாங்களே!எரிச்சுட்டு கேரளா போயிட்டாங்க"
"அங்க யாரும் எதுவும் சொல்லலையா?" - பப்பு
"அவங்க, அப்புறம் 'புஷ்பக விமானத்துல' வானத்துக்கு போயிட்டாங்களாம்!"
"ஓ! அதான் இப்போ ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்ல்லாம் அவங்களை தேடிக்கிட்டு இருக்காங்களா?!! - பப்பு
எப்படியும், நைட் சாப்பாடு கண்ணகி புண்ணியத்தில் ஓடிவிடும்! :-)
ஐயம் வெரி சாரி இளங்கோவடிகள்! நீதி இப்படி backfire ஆகும்னு எதிர்பார்க்கவேயில்லை!! ;-) ;-)
Saturday, April 20, 2013
குழந்தைகளைத் துரத்தும் கேள்விகள்
மதியம், பப்புவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு சாப்பிட அமர்ந்தேன்.
"ஆச்சி, புவன் வந்து ஹர்ட் பண்றான்னு அவனுக்கே தெரியாம என்னை ஹர்ட் பண்ணிட்டான்! "
தொண்டை அடைத்துக்கொண்டது. 'ஹையய்யோ!! நேரடியா சொல்லாம இப்படி சொல்கிறாளே?! ஏதாவது அடிதடியா ?!!' (ஒரு சில முன் அனுபவங்கள் தான்....) அதிலும், ஃப்ரெண்ட்சை மாட்டிவிடுவது/கோள் சொல்வது பப்புவுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதே சமயம், அப்படி நடந்ததையும் என்னிடம் சொல்லிவிட வேண்டும்,அவளுக்கு. வேன் நண்பர்களுக்கிடையே வரும் சண்டையை வீட்டில் வந்து சொல்லும் போது, "நான் ஆன்ட்டிக்கிட்டே கேக்கிறேன்/சொல்றேன்" என்று நான் சொல்வது அவளுக்குப் அறவே பிடிக்காது.அப்போது, கதையையே மாற்றிவிடுவாள். :-))
"என்ன ஹர்ட் பண்ணான்?"
"he is asking me 'you are rich or poor?'"
ஏற்கெனவே, பப்பு இந்த கேள்வியை எதிர்கொண்டிருக்கிறாள். எல்லாம் அவள் சொல்லித்தான் தெரியும். ஃப்ரெண்ட்ஸ் கேட்டபோது,"நாங்க நார்மல்" என்று சொன்னாளாம். அவர்களும், "நாங்களும் நார்மல்தான்" என்று சொன்னார்களாம். இந்த குட்டிப்பசங்களும், அவர்களது கேள்விகளும் /பதில்களும் என்று நினைத்து அப்போது சிரித்ததோடு சரி. இப்போதோ, "இது ஹர்ட் பண்ணிட்டான்"னென்று புதிய வடிவம்!!
it will hurt me right? he do not know that word hurts me.
.....(அவ்வ்வ்வ்)
"அப்படி கேக்கலாமாப்பா?அவனுக்கு தெரியல, அது எனக்கு ஹர்ட் பண்ணும்னு."ஹேய் புவன், why are you asking this?" ந்னு கேட்டா, "ஹேய் குறிஞ்சி, கேட்டா என்ன?"னு சொல்றான்.he does not know that word will hurt others."
அவ்வ்வ்வ்வ்வ்வ்!! இன்னும் தொண்டையிலிருந்து இறங்கவேயில்லை. அப்படியே விக்கிக்கொண்டது.
"அன்னைக்கு, you are muslim or christian? ந்னு கேக்கறான். that also will hurt me rite?"
'கொஞ்சம் சாப்பிட விடு, பப்பு! நீ எதுலேருந்து இதை கத்துக்கிட்டேன்னு நான் கொஞ்சம் யோசிச்சுக்கிறேன்!! :)' #மைன்ட்வாய்ஸ்
பப்பு, திடீரென்று தன்னை கிறிஸ்டியன் என்று சொல்லிக்கொள்வாள்.
"ஆச்சி, நான் கிறிஸ்டியன். நீ என்ன?" என்பாள். 'எதுவுமில்லை' என்றால், 'நீ சீக்' என்று மதம் மாற்றிவிடுவாள்."நான் முஸ்லீமாவே இருந்துடறேன்ப்பா" என்பாள் ஒருநாள். இந்தியாவின் மக்களைப்ப் பற்றியும், திருவிழாக்கள் பற்றியும் படிப்பதாலோ அல்லது 'நாம ஏன் எந்த பெஸ்டிவலும் கொண்டாட மாட்றோம்?" என்ற சந்தேகம் வந்ததாலோ தெரியவில்லை.
மேலும், அவளுக்கு இந்தி படிக்க ரொம்ப ஆசை. பள்ளியில் தமிழ் கிளாசில் இவளையும், புவனையும்,பிரம்மியையும் சேர்த்து மொத்தம் மூன்றுபேர்தான். மீதி அனைவரும் இந்தி. "நான் கிறிஸ்டியன், என்னை இந்தியிலே சேர்த்துவிடு" என்பாள் தமிழ் வீட்டுப்பாடம் செய்யும் தினங்களில். மொத்தத்தில் நாங்களும், ஒன்றும் சொல்வதில்லை அவள் கிறிஸ்டியனாகவோ முஸ்லீமாகவோ இருக்கும்போது! ஆனால், இப்போது புவன், அவளை அப்படி கேட்பது ஹர்ட்டிங்காக இருக்கிறதாம்!! அவ்வ்வ்வ்
"you should not ask this right?that hurted me . ஏன் ஆச்சி, அப்படி கேக்கலாமா மத்தவங்களை?"
"ஆமா, நாம மத்தவங்களை இந்த மாதிரி பர்சனல் கொஸ்டின்ஸ்ல்லாம் கேக்கறது சரியில்லை" என்ற பிறகே, சாப்பிட அனுமதித்தாள்! !திடீர் திடீரென்று பப்புவுக்கு இருக்கும் நல்லவள் விழித்துக்கொண்டுவிடுவாள். இன்று அப்படியான ஒரு தினம் போல!!
"ஆச்சி, புவன் வந்து ஹர்ட் பண்றான்னு அவனுக்கே தெரியாம என்னை ஹர்ட் பண்ணிட்டான்! "
தொண்டை அடைத்துக்கொண்டது. 'ஹையய்யோ!! நேரடியா சொல்லாம இப்படி சொல்கிறாளே?! ஏதாவது அடிதடியா ?!!' (ஒரு சில முன் அனுபவங்கள் தான்....) அதிலும், ஃப்ரெண்ட்சை மாட்டிவிடுவது/கோள் சொல்வது பப்புவுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதே சமயம், அப்படி நடந்ததையும் என்னிடம் சொல்லிவிட வேண்டும்,அவளுக்கு. வேன் நண்பர்களுக்கிடையே வரும் சண்டையை வீட்டில் வந்து சொல்லும் போது, "நான் ஆன்ட்டிக்கிட்டே கேக்கிறேன்/சொல்றேன்" என்று நான் சொல்வது அவளுக்குப் அறவே பிடிக்காது.அப்போது, கதையையே மாற்றிவிடுவாள். :-))
"என்ன ஹர்ட் பண்ணான்?"
"he is asking me 'you are rich or poor?'"
ஏற்கெனவே, பப்பு இந்த கேள்வியை எதிர்கொண்டிருக்கிறாள். எல்லாம் அவள் சொல்லித்தான் தெரியும். ஃப்ரெண்ட்ஸ் கேட்டபோது,"நாங்க நார்மல்" என்று சொன்னாளாம். அவர்களும், "நாங்களும் நார்மல்தான்" என்று சொன்னார்களாம். இந்த குட்டிப்பசங்களும், அவர்களது கேள்விகளும் /பதில்களும் என்று நினைத்து அப்போது சிரித்ததோடு சரி. இப்போதோ, "இது ஹர்ட் பண்ணிட்டான்"னென்று புதிய வடிவம்!!
it will hurt me right? he do not know that word hurts me.
.....(அவ்வ்வ்வ்)
"அப்படி கேக்கலாமாப்பா?அவனுக்கு தெரியல, அது எனக்கு ஹர்ட் பண்ணும்னு."ஹேய் புவன், why are you asking this?" ந்னு கேட்டா, "ஹேய் குறிஞ்சி, கேட்டா என்ன?"னு சொல்றான்.he does not know that word will hurt others."
அவ்வ்வ்வ்வ்வ்வ்!! இன்னும் தொண்டையிலிருந்து இறங்கவேயில்லை. அப்படியே விக்கிக்கொண்டது.
"அன்னைக்கு, you are muslim or christian? ந்னு கேக்கறான். that also will hurt me rite?"
'கொஞ்சம் சாப்பிட விடு, பப்பு! நீ எதுலேருந்து இதை கத்துக்கிட்டேன்னு நான் கொஞ்சம் யோசிச்சுக்கிறேன்!! :)' #மைன்ட்வாய்ஸ்
பப்பு, திடீரென்று தன்னை கிறிஸ்டியன் என்று சொல்லிக்கொள்வாள்.
"ஆச்சி, நான் கிறிஸ்டியன். நீ என்ன?" என்பாள். 'எதுவுமில்லை' என்றால், 'நீ சீக்' என்று மதம் மாற்றிவிடுவாள்."நான் முஸ்லீமாவே இருந்துடறேன்ப்பா" என்பாள் ஒருநாள். இந்தியாவின் மக்களைப்ப் பற்றியும், திருவிழாக்கள் பற்றியும் படிப்பதாலோ அல்லது 'நாம ஏன் எந்த பெஸ்டிவலும் கொண்டாட மாட்றோம்?" என்ற சந்தேகம் வந்ததாலோ தெரியவில்லை.
மேலும், அவளுக்கு இந்தி படிக்க ரொம்ப ஆசை. பள்ளியில் தமிழ் கிளாசில் இவளையும், புவனையும்,பிரம்மியையும் சேர்த்து மொத்தம் மூன்றுபேர்தான். மீதி அனைவரும் இந்தி. "நான் கிறிஸ்டியன், என்னை இந்தியிலே சேர்த்துவிடு" என்பாள் தமிழ் வீட்டுப்பாடம் செய்யும் தினங்களில். மொத்தத்தில் நாங்களும், ஒன்றும் சொல்வதில்லை அவள் கிறிஸ்டியனாகவோ முஸ்லீமாகவோ இருக்கும்போது! ஆனால், இப்போது புவன், அவளை அப்படி கேட்பது ஹர்ட்டிங்காக இருக்கிறதாம்!! அவ்வ்வ்வ்
"you should not ask this right?that hurted me . ஏன் ஆச்சி, அப்படி கேக்கலாமா மத்தவங்களை?"
"ஆமா, நாம மத்தவங்களை இந்த மாதிரி பர்சனல் கொஸ்டின்ஸ்ல்லாம் கேக்கறது சரியில்லை" என்ற பிறகே, சாப்பிட அனுமதித்தாள்! !திடீர் திடீரென்று பப்புவுக்கு இருக்கும் நல்லவள் விழித்துக்கொண்டுவிடுவாள். இன்று அப்படியான ஒரு தினம் போல!!
Tuesday, April 16, 2013
ஆஸ்ட்ரேலியா வண்டி in தமிழ்நாடு
"ஆச்சி, ஆஸ்ட்ரேலியா பஸ் பாரு...."
என்ன?? என்பது போல பார்த்தேன்.
"ஆமா, அந்த பஸ் ஆஸ்ட்ரேலியாலேருந்து வந்துருக்கு. au ந்னு போட்டிருக்கு பாரு!!"
ஸ்ஸ்ஸ்....எங்கள் வண்டியிலிருந்து பார்க்கும்போது அதற்கு முன்னாலிருந்த TN என்ற எழுத்துகள் மறைந்திருந்தன. அதனால், அது ஆஸ்ட்ரேலியா வண்டியாகிவிட்டது.
"நேஷனல் பர்மிட்" என்று லாரிகளில் எழுதியிருப்பதைப் பார்த்து "ஏன் வேர்ல்ட் பர்மிட் இல்ல?" என்று சிறுவயதில் யாரைவது கேட்டு தொல்லை பண்ணியிருந்தா இப்படி திருப்பி கிடைக்குமாம்!!
என்ன?? என்பது போல பார்த்தேன்.
"ஆமா, அந்த பஸ் ஆஸ்ட்ரேலியாலேருந்து வந்துருக்கு. au ந்னு போட்டிருக்கு பாரு!!"
ஸ்ஸ்ஸ்....எங்கள் வண்டியிலிருந்து பார்க்கும்போது அதற்கு முன்னாலிருந்த TN என்ற எழுத்துகள் மறைந்திருந்தன. அதனால், அது ஆஸ்ட்ரேலியா வண்டியாகிவிட்டது.
"நேஷனல் பர்மிட்" என்று லாரிகளில் எழுதியிருப்பதைப் பார்த்து "ஏன் வேர்ல்ட் பர்மிட் இல்ல?" என்று சிறுவயதில் யாரைவது கேட்டு தொல்லை பண்ணியிருந்தா இப்படி திருப்பி கிடைக்குமாம்!!
Subscribe to:
Posts (Atom)