முதுகில் அமர்த்தி யானையாக வீட்டை வலம் வந்த பெரிய மாமா...
வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டித் தந்த பெரிய மாமா...
அமர்ந்து ஆட பெட்ஷீட்டை நாலாக மடித்து வைத்த பெரிய மாமா...
விரல்களில் மருதாணி தொப்பி வைத்துவிட்ட மாமா...
ஆட்டுக்காலை அம்மியில் தட்டி உள்ளிருப்பதை எடுத்து ஊட்டிவிட்ட மாமா...
மீன்முள்ளை முழுங்கியதும் வெறும்சாதத்தை உருட்டித் தந்து
முதுகை நீவி விட்ட மாமா..
அன்னங்கள் நெய்த திருபுவனம் பட்டை தேடித்தேடி எடுத்துத் தந்த மாமா....
சொல்லக் சொல்லக் கேட்காமல் ஒவ்வொரு லீவுக்கும்
ஹாஸ்டலுக்குப் பெட்டி தூக்கிய பெரிய மாமா...
எனக்குப் பிடித்த மாப்பிள்ளையை
நிறைவாக கட்டிவைத்துவிட்டு
தான் பார்த்த மாப்பிள்ளையை நான் கட்டாத குறையுடன்
விலகி ஒதுங்கிக் கொண்ட மாமா....
விவாகரத்தானது
தெரிந்தால்
மாமாவின் முறிந்த உறவு பழையதாகிவிடுமா?!
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts
Wednesday, September 01, 2010
Tuesday, April 27, 2010
”ஒடியன்”
ஆசய காத்துலே தூது விட்டு....என்று இருட்டில் தீப்பந்தங்கள் எரிய முக்கால் பாவாடையுடனும் அரை ஜாக்கெட்டுடன் காட்டுக்குள் நடனமாடுவார்கள். ஹீரோ-வின் வரவுக்காக காத்திருப்பார்கள். காயத்துக்கு மூலிகையோ,உண்ண உணவோ அல்லது தங்க இடமோ கொடுப்பார்கள். இல்லையேல், ‘ஒயிலா பாடும் பாட்டுலே ஓடுது ஆடு' என்று பாடியபடி காட்டுக்குள் ஆடு மேய்ப்பார்கள். எப்போதும், ஜாக்கெட் அணியாமல் சேலை கட்டியிருப்பார்கள். ஹீரோவை இக்கட்டுகளில் காப்பாற்றுவதே இவர்கள் வேலை. அல்லது வில்லன்களை /தீயவர்களைக் கொல்வார்கள். ஆண்களாக இருந்தால் வெற்று உடம்பில் நெருப்புப் பந்தத்தைத் தடவியபடி வீர சாகசங்கள் புரிவார்கள். காட்டில் வசிக்கும் ஆதிவாசிகளை, பழங்குடிகளை நினைத்ததும் மனத்தில் தோன்றும் பிம்பங்கள் இவையே.
ஆதிவாசிகள் என்றால் நாகரிகம் தெரியாதவர்கள். நமக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நவநாகரிகமான உடை உடுத்தத் தெரியாதவர்கள். நரபலி கொடுப்பவர்கள். வேட்டையாடுபவர்கள். சமைக்காமல், பச்சையாக உண்பவர்கள்...நம்மைப் போலல்லாமல், காட்டுமிராண்டித்தனமான பழக்க வழக்கங்கள் உடையவர்கள். பின் தங்கியவர்கள். வீடுவீடாக வந்து தேன் விற்பவர்கள். இவையே அவர்களைப் பற்றி எனக்குள் இருந்த எண்ணங்கள். இதைத்தாண்டி பெரிதாகச் சிந்தித்ததும் இல்லை. ஆனால இத்தொகுப்பு நம்மீது காட்டுமிராண்டிகள் யார் என்கிற கேள்வியை வீசிவிட்டு போகிறது
அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே, அவர்கள் மீது அரசாங்கத்தின், போலீஸின் அத்துமீறல்களும், வன்முறைகளும் ஏவப்படுகின்றன, பலவீனமான அம்மக்களே ஒடுக்குமுறைக்கு பலியாகின்றனர் என்பதை வீரப்பன் தொடர்நாடகம் மற்றும் சோளகர்தொட்டி நாவல் வாயிலாகவும் ஓரளவுக்குத் தெரிந்துக் கொண்டோம் .
விலங்குகளின் நலனில், உரிமைகளில் காட்டும் அக்கறையில் ஒரு பங்கு கூட மனிதர்களாகப் பிறந்த ஆதிவாசிகளிடம் காட்டப்படுவதில்லை. இந்த அவலமான நிலையில், இயற்கையோடு ஒன்றி வாழும் பழங்குடியினர் படும் துயரத்தையும், வலிகளையும், அவர்களோடே நெருங்கியிருந்த லட்சுமணனைத் தவிர வேறு யாரால் வலிமையாகப் பதிவு செய்திட இயலும்?
இருளர்களின்,தோடர்களின்,கரட்டிகரின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அவர்களது நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும், அவர்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளையும் அவர் - ”ஒடியன்” என்ற கவிதை நூல் மூலமாக முன்வைக்கிறார் - இருளர்களது மொழியிலேயே!

அதற்காக அந்த மொழி புரியாதது, கடினமானதென்று இல்லை, வார்த்தைகளை கொஞ்சம் யோசித்தால், அதன் தற்போதைய நமது வழக்குச் சொல் புலப்படுகிறது. மேலும், கவிதைகளுக்கு அடியிலேயே சிறு வரலாற்றுக் குறிப்புகளை கொடுத்திருக்கிறார், லட்சுமணன்.
புதிர்
அப்பேங்கொடாத்த பச்சே பாவாடே
அண்ணேங்கொடாத்த நீலே சீலே
தொட்டில்லே ரொங்குகாதிருந்தே
போடுகே கழுத்து பாசி
செல்லி தந்தே
செத்த பின்னாக்கும்
அச்சாமேத்தான் கெடாக்கு
'இருளச்சிக்கு திமிரடங்கலே'ங்கா
கெம்பனூரு கவுண்டிச்சி.
(கொடாத்த - கொடுத்த, ரொங்குகாதிருந்தே - தூங்கும்போதிருந்தே, அச்சாமே- அப்படியே )
கணவன் இறந்தபிறகு அணிந்திருக்கும் வண்ண உடைகள், அற்பமான நகைகள், அனைத்தையும் விலக்க வேண்டுமென்கிறாள் புதிதாக மலைக்கு வந்து குடியேறிய கவுண்டச்சி. ஏனென்று இருளச்சிக்கு புரியவில்லை.
இருளச்சிக்குப் புரியாத இன்னொன்றும் இருக்கிறது. ‘ஆண்மம் 3' என்ற கவிதையில்,
'மாடு பொட்டக்கண்ணு போட்டிருக்கு'
கண்ணாலம் கணக்கா
எல்லத்துக்குஞ் சொல்லுகா
..................
................
பொறந்தது பேத்தியுன்னு
பெணாங்குகா நாய்க்கச்சி
மாட்டு பொட்டக்கண்ணு போட்டதற்கு மகிழ்ச்சியடையும் நாய்க்கச்சி, பேத்தி பிறந்ததற்கு புலம்புவது ஏனென்று இருளச்சிக்குப் புரியவில்லை. இந்தக் கவிதைக்கு அருஞ்சொற்பொருள் தேவையில்லைதானே!
ஒழுங்காக பணி செய்யாதவர்களை 'தண்ணியில்லா காட்டுக்கு மாத்திடுவேன்' என்பதைக் கேள்விப்பட்டிருக்கலாம். காட்டுவாசிகளின் பார்வையில் பணி மாறுதல் எப்படியிருக்கிறது?
சக்கை
பாடே நடத்துகாதில்லே
பள்ளிக்கோடம் வருகாதில்லே
வேலே நேரத்துலே
வெளியே போகினான்னு
எழுமலே வாத்தியானே
எத்து ஊருக்கு மாத்தின.....
...................................................
ஆபிசன லெத்து
அச்சா ஜீப்புலே
வெட்டி போடு
ரெண்டு பலாப்பழோ
பாடம் நடத்தாத வாத்தியாருக்கு தண்டனை என்று அவனை எங்கள் ஊருக்கு மாற்றிய அதிகாரிக்குப் பரிசாக அவர் ஜீப்பில் இரண்டு பலாப்பழங்களை வெட்டி, குறிப்பாக வெட்டி போடவேண்டும் என்கிறார் ஆதிவாசி. ஏன் தெரியுமா?
வெட்டிய பலாப்பழ வாசனைக்கு எங்கிருந்தாலும் வந்துவிடும் யானை.
பாடம் என்றதும் நினைவில் தங்கிய இன்னொரு கவிதை,
பள்ளிக்கூடம்
வீடு
.........
அதான் தூங்குவமே
ஓ! கூரே
தாய்
ம் அஃகா
தந்தை....
அம்மே ......
.......
சொன்னதை திருப்பிச் சொல்லு
பிரம்பு பிஞ்சிடும் .
..............................
..............................
வகுப்பூக்கு வெளியே
முட்டிபோட்டு நின்னுகொண்டிருக்கேம்
நானூம்
எத்து மொழியும்
நம் வாழ்வுக்கு, ஆதிவாசிகள் குடியிருக்கும் காடுகள் வெட்டப்படுகின்றன. நமக்குக் கிடைக்கும் மின்சாரம் ஆதிவாசிகளின் ஆறுகளைத் தடுத்துக் கட்டப்படும் அணைகளிலிருந்தும் எடுக்கப்படுபவை.
நம் குடியிருப்புகளுக்கும், நகரங்களுக்கும் வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு சாலைகளும், மேம்பாலங்களும் அமைக்கப் பெறும்போது - இவர்கள் குடியிருப்பு எப்படி இருக்கிறது?
இருள் வழியும் அணை
நித்து கூரேலே கரண்டு போச்சுன்னு
கத்துகே கேளயாடா
கவுருமெண்டு கேக்கூ
கத்துகேன்
இச்சா கரண்டே இல்லேன்னு
சோலே கெட்டு விருகா சாகூ
அலுங்கூ செத்து
புசுகி அழுகூங்கா
எத்து ஊருலேதான் கெடாக்கு
நினாக்கூ லைட்டுந் தண்ணியூந்தா
எல்லாத்தையும் பொதாச்சு கட்டுன
பில்லூர் டேமூ
கீழே மின்சாரம் தடைபட்டால் கேளையாடாகக் கத்துகிறீர்கள் நீங்கள். ஆனால், நாங்கள் மின்சார இணைப்புக் கேட்டால், காடும் மிருகங்களும் அழிந்து விடுமென்கிறார்கள் அதிகாரிகள். உங்களுக்கு நீரும் ஒளியும் கொடுக்கும் பில்லூர் அணை எங்கள் மலைகளில்தான் இருக்கிறது. இருண்டு கிடக்கிறோம் நாங்கள்.
ஆதிவாசிகளின் நலனுக்காக தீட்டப்படும் திட்டங்கள் என்னவாகின்றன? இவர்கள் நலன் பற்றி எத்தனை பேர் எண்ணியிருப்போம்..அரசியல்வாதிகள், அதிகாரிக இவர்களுக்குத் திட்டங்கள் தீட்டத்தான் செய்கிறார்கள். எப்படி?
இருப்பு
ஆதிவாசிக்கு
அற்புதமா திட்டோம் தந்தேங்கே
டெவலப்புன்னு
டெண்டரு போடுகே
பேப்பருலே எழுதுகா..
டீவிலே காட்டுகா...
ஊரெல்லாம் பேசுகா...
போட்டா புடிக்கா
நினாக்கு பெரியாபீசர் பதவீ
காட்டோடே இருந்தே
இப்போ
நிம்து பேரு வாங்காக்கு
நேனு கடங்காரே
பரணுன்னு மேலே எறுகாக்கில்லே
கெழங்குன்னு கீழே தோண்டுகாக்குமில்லே
வனத்தைச் செப்பனிட்டு, உழுது,களையெடுத்து ,கடன் தந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும் அரசின் கணக்கு இருளர்களுக்குப் புரிவதே இல்லை. ஆதிவாசிகளின் உழைப்புக்கும், வேலைக்கும் தகுந்த சம்பளமாக எதுவுமே பெறுவதில்லை. லஞ்சம் கொடுத்து மேய்த்த ஆடு கூட ரேஞ்சரின் மகன் கல்யாணத்துக்கு விருந்தாக போய்விடுகிறது.
அஞ்சு இட்லிக்கூ
ஆறு ஏக்கரே கொடாத்து
காலேவாயிலே
கல்லூ சொமக்கே நா
ஐந்து இட்டிலிக்கு விலையாக ஆறு ஏக்கரை இருளனிடம் கைப்பற்றி செங்கல் சூளை அமைக்கிறார்கள் கரியன்செட்டிகள். மண்ணைப் பிரிய மனமில்லாத இருளன் அதே சூளையில் ரத்தம் சுண்ட மண் சுமக்கிறான்.
காடுகளையும் விளைநிலங்களையும் நகரத்தில் வாழும் நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். காட்டைப் பாதுகாப்பதும், காட்டுடன் பிணைந்த வாழ்வை வாழ்வதும் ஆதிவாசிகளே. ஆனால், அவர்களிடத்திலிருந்து வனத்திலிருந்து காலி செய்து ஓடவைக்கவே திட்டங்கள் தீட்டுகிறது அரசு. அவர்கள் காலி செய்த நிலத்தை தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்கவே குளிரூட்டப்பட்ட அறைகளில் கூடிகூடிப் பேசுகிறார்கள் அதிகாரிகள்.
நமக்கு என்ன, இருக்கவே இருக்கிறது, பங்குச்சந்தையின் சரிவுகளும் , பங்குச்சந்தைக் காளையின் பாய்ச்சலும், இரவா பகலாவென்றேத் தெரியாத மைதானங்களில் கைதட்டி ஆர்ப்பரித்தும், கவலைப்படவும்,பெட் கட்டி சண்டையிடவும் - ஐபிஎல்!
ஆதிவாசிகள் எத்தகைய சூழ்நிலையில், சுமைகளோடு, அத்துமீறல்களுக்கு இடையில் வசிக்கிறார்களென்பதை இருளர்களுடைய மொழியிலேயே கூறுவது போலவும், கேள்விகள் கேட்பது போலவும் மிக சூட்சுமத்துடன் பதிவு செய்திருக்கிறார் லட்சுமணன். கவிதைக்குப் பக்கபலமாக இருக்கும் அந்தத் தொன்மகுறிப்புகளை வாசிக்க வாசிக்க, இவ்வனுபவங்களை இவர் கவிதை மொழியில் அடக்குவதைவிட இன்னும் விரிவாகவே பதிவு செய்திருக்கலாமென்று தோன்றியது.
இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய லட்சுமணன் ஒரு நாவல் எழுதவேண்டும். அல்லது அவர்களுடைய வரலாற்றையும் கலாசார வாழ்க்கையையும் ஒரு நூலாக எழுத முன்வரவேண்டும்.
இப்புத்தகம் நெடுக, ஒவ்வொரு கவிதையிலும் முகம் காட்டிச் செல்லும் இருளர்-இருளச்சிகளுக்கு நன்றிகள்!
புத்தகம் : ஒடியன்
ஆசிரியர் : லட்சுமணன்
வெளியீடு : மணிமொழி பதிப்பகம், திருவண்ணாமலை.
ஃபோன் : 04175-251980
விலை : ரூ 50
'ஒடியன்' பெயர் குறிப்பு : தாயின் கர்ப்பத்திலிருந்து சிசுவை எடுத்து தைலம் செய்யும் மந்திரவாதி.
இன்று இயற்கையின் மடியிலிருந்து வனத்தையும் உயிர்களையும் திட்டமிட்டு சிதைத்து அழிக்கும் ஒடியன்கள் கீழ்நாட்டிலிருந்து வந்து மலை முழுவதும் நிறைந்து கிடக்கிறார்கள்.
ஆதிவாசிகள் என்றால் நாகரிகம் தெரியாதவர்கள். நமக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நவநாகரிகமான உடை உடுத்தத் தெரியாதவர்கள். நரபலி கொடுப்பவர்கள். வேட்டையாடுபவர்கள். சமைக்காமல், பச்சையாக உண்பவர்கள்...நம்மைப் போலல்லாமல், காட்டுமிராண்டித்தனமான பழக்க வழக்கங்கள் உடையவர்கள். பின் தங்கியவர்கள். வீடுவீடாக வந்து தேன் விற்பவர்கள். இவையே அவர்களைப் பற்றி எனக்குள் இருந்த எண்ணங்கள். இதைத்தாண்டி பெரிதாகச் சிந்தித்ததும் இல்லை. ஆனால இத்தொகுப்பு நம்மீது காட்டுமிராண்டிகள் யார் என்கிற கேள்வியை வீசிவிட்டு போகிறது
அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே, அவர்கள் மீது அரசாங்கத்தின், போலீஸின் அத்துமீறல்களும், வன்முறைகளும் ஏவப்படுகின்றன, பலவீனமான அம்மக்களே ஒடுக்குமுறைக்கு பலியாகின்றனர் என்பதை வீரப்பன் தொடர்நாடகம் மற்றும் சோளகர்தொட்டி நாவல் வாயிலாகவும் ஓரளவுக்குத் தெரிந்துக் கொண்டோம் .
விலங்குகளின் நலனில், உரிமைகளில் காட்டும் அக்கறையில் ஒரு பங்கு கூட மனிதர்களாகப் பிறந்த ஆதிவாசிகளிடம் காட்டப்படுவதில்லை. இந்த அவலமான நிலையில், இயற்கையோடு ஒன்றி வாழும் பழங்குடியினர் படும் துயரத்தையும், வலிகளையும், அவர்களோடே நெருங்கியிருந்த லட்சுமணனைத் தவிர வேறு யாரால் வலிமையாகப் பதிவு செய்திட இயலும்?
இருளர்களின்,தோடர்களின்,கரட்டிகரின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அவர்களது நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும், அவர்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளையும் அவர் - ”ஒடியன்” என்ற கவிதை நூல் மூலமாக முன்வைக்கிறார் - இருளர்களது மொழியிலேயே!

அதற்காக அந்த மொழி புரியாதது, கடினமானதென்று இல்லை, வார்த்தைகளை கொஞ்சம் யோசித்தால், அதன் தற்போதைய நமது வழக்குச் சொல் புலப்படுகிறது. மேலும், கவிதைகளுக்கு அடியிலேயே சிறு வரலாற்றுக் குறிப்புகளை கொடுத்திருக்கிறார், லட்சுமணன்.
புதிர்
அப்பேங்கொடாத்த பச்சே பாவாடே
அண்ணேங்கொடாத்த நீலே சீலே
தொட்டில்லே ரொங்குகாதிருந்தே
போடுகே கழுத்து பாசி
செல்லி தந்தே
செத்த பின்னாக்கும்
அச்சாமேத்தான் கெடாக்கு
'இருளச்சிக்கு திமிரடங்கலே'ங்கா
கெம்பனூரு கவுண்டிச்சி.
(கொடாத்த - கொடுத்த, ரொங்குகாதிருந்தே - தூங்கும்போதிருந்தே, அச்சாமே- அப்படியே )
கணவன் இறந்தபிறகு அணிந்திருக்கும் வண்ண உடைகள், அற்பமான நகைகள், அனைத்தையும் விலக்க வேண்டுமென்கிறாள் புதிதாக மலைக்கு வந்து குடியேறிய கவுண்டச்சி. ஏனென்று இருளச்சிக்கு புரியவில்லை.
இருளச்சிக்குப் புரியாத இன்னொன்றும் இருக்கிறது. ‘ஆண்மம் 3' என்ற கவிதையில்,
'மாடு பொட்டக்கண்ணு போட்டிருக்கு'
கண்ணாலம் கணக்கா
எல்லத்துக்குஞ் சொல்லுகா
..................
................
பொறந்தது பேத்தியுன்னு
பெணாங்குகா நாய்க்கச்சி
மாட்டு பொட்டக்கண்ணு போட்டதற்கு மகிழ்ச்சியடையும் நாய்க்கச்சி, பேத்தி பிறந்ததற்கு புலம்புவது ஏனென்று இருளச்சிக்குப் புரியவில்லை. இந்தக் கவிதைக்கு அருஞ்சொற்பொருள் தேவையில்லைதானே!
ஒழுங்காக பணி செய்யாதவர்களை 'தண்ணியில்லா காட்டுக்கு மாத்திடுவேன்' என்பதைக் கேள்விப்பட்டிருக்கலாம். காட்டுவாசிகளின் பார்வையில் பணி மாறுதல் எப்படியிருக்கிறது?
சக்கை
பாடே நடத்துகாதில்லே
பள்ளிக்கோடம் வருகாதில்லே
வேலே நேரத்துலே
வெளியே போகினான்னு
எழுமலே வாத்தியானே
எத்து ஊருக்கு மாத்தின.....
...................................................
ஆபிசன லெத்து
அச்சா ஜீப்புலே
வெட்டி போடு
ரெண்டு பலாப்பழோ
பாடம் நடத்தாத வாத்தியாருக்கு தண்டனை என்று அவனை எங்கள் ஊருக்கு மாற்றிய அதிகாரிக்குப் பரிசாக அவர் ஜீப்பில் இரண்டு பலாப்பழங்களை வெட்டி, குறிப்பாக வெட்டி போடவேண்டும் என்கிறார் ஆதிவாசி. ஏன் தெரியுமா?
வெட்டிய பலாப்பழ வாசனைக்கு எங்கிருந்தாலும் வந்துவிடும் யானை.
பாடம் என்றதும் நினைவில் தங்கிய இன்னொரு கவிதை,
பள்ளிக்கூடம்
வீடு
.........
அதான் தூங்குவமே
ஓ! கூரே
தாய்
ம் அஃகா
தந்தை....
அம்மே ......
.......
சொன்னதை திருப்பிச் சொல்லு
பிரம்பு பிஞ்சிடும் .
..............................
..............................
வகுப்பூக்கு வெளியே
முட்டிபோட்டு நின்னுகொண்டிருக்கேம்
நானூம்
எத்து மொழியும்
நம் வாழ்வுக்கு, ஆதிவாசிகள் குடியிருக்கும் காடுகள் வெட்டப்படுகின்றன. நமக்குக் கிடைக்கும் மின்சாரம் ஆதிவாசிகளின் ஆறுகளைத் தடுத்துக் கட்டப்படும் அணைகளிலிருந்தும் எடுக்கப்படுபவை.
நம் குடியிருப்புகளுக்கும், நகரங்களுக்கும் வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு சாலைகளும், மேம்பாலங்களும் அமைக்கப் பெறும்போது - இவர்கள் குடியிருப்பு எப்படி இருக்கிறது?
இருள் வழியும் அணை
நித்து கூரேலே கரண்டு போச்சுன்னு
கத்துகே கேளயாடா
கவுருமெண்டு கேக்கூ
கத்துகேன்
இச்சா கரண்டே இல்லேன்னு
சோலே கெட்டு விருகா சாகூ
அலுங்கூ செத்து
புசுகி அழுகூங்கா
எத்து ஊருலேதான் கெடாக்கு
நினாக்கூ லைட்டுந் தண்ணியூந்தா
எல்லாத்தையும் பொதாச்சு கட்டுன
பில்லூர் டேமூ
கீழே மின்சாரம் தடைபட்டால் கேளையாடாகக் கத்துகிறீர்கள் நீங்கள். ஆனால், நாங்கள் மின்சார இணைப்புக் கேட்டால், காடும் மிருகங்களும் அழிந்து விடுமென்கிறார்கள் அதிகாரிகள். உங்களுக்கு நீரும் ஒளியும் கொடுக்கும் பில்லூர் அணை எங்கள் மலைகளில்தான் இருக்கிறது. இருண்டு கிடக்கிறோம் நாங்கள்.
ஆதிவாசிகளின் நலனுக்காக தீட்டப்படும் திட்டங்கள் என்னவாகின்றன? இவர்கள் நலன் பற்றி எத்தனை பேர் எண்ணியிருப்போம்..அரசியல்வாதிகள், அதிகாரிக இவர்களுக்குத் திட்டங்கள் தீட்டத்தான் செய்கிறார்கள். எப்படி?
இருப்பு
ஆதிவாசிக்கு
அற்புதமா திட்டோம் தந்தேங்கே
டெவலப்புன்னு
டெண்டரு போடுகே
பேப்பருலே எழுதுகா..
டீவிலே காட்டுகா...
ஊரெல்லாம் பேசுகா...
போட்டா புடிக்கா
நினாக்கு பெரியாபீசர் பதவீ
காட்டோடே இருந்தே
இப்போ
நிம்து பேரு வாங்காக்கு
நேனு கடங்காரே
பரணுன்னு மேலே எறுகாக்கில்லே
கெழங்குன்னு கீழே தோண்டுகாக்குமில்லே
இதற்கு விளக்கம் தேவையா..
காகிதத்தில் திட்டங்கள் தீட்டி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் புகழ் பெறுகிறார்கள். ஆதிவாசிகளை இயல்புக்கு மாறான செயல்களில் இறக்கிவிட்டு கடனாளியாக்கி விடுகிறார்கள். மீள முடியாத கடன்களில் சிக்கி, அவர்களால்,பழைய மாதிரி மாறவும் முடியவில்லை,ஆபீசர் போல உயரவும் முடிவதில்லை என்பதே ஆதிவாசி கேட்கும் கேள்வி. பிணத்துக்கு கல்யாணம் என்பது போலத்தான் இருக்கிறது இவர்கள் தீட்டும் திட்டங்களும், போடுகிற சட்டங்களும் என்கிறார் லட்சுமணன் ஒரு கவிதையில்.
காகிதத்தில் திட்டங்கள் தீட்டி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் புகழ் பெறுகிறார்கள். ஆதிவாசிகளை இயல்புக்கு மாறான செயல்களில் இறக்கிவிட்டு கடனாளியாக்கி விடுகிறார்கள். மீள முடியாத கடன்களில் சிக்கி, அவர்களால்,பழைய மாதிரி மாறவும் முடியவில்லை,ஆபீசர் போல உயரவும் முடிவதில்லை என்பதே ஆதிவாசி கேட்கும் கேள்வி. பிணத்துக்கு கல்யாணம் என்பது போலத்தான் இருக்கிறது இவர்கள் தீட்டும் திட்டங்களும், போடுகிற சட்டங்களும் என்கிறார் லட்சுமணன் ஒரு கவிதையில்.
வனத்தைச் செப்பனிட்டு, உழுது,களையெடுத்து ,கடன் தந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும் அரசின் கணக்கு இருளர்களுக்குப் புரிவதே இல்லை. ஆதிவாசிகளின் உழைப்புக்கும், வேலைக்கும் தகுந்த சம்பளமாக எதுவுமே பெறுவதில்லை. லஞ்சம் கொடுத்து மேய்த்த ஆடு கூட ரேஞ்சரின் மகன் கல்யாணத்துக்கு விருந்தாக போய்விடுகிறது.
அஞ்சு இட்லிக்கூ
ஆறு ஏக்கரே கொடாத்து
காலேவாயிலே
கல்லூ சொமக்கே நா
ஐந்து இட்டிலிக்கு விலையாக ஆறு ஏக்கரை இருளனிடம் கைப்பற்றி செங்கல் சூளை அமைக்கிறார்கள் கரியன்செட்டிகள். மண்ணைப் பிரிய மனமில்லாத இருளன் அதே சூளையில் ரத்தம் சுண்ட மண் சுமக்கிறான்.
காடுகளையும் விளைநிலங்களையும் நகரத்தில் வாழும் நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். காட்டைப் பாதுகாப்பதும், காட்டுடன் பிணைந்த வாழ்வை வாழ்வதும் ஆதிவாசிகளே. ஆனால், அவர்களிடத்திலிருந்து வனத்திலிருந்து காலி செய்து ஓடவைக்கவே திட்டங்கள் தீட்டுகிறது அரசு. அவர்கள் காலி செய்த நிலத்தை தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்கவே குளிரூட்டப்பட்ட அறைகளில் கூடிகூடிப் பேசுகிறார்கள் அதிகாரிகள்.
நமக்கு என்ன, இருக்கவே இருக்கிறது, பங்குச்சந்தையின் சரிவுகளும் , பங்குச்சந்தைக் காளையின் பாய்ச்சலும், இரவா பகலாவென்றேத் தெரியாத மைதானங்களில் கைதட்டி ஆர்ப்பரித்தும், கவலைப்படவும்,பெட் கட்டி சண்டையிடவும் - ஐபிஎல்!
ஆதிவாசிகள் எத்தகைய சூழ்நிலையில், சுமைகளோடு, அத்துமீறல்களுக்கு இடையில் வசிக்கிறார்களென்பதை இருளர்களுடைய மொழியிலேயே கூறுவது போலவும், கேள்விகள் கேட்பது போலவும் மிக சூட்சுமத்துடன் பதிவு செய்திருக்கிறார் லட்சுமணன். கவிதைக்குப் பக்கபலமாக இருக்கும் அந்தத் தொன்மகுறிப்புகளை வாசிக்க வாசிக்க, இவ்வனுபவங்களை இவர் கவிதை மொழியில் அடக்குவதைவிட இன்னும் விரிவாகவே பதிவு செய்திருக்கலாமென்று தோன்றியது.
இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய லட்சுமணன் ஒரு நாவல் எழுதவேண்டும். அல்லது அவர்களுடைய வரலாற்றையும் கலாசார வாழ்க்கையையும் ஒரு நூலாக எழுத முன்வரவேண்டும்.
இப்புத்தகம் நெடுக, ஒவ்வொரு கவிதையிலும் முகம் காட்டிச் செல்லும் இருளர்-இருளச்சிகளுக்கு நன்றிகள்!
புத்தகம் : ஒடியன்
ஆசிரியர் : லட்சுமணன்
வெளியீடு : மணிமொழி பதிப்பகம், திருவண்ணாமலை.
ஃபோன் : 04175-251980
விலை : ரூ 50
'ஒடியன்' பெயர் குறிப்பு : தாயின் கர்ப்பத்திலிருந்து சிசுவை எடுத்து தைலம் செய்யும் மந்திரவாதி.
இன்று இயற்கையின் மடியிலிருந்து வனத்தையும் உயிர்களையும் திட்டமிட்டு சிதைத்து அழிக்கும் ஒடியன்கள் கீழ்நாட்டிலிருந்து வந்து மலை முழுவதும் நிறைந்து கிடக்கிறார்கள்.
Saturday, March 06, 2010
ஸ்டெல்லா புரூஸ் கவிதைகள்
ஒன்பதாவது படிச்சுக்கிட்டு இருந்தேன்னு நினைக்கறேன். அப்போ திடீர்ன்னு ஸ்கூல்லே அரைநாள் லீவு விட்டுட்டாங்கன்னு வீட்டுக்கு வந்தேன். கதவு உள்பக்கமா பூட்டியிருந்தது. எனக்கு அப்போல்லாம் ஒரு பழக்கம் - ரொம்ப ஜாலியா இருந்தேன்னா அப்படி செய்வேன் - கதவை திறக்கிற வரைக்கும் 'டொங் டொங்' -ன்னு தட்டிக்கிட்டே இருப்பேன்.பொதுவா, ஒரு சின்ன சத்தம் கேட்டாக் கூட எட்டிப் பார்க்கிற ஆயா அன்னைக்கு ரொம்ப நேரமா நிக்க வைச்சுட்டாங்க, நானும் க்ரில் நாதாங்கியை தட்டிக்கிட்டு 'ஆயா ஆயா' -ன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன். 'வர்றேன்னு வர்றேன்'னு சொல்றாங்களே தவிர ஆயா லேட் பண்றாங்க. கதவை திறந்துட்டு என்னோட ரூமுக்குள்ளே நுழைஞ்சுக்கிட்டு கதவை லேசா ஒருக்களிச்சு சாத்திட்டாங்க. பையையும் செருப்பையும் வீசிட்டு முகம்- கை- கால் கழுவிட்டு ரூமுக்குள்ளே போறேன்.. ஆயா ஒரு நோட்டையும் இங்க் பேனாவையும் அவங்க பெட்டிக்குள்ளே வைக்கறது தெரியுது.
ஏதோ நோட்டை வைக்கறாங்கன்னு பெரிசா கண்டுக்கலை. ரஃப் நோட்டுக்காக ஆயா ஒரு குயர் வெள்ளைத்தாள் வாங்கி அதை வெட்டி எங்களுக்கு நோட் செஞ்சு கொடுப்பாங்க . அந்த ரஃப் நோட்டு மாதிரி இருந்தது. ஆயாவுக்கு, நாங்க ஸ்கூல்லேருந்து வந்தவுடனே கை கால் கழுவிட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும். பையை சோபா மேலே வைக்கக் கூடாது. ஆனா நானும் சரி என் தம்பியும் சரி..திட்டு வாங்காம இதை ஒரு நாளும் செய்ய மாட்டோம். அன்னைக்கும் ஆயா திட்ட ஆரம்பிச்சாங்க..நான் உடனே ரூமுக்குப் போய் கதவை சாத்திக்கிட்டேன். அவங்களை எப்படி பழி வாங்கறதுன்னு நினைச்சப்போதான் 'டக்'னு ஐடியா. அந்த நோட் என்னவா இருக்கும்? அதை நாம ரஃப் நோட்டுக்கு எடுத்துக்கலாம்னு - ஆயாவோட பெட்டியை திறந்து அந்த நோட்டை எடுத்துட்டேன். அதுலே ஆயா முக்காவாசி வரைக்கும் எழுதி வைச்சிருந்தாங்க. அழகா இருந்துச்சு கையெழுத்து.
முதல் பக்கத்துலேருந்து படிக்க ஆரம்பிச்சேன். ஒரு பெண்ணோட கல்யாணத்துலேருந்து ஆரம்பிச்ச நினைவு. நிரைய கேரக்டர்ஸ். பூரணி தாரணி மாதிரி 'ணி'லே முடியற மாதிரி நிறைய பேருங்க( ஆயாவோட நிஜபேரு கல்யாணி). எந்த பேரு யாருன்னு கண்டுபிடிக்க முடியலை. கதையை ஃபாலோ பண்ணவும் முடியலை. ஏன்னா, அது வந்து, ஸ்டாலின் நடிச்ச ஒரு விடுதலை போராட்ட காலத்து சீரியல் பாஷையிலே இருந்தது. ஆயா என்னோட இந்த நாச வேலையை கண்டுபிடிச்சுட்டாங்க போல. 'என்ன பண்றே கதவ சாத்திக்கிட்டு'ன்னு குரல் கொடுத்தாங்க. 'வர்றேன்'னு பதில் குரல் கொடுத்துட்டு எவ்ளோ பேஜஸ் இருக்குன்னு பார்த்தா அது பாட்டுக்கு போய்கிட்டே இருக்கு. 'கதைவை திற' ன்னு ஆயா சொன்னதும், அவங்களை வெறுப்பதேத்த, 'நான் உங்க நோட்டை எடுத்து படிக்கறேன்'னு சொன்னதும் ஆயாவுக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு.
ஆயாவுக்கு நான் எப்பவுமே ரொம்ப செல்லம். ஆனா, அன்னைக்கு ஆயா என்மேலே ரொம்ப கோவமாகிட்டாங்க. 'ஏன் என் உயிரெடுக்கறே-ன்ற மாதிரி ஏதோ சொன்னாங்க. நானும் கோவம் வந்து அந்த நோட்டை வைச்சுட்டேன். பெரியவங்க பேச்சை கேக்கறதுல்லே, பசங்கன்னா அப்படி இருக்கணும், இபப்டி இருக்கணும்னு திட்டு aka அட்வைஸ்! அப்புறம் அன்னைக்கு சாயங்காலம் விளையாடிட்டு வந்து பார்த்தப்போ அந்த பெட்டிலே ஒரு சின்ன நம்பர் லாக் தொங்குது.
அப்புறம் அதை நானும் மறந்து போயிட்டேன். ஆனா, ஆயா கதை எழுதறாங்கன்னு மட்டும் தெரிஞ்சது. ஒருவேளை சுயசரிதையா இருக்கும்னு நானா நினைச்சுக்கிட்டேன். அப்புறம் அந்த பெட்டியும் எங்கேயோ மேலே பரணுக்கு போய்டுச்சு. இப்போ கொஞ்ச நாள் முன்னே ஆயாவுக்கு
ஒரு நரம்பு ஊசி போட்டாங்க. அப்போ நாந்தான் அவங்க கையை பிடிச்சுக்கிட்டு இருந்தேன். ஊசி போட்டு முடிச்சப்பறம் குத்தின இடத்துலே பஞ்சை வைச்சு அழுத்திக்கிட்டு இருந்தப்போதான் ஆயா கையை கவனிச்சேன். அதிலேதான் எத்தனை சுருக்கங்கள்! அந்த ஒவ்வொரு சுருக்கத்துக்கும் பின்னாடி ஒரு கதை இருக்கும்தானே. இந்த கையாலேதான் ஆயா அந்த கதையை எழுதியிருப்பாங்க-ன்னு தோணுச்சு. வீட்டுக்கு வந்தப்பறம் மெதுவா ஆயாக்கிட்டே கேட்டா, 'ஆமா கதைதான் எழுதுனேன்'-னாங்க. 'அங்கேதான் மேலே எங்கேயாவது கிடக்கும்'னு சொல்லிட்டு 'படிச்சிருக்கியா'ன்னு கேட்டாங்க. 'எங்கே படிக்க விட்டீங்க'ன்னு சொன்னேன்.
அந்த நாவலை முடிச்சாங்களான்னு இல்லையான்னு ஆயாவுக்கு இப்போ நினைவில்லை. என்ன கதைன்னு கூட ஞாபகம் இல்லை. ஆனா ஆயா கதை எழுதறாங்கன்னு தெரிஞ்சப்போ எழுந்த ஒரு வித ஆச்சரியம் - பொறுமையா எல்லா பக்கங்களிலும் இருந்த சீரான அந்த கையெழுத்து! ஆயா நிறைய கதை படிப்பாங்கன்னு மட்டும்தான் தெரிஞ்சிருந்த எனக்கு - அதுவும், பழங்காலத்து கதை பேசிக்கிட்டு இருப்பாங்கன்னும், காலையிலே காஃபி போட்டு எங்களுக்குக் கொடுத்துட்டு 'செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்சாமி'-ன்னு ஆரம்பிக்கும்போது, 'சில்வர் ஜூப்லி' கண்ட அந்த உலகப்புகழ் அருவா மனையை எடுத்துக்கிட்டு, காய்,வெங்காயம், தண்ணி குண்டான், அருவாமனைக்கு கீழே வைக்க பேப்பர் சகிதம் சமையலைறைக்கு பக்கத்தில் உட்கார்ந்து - காய்களை நாலாக எட்டாக அரிந்துக் கொண்டிருக்கும் ஆயா - அந்த அருவாமனையிலேருந்து வர்ற 'டக் டக்' சத்தத்தோட கேக்கற ஆயாவோட குரல் - பெரும்பாலும் ஆயாவும் பெரிம்மாவும் பேசிக்கறது அப்போதான் - நாட்டு நடப்பிலேருந்து நேத்து காய்கறிகாரன் பேரம் படியாத போனது வரைக்கும் - ஆயாவுக்குள்ளே இவ்ளோ இருக்கான்னு தெரிஞ்சதும் வந்த ஆச்சரியம்,பிரமிப்பு....!
இப்போ இந்த கொசுவத்தி எதுக்காக-ன்னா - சமீபத்துலே (!) அதே மாதிரி இன்னொரு ஆச்சர்யம் எழுந்தது - ஸ்டெல்லா புரூஸ் கவிதைகள் எழுதியிருக்காருன்னு தெரிஞ்சதும்.
ஸ்டெல்லா புரூஸ்-ன்ற பேரிலே கவிதைகள் எழுதலை. காளி - தாஸ் என்ற பேரிலே கவிதைகள், சிறுத்திரிக்கைகள் சூழல்லே எழுதியிருக்கார். அதே பேரிலே கவிதை தொகுப்பும் வெளியிட்டிருக்கார்.
இந்தத் தொகுப்புக்கு ஞானக்கூத்தன் ஒரு அழகான முன்னுரை எழுதியிருக்காரு. தொகுப்புல இருக்கிற முதல் கவிதைய பத்தி ஞானக்கூத்தன் விவரிச்சிருக்கிறதை வாசிக்கிறப்ப, ஒரு கவிதைய எப்படி அணுகி புரிஞ்சுக்கணும்னு நாம தெரிஞ்சுக்கலாம். தலைப்பு இல்லாம இருக்கிற அந்தக் கவிதை இதுதான்:
பொழுது விடிந்து
தினமும் நான்
வருவேனென்று
கடற்கரை மண்ணெல்லாம்
குஞ்சு நண்டுகள்
கோலம் வரைந்திருந்தன.
இந்தக் கவிதைக்கு ஞானக்கூத்தன் சொல்லியிருக்கிற விளக்கத்தை முன்னுரைலேந்து அப்படியே தரேன்...
''இக்கவிதையைக் காளி - தாஸ் சொன்னபோது அசத்தலாக இருந்தது. இக் கவிதை சில அமைவுகளைக் கொண்டிருப்பதாய்த் தெரிந்தது.
தினமும் வருகிறவன்
கோலமிடும் நண்டுக் குஞ்சுகள்
தினமும் கோலம்.
இப்படிக் கருத்துகள் அடுக்கப் பெறுகின்றன. இதில் 'வரைந்திருந்தன' என்று இறந்த காலத்தில் சொல்லியிருப்பதால் நண்டுக் குஞ்சுகள் கோலத்தை வளராதுவிட்டுப் போய்விடுவதால் நவிற்சிக்காரனுக்கு கவிதை சொல்பவன், தரப்படும் வரவேற்பில் அதன் பங்கு வரையறை உடையதாய் இருக்கிறது. ஆனால், இந்த வரையறை அதன் பெருமையைக் குறைக்கவில்லை. ஏனெனில் கோலமிடுதல் என்ற பணி மகத்துவம் உடையது.
'கோலம்'
இந்தச் சொல்லே மங்களமானது. கோலம் பெரிதானால் விழா பெரிதென்று பொருள். பெரிய விழா. பெரிய கோலம். ஒருவர் இருவர் சேர்ந்து போடமுடியாது. பலபேர் போட வேண்டும். அதனால்தான் நண்டுகள் என்று பன்மையில் கூறப்பட்டிருக்கிறது. போடுகிற இடம் பெரிது.
கடற்கரை மண்ணெல்லாம்...
இரண்டாவது அமைவு.
கோலம்
வீடு வெளி இரண்டு பிரதேசங்களிலும் கோலம் வரையப்படுவது மரபு. கோலம் இடப்பொருளாகத் தெரிகிறது. பார்வைக்கு இடப் பொருளானாலும் உண்மையில் அது காலப் பொருளானது. காலம் நன்றாக இருந்தால்தான் கோலம் வரையப்படுகிறது. இறப்பு நிகழ்ந்த வீட்டில் கோலம் வரையப்படுவதில்லை. இக் கவிதை 'பொழுது விடிந்து' என்று தொடங்குகிறது. பொழுது விடிந்து நீண்ட நேரமாகியும் ஒரு வீட்டில் கோலம் வாசலில் இடப்படவில்லை என்றால் அந்த வீட்டில் ஏதோ அமங்கலம் என்று பொருள். இக் கவிதை மங்கலமான விஷயத்தையும் சொல்கிறது.
வீட்டிலிருந்து வெளியே போகிறவர், வீட்டுக்கு வருகிறவர் ஆகிய இருவருக்குமே கோலம் பொதுவானதால் அது 'அகம், புறம்' என்ற தத்துவத்துக்கு அப்பால் செயல்படுகிறது. வீட்டில் இருப்பவர் வீட்டைவிட்டு வெளியே செல்வதென்றால் முதலில் வாசலில் பெயருக்காவது ஒரு சிறிய கோலமாவது போட்டு விட்டுத்தான் பிறகு அவர்களால் வெளியே செல்ல அனுமதிப்பது மரபு. ஏனென்றால் கோலமில்லாமல் வாசலைப் பிரேதம்தான் கடக்கிறது.
இக்கவிதையில் பொழுது விடிவு + விழாக்கோலம் என்ற அமைவு புலனாகிறது.
விழாத் தலைவர் 'யார்?' 'வருவேன்' என்று சொல்வது யார்? கடற்கரை, நண்டு என்ற சொற்களைக்கொண்டு பார்த்தால் 'வருவேன்' என்று சொல்வது 'சூரியன்'தான். ஆனால், கவிதை 'வருவேன்' என்ற சொல்லாட்சியில் ஒரு திருகலைக்கொடுக்கிறது. சூரியனுக்குத் தினகரன் என்று பெயர். அவன் தினத்தைச் செய்கிறவன். அதனால் தினகரன். 'வருவேன்' என்றவன் சூரியன் என்று பொருள் கொண்டால் கடலைப் புறப்பகுதியாகக்கொண்ட வீட்டுக்காரனான சூரியன் கோலமிட்ட கடற்கரையை வாசலாகக் கண்டு மகிழ்ந்து சொல்கிறான் என்று பொருள்படுகிறது. இதிலிருந்து ஒரு வாசகம் உருவாகிறது. அது கடக ராசியில் சூரியன் வருகிறான் என்பது. கடகராசி என்பது நண்டுக் கூட்டம். எனவே கடக ராசியில் சூரியனுக்கு வரவேற்புக் கூறி மகிழ்கிறது இக் கவிதை. வருவேன் என்ற செயல் கடற்கரைக்குப் போகிறவனையும் சாதாரண நிலையில் குறிக்கிறது. கடற்கரையில் நண்டுகள் விட்டுச்சென்ற தடங்களைக் கண்ட நெஞ்சில் இப்படி எழுந்து அமைகிறது கவிதை.''
கோலம் போடறத பத்தி எனக்கு சில மாற்று கருத்து இருந்தாலும், இந்தக் கவிதைக்கான விளக்கமா ஞானக்கூத்தன் எழுதியிருக்கறதை படிக்கிறப்ப 'அட'னு தோணுது.
அவரோட 'நானும் நானும்' புத்தகத்திலிருந்து சில கவிதைகளை பகிர்கிறேன்.
அது வேறு உலகம்
ஓணான் முதுகாய்த் தெரியும்
புளிய மரக்கிளைகளுக்கும்
இடமுண்டு
என் பால்ய உலகில்
சுட்டுப் பொசுக்கி தின்பதுண்டு
சிட்டுக் குருவிகளை
துவாரம் விழுந்த
கால்சட்டைப் பையில்
கைவிடச் சொல்லியிருக்கிறேன்
பக்கத்து வீட்டுப் பெண்ணை
கடிதமெழுதி சித்தியை
காதலித்த கணம்
கலைந்த உலகம்
இன்னும் சுழல்கிறது நினைப்பில்
கிழிந்த காற்றாடியாய்...
---------
''நானும் நானும்''
தெருக்காட்சியில்
ஓசையற்றுத் தெரிகிறேன்
தூரத்து அருவியாய்
அநேகமாக
நடமாடும் தாவரம் போல்
யாவருக்கும் தோன்றுகிறேன்
ற்தோவொரு பூவின்
விஸ்வ - ரூபமாகத் தெரிந்தாலும்
தெரிவேன் போலிருக்கிறது
ஆனால்; காலமும்
காலமின்மையும் சந்திக்கும்
நிமிர்கோடாய் நிற்பதுதான் என்முகம்
அதிலிருந்து ஓர்
நிசப்தம்
ஒலிப்பரப்பாகிறது எப்போதும்
-----------
இலக்கிய கோத்ரங்கள்
விலை உயர் சிற்றுண்டி நிலையம்
பழச்சாறு அருந்தும் தோழி தோழன்
நாய்கள் வளர்க்கும் சீமாட்டி
மாருதி ஓட்டும் கனவான்
எவருக்கும் சான்றிதழ் கிடையா
மேலும் தீண்டத் தகாதோர்
பட்டியலில் பலருண்டு
கரிசல் காட்டில் முகாமிட்டு
இலக்கிய தாசில்தார்
கையேடு வைத்திருக்கிறார்
தருவார்
இலக்கிய மாந்தர் முத்திரை
பத்தாம் தேதி நாஞ்சில் நாடு
இருபதாம் தேதி கொங்கு நாடு
ஆங்காங்கு சிபாரிசுத் தரகர் குலம்
பெருநகர தமிழில் அணுகாதீர் அய்யா
நாட்டுப் புற தமிழே உச்சம்...
------------
மண்
மண்ணில் உட்கார்ந்ததும்
சொந்தம்
இயல்பாக ஒட்டிக் கொள்கிறது
அதன் மெளனம்
நிறம்
அமைதி
கொஞ்சமும் தலையிடவில்லை
எத்தனை தூரம் நடந்தாலும்
உடன் இருக்கிறது
கவனித்துக் கொண்டே இருக்கிறது
ஒருநாள்
மண்ணோடு மண்ணாகிவிட
ஆதங்கம் வந்தது
சாய்ந்தேன்
மண்ணே இல்லாமல்
ஆகாயம் தெரிந்தது
---------
நான் ஏதோ மலையில்
கல்லுடைப்பதாக எண்ணி
அனைவரும்
அலட்சியமாக பார்த்தனர்
அவர்களுக்குத் தெரியவில்லை
நான்
மலையை உடைத்துக் கொண்டிருக்கிறேன்.
----------
ஒழிந்த நேரங்கள்
நான்
ஒழிந்த நேரத்தில் பிறந்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் வளர்ந்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் படித்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் எழுதினேன்
நான்
ஒழிந்த நேரத்தில் விளையாடினேன்
நான்
ஒழிந்த நேரத்தில் காதலித்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் சம்பாதித்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் கல்யாணம் செய்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் புணர்ந்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் பிள்ளை பெற்றேன்
நான்
ஒழிந்த நேரத்தில் குடித்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் தூங்கினேன்
நான்
ஒழிந்த நேரத்தில் சாமி கும்பிட்டேன்
நண்பர்களே வாருங்கள்
ஒழிந்த நேரம் பார்த்து
ஒழிந்த நேரம் ஒன்றில்
நான் செத்துப் போகும் முன்...
----------
"பாடைக் காட்சி"
நான்கு பேர் சுமக்க
கடற்கரையிலிருந்து பாடை கிளம்பியது
பேசியபடி நண்பர்கள் சிலர்
பாடையை தொடர்ந்தார்கள்
யாருடைய முகத்திலும் வருத்தமில்லை
ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு போனார்கள்
பாடையைத் தூக்கிக் சென்றவர்கள்
மிகவும் நிதானமாக நடந்தார்கள்
பாடை குலுங்காமலும்
அதிகம் அசையாமலும்
கவனித்துக் கொண்டார்கள்
நண்பர்கள் சிகரெட் பற்ற வைத்தார்கள்
சினிமா பற்றியும் அரசியல் பற்றியும்
விவாதித்தார்கள்.
பஸ்ஸிலும் தெருவிலும் பலர்
பாடைக் காட்சியை கண்டார்கள்
சாலத்தில் கழுத்தில் மாலை இல்லை
பின் போனவர்கள் யாரிடமும்
மரண காரியம் செய்யும் தோற்றமில்லை
பீடிக்கு தீ கேட்பதுபோல
ரிக்ஷாகாரன் ஒருவர்
நெருங்கி வந்து கேட்டான்
செத்து போனது யார் ஸார்?
ஒருவனும் அவனுக்கு பதில் சொல்லவில்லை
வெகுநேரம் சென்றபின் பாடை
திண்ணையிட்ட ஒரு வீட்டெதிரில்
இறக்கப்பட்டது.
எல்லோரும் மௌனமாக நின்றார்கள்
பாடையில் இருந்தவர் எழுந்து
வீட்டிற்குள் போனார்
தூக்கி வந்தவர்களுக்குப் பணம் தந்துவிட்டு
நண்பர்கள் உள்ளே சென்றார்கள்
வீட்டுப் பெண்கள் கலவரமடைந்து கேட்டார்கள்
என்ன கர்மம் இது
ஏனிப்படி பாடையில் வரணும்?
ரொம்பத்தான் களைப்பாக இருந்த்து
பஸ் டாக்ஸி ரிக்ஷா
எதிலும் ஏறப் பிடிக்கவில்லை
பாடையில் படுத்து நன்றாக
தூங்கிக் கொண்டு வந்தேன் என்றார்
மரணம் நிகழ்ந்த துக்கம்
முகங்களில் படர
பெண்கள் நிசப்தமானார்கள்
களைப்புடன் நண்பர்களும்
நாற்காலிகளில் சாய்ந்து
கண்மூட
வெற்றுப்பாடை
வீதியில் போனது.
ஒவ்வொருத்தருக்குள்ளேயும்தான் சொல்றதுக்கும் எழுதறதுக்கும் எவ்ளோ விஷயம் இருக்கு இல்லே? என் பக்கத்துலே இருந்த ஆயாவுக்குள்லே இருக்கற விஷயங்களை/கதைகளை/வாழ்க்கையையே என்னாலே இன்னும் முழுசா தெரிஞ்சுக்க முடியலை...ஸ்டெல்லா புரூஸூக்குள்ளேயும் எவ்ளோ இருந்திருக்கும்?!
மரச்சட்டம் போட்ட கண்ணாடிக்கு பின்னால் இருக்கற தாத்தா,மாமா ஃபோட்டாவெல்லாம் பார்த்து அவங்கள்ளாம் இப்போ எங்கேன்னு சின்ன வயசுலே கேட்டப்போ ராத்திரி வானத்தை காட்டி 'அவங்க நட்சத்திரமாயிட்டாங்க, அதோ அங்கே தெரியறாங்க'-ன்னு
சொல்லுவாங்க சின்ன மாமா. நாங்களும், ஆளுக்கொரு நட்சத்திரத்தை பார்த்துக்கிட்டு இருப்போம். "அதோ உன்னை பார்த்து கண் சிமிட்டறாங்க, பாரு"ன்னு சொன்னதும் எந்த நட்சத்திரம் மினுக்குதோ அதை தாத்தாவாவும், சின்ன நட்சத்திரங்களை மத்த ஃபோட்டாலே இருக்கறவங்களாவும் கற்பனை பண்ணிக்குவோம்.
பப்புவுக்காக என் தம்பி இருட்டுலே மினுக்கற நட்சத்திர ஸ்டிக்கர்களை ஒட்டி வைச்சிருந்தான்.
நேத்து இந்த கவிதையெல்லாம் படிச்சுட்டு, லைட் ஆஃப் பண்ணிட்டு, யோசிச்சிட்டு இருந்தப்போ மேலே இருந்த ஒரு பெரிய நட்சத்திரம் மினுக்கறா மாதிரி இருந்தது....
ஆத்மாநாமை நான் படிச்சதில்ல. ஆனா, அவரும் தற்கொலை செஞ்சு இறந்ததா கேள்விப்பட்டிருக்கேன். ஆத்மாநாம் மூலமா கவிதைல அறிமுகமான ஸ்டெல்லா புரூஸும் தற்கொலை செஞ்சுகிட்டாரு.
இந்த முரணை எப்படி புரிஞ்சுக்கறது?
ஏதோ நோட்டை வைக்கறாங்கன்னு பெரிசா கண்டுக்கலை. ரஃப் நோட்டுக்காக ஆயா ஒரு குயர் வெள்ளைத்தாள் வாங்கி அதை வெட்டி எங்களுக்கு நோட் செஞ்சு கொடுப்பாங்க . அந்த ரஃப் நோட்டு மாதிரி இருந்தது. ஆயாவுக்கு, நாங்க ஸ்கூல்லேருந்து வந்தவுடனே கை கால் கழுவிட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும். பையை சோபா மேலே வைக்கக் கூடாது. ஆனா நானும் சரி என் தம்பியும் சரி..திட்டு வாங்காம இதை ஒரு நாளும் செய்ய மாட்டோம். அன்னைக்கும் ஆயா திட்ட ஆரம்பிச்சாங்க..நான் உடனே ரூமுக்குப் போய் கதவை சாத்திக்கிட்டேன். அவங்களை எப்படி பழி வாங்கறதுன்னு நினைச்சப்போதான் 'டக்'னு ஐடியா. அந்த நோட் என்னவா இருக்கும்? அதை நாம ரஃப் நோட்டுக்கு எடுத்துக்கலாம்னு - ஆயாவோட பெட்டியை திறந்து அந்த நோட்டை எடுத்துட்டேன். அதுலே ஆயா முக்காவாசி வரைக்கும் எழுதி வைச்சிருந்தாங்க. அழகா இருந்துச்சு கையெழுத்து.
முதல் பக்கத்துலேருந்து படிக்க ஆரம்பிச்சேன். ஒரு பெண்ணோட கல்யாணத்துலேருந்து ஆரம்பிச்ச நினைவு. நிரைய கேரக்டர்ஸ். பூரணி தாரணி மாதிரி 'ணி'லே முடியற மாதிரி நிறைய பேருங்க( ஆயாவோட நிஜபேரு கல்யாணி). எந்த பேரு யாருன்னு கண்டுபிடிக்க முடியலை. கதையை ஃபாலோ பண்ணவும் முடியலை. ஏன்னா, அது வந்து, ஸ்டாலின் நடிச்ச ஒரு விடுதலை போராட்ட காலத்து சீரியல் பாஷையிலே இருந்தது. ஆயா என்னோட இந்த நாச வேலையை கண்டுபிடிச்சுட்டாங்க போல. 'என்ன பண்றே கதவ சாத்திக்கிட்டு'ன்னு குரல் கொடுத்தாங்க. 'வர்றேன்'னு பதில் குரல் கொடுத்துட்டு எவ்ளோ பேஜஸ் இருக்குன்னு பார்த்தா அது பாட்டுக்கு போய்கிட்டே இருக்கு. 'கதைவை திற' ன்னு ஆயா சொன்னதும், அவங்களை வெறுப்பதேத்த, 'நான் உங்க நோட்டை எடுத்து படிக்கறேன்'னு சொன்னதும் ஆயாவுக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு.
ஆயாவுக்கு நான் எப்பவுமே ரொம்ப செல்லம். ஆனா, அன்னைக்கு ஆயா என்மேலே ரொம்ப கோவமாகிட்டாங்க. 'ஏன் என் உயிரெடுக்கறே-ன்ற மாதிரி ஏதோ சொன்னாங்க. நானும் கோவம் வந்து அந்த நோட்டை வைச்சுட்டேன். பெரியவங்க பேச்சை கேக்கறதுல்லே, பசங்கன்னா அப்படி இருக்கணும், இபப்டி இருக்கணும்னு திட்டு aka அட்வைஸ்! அப்புறம் அன்னைக்கு சாயங்காலம் விளையாடிட்டு வந்து பார்த்தப்போ அந்த பெட்டிலே ஒரு சின்ன நம்பர் லாக் தொங்குது.
அப்புறம் அதை நானும் மறந்து போயிட்டேன். ஆனா, ஆயா கதை எழுதறாங்கன்னு மட்டும் தெரிஞ்சது. ஒருவேளை சுயசரிதையா இருக்கும்னு நானா நினைச்சுக்கிட்டேன். அப்புறம் அந்த பெட்டியும் எங்கேயோ மேலே பரணுக்கு போய்டுச்சு. இப்போ கொஞ்ச நாள் முன்னே ஆயாவுக்கு
ஒரு நரம்பு ஊசி போட்டாங்க. அப்போ நாந்தான் அவங்க கையை பிடிச்சுக்கிட்டு இருந்தேன். ஊசி போட்டு முடிச்சப்பறம் குத்தின இடத்துலே பஞ்சை வைச்சு அழுத்திக்கிட்டு இருந்தப்போதான் ஆயா கையை கவனிச்சேன். அதிலேதான் எத்தனை சுருக்கங்கள்! அந்த ஒவ்வொரு சுருக்கத்துக்கும் பின்னாடி ஒரு கதை இருக்கும்தானே. இந்த கையாலேதான் ஆயா அந்த கதையை எழுதியிருப்பாங்க-ன்னு தோணுச்சு. வீட்டுக்கு வந்தப்பறம் மெதுவா ஆயாக்கிட்டே கேட்டா, 'ஆமா கதைதான் எழுதுனேன்'-னாங்க. 'அங்கேதான் மேலே எங்கேயாவது கிடக்கும்'னு சொல்லிட்டு 'படிச்சிருக்கியா'ன்னு கேட்டாங்க. 'எங்கே படிக்க விட்டீங்க'ன்னு சொன்னேன்.
அந்த நாவலை முடிச்சாங்களான்னு இல்லையான்னு ஆயாவுக்கு இப்போ நினைவில்லை. என்ன கதைன்னு கூட ஞாபகம் இல்லை. ஆனா ஆயா கதை எழுதறாங்கன்னு தெரிஞ்சப்போ எழுந்த ஒரு வித ஆச்சரியம் - பொறுமையா எல்லா பக்கங்களிலும் இருந்த சீரான அந்த கையெழுத்து! ஆயா நிறைய கதை படிப்பாங்கன்னு மட்டும்தான் தெரிஞ்சிருந்த எனக்கு - அதுவும், பழங்காலத்து கதை பேசிக்கிட்டு இருப்பாங்கன்னும், காலையிலே காஃபி போட்டு எங்களுக்குக் கொடுத்துட்டு 'செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்சாமி'-ன்னு ஆரம்பிக்கும்போது, 'சில்வர் ஜூப்லி' கண்ட அந்த உலகப்புகழ் அருவா மனையை எடுத்துக்கிட்டு, காய்,வெங்காயம், தண்ணி குண்டான், அருவாமனைக்கு கீழே வைக்க பேப்பர் சகிதம் சமையலைறைக்கு பக்கத்தில் உட்கார்ந்து - காய்களை நாலாக எட்டாக அரிந்துக் கொண்டிருக்கும் ஆயா - அந்த அருவாமனையிலேருந்து வர்ற 'டக் டக்' சத்தத்தோட கேக்கற ஆயாவோட குரல் - பெரும்பாலும் ஆயாவும் பெரிம்மாவும் பேசிக்கறது அப்போதான் - நாட்டு நடப்பிலேருந்து நேத்து காய்கறிகாரன் பேரம் படியாத போனது வரைக்கும் - ஆயாவுக்குள்ளே இவ்ளோ இருக்கான்னு தெரிஞ்சதும் வந்த ஆச்சரியம்,பிரமிப்பு....!
இப்போ இந்த கொசுவத்தி எதுக்காக-ன்னா - சமீபத்துலே (!) அதே மாதிரி இன்னொரு ஆச்சர்யம் எழுந்தது - ஸ்டெல்லா புரூஸ் கவிதைகள் எழுதியிருக்காருன்னு தெரிஞ்சதும்.
ஸ்டெல்லா புரூஸ்-ன்ற பேரிலே கவிதைகள் எழுதலை. காளி - தாஸ் என்ற பேரிலே கவிதைகள், சிறுத்திரிக்கைகள் சூழல்லே எழுதியிருக்கார். அதே பேரிலே கவிதை தொகுப்பும் வெளியிட்டிருக்கார்.
இந்தத் தொகுப்புக்கு ஞானக்கூத்தன் ஒரு அழகான முன்னுரை எழுதியிருக்காரு. தொகுப்புல இருக்கிற முதல் கவிதைய பத்தி ஞானக்கூத்தன் விவரிச்சிருக்கிறதை வாசிக்கிறப்ப, ஒரு கவிதைய எப்படி அணுகி புரிஞ்சுக்கணும்னு நாம தெரிஞ்சுக்கலாம். தலைப்பு இல்லாம இருக்கிற அந்தக் கவிதை இதுதான்:
பொழுது விடிந்து
தினமும் நான்
வருவேனென்று
கடற்கரை மண்ணெல்லாம்
குஞ்சு நண்டுகள்
கோலம் வரைந்திருந்தன.
இந்தக் கவிதைக்கு ஞானக்கூத்தன் சொல்லியிருக்கிற விளக்கத்தை முன்னுரைலேந்து அப்படியே தரேன்...
''இக்கவிதையைக் காளி - தாஸ் சொன்னபோது அசத்தலாக இருந்தது. இக் கவிதை சில அமைவுகளைக் கொண்டிருப்பதாய்த் தெரிந்தது.
தினமும் வருகிறவன்
கோலமிடும் நண்டுக் குஞ்சுகள்
தினமும் கோலம்.
இப்படிக் கருத்துகள் அடுக்கப் பெறுகின்றன. இதில் 'வரைந்திருந்தன' என்று இறந்த காலத்தில் சொல்லியிருப்பதால் நண்டுக் குஞ்சுகள் கோலத்தை வளராதுவிட்டுப் போய்விடுவதால் நவிற்சிக்காரனுக்கு கவிதை சொல்பவன், தரப்படும் வரவேற்பில் அதன் பங்கு வரையறை உடையதாய் இருக்கிறது. ஆனால், இந்த வரையறை அதன் பெருமையைக் குறைக்கவில்லை. ஏனெனில் கோலமிடுதல் என்ற பணி மகத்துவம் உடையது.
'கோலம்'
இந்தச் சொல்லே மங்களமானது. கோலம் பெரிதானால் விழா பெரிதென்று பொருள். பெரிய விழா. பெரிய கோலம். ஒருவர் இருவர் சேர்ந்து போடமுடியாது. பலபேர் போட வேண்டும். அதனால்தான் நண்டுகள் என்று பன்மையில் கூறப்பட்டிருக்கிறது. போடுகிற இடம் பெரிது.
கடற்கரை மண்ணெல்லாம்...
இரண்டாவது அமைவு.
கோலம்
வீடு வெளி இரண்டு பிரதேசங்களிலும் கோலம் வரையப்படுவது மரபு. கோலம் இடப்பொருளாகத் தெரிகிறது. பார்வைக்கு இடப் பொருளானாலும் உண்மையில் அது காலப் பொருளானது. காலம் நன்றாக இருந்தால்தான் கோலம் வரையப்படுகிறது. இறப்பு நிகழ்ந்த வீட்டில் கோலம் வரையப்படுவதில்லை. இக் கவிதை 'பொழுது விடிந்து' என்று தொடங்குகிறது. பொழுது விடிந்து நீண்ட நேரமாகியும் ஒரு வீட்டில் கோலம் வாசலில் இடப்படவில்லை என்றால் அந்த வீட்டில் ஏதோ அமங்கலம் என்று பொருள். இக் கவிதை மங்கலமான விஷயத்தையும் சொல்கிறது.
வீட்டிலிருந்து வெளியே போகிறவர், வீட்டுக்கு வருகிறவர் ஆகிய இருவருக்குமே கோலம் பொதுவானதால் அது 'அகம், புறம்' என்ற தத்துவத்துக்கு அப்பால் செயல்படுகிறது. வீட்டில் இருப்பவர் வீட்டைவிட்டு வெளியே செல்வதென்றால் முதலில் வாசலில் பெயருக்காவது ஒரு சிறிய கோலமாவது போட்டு விட்டுத்தான் பிறகு அவர்களால் வெளியே செல்ல அனுமதிப்பது மரபு. ஏனென்றால் கோலமில்லாமல் வாசலைப் பிரேதம்தான் கடக்கிறது.
இக்கவிதையில் பொழுது விடிவு + விழாக்கோலம் என்ற அமைவு புலனாகிறது.
விழாத் தலைவர் 'யார்?' 'வருவேன்' என்று சொல்வது யார்? கடற்கரை, நண்டு என்ற சொற்களைக்கொண்டு பார்த்தால் 'வருவேன்' என்று சொல்வது 'சூரியன்'தான். ஆனால், கவிதை 'வருவேன்' என்ற சொல்லாட்சியில் ஒரு திருகலைக்கொடுக்கிறது. சூரியனுக்குத் தினகரன் என்று பெயர். அவன் தினத்தைச் செய்கிறவன். அதனால் தினகரன். 'வருவேன்' என்றவன் சூரியன் என்று பொருள் கொண்டால் கடலைப் புறப்பகுதியாகக்கொண்ட வீட்டுக்காரனான சூரியன் கோலமிட்ட கடற்கரையை வாசலாகக் கண்டு மகிழ்ந்து சொல்கிறான் என்று பொருள்படுகிறது. இதிலிருந்து ஒரு வாசகம் உருவாகிறது. அது கடக ராசியில் சூரியன் வருகிறான் என்பது. கடகராசி என்பது நண்டுக் கூட்டம். எனவே கடக ராசியில் சூரியனுக்கு வரவேற்புக் கூறி மகிழ்கிறது இக் கவிதை. வருவேன் என்ற செயல் கடற்கரைக்குப் போகிறவனையும் சாதாரண நிலையில் குறிக்கிறது. கடற்கரையில் நண்டுகள் விட்டுச்சென்ற தடங்களைக் கண்ட நெஞ்சில் இப்படி எழுந்து அமைகிறது கவிதை.''
கோலம் போடறத பத்தி எனக்கு சில மாற்று கருத்து இருந்தாலும், இந்தக் கவிதைக்கான விளக்கமா ஞானக்கூத்தன் எழுதியிருக்கறதை படிக்கிறப்ப 'அட'னு தோணுது.
அவரோட 'நானும் நானும்' புத்தகத்திலிருந்து சில கவிதைகளை பகிர்கிறேன்.
அது வேறு உலகம்
ஓணான் முதுகாய்த் தெரியும்
புளிய மரக்கிளைகளுக்கும்
இடமுண்டு
என் பால்ய உலகில்
சுட்டுப் பொசுக்கி தின்பதுண்டு
சிட்டுக் குருவிகளை
துவாரம் விழுந்த
கால்சட்டைப் பையில்
கைவிடச் சொல்லியிருக்கிறேன்
பக்கத்து வீட்டுப் பெண்ணை
கடிதமெழுதி சித்தியை
காதலித்த கணம்
கலைந்த உலகம்
இன்னும் சுழல்கிறது நினைப்பில்
கிழிந்த காற்றாடியாய்...
---------
''நானும் நானும்''
தெருக்காட்சியில்
ஓசையற்றுத் தெரிகிறேன்
தூரத்து அருவியாய்
அநேகமாக
நடமாடும் தாவரம் போல்
யாவருக்கும் தோன்றுகிறேன்
ற்தோவொரு பூவின்
விஸ்வ - ரூபமாகத் தெரிந்தாலும்
தெரிவேன் போலிருக்கிறது
ஆனால்; காலமும்
காலமின்மையும் சந்திக்கும்
நிமிர்கோடாய் நிற்பதுதான் என்முகம்
அதிலிருந்து ஓர்
நிசப்தம்
ஒலிப்பரப்பாகிறது எப்போதும்
-----------
இலக்கிய கோத்ரங்கள்
விலை உயர் சிற்றுண்டி நிலையம்
பழச்சாறு அருந்தும் தோழி தோழன்
நாய்கள் வளர்க்கும் சீமாட்டி
மாருதி ஓட்டும் கனவான்
எவருக்கும் சான்றிதழ் கிடையா
மேலும் தீண்டத் தகாதோர்
பட்டியலில் பலருண்டு
கரிசல் காட்டில் முகாமிட்டு
இலக்கிய தாசில்தார்
கையேடு வைத்திருக்கிறார்
தருவார்
இலக்கிய மாந்தர் முத்திரை
பத்தாம் தேதி நாஞ்சில் நாடு
இருபதாம் தேதி கொங்கு நாடு
ஆங்காங்கு சிபாரிசுத் தரகர் குலம்
பெருநகர தமிழில் அணுகாதீர் அய்யா
நாட்டுப் புற தமிழே உச்சம்...
------------
மண்
மண்ணில் உட்கார்ந்ததும்
சொந்தம்
இயல்பாக ஒட்டிக் கொள்கிறது
அதன் மெளனம்
நிறம்
அமைதி
கொஞ்சமும் தலையிடவில்லை
எத்தனை தூரம் நடந்தாலும்
உடன் இருக்கிறது
கவனித்துக் கொண்டே இருக்கிறது
ஒருநாள்
மண்ணோடு மண்ணாகிவிட
ஆதங்கம் வந்தது
சாய்ந்தேன்
மண்ணே இல்லாமல்
ஆகாயம் தெரிந்தது
---------
நான் ஏதோ மலையில்
கல்லுடைப்பதாக எண்ணி
அனைவரும்
அலட்சியமாக பார்த்தனர்
அவர்களுக்குத் தெரியவில்லை
நான்
மலையை உடைத்துக் கொண்டிருக்கிறேன்.
----------
ஒழிந்த நேரங்கள்
நான்
ஒழிந்த நேரத்தில் பிறந்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் வளர்ந்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் படித்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் எழுதினேன்
நான்
ஒழிந்த நேரத்தில் விளையாடினேன்
நான்
ஒழிந்த நேரத்தில் காதலித்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் சம்பாதித்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் கல்யாணம் செய்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் புணர்ந்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் பிள்ளை பெற்றேன்
நான்
ஒழிந்த நேரத்தில் குடித்தேன்
நான்
ஒழிந்த நேரத்தில் தூங்கினேன்
நான்
ஒழிந்த நேரத்தில் சாமி கும்பிட்டேன்
நண்பர்களே வாருங்கள்
ஒழிந்த நேரம் பார்த்து
ஒழிந்த நேரம் ஒன்றில்
நான் செத்துப் போகும் முன்...
----------
"பாடைக் காட்சி"
நான்கு பேர் சுமக்க
கடற்கரையிலிருந்து பாடை கிளம்பியது
பேசியபடி நண்பர்கள் சிலர்
பாடையை தொடர்ந்தார்கள்
யாருடைய முகத்திலும் வருத்தமில்லை
ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு போனார்கள்
பாடையைத் தூக்கிக் சென்றவர்கள்
மிகவும் நிதானமாக நடந்தார்கள்
பாடை குலுங்காமலும்
அதிகம் அசையாமலும்
கவனித்துக் கொண்டார்கள்
நண்பர்கள் சிகரெட் பற்ற வைத்தார்கள்
சினிமா பற்றியும் அரசியல் பற்றியும்
விவாதித்தார்கள்.
பஸ்ஸிலும் தெருவிலும் பலர்
பாடைக் காட்சியை கண்டார்கள்
சாலத்தில் கழுத்தில் மாலை இல்லை
பின் போனவர்கள் யாரிடமும்
மரண காரியம் செய்யும் தோற்றமில்லை
பீடிக்கு தீ கேட்பதுபோல
ரிக்ஷாகாரன் ஒருவர்
நெருங்கி வந்து கேட்டான்
செத்து போனது யார் ஸார்?
ஒருவனும் அவனுக்கு பதில் சொல்லவில்லை
வெகுநேரம் சென்றபின் பாடை
திண்ணையிட்ட ஒரு வீட்டெதிரில்
இறக்கப்பட்டது.
எல்லோரும் மௌனமாக நின்றார்கள்
பாடையில் இருந்தவர் எழுந்து
வீட்டிற்குள் போனார்
தூக்கி வந்தவர்களுக்குப் பணம் தந்துவிட்டு
நண்பர்கள் உள்ளே சென்றார்கள்
வீட்டுப் பெண்கள் கலவரமடைந்து கேட்டார்கள்
என்ன கர்மம் இது
ஏனிப்படி பாடையில் வரணும்?
ரொம்பத்தான் களைப்பாக இருந்த்து
பஸ் டாக்ஸி ரிக்ஷா
எதிலும் ஏறப் பிடிக்கவில்லை
பாடையில் படுத்து நன்றாக
தூங்கிக் கொண்டு வந்தேன் என்றார்
மரணம் நிகழ்ந்த துக்கம்
முகங்களில் படர
பெண்கள் நிசப்தமானார்கள்
களைப்புடன் நண்பர்களும்
நாற்காலிகளில் சாய்ந்து
கண்மூட
வெற்றுப்பாடை
வீதியில் போனது.
ஒவ்வொருத்தருக்குள்ளேயும்தான் சொல்றதுக்கும் எழுதறதுக்கும் எவ்ளோ விஷயம் இருக்கு இல்லே? என் பக்கத்துலே இருந்த ஆயாவுக்குள்லே இருக்கற விஷயங்களை/கதைகளை/வாழ்க்கையையே என்னாலே இன்னும் முழுசா தெரிஞ்சுக்க முடியலை...ஸ்டெல்லா புரூஸூக்குள்ளேயும் எவ்ளோ இருந்திருக்கும்?!
மரச்சட்டம் போட்ட கண்ணாடிக்கு பின்னால் இருக்கற தாத்தா,மாமா ஃபோட்டாவெல்லாம் பார்த்து அவங்கள்ளாம் இப்போ எங்கேன்னு சின்ன வயசுலே கேட்டப்போ ராத்திரி வானத்தை காட்டி 'அவங்க நட்சத்திரமாயிட்டாங்க, அதோ அங்கே தெரியறாங்க'-ன்னு
சொல்லுவாங்க சின்ன மாமா. நாங்களும், ஆளுக்கொரு நட்சத்திரத்தை பார்த்துக்கிட்டு இருப்போம். "அதோ உன்னை பார்த்து கண் சிமிட்டறாங்க, பாரு"ன்னு சொன்னதும் எந்த நட்சத்திரம் மினுக்குதோ அதை தாத்தாவாவும், சின்ன நட்சத்திரங்களை மத்த ஃபோட்டாலே இருக்கறவங்களாவும் கற்பனை பண்ணிக்குவோம்.
பப்புவுக்காக என் தம்பி இருட்டுலே மினுக்கற நட்சத்திர ஸ்டிக்கர்களை ஒட்டி வைச்சிருந்தான்.
நேத்து இந்த கவிதையெல்லாம் படிச்சுட்டு, லைட் ஆஃப் பண்ணிட்டு, யோசிச்சிட்டு இருந்தப்போ மேலே இருந்த ஒரு பெரிய நட்சத்திரம் மினுக்கறா மாதிரி இருந்தது....
ஆத்மாநாமை நான் படிச்சதில்ல. ஆனா, அவரும் தற்கொலை செஞ்சு இறந்ததா கேள்விப்பட்டிருக்கேன். ஆத்மாநாம் மூலமா கவிதைல அறிமுகமான ஸ்டெல்லா புரூஸும் தற்கொலை செஞ்சுகிட்டாரு.
இந்த முரணை எப்படி புரிஞ்சுக்கறது?
Monday, February 01, 2010
பொண்ணு வளர்க்கறதுக்கும் பையன் வளர்க்கறதுக்கும்....
மூன்று வயதில் எனக்கு விளையாடக்
கிடைத்தன சிக்-சா படப்புதிர்கள்.
தம்பிக்கு மூன்று வயதில் மூன்று சக்கர சைக்கிள்.
வாட்டர் கலர், பெயிண்டிங் புக், க்யூப் -களோடு பொழுது கழிந்தது
ஐந்து வயது வரை.
பேட்டரி கார், ரேஸ் கார்,பஸ், ட்ரக் -களோடு தூங்கினான் தம்பி.
பிறந்தநாள்கள் ஒவ்வொன்றும் எனக்குத் தந்துவிட்டு போயின
ஃபேரி டேல் புத்தகங்கள்,
நீண்ட தலைமுடி கொண்ட பொம்மைகள்
மற்றும் மட்பாண்டங்களோடு கேஸ் அடுப்பு.
தம்பியின் பிறந்தநாள்கள் கொண்டு வந்தன
ரிமோட் கார்கள், ஏரோப்ளேன், ஹெலிகாப்டர் மற்றும் பைக்குகள்.
எனக்கு ரிங்பால் வாங்கியபோது
அவனுக்குரியதாயிற்று மட்டைபந்தும் கால்பந்துகளும்.
கண்காட்சிகளில்
கலைடாஸ்கோப்பும், அலுமினிய சமையல்செட்டும்
என்னை வந்தடைய
இரட்டைகுழல் துப்பாக்கியும், காமிராவும்
அவனுக்குரியனவையாகின.
இவை தவிர,
ஒன்றாய் விளையாட செஸ்ஸும் கேரமும் இருந்தாலும்
'நான் சொல்றா மாதிரி அடிக்கணும்' என்ற கண்டிஷனோடே
அமைந்தது கூட்டணி.
டூத்பிரஷ்களோ பென்சில் பாக்ஸ்களோ
வாங்கி வந்தது எதுவாயினும்
இளஞ்சிவப்பு நிறமே என்னுடையதாயிற்று.
இளஞ்சிவப்பு நிறம் தவிர்த்தது அவனுக்குரியது.
ஆண்டு விழாக்களில்
பாரதியார் வேடமும் கண்ணன் வேடமும்
அவனுக்குக் கிட்ட
பாரதமாதாவும் ஔவையார் வேடமும்
நான் தாங்கினேன்.
‘ரெண்டு பசங்களை வச்சிக்கிட்டு தொல்ல தாங்கல டீச்சர்,
பொண்ணுங்கள பெத்திருந்தா நிம்மதியா இருந்திருக்கலாம், அதுங்க
பாட்டுக்கு வேலையை பார்த்துக்கிட்டு இருந்திருக்கும்'
அலுத்துக்கொண்ட கீழ்வீட்டு ஹரிஷ் அம்மாவிடம்
சொல்லிக்கொண்டிருந்தார் அம்மா
'ஆமாம்மா,பொண்ணு வளர்க்கறதுக்கும்
பையன் வளர்க்கறதுக்கும் நல்லா டிஃபரன்ஸ் தெரியும்' !!
கிடைத்தன சிக்-சா படப்புதிர்கள்.
தம்பிக்கு மூன்று வயதில் மூன்று சக்கர சைக்கிள்.
வாட்டர் கலர், பெயிண்டிங் புக், க்யூப் -களோடு பொழுது கழிந்தது
ஐந்து வயது வரை.
பேட்டரி கார், ரேஸ் கார்,பஸ், ட்ரக் -களோடு தூங்கினான் தம்பி.
பிறந்தநாள்கள் ஒவ்வொன்றும் எனக்குத் தந்துவிட்டு போயின
ஃபேரி டேல் புத்தகங்கள்,
நீண்ட தலைமுடி கொண்ட பொம்மைகள்
மற்றும் மட்பாண்டங்களோடு கேஸ் அடுப்பு.
தம்பியின் பிறந்தநாள்கள் கொண்டு வந்தன
ரிமோட் கார்கள், ஏரோப்ளேன், ஹெலிகாப்டர் மற்றும் பைக்குகள்.
எனக்கு ரிங்பால் வாங்கியபோது
அவனுக்குரியதாயிற்று மட்டைபந்தும் கால்பந்துகளும்.
கண்காட்சிகளில்
கலைடாஸ்கோப்பும், அலுமினிய சமையல்செட்டும்
என்னை வந்தடைய
இரட்டைகுழல் துப்பாக்கியும், காமிராவும்
அவனுக்குரியனவையாகின.
இவை தவிர,
ஒன்றாய் விளையாட செஸ்ஸும் கேரமும் இருந்தாலும்
'நான் சொல்றா மாதிரி அடிக்கணும்' என்ற கண்டிஷனோடே
அமைந்தது கூட்டணி.
டூத்பிரஷ்களோ பென்சில் பாக்ஸ்களோ
வாங்கி வந்தது எதுவாயினும்
இளஞ்சிவப்பு நிறமே என்னுடையதாயிற்று.
இளஞ்சிவப்பு நிறம் தவிர்த்தது அவனுக்குரியது.
ஆண்டு விழாக்களில்
பாரதியார் வேடமும் கண்ணன் வேடமும்
அவனுக்குக் கிட்ட
பாரதமாதாவும் ஔவையார் வேடமும்
நான் தாங்கினேன்.
‘ரெண்டு பசங்களை வச்சிக்கிட்டு தொல்ல தாங்கல டீச்சர்,
பொண்ணுங்கள பெத்திருந்தா நிம்மதியா இருந்திருக்கலாம், அதுங்க
பாட்டுக்கு வேலையை பார்த்துக்கிட்டு இருந்திருக்கும்'
அலுத்துக்கொண்ட கீழ்வீட்டு ஹரிஷ் அம்மாவிடம்
சொல்லிக்கொண்டிருந்தார் அம்மா
'ஆமாம்மா,பொண்ணு வளர்க்கறதுக்கும்
பையன் வளர்க்கறதுக்கும் நல்லா டிஃபரன்ஸ் தெரியும்' !!
Wednesday, January 13, 2010
பிரித்தலும் கோர்த்தலும்
தழைய தழைய தொங்க வேண்டுமாம் தாலி
சொல்கிறாள் அம்மா.
வயிறு வரை நீண்டிருந்தது
கழுத்துக்குப் பின்னிருந்த முடிச்சுகள் உறுத்தியபடி.
மூணு மாசம்தான் அப்புறம் பிரிச்சுக் கோர்த்துக்கலாம்
இம்முறையும் அம்மாதான்.
வாசலில் யாரிடமோ கையாட்டியபடி
பேசி சிரித்துக்கொண்டிருக்கும்
அவனை பார்க்கிறேன்
மணிக்கட்டில் பளபளத்தது புதுச்சங்கிலி.
இனிமே புடவைதானே, அண்ணி
திசைதிருப்பியது மூத்த நாத்தனாரின் குரல்.
கட்டுக்கழுத்தி வளையல் போடாம இருக்கக்கூடாது
மாமியாரின் கவலை கையொடித்தது.
தாலி கட்டியவனை அலுவலகம் அனுப்பி
எனை விடுப்பெடுக்க வைத்த
நல்லதொருநாளில்
பிரித்துக் கோர்க்கப்பட்டது மஞ்சள்கயிறு
தங்கச்சங்கிலியுடன்.
வைபவத்திற்கு வந்தவர்களை
வழியனுப்பித் திரும்புகையில்
அவனது
கண்களின் திசை அறிந்து மௌனமாய்
கேட்டுக்கொள்கிறேன்
அவனது பார்வையை பிரித்துக் கோர்ப்பது
யார்??
குறிப்பு : ‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக.
சொல்கிறாள் அம்மா.
வயிறு வரை நீண்டிருந்தது
கழுத்துக்குப் பின்னிருந்த முடிச்சுகள் உறுத்தியபடி.
மூணு மாசம்தான் அப்புறம் பிரிச்சுக் கோர்த்துக்கலாம்
இம்முறையும் அம்மாதான்.
வாசலில் யாரிடமோ கையாட்டியபடி
பேசி சிரித்துக்கொண்டிருக்கும்
அவனை பார்க்கிறேன்
மணிக்கட்டில் பளபளத்தது புதுச்சங்கிலி.
இனிமே புடவைதானே, அண்ணி
திசைதிருப்பியது மூத்த நாத்தனாரின் குரல்.
கட்டுக்கழுத்தி வளையல் போடாம இருக்கக்கூடாது
மாமியாரின் கவலை கையொடித்தது.
தாலி கட்டியவனை அலுவலகம் அனுப்பி
எனை விடுப்பெடுக்க வைத்த
நல்லதொருநாளில்
பிரித்துக் கோர்க்கப்பட்டது மஞ்சள்கயிறு
தங்கச்சங்கிலியுடன்.
வைபவத்திற்கு வந்தவர்களை
வழியனுப்பித் திரும்புகையில்
அவனது
கண்களின் திசை அறிந்து மௌனமாய்
கேட்டுக்கொள்கிறேன்
அவனது பார்வையை பிரித்துக் கோர்ப்பது
யார்??
குறிப்பு : ‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக.
Thursday, April 30, 2009
பரீட்சை நேரக் கவிதை!
வாழ்வின்விடியலுக்காய்
நான் காத்திருக்கிறேன்!
விடியும் நேரம் நான்
விழிக்காமல் போகலாம்!
எனினும்,
கடந்துசென்ற நேற்றும்
நிகழ்கின்ற இந்த நொடியும்
என் கைகளில் கிடைத்தால்
கண்ணாடிபெட்டியில்
பூட்டிவைத்துக் கொள்வேன் நான்!
வரப்போகும் நாளையை
முறையாய் பயன்படுத்த
எனக்கது பாடஞ்சொல்லும்!!
(உபயம் : பள்ளிக்காலத்து டைரி!)
நோ டென்ஷன்..ப்ளீஸ்!! முழு ஆண்டு பரீட்சை ஆரம்பிக்குதுன்னு கால அட்டவணை கொடுப்பாங்கல்ல, அதுக்கு அப்புறம்தானனே நாம புத்தகத்தையே புரட்டுவோம்..இவ்வளவு இருக்கே, இதை எப்படிடா படிச்சு முடிக்கறதுன்னு ஒரு மலைப்பு வருமே..அந்த நேரத்துல எழுதினது இது! அதுக்காக அடுத்த வருஷம் புத்தி வந்துருக்கும்னா நினைக்கறீங்க...ஹிஹி!
நான் காத்திருக்கிறேன்!
விடியும் நேரம் நான்
விழிக்காமல் போகலாம்!
எனினும்,
கடந்துசென்ற நேற்றும்
நிகழ்கின்ற இந்த நொடியும்
என் கைகளில் கிடைத்தால்
கண்ணாடிபெட்டியில்
பூட்டிவைத்துக் கொள்வேன் நான்!
வரப்போகும் நாளையை
முறையாய் பயன்படுத்த
எனக்கது பாடஞ்சொல்லும்!!
(உபயம் : பள்ளிக்காலத்து டைரி!)
நோ டென்ஷன்..ப்ளீஸ்!! முழு ஆண்டு பரீட்சை ஆரம்பிக்குதுன்னு கால அட்டவணை கொடுப்பாங்கல்ல, அதுக்கு அப்புறம்தானனே நாம புத்தகத்தையே புரட்டுவோம்..இவ்வளவு இருக்கே, இதை எப்படிடா படிச்சு முடிக்கறதுன்னு ஒரு மலைப்பு வருமே..அந்த நேரத்துல எழுதினது இது! அதுக்காக அடுத்த வருஷம் புத்தி வந்துருக்கும்னா நினைக்கறீங்க...ஹிஹி!
Monday, April 20, 2009
அ ஃபார் ....
அ ஃபார் அவ்வ்வ்வ்வ்!
அவ்வ்வ்வ் என்பது பின்னூட்டங்களிலும், பதிவுகளிலும் என்னால் தவிர்க்க முடியாததாகிவிட்டது!
:-) ஆனால், அது என்னைப் பொறுத்த வரை அழுவது மாதிரி மட்டுமல்ல! அதிர்ச்சி அல்லது
ஜெர்க்கான ப்லீங்சை பிரதிபலிக்கவும்தான்! இன்று நான் சந்தித்த சில அவ்வ்வ்வ் தருணங்கள்!
தருணம் 1 :
காலையில் எழுந்தவுடனே பப்பு கதை சொல்லு என்றாள், பக்கத்திலிருந்த புத்தகத்தை எடுத்து!
உனக்கேத் தெரியுமே, நீ சொல்லு பப்பு!
நாளைக்கு நீ சொன்னது, எனக்கு ஞாபகம் இல்ல! இன்னொரு வாட்டி சொல்லு!
அவ்வ்வ்வ்!
தருணம் 2 :
தற்போது வீட்டு வேலைக்கு உதவியாயிருந்த ஷோபனா அக்காவும் நின்றுவிட திரும்பவும் ஆள் தேடும் வேட்டை. இன்று காலை ஒரு ஆயா வந்திருந்தார்கள்.மேல்வேலைகளுக்கு மட்டும்.
பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தார்கள்.
சமையல் செய்வீங்களா?
ம்ம்..செய்வேன்மா, அங்க இருந்தேன்ல, ரெண்டு நாய்ங்களுக்கு நாந்தான் சாப்பாடு செய்வேன்!
சாப்பாடு வைப்பேன்!!
அவ்வ்வ்வ்வ்வ்!
முன்பு வேலை செய்த இடத்தில் இரு நாய்க்குட்டிகளை கவனித்துக் கொண்டார்களாம்,அந்த நாய்க்குட்டிகளுக்கு் சாப்பாடு செய்ததைத் தான் அப்படி சொல்லியிருக்கிறார்கள்! I dropped the idea!

அ ஃபார் ...
இது புதிதாக தோன்றிய ஐடியா,பப்புவிடமிருந்துதான்! அவள் எதற்கோ அப்படி சொல்லப் போக என்னையும் தொத்திக்கொண்டது. அ, ஆ, இ, ஈ என்று தொடங்கும் எழுத்துகளில் தோன்றுவதைப் பதிவிடலாமென்று. தினமும் போடுவேனென்று சொல்ல முடியாது, ஆனால் இந்த சீரிஸை தொடர்வேன்!
Saturday, March 07, 2009
சிநேகம்
என் உயிர்ப்பறவை
உந்தன் நிழல் தேடிப் போகும்
ஆசைகள் உறவுக்கூட்டினிலிட்ட
முட்டைகளாய்
நிச்சலனமாய் நிம்மதியாய் உறங்கும்!
எங்கோ தூரத்தில் கேட்ட
மணியோசையாய்...
தொலைவில் பெய்தமழையால்
மூக்கை நெருடும் மண்வாசனையாய்
மனம் பழைய நினைவுகளில் ரீங்கரிக்கும்...
உன்னைச் சந்திக்கும் காலம்
வருவதற்குள்
என் உயிர்ப்பறவை
முந்திக் கொண்ட காலனின்
அம்பினுள்!
(உபயம் : பள்ளிக்காலத்து நோட்டுபுக்)
உந்தன் நிழல் தேடிப் போகும்
ஆசைகள் உறவுக்கூட்டினிலிட்ட
முட்டைகளாய்
நிச்சலனமாய் நிம்மதியாய் உறங்கும்!
எங்கோ தூரத்தில் கேட்ட
மணியோசையாய்...
தொலைவில் பெய்தமழையால்
மூக்கை நெருடும் மண்வாசனையாய்
மனம் பழைய நினைவுகளில் ரீங்கரிக்கும்...
உன்னைச் சந்திக்கும் காலம்
வருவதற்குள்
என் உயிர்ப்பறவை
முந்திக் கொண்ட காலனின்
அம்பினுள்!
(உபயம் : பள்ளிக்காலத்து நோட்டுபுக்)
Wednesday, March 04, 2009
தவளைக் கனவுகள்!

(படம் - நன்றி கூகுள்!)
அழகழகான வண்ண வண்ன
உடைகளுண்டு
விளையாட தோட்டங்கள் - உண்டு
சூரியன் மறையும் அந்திசாயும்
நேரமுண்டு
தூக்கிப் போட்டுப் பிடிக்க
பந்துமுண்டு,
பந்து சென்று விழுந்த
கிணறுமுண்டு
கிணற்றடியில் தவளைகள்
தாவித்தாவி குதிக்கின்றன.
எல்லாமே இருந்தென்ன பயன்?
எப்போது பேசும் இந்த தவளை?
உடைகளுண்டு
விளையாட தோட்டங்கள் - உண்டு
சூரியன் மறையும் அந்திசாயும்
நேரமுண்டு
தூக்கிப் போட்டுப் பிடிக்க
பந்துமுண்டு,
பந்து சென்று விழுந்த
கிணறுமுண்டு
கிணற்றடியில் தவளைகள்
தாவித்தாவி குதிக்கின்றன.
எல்லாமே இருந்தென்ன பயன்?
எப்போது பேசும் இந்த தவளை?
என்னடா ஆச்சு முல்லைக்கு யோசிக்க வேண்டாம்...நம்ம முத்துலெட்சுமி லேட்டஸ்ட் கவிதையை படிச்சேன்..அதான் இந்த எஃபெக்ட்! இதை எதிர் கவுஜன்னு சொல்லுவீங்களோ..காப்பிக் கவுஜன்னு சொல்லுவீங்களோ..இல்லை ப்ளேக்கரிஸக் கவுஜன்னு சொல்லுவீங்களோ எனக்குத் தெரியாது...ஆனா கவுஜ-தான்னு ஒப்புக்கணும்..ஓக்கே!! :-)
நன்றி டூ முத்து அனுமதி தந்ததற்கு!
Monday, February 09, 2009
Height of self-love??
மு.கு : இக்கவிதை என்பது பழைய நோட்டுப்புத்தகத்திலிருந்து அல்ல..எனது டைரியிலிருந்து! :-) எனது அறையில் ஒரு ஆளுயரக் கண்ணாடி இருந்தது. அவ்வப்போதும், அல்லது போகும் போதும் வரும்போது நின்று ஒரு பார்வைப் பார்த்துக் கொள்வது மிகப் பிடித்தமானதொன்றெனக்கு! அதன் மிகைப் படுத்தலே இக்கவிதை!!
என் கண்ணாடிக்கு..
எனக்குள், என் பூட்டிய அறைக்குள்
என் உறவுகளனைத்தும்
உன்னுடனும், புத்தகங்களுடனும்தான்!
என்னுடய உலகினில்
செய்திகள் எதுவாயினும்
நான் பகிர்ந்துக் கொள்வது
உன்னுடன்தான்....
உன்னுடன் மட்டும்தான்!
என் வாழ்வின் அர்த்தங்களையும்
வெற்றிகளையும்
முன்னேற்றங்களையும்
நான் பகிர்ந்துக் கொள்வது
உன்னுடன்தான்!
எனக்குள் நிகவும் மாற்றங்களை
எனக்கு உணர்த்தும் நண்பன்
நீதான்..
நீ மட்டும்தான்!
எனக்குள் நான் நேசிப்பதெல்லாம்
உன்னையும்
உனக்குள் தெரியும் என்னையும்தான்!
என்றும் நேசமுடன்
உன்
நிஜபிம்பம்!!
சொல்ல மறந்தது : "I am sixteen..going on seventeen" - phase டைரி!!
என் கண்ணாடிக்கு..
எனக்குள், என் பூட்டிய அறைக்குள்
என் உறவுகளனைத்தும்
உன்னுடனும், புத்தகங்களுடனும்தான்!
என்னுடய உலகினில்
செய்திகள் எதுவாயினும்
நான் பகிர்ந்துக் கொள்வது
உன்னுடன்தான்....
உன்னுடன் மட்டும்தான்!
என் வாழ்வின் அர்த்தங்களையும்
வெற்றிகளையும்
முன்னேற்றங்களையும்
நான் பகிர்ந்துக் கொள்வது
உன்னுடன்தான்!
எனக்குள் நிகவும் மாற்றங்களை
எனக்கு உணர்த்தும் நண்பன்
நீதான்..
நீ மட்டும்தான்!
எனக்குள் நான் நேசிப்பதெல்லாம்
உன்னையும்
உனக்குள் தெரியும் என்னையும்தான்!
என்றும் நேசமுடன்
உன்
நிஜபிம்பம்!!
சொல்ல மறந்தது : "I am sixteen..going on seventeen" - phase டைரி!!
Friday, January 09, 2009
பழசும் புதுசும்!
இது புதுசு :
அதிரவைத்தக் கணங்களையும்
இசைத்துச் சென்ற நொடிகளையும்
ஒரு பேழைக்குள்
சேமிக்கத்
தொடங்கினேன் நோவாவைப் போல்!
தரைதட்டியபோது
கனத்துவிட்ட காலத்துளிகளின்
எஞ்சிய சிறகுகளை
முத்தமிட்டு
பறக்கவிட்டேன் அன்புவெளியில்..
எண்ணங்களின் திரைகள்விலக்கி
எதிர்ப்பார்ப்புகள் ஏதுமற்று
காத்துக்கொண்டிருக்கிறேன்
மண்ணுருண்டையிலிருந்து
திரும்பிவரும்
நுனையிலைக்காக!!
இது பழசு: சகுனம்
”ச்சே!ச்சே”! நான் நல்லக் காரியமா பொறப்படற போதுதான் இவன் வந்துத் தொலைப்பான். ச்சே, ஏந்தான் இப்படி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கிறான்களோ!
நீங்களே சொல்லுங்க சார்! ஒருநாள, ரெண்டுநாள்னா பரவாயில்லே! தெனமுமா?வெவஸ்தையில்லே, இந்த மனுஷனுக்கு!இவன் எதிர்லே வந்து தொலையறதுனாலே நான் போற காரியம் எதுவும் ஒழுங்கா உருப்படியா முடிய மாட்டேங்கறது சார்!
ஒரு நியாயம் சொல்லுங்க சார், எனக்கு! நேத்தும் இப்படிதான், பக்கத்துத் தெரு கோபலன் கிட்டே போய் ஐம்பது ரூபாய் கடன் வாங்கலாம்னா இவன் எதிர்ல வந்துட்டான்! போன காரியம் அவ்ளோதான்!
என்ன சார், நினைச்சிருக்கான் இவன் மனசுல?” என்று என்னிடம் கேட்ட பூனைக்கு என்ன பதில செல்வதெனத் தெரியாம்ல் விழித்தேன் நான்!
அதிரவைத்தக் கணங்களையும்
இசைத்துச் சென்ற நொடிகளையும்
ஒரு பேழைக்குள்
சேமிக்கத்
தொடங்கினேன் நோவாவைப் போல்!
தரைதட்டியபோது
கனத்துவிட்ட காலத்துளிகளின்
எஞ்சிய சிறகுகளை
முத்தமிட்டு
பறக்கவிட்டேன் அன்புவெளியில்..
எண்ணங்களின் திரைகள்விலக்கி
எதிர்ப்பார்ப்புகள் ஏதுமற்று
காத்துக்கொண்டிருக்கிறேன்
மண்ணுருண்டையிலிருந்து
திரும்பிவரும்
நுனையிலைக்காக!!
இது பழசு: சகுனம்
”ச்சே!ச்சே”! நான் நல்லக் காரியமா பொறப்படற போதுதான் இவன் வந்துத் தொலைப்பான். ச்சே, ஏந்தான் இப்படி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கிறான்களோ!
நீங்களே சொல்லுங்க சார்! ஒருநாள, ரெண்டுநாள்னா பரவாயில்லே! தெனமுமா?வெவஸ்தையில்லே, இந்த மனுஷனுக்கு!இவன் எதிர்லே வந்து தொலையறதுனாலே நான் போற காரியம் எதுவும் ஒழுங்கா உருப்படியா முடிய மாட்டேங்கறது சார்!
ஒரு நியாயம் சொல்லுங்க சார், எனக்கு! நேத்தும் இப்படிதான், பக்கத்துத் தெரு கோபலன் கிட்டே போய் ஐம்பது ரூபாய் கடன் வாங்கலாம்னா இவன் எதிர்ல வந்துட்டான்! போன காரியம் அவ்ளோதான்!
என்ன சார், நினைச்சிருக்கான் இவன் மனசுல?” என்று என்னிடம் கேட்ட பூனைக்கு என்ன பதில செல்வதெனத் தெரியாம்ல் விழித்தேன் நான்!
Sunday, November 02, 2008
ஆட்டோகிராப் aka டைரி ரீவிசிட்டட்!!
12-ஆம் வகுப்பு படிக்கும்போது நான் வைத்திருந்த டைரியை ஊருக்குச் சென்றபோது கண்டெடுத்தேன். அதுவே எனது ஆட்டோகிராப் புத்தகமாயும் இருந்தது. டைரிக் குறிப்புகள் என்றால், இன்று இந்த ப்ராக்டிகல்ஸ் செய்தேன், இந்த சால்ட் வந்திருந்தது...எனக்குப் பிடித்த சில பாடல்கள், அதன் வரிகள்!! எல்லோருடைய ஆட்டோகிராப் எண்ட்ரிகளில் இருந்தது எதைப் பற்றியென்றால், நான் சொல்லும் கடி ஜோக்குகளைப் பற்றியும், என்னுடைய புன்னகையும்தான்..மேலும், சிரித்தால் குழி விழுவதைப் பற்றியும்!! எல்லாவற்றுக்கும் மேலாக அனைவரும் வாழ்த்தியிருந்தது புன்னகை வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் மாறிவிடக்கூடாதென்று! yes friends, the smile still remains the same with me, come what may the situations!!
ரீடர்ஸ் டைஜஸ்ட்-டிலிருந்து பிடித்த சில quotes-ம் எழுதி வைத்திருக்கிறேன், ஆவியிலிருந்ததும் சில கவிதைகளை!! அதைவிட சுவாரசியம், நானே கூட கவிதைகள் எழுதியிருக்கிறேன்..:-)). And I managed to get some interesting stickers with funny messages. ஆண்ட்ரி அகாஸியின் ஹைட், வெயிட், அட்ரஸ், சொத்து பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன! :(..ம்ம்ம்! ஒவ்வொரு பக்கத்திலும், ஏதாவதொரு ஸ்டிக்கர்/ரெயின்போ இருக்கிறது..நான் அப்பொழுதே ப்லாக் எழுத ஆரம்பித்துவிட்டேன் போலிருக்கிறாது!! அப்புறம் கோட் வேர்ட்ஸ் நிறையக் இருக்கிறது..ஆட்டோகிராப் என்ற பெயரில் கொஞ்சம் அட்வைஸ் வேறு!எதுகை மோனைகளிலும், உவமைகளிலும் மக்கள்ஸ் பின்னியெடுத்திருக்கிறார்கள்!எழுத்துப் பிழைகள் வேறு!
கொஞ்சம் சுமாராயிருக்கிறது என்று நான் எண்ணுகிற கவிதையை..
வாழ்வை
ஊடுருவிப்
பார்த்தபோது..!
எண்ணமுட்டை வெடித்து
வண்ணக்கனவுகள்
வானுயர வளர்ந்து நிற்கும்!
கனவுகள் கரியாய் மரித்து
உண்மைகள் இயல்பாய் புரிய
மனம் இயலாமையில்
சூம்பிப் போகும்!
நடப்புகளை கிரகிக்க
சக்தியற்ற மனம்
வெதும்பி வெதும்பி ஏங்கும்..
இனிமையாய் கழித்த
இளம்பிராயத்துக்காக....!
(அநேகமா எங்க பாட்டி ஏதாவது என்னைத் திட்டியிருப்பாங்க, அதுக்கு நான் இவ்ளோ பெரிய கவிதை எழுதியிருப்பேன்ன்னு நினைக்கிறேன்..காலையில் எழுந்து படிக்காததற்காக!சத்தியமா எதுக்கு இப்படியெல்லாம் எழுதினேன்னு இப்போ ஒன்னும் புரியல!!:-)))
ரீடர்ஸ் டைஜஸ்ட்-டிலிருந்து பிடித்த சில quotes-ம் எழுதி வைத்திருக்கிறேன், ஆவியிலிருந்ததும் சில கவிதைகளை!! அதைவிட சுவாரசியம், நானே கூட கவிதைகள் எழுதியிருக்கிறேன்..:-)). And I managed to get some interesting stickers with funny messages. ஆண்ட்ரி அகாஸியின் ஹைட், வெயிட், அட்ரஸ், சொத்து பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன! :(..ம்ம்ம்! ஒவ்வொரு பக்கத்திலும், ஏதாவதொரு ஸ்டிக்கர்/ரெயின்போ இருக்கிறது..நான் அப்பொழுதே ப்லாக் எழுத ஆரம்பித்துவிட்டேன் போலிருக்கிறாது!! அப்புறம் கோட் வேர்ட்ஸ் நிறையக் இருக்கிறது..ஆட்டோகிராப் என்ற பெயரில் கொஞ்சம் அட்வைஸ் வேறு!எதுகை மோனைகளிலும், உவமைகளிலும் மக்கள்ஸ் பின்னியெடுத்திருக்கிறார்கள்!எழுத்துப் பிழைகள் வேறு!
கொஞ்சம் சுமாராயிருக்கிறது என்று நான் எண்ணுகிற கவிதையை..
வாழ்வை
ஊடுருவிப்
பார்த்தபோது..!
எண்ணமுட்டை வெடித்து
வண்ணக்கனவுகள்
வானுயர வளர்ந்து நிற்கும்!
கனவுகள் கரியாய் மரித்து
உண்மைகள் இயல்பாய் புரிய
மனம் இயலாமையில்
சூம்பிப் போகும்!
நடப்புகளை கிரகிக்க
சக்தியற்ற மனம்
வெதும்பி வெதும்பி ஏங்கும்..
இனிமையாய் கழித்த
இளம்பிராயத்துக்காக....!
(அநேகமா எங்க பாட்டி ஏதாவது என்னைத் திட்டியிருப்பாங்க, அதுக்கு நான் இவ்ளோ பெரிய கவிதை எழுதியிருப்பேன்ன்னு நினைக்கிறேன்..காலையில் எழுந்து படிக்காததற்காக!சத்தியமா எதுக்கு இப்படியெல்லாம் எழுதினேன்னு இப்போ ஒன்னும் புரியல!!:-)))
Tuesday, January 08, 2008
அது ஒரு கதைக் காலம்

காக்கையை ஏமாற்றிய நரியும்
நரியை ஏமாற்றிய காக்கையும்
கொக்குக்கு விருந்து வைத்த ஓநாயும்
ஒநாய்க்கு விருந்து வைத்த கொக்கும்
திராட்சைக்கு ஏங்கிய நரியும்
பாட்டிவீட்டு தோட்டத்தில்
உலாவிக்கொண்டிருந்தன கேட்பாரற்று!
சன்,விஜய், கலைஞர் அலைவரிசைகளில்
கரைந்துப் போயிருந்தாள் பாட்டி!!
பஞ்ச காலத்தில்
காட்டில் தொலைத்து விடப்பட்ட
சித்திரக்குள்ளனும் அவன் சகோதரர்களும்
அலைந்துக்கொண்டிருந்தனர்...
தடயத்திற்காய் விட்டுவந்த
அப்பத்துண்டுகளைத் தேடி!!!
Friday, January 04, 2008
மழைக்கால நினைவுகள்

ஒவ்வொரு மழைக்காலமும்
கடந்து செல்கிறது...
என் நினைவுக்கூட்டில்
புதைந்திருக்கும்
உன் படிமங்களை
விடுவித்தபடி!!
Subscribe to:
Posts (Atom)