Showing posts with label உதவி. Show all posts
Showing posts with label உதவி. Show all posts

Friday, May 31, 2013

குழந்தைகளுக்கு சாதியைப் பற்றி.....

"ஆச்சி, பிராமின்ன்னா என்னப்பா?" என்று பப்பு கேட்டபோது என்ன சொல்வதென்று ஒரு கணம் புரியவில்லை. பப்பு புதிதாக‌ ஒன்றை கற்றுக் கொண்டால் எனக்கு ஒரு க்யூரியாசிட்டி வந்துவிடும்(அவள் புதிது புதிதாக வார்த்தைகள்  கற்றுக்கொண்ட காலத்திலிருந்து தொடரும் பழக்கம்!). எங்கிருந்து கற்றுக்கொண்டாள் என்று root cause analysis  செய்ய‌ கிளம்பிவிடுவேன். இந்த விஷயத்தில் root cause - சமீபத்தில் ஒரு சம்மர் கிளாசுக்கு சென்றாள். அங்கு அவளுக்கு ஒரு ஃப்ரெண்ட் கிடைத்திருக்கிறாள். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது அந்த  குட்டிப்பெண் (இலவச இணைப்பாக!)   'ஐ அம் பிராமின்' என்று சொன்னாளாம்.

'பிராமின்னா, கோயில்லல்லாம் பூஜை செய்வாங்க இல்ல, அவங்கதான்' என்றேன்,அவள் கேட்டதுக்கு பதிலளிக்கும் விதமாக. உடனே, "ஓ...காசு கேப்பாங்களே, எப்படி ஆச்சி, அந்த கோயில்ல பெரிய உண்டி வைச்சு இருந்தாங்க இல்ல, மக்கள்கிட்டேருந்து காசு வாங்கிறதுக்கு'", என்றாள். அவ்வ்வ்வ்...நாங்கள் சென்ற கோயில்களிலேயே, பப்புவின் உயரத்துக்கு ஒரு (வெண்கலம்/எவர்சில்வர்?) உண்டியலை சுசீந்திரம் கோயிலில் பார்த்திருந்தோம். சென்றுவந்தபிறகு ரொம்பநாளைக்கு அந்த உண்டியலை பப்பு மறக்கவில்லை. "ஆச்சி,அவங்க அப்பா கோயில்ல பூஜை செய்றவரா?" என்றும் கேள்வி. அவ்வ்வ்வ்வ்! 'எனக்கு எப்படி தெரியும்' என்று வசூல் ராஜா ஸ்டைலில் சமாளித்துவிட்டாலும், எப்படி புரிய வைப்பது என்று சவாலாகவே இருந்தது.

ஃபார்மர்,கார்ப்பெண்டர், கோல்ட் ஸ்மித்,டீச்சர் என்றெல்லாம் சொல்லி ஓரளவுக்கு சமாளித்துவிட்டேன். இறுதியாக‌,'நாம யார்க்கிட்டேயாவது நீ இந்துவா முஸ்லீமான்னு கேக்கலாமா? நீயே சொல்லு' என்றதும்,  "அதுல்லாம் பர்சனல். கேக்கல்லாம் கூடாது.நான் கிறிஸ்டீன், விலாசினிக்கிட்டே சொல்லியிருக்கேனா" என்றாள்.(அவ்வ்வ்..அதை நீ என்கிட்டேயே இதுவரைக்கும் சொன்னது  இல்லையேம்மா!!‍ -மைன்ட்வாய்ஸ்) 'அதுமாதிரிதான் இதுவும்' என்று சொல்லிவைத்தேன்.

இதுவரை அவளிடம்  எந்த இடத்திலும் சாதிபற்றி பேசியதில்லை. சாதியை அதன் கொடுமைகள் இல்லாமல் நிச்சயம் பேசிவிட முடியாது.சாதி என்றால் என்ன என்பதிலிருந்து அவளுக்கு சொல்லவேண்டும். எப்படியும் தெரிந்துக் கொள்ளாமல் அவள் வளர்ந்துவிடப்போவதில்லை. என்றாலும், இந்த விஷயத்தில் அது அவ்வளவு எளிமையானது அல்ல.

பப்புவும், அந்த குட்டிப்பெண்ணும் நண்பர்கள் என்றுதான் பப்பு நம்பிக் கொண்டிருக்கிறாள். தனிப்பட்ட ரீதியில், எதிரியாக பார்க்காமல் எப்படி  புரிய வைப்பது? அதோடு, இப்படி மற்றவர்களிடம் சொல்லிக்கொள்வது இழிவானது, தவிர்க்கப்பட வேண்டியது என்றும் புரிய வைக்கவேண்டும்.  இந்த மாதிரி சமயங்களில் எனக்கு பெரிதும் உதவியிருப்பவை கதைகள் முக்கியமாக புத்தகங்கள். முன்பு ஒரு முறை பப்பு 'கறுப்பர்கள்' பற்றி கேட்டபோது going' someplace special'  என்ற கதைப்புத்தகம், வேலையை சுலபமாக்கியது. மிகவும் அருமையான புத்தகம்! அதோடு, 'உனக்கு படிக்கத் தெரியாது(கமலாலயன் ‍ வாசல் வெளியீடு)' என்ற புத்தகத்தை, கொஞ்சம் வாசித்துக் காட்டியிருக்கிறேன். (அதிலும், மேரி பெத்யூன்  நிறைய விஷயங்களுக்கு உதவுவார்! ) இதெல்லாம் எந்த அளவுக்கு இந்த வயதில் அவளுக்கு புரியுமென்று தெரியாவிட்டாலும், 'ஓதி வைத்தால் என்றைக்காவது உதவும்' என்ற கோட்பாட்டை நம்பி அவ்வப்போது செய்வதுதான்!

இது போன்ற குழந்தைகளுக்கான (கதை)புத்தகங்கள், நமது நாட்டு 'சமூக‌/ பண்பாட்டுச் சூழ்நிலைகளு'க்கேற்றவாறு வந்திருக்கின்றனவா? சாதி பற்றியும், அதன் பாதிப்புகள் பற்றியும் 6 முதல் 10 வயதினருக்கு ஏற்ற வகையில் சொல்வதற்கு புத்தகங்கள் இருந்தால் நலம். அமர்சித்திர கதாவின் 'அம்பேத்கர்' சித்திர புத்தகம், அம்பேத்கரின் வாழ்க்கைச் சரிதமாக  சொல்லப்பட்டிருக்கிறது.' அழகிய பெரியவனின் கதையான‌ 'செருப்பு' என்ற ஒரு குறும்படத்தையும் பப்புவுடன் அமர்ந்து பார்த்திருக்கிறோம். இவையெல்லாம் ஓரளவுக்கு உதவும் என்றாலும், படங்களுடன், 'If you lived...' சீரிஸ் மாதிரியான புத்தகங்கள் இருந்தால் நன்றாக இருக்கும். அப்படி இருந்தால் பகிர்ந்துக் கொள்ளவும்.  இல்லையென்றால், குழந்தை எழுத்தாளர்கள்/பதிப்பகங்கள் இந்த ஏரியாவை கவனித்தால் தேவலை.

Wednesday, April 20, 2011

பதிவர்கள் - வாசகர்கள் கவனத்திற்கு

கடந்த 2009ஆம் ஆண்டு சிங்கைநாதன்(செந்தில்நாதன்) அவர்களின் மருத்துவ சிகிச்சைக்காக பதிவர்களிடமும் வாசகர்களிடமும் உதவி கேட்டு
வங்கி விபரங்களோடு பதிவிட்டது நினைவு இருக்கும்.

பதிவு : சிங்கை நாதனுக்கு உதவுங்கள்!!

இந்தப்பதிவுக்கு வந்த கேவிஆரின் பின்னூட்டத்தையும் மற்றொரு பதிவாக வெளியிட்டிருந்தேன் - பலருக்கு செய்தி சென்றடையும் பொருட்டு.
அதில், முக்கியமாக சொல்லியிருந்தது, ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் பணத்தை வசூலித்து மொத்தமாக அனுப்பலாமென்றும் அவர்களது விபரங்களையும் கொடுத்திருந்தார்.

இந்தியாவில் பதிவர் நர்சிமின் வங்கிக்கணக்குக்கு அனுப்புமாறு சொல்லப்பட்டிருந்தது. அப்படி இந்தியாவிலிருந்து வசூலித்த பணம் சிங்கைநாதன் அவர்களுக்குச் சென்றடைய கிட்டதட்ட ஒரு வருட காலம்
எடுத்திருக்கிறது. அந்த செய்தியும் சமீபத்தில்தான் தெரிய வந்துள்ளது. அதோடு அவர் வங்கி ஸ்டேட்மெண்டையும் சரியாக காண்பிக்கவில்லை என்றும் தெரிகிறது. அதோடு, பதிவர்கள் வெண்பூ மற்றும் சுரேகா அவர்களின் சமீபத்திய இடுகைகளும் நினைவில் இருக்கும். அதைத் தொடர்ந்து பதிவர் நர்சிம் ஒரு இடுகையை வெளியிட்டிருந்தார், ஆனால், சில பதிவர்கள் செலுத்திய தொகை அந்த ஸ்டேட்மெண்ட்டில் இல்லாதது, ட்ரான்சாக்‌ஷன் ஐடிகளில் குழப்பம் முதலிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிங்கைநாதன் அவர்களுக்கு அனுப்பிய பணம் என்று அவர் கூறுவதில் சந்தேகம் இருப்பதால் பதிவர் நர்சிமிருந்து சரியான கணக்கை பெறுவதற்கும் அதைச் சரிப்பார்ப்பதற்கும் பதிவர்கள் முயற்சி எடுத்துவருகின்றனர், ஒரு உயிரைக் காக்க விரைந்து பணம் அனுப்பியும் எவ்வளவோ சொந்த சிக்கல்களுக்கு மத்தியிலும் நாம் அனுப்பிய பணம் சரியான நேரத்தில் சரியான நபருக்குச் சென்று சேராதது அதிர்ச்சியாக இருக்கிறது. இதில் பல செய்திகள் கூகுள் பஸ்ஸில்தான் பகிரப்பட்டிருக்கின்றன. பதிவுகளில் இல்லை.

பதிவரின் மருத்துவ உதவிக்காக நர்சிம்மிடம் பணம் கொடுத்தவர்கள் என்று பதிவர் சந்தோஷ் ஒரு இடுகையை வெளியிட்டிருக்கிறார்.
நர்சிமின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பியவர்கள் மேலே குறிப்பிட்ட பதிவர் சந்தோஷின் இடுகையில் அவர் கோரியிருக்கும் தகவல்களை பின்னூட்டமாக இடவும்.

பெயர் (அதை வெளியிட வேண்டாம் என்றால் கண்டிப்பாக வெளியிடப்படாது)
மின்னஞ்சல் முகவரி
தொலைபேசி எண் (அளிக்க விருப்பம் இருந்தால்)
நர்சிமிடம் அவர்கள் அளித்த தொகை
எந்த வழியாக பணம் குடுத்திங்க அப்படிங்கிற விவரம் (Cash/Cheque/Account Transfer)


பணம் அனுப்பியவர்கள் தொந்திரவாக நினைக்காமல் இதைச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். இப்படி உதவிக்காக அனுப்பிய பணத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கு மிகுந்த கண்டனத்துக்குரியது. அதே சமயத்தில், பதிவுலகின் மீதான நம்பிக்கை குலைந்ததற்கு ஒரு பதிவராக வெட்கப்படுகிறேன்.

நீங்கள் அனுப்பும் தகவல்கள், எவ்வளவு தொகை ஊழலாக்கப்பட்டது என்பதை அறியும் முயற்சிதான். தயவுசெய்து தகவல்களை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இதனை பலருக்கும் சென்று சேரும்பொருட்டு
மற்ற பதிவுலக நண்பர்களும் இவ்விடுகையை வெளியிடலாம் என்றும் கருதுகிறேன்.

Monday, November 23, 2009

தங்களின் மேலான உதவி வேண்டி...

நண்பரின் நண்பர் நமக்கும் நண்பர்தானே! தயை கூர்ந்து உதவுங்கள்!!
அந்த நண்பர் விரைவில் உடல்நலம் பெறட்டும்!!


மேலும் விபரங்களுக்கு....

உதவுங்கள்


நண்பர்களே,

கிழக்கு பதிப்பகத்தில் என்னுடன் பணியாற்றிய முத்துராமன் என்கிற என் நண்பர் (வயது 33) இப்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டயாலிஸிஸ் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். டயாலிஸி்ஸுக்கான மருத்துவச் செலவே மாதம் ரூ. 16,000 ஆகிறது. கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

பலபேர் உதவினால் மட்டுமே சீக்கிரத்தில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியும் என்கிற நிலைமை. எனவே உங்களால் முடிந்த தொகையை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறு உதவியாக இருந்தாலும் அது நிச்சயம் நண்பரின் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் இதுதொடர்பாக உதவக்கூடிய டிரஸ்டுகளில் உங்களுக்குப் பரிச்சயம் இருந்தாலும் சொல்லவும்.

முத்துராமன் அக்கவுண்ட் எண் -

Name - Muthuraman
State Bank of India (Mogappair) a/c no - 30963258849
IFS code no - 5090

MICR code : 600002118



முத்துராமன் முகவரி :


Muthuraman,
7/551, JJ Nagar West,
Near ERI Scheme Velammal School,
Mugappair West,
Chennai - 600037
Tamil Nadu. India.

Monday, August 24, 2009

வேண்டுகோள் - சிங்கைநாதனுக்காக!

சிங்கை நாதன் - Collection Updates

சிங்கை நாதனுக்கு முதல் அறுவை சிகிச்சை ( VAD Fixing Surgery)விவரங்கள்

சிங்கை நாதன் அவர்களுக்கு தற்காலிக ஏற்பாடாக Ventricular Assist Device (VAD) எனப்படும் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை ஆகஸ்ட் 26 புதன் அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. VAD கருவி இதய மாற்று அறுவை சிகிச்சை வரை தற்காலிக தீர்வாக செய்யப்படுகிறது.

அன்று நம் அனைவரையும் கூட்டுப் பிரார்தனை செய்யுமாறு செந்தில் நாதன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை முடிந்து அடுத்து மாற்று இதயம் கிடைத்ததும் அடுத்த அறுவை சிகிச்சை என இரண்டு பெரிய சிகிச்சைகளை கடக்க வேண்டியுள்ளது. எனவே அனைவரும் அவரது உடல் நலனுக்காக சிறப்பாக பிரார்தனை செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
- ஜோசஃப் பால்ராஜ் பதிவிலிருந்து!


செந்தில் நாதன் அண்ணனுக்கு உதவிகளையும், பிரார்த்தனைகளையும் செய்யும் அனைவருக்கும் நன்றிகள்!

Friday, August 14, 2009

தொடர்ந்து உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கும்

உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல!!

எல்லாமே ஒரு கனவு போலத்தான் இருக்கிறது....
கேவிஆர் மின்மடல் அனுப்பியதும், ஆளுக்கொரு இடுகையிடுவோமென்று சாட்டில் பேசியதும்...என்ன செய்வது என்ற பதைபதைப்போடு இருந்த என் கண்ணில் பட்டார்கள் ஆன்லைனில் இருந்த கானாவும் ஆயில்ஸூம்!!

கானாவின் மூலமாக டொன்லீக்கும் மற்ற சிங்கைப்பதிவர்களுக்கும், ஆயில்யன் மூலமாக நிஜமா நல்லவருக்கும், நிஜமா நல்லவரின் மூலமாக கோவி.கண்ணன் மற்றும் அனைத்து சிங்கைப்பதிவர் குழுமத்திற்கும் தகவல்கள் பரிமாறப்பட்டு இதோ ஜோசஃப் அவர்கள், இடுகையிட்டிருக்கிறார் - புதுத்தகவல்களுடன். இந்த சந்திப்புக்குக் காரணமான அனைவருக்கும் நன்றிகள்!!

சிங்கை நாதன் - Collection Updates பற்றி கேவிஆர் இடுகையை புதுப்பித்திருக்கிறார் மேலதிக தகவல்களுடன்!

உதவிசெய்தவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...தங்களனைவரின் அன்பும், அக்கறையும் நெகிழ்ச்சியூட்டுவதாக இருக்கிறது!

தமிழ்மணத்தில் சுட்டி தந்து சிங்கை நாதனுக்கு உதவியிருக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி!

இது தொடர்பாக, கேவிஆர்யின் பின்னூட்டத்தினை இங்கு மறு பிரசுரம் செய்துக்கொள்கிறேன்!

ராஜா | KVR said...

Update: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம். அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு சில நண்பர்கள் paypal account பற்றி கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்கும் விரைவில் அந்த விபரங்களைத் தெரிவிக்கிறேன்.

சிங்கப்பூர்

கோவி.கண்ணண் -‍ +65 98767586
குழலி - +65 81165721

அமெரிக்கா

இளா - +1 609.977.7767

இந்தியா

நர்சிம் - +91 9841888663 (நண்பா, உங்களது தொடர்பு எண்ணை உங்கள் அனுமதி இல்லாமலே கொடுத்திருக்கிறேன். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்)

அமீரகம்

ஆசிப் மீரான் - +971 506550245

சவுதி அரேபியா

ராஜா - +966 508296293

Wednesday, August 12, 2009

சிங்கை நாதனுக்கு உதவுங்கள்!!

சிங்கை நாதன் aka செந்தில் நாதன். பின்னூட்டங்கள் மற்றும் சிங்கை பதிவர் சந்திப்புகள் மூலமாக நம் அனைவருக்கும் அறிமுகமானவர். பள்ளியில் எனது சீனியர். ஏற்கெனவே பேஸ்மேக்கர் பொருத்தி அதற்குண்டான மருத்துவங்களைக் கைக்கொண்டாலும், தற்போது சிங்கப்பூரில் மிகவும் கவலைக்கிடமாக மருத்துவமனையில் இருக்கிறார். ஐந்து வயதில் ஒரு மகளுண்டு. அவரது மருத்துவ அறுவை சிகிச்சைக்கு 100,000 சிங்கப்பூர் டாலர்கள் வரையில் தேவைப்படுவதாக பதிவர் கேவிஆர் (சிங்கை நாதனின் கல்லூரித்தோழர்) மூலமாக மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன்!

தயவுசெய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்!பதிவர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்!!

வங்கி விபரங்கள் :

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings



கேவிஆரின் செல்பேசி எண்: +966 508296293 (ரியாத்)
கருணாநிதி செல்பேசி எண்: +65 93856261 (சிங்கை)

Tuesday, January 27, 2009

1000 பேர் படுகாயம்,300 பேர் பலி : மருத்துவ உதவி தேவை!

முல்லைத்தீவில் 300 -க்கும் அதிகமானோர் பலி. 1000 பேர் படுகாயம்!
மிக விரைவில் மருத்துவஉதவி தேவை! இன்னும் 24 மணிநேரத்துக்குள்ளாக உதவி கிடைக்காவிடில் மேலும் பலர் உயிரிழக்கும் அபாயம்!!

மேலதிக விபரங்களுக்கு

http://tamilnet.com/art.html?catid=13&artid=௨௮௧௫௩

(சிநேகிதியின் மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்றச் செய்தி)