சமைப்பது என்பது எனக்கு அலர்ஜி.பேஷனுக்கு சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்! உண்மையில், சமைப்பதில் ஏனோ ஆர்வமிருந்ததே இல்லை, சாப்பிடுவதற்கு இருக்கும் அளவிற்கு! ஒருமுறை பெரிம்மாவிற்கு காய்ச்சல் வந்து, காபி போட்டு கொடும்மா என்றபோது, "காபி எப்படி போடணும்" என்றும், துவரம்பருப்பு கழுவி வை என்றபோது, "அது எப்படி இருக்கும்" என்றும் கேட்டு அசத்தியிருக்கிறேன். இவை தவிர சமைப்பதற்காகவென்று சமையலறைப்பக்கம் எட்டிப் பார்த்தது, மிக சொற்பமான சமயங்களில் தான்!
சொல்லப்போனால்,பையன்களை சமையலறைப்பக்கம் நமது அம்மாக்கள் விடுகிறார்களா என்ன, அதேபோல் தான் பெண்களுக்கும்! ஏதோ, ஒரு சில முன்னெச்சரிக்கை ஹிட்லர் அம்மாக்கள் லீவு நாட்களில் பெண்களுக்கு சமைக்க பழக்கி விடுவார்கள்! ஆர்வமிருக்கிற பெண்களும் சமைப்பதில் மூழ்கி முத்தெடுக்கத் துவங்குவார்கள்.(யாரும் சண்டைக்கு வராதீங்க, என் தோழியர் வட்டாரத்தில் நிகழந்ததை வைத்துத்தான் சொல்ல்யிருக்கிறேன்!) மத்தபடி, சராசரியாக பள்ளியிறுதி வரை பெண்கள் சமையலறைப் பக்கம் செல்வது மிகக் குறைவுதான்.கல்லூரி விடுதியிலிருந்து வீட்டுக்கு வந்தால், "பாவம், அதுவே ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு வந்திருக்கு, எதுக்கு" என்றும், நம்மை சமைக்கச் சொன்னால், " நானே ஹாஸ்டல்லேர்ந்து தப்பிச்சு வந்திருக்கேன், நல்ல சாப்பாடா சாப்பிடலாம்னு,என்னை ஏன் சமைக்கச் சொல்றீங்க (!)" என்று டயலாக் விட்டும் தப்பித்துக் கொள்ளலாம்!
இதில் நிறைய அட்வைஸ் ஆன்ட்டிகள் மற்றும் கிண்டல் கிருமிகளை கடந்து வர நேரிடும். "ஆம்பிளை பிள்ளையோ, பொம்பிளை பிள்ளையோ, இந்தக் காலத்துலே சமைக்கக் கத்துக்கணும், நான் கல்யாணம் பண்ணிகிட்டு வந்தப்போ உன்னை மாதிரிதான் இருந்தேன், சுத்தமா சமைக்கத் தெரியாது, எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா,அதனாலதான் சொல்றேன், நீயும் நேரம் இருக்கும்போதே கத்துக்கோ" என்று அட்வைஸூக்கு, "நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன், ஆன்ட்டி!" என்று ஷாக் கொடுக்கலாம். "என்ன ஆச்சி, உனக்கு ஒரு கேட்டரிங் மாப்பிள்ளை பார்த்துடலாமா" என்று கிண்டலடிப்பவர்களை, "அவங்க சமைக்கறது பார்க்கறதுக்குத்தான் நல்லாருக்கும் அண்ணா, சாப்பிட நல்லாருக்காது" என்றும் சமாளித்து (!) விலகிவிடலாம். இப்படி இருந்த என் வாழ்வில் நான் சமைக்கக் கூடிய தருணமும் வந்தது!
திருமணம் முடிந்து, சுற்றங்கள் எல்லாம் ஒரு வாரம் தங்கியிருந்து வீட்டை ஒழுங்குபடுத்திச் சென்ற அடுத்த நாள், காலை உணவைத் தேடியபோதுதான் உறைத்தது, சமைப்பது என்பது என்னை சார்ந்த ஒரு விஷயமென்று. ஏனெனில், இன்று காலையில் இட்லி வேண்டுமெனில், நீங்கள் நேற்றே அதைக்குறித்து திட்டமிட்டிருக்க வேண்டும். (இரண்டு நிமிடத்தில் நாம் சாப்பிடும் இட்லிக்கு, எவ்வளவு திட்டமிடல்கள்!அளந்து எடுப்பதில் இருந்து, முதல்நாளிலேயே மறக்காமல் ஊறவைத்து, உப்பு சரியாகப் போட்டு...பொங்கி வந்ததும் பாத்திரத்தில் எடுத்து ஃபிரிட்சில் வைத்து என்று!) ஆனால், இதைத்தான் காலங்காலமாக நமது ஆயாவிலிருந்து அம்மா வரை செய்து வந்திருக்கிறார்கள்!!
காலையில் இட்லி, மாவு பழையதாகிவிட்டால் தோசை, மதியம் கூட்டு, சாம்பார், ரசம்,அடுத்தநாள் ஆப்பம், இரவு சப்பாத்தி என்று!! அடுத்தடுத்த வேளைக்கு/நாட்களுக்கு நாம் என்ன சாப்பிடுவோமென்று திட்டமிட்டுக் கொண்டும், அதற்கான யோசனைகளிலும் செயல்களிலும் ஆக்கிரமிக்கப் பட்டுகொண்டும், சமையலறை மேடைக்குமுன் நின்றுக் கொண்டு ”என்ன சமைக்கலாம்” என்று யோசித்துக் கொண்டும்!! ஆனால் எனக்கு இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை, அதாவது நாந்தான் சமைக்க வேண்டுமென்பதை! பைபிளில், கடவுள், “ஒளி உண்டாகட்டும்” என்றதும் ஒளி உண்டானதுபோல, “இட்லி உருவாகட்டும்” என்றோ, ”மசாலா தோசை வரட்டும்” என்றோ நாம் சொன்னதும், கிடைக்கும் சக்தியை கடவுள் ஏன் கொடுக்க வில்லையென்று கவலைப்பட்டிருக்கிறேன், சமையலறையில் நின்றுக் கொண்டு!
ஒருமுறை, என்தம்பியின் உடல்நலக் குறைவுக் காரணமாக வாரயிறுதிக்கு வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குத் திருமணமாகி இரண்டு/மூன்று வாரங்கள் என்று நினைவு! முகிலுக்கு தொலைபேசினேன் "அரிசி உளுந்து ஊற வைச்சி அரைச்சு வைச்சிடு" என்று! திரும்ப எனக்கு அழைப்பு, எவ்வளவு ஊற வைக்கவேண்டுமென்று! நானும் ஆயாவிடம் கேட்டு, 1:3 என்றேன். சொல்ல மறந்தது, எது 1 பங்கு, எது 3 பங்கென்று!! ஹ்ம்ம்..அப்படியேதான் நடந்தது, ஒரு பங்கு அரிசியும், 3 பங்கு உளுந்தும்! பாதி அரைத்துக் கொண்டிருக்கும்போது முகிலுக்கு சந்தேகம் வந்து, அவர் வீட்டிற்கு தொலைபேசி, அதற்கு நிவர்த்தி செய்ய இன்னும் சில பங்கு அரிசி சேர்த்து அரைத்து - அந்த மாவு குண்டாவை பார்த்து மயங்கி விழுந்தேன்! அந்த மாவை பத்து நாட்களுக்கு வைத்திருந்து காலியாக்கினோம்.
வீதிக்கொரு ஹோட்டல்/வீடு - அங்கிருப்பவர்கள் தேவையான சாப்பாட்டு வகைகளை வாங்கிச் செல்லும்படி ஒரு அமைப்பு இருந்தால்!!! (ஃபுட்கிங் சரத்பாபு இதை கருத்தில் கொண்டால் ஓட்டுகள் அதிகமாக கிடைக்கலாம், எங்களைப் போன்ற ஆட்களிடமிருந்து)
ஆனால், இன்றிருக்கும் வசதிகளெதுவும், நமது ஆயா காலத்தில் இல்லை. மூளையையும், கைகளையும் ஆக்ரமித்துக் கொள்ள பல வேலைகள் இருந்தன சமையலறையிலும், அதன் சுற்றுப்புறங்களிலும்! அவர்களுக்கு அடுத்தத் தலைமுறையோ வேலை-வீடு!!என் பெரிம்மாவை எத்தனை தடவை கேட்டிருக்கிறேன், "கொஞ்சநேரம் சும்மா இருக்க மாட்டீங்களா, வேற எதுவும் யோசனை இல்லாம, அடுத்த நாள் என்ன சமைக்கலாம்னு இல்லன்னா கிளினீங் வேலை செஞ்சுக்கிட்டிருங்க"ன்னு. இட்லி-வடை-சட்னி-சாம்பார், பொங்கல்-சட்னி-வடை என்று சாப்பிடும்போது இந்தக் கேள்விகள் எல்லாம் காணாமல் போய்விடும்!
சமீபத்தில் கேட்கநேர்ந்தது, நாம் உபயோகப்படுத்தும் எல்லா பொருட்களும் ஆண்களால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, சமூகத்தில் ஆணின் பங்களிப்பு அதிகம் என்பது போல்! யாருக்குத் தெரியும், இப்படி சமையலிலிருந்து விடுபட்டால், இன்னும் அதிகமாக பெண்கள் கண்டுபிடிக்கக் கூடும்..பெண்களின் பங்களிப்பு பற்றி பேசும் ஒருநாள் வரக்கூடும்!
Monday, June 01, 2009
என் ஆயா கலர் டீவியைக் கண்டுபிடிக்காதது ஏன்?
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)


72 comments:
super post
//சொல்லப்போனால்,பையன்களை சமையலறைப்பக்கம் நமது அம்மாக்கள் விடுகிறார்களா என்ன, அதேபோல் தான் பெண்களுக்கும்! //
ரொம்ப ரொம்ப உண்மையான விஷயம். நானே எங்க வீட்ல சூப்பர் மார்கெட் போகும்போதுதான் கத்துக்க ஆரம்பிச்சேன் எது துவரம் பருப்பு, என்ன எதுன்னு:):):)
//ஒரு சில முன்னெச்சரிக்கை ஹிட்லர் அம்மாக்கள் லீவு நாட்களில் பெண்களுக்கு சமைக்க பழக்கி விடுவார்கள்! ஆர்வமிருக்கிற பெண்களும் சமைப்பதில் மூழ்கி முத்தெடுக்கத் துவங்குவார்கள்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.................. யாரந்த நல்லவங்க? எங்க இருக்காங்க? நான் கூட எல்லா அம்மாவும் ஜாலியா , 'என் பயனுக்கு அரியர் இல்லைன்னு' புழுகுற மாதிரித்தான், 'என் பொண்ணுக்கு ஜோரா சமைக்கக் கத்துக் கொடுத்திருக்கேன்னு' சொல்றாங்கன்னு நெனச்சேன்.
//இதில் நிறைய அட்வைஸ் ஆன்ட்டிகள் மற்றும் கிண்டல் கிருமிகளை கடந்து வர நேரிடும்.//
same blood:(:(:(
அவங்கள நாங்கெல்லாம் எங்கூர்ல ஸ்டமக் பர்னர் இல்லைன்னா, கெரோசீன் ஸ்டவ்னு சொல்வோம்:):):)
//"நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன், ஆன்ட்டி!" என்று ஷாக் கொடுக்கலாம். //
இதை விட பெஸ்ட் ஆன்சர் என்னன்னா, நான் உங்க பையனையே கட்டிக்கலாம்னு பாக்கறேன் ஆண்டிங்கலாம்:):):) ஏன்னா, இவங்கதான் புத்திர சிகாமணிகளை, தன் ரங்கமணி ரேஞ்சுக்கு பழக்கிருப்பாங்கல்ல:):):)
//என்ன ஆச்சி, உனக்கு ஒரு கேட்டரிங் மாப்பிள்ளை பார்த்துடலாமா" என்று கிண்டலடிப்பவர்களை, "அவங்க சமைக்கறது பார்க்கறதுக்குத்தான் நல்லாருக்கும் அண்ணா, சாப்பிட நல்லாருக்காது" என்றும் சமாளித்து (!) விலகிவிடலாம்.//
இங்க ஒரு சின்ன திருத்தம் தேவைப்படுகின்றது என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.//பார்க்கறதுக்குத்தான் நல்லாருக்கும் அண்ணா, சாப்பிட நல்லாருக்காது// என்பதற்கு பதில், பாக்கத்தான் நல்லாருக்கும், சாப்டா உங்க வீட்டு சாப்பாடாட்டுமே இருக்கும்ங்கலாம்:):):)
//சமைப்பது என்பது என்னை சார்ந்த ஒரு விஷயமென்று//
ஆமா, நான்கூட கொஞ்ச நாள் முன்ன புரிஞ்ச்ஜிட்டு அதிர்ச்சியாயிட்டேன். அதுக்கு மேல பெஞ்சமின் அதை சாப்டு அதிர்ச்சியாகிட்டாப்ல :):):)
சில இடங்களில் சேம் பிளட் என சிரித்தேன். கடைசி வாக்கியங்கள் சத்தியமான உண்மை:)
//இன்று காலையில் இட்லி வேண்டுமெனில், நீங்கள் நேற்றே அதைக்குறித்து திட்டமிட்டிருக்க வேண்டும்//
ஆமா ஆமா:(:(:( நான் நாளைக்குப் பரீட்சைக்கு கூட இன்னிக்குப் படிக்கலாங்கர ஐடியால இருந்ததே இல்ல. ஆனா, இதுக்கு இம்புட்டு மெனக்கெட வேண்டிருக்கு.
//உப்பு சரியாகப் போட்டு...பொங்கி வந்ததும் பாத்திரத்தில் எடுத்து ஃபிரிட்சில் வைத்து என்று//
fridge எல்லாம் நான் பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கறச்சேதான் வாங்கினாங்க. அதுக்கு முன்னல்லாம் அதை பொங்காம, நாற்றமடிக்காமல்(புளித்த) வைக்கிறதுக்கு கடைப்பிடிக்கிற டெக்னிக்குக்கே எவ்ளவோ சொல்லலாம். அதோட ஜாஸ்தியும் அரைக்க முடியாது. வேலைக்கும் போயிட்டு, மத்த வேலைகளையும் செஞ்சிட்டு, எங்க படிப்பையும் பாத்திட்டு இவைகளையும் செய்வாங்க.
//காலையில் இட்லி, மாவு பழையதாகிவிட்டால் தோசை, மதியம் கூட்டு, சாம்பார், ரசம்,அடுத்தநாள் ஆப்பம், இரவு சப்பாத்தி என்று!! அடுத்தடுத்த வேளைக்கு/நாட்களுக்கு நாம் என்ன சாப்பிடுவோமென்று திட்டமிட்டுக் கொண்டும், அதற்கான யோசனைகளிலும் செயல்களிலும் ஆக்கிரமிக்கப் பட்டுகொண்டும், சமையலறை மேடைக்குமுன் நின்றுக் கொண்டு ”என்ன சமைக்கலாம்” என்று யோசித்துக் கொண்டும்!//
அதுவும் பல வீடுகள்ல, எந்த பதார்த்தமும் டிபனும், ரிப்பீட் ஆகக் கூடாது. அப்டி ஆச்சுன்னா, கஷ்டப்பட்டு சமைச்சிருக்காங்கன்னு இல்லாம சாப்டாம அகிம்சை வழியிலெல்லாம் எதிர்ப்பை பதிவு பண்ணுவாங்க.
//ஃபுட்கிங் சரத்பாபு இதை கருத்தில் கொண்டால் ஓட்டுகள் அதிகமாக கிடைக்கலாம், எங்களைப் போன்ற ஆட்களிடமிருந்து//
சான்சே இல்லை:):):) சூப்பர்:):):) நான் இதுக்காகவே வந்து நாலு கள்ள ஓட்டாவது குத்திட்டு போவேன்:):):)
// சொல்ல மறந்தது, எது 1 பங்கு, எது 3 பங்கென்று!! ஹ்ம்ம்..அப்படியேதான் நடந்தது,//
அய்யய்யோ........வீட்டில் இருப்பவர்கள் இதன் விளைவை கேட்டு செம டென்சன் ஆகியிருப்பாங்களே!!!
//அந்த மாவு குண்டாவை பார்த்து மயங்கி விழுந்தேன்! //
ஹா ஹா ஹா...:)அதிர்ச்சி அதிகமாகதான் இருந்திருக்கும்....
//மீபத்தில் கேட்கநேர்ந்தது, நாம் உபயோகப்படுத்தும் எல்லா பொருட்களும் ஆண்களால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, சமூகத்தில் ஆணின் பங்களிப்பு அதிகம் என்பது போல்! யாருக்குத் தெரியும், இப்படி சமையலிலிருந்து விடுபட்டால், இன்னும் அதிகமாக பெண்கள் கண்டுபிடிக்கக் கூடும்..பெண்களின் பங்களிப்பு பற்றி பேசும் ஒருநாள் வரக்கூடும்!//
100% உண்மை. பிளஸ் இப்போ அனைத்தையும் பதிவு பண்றது இரு பாளர் கிளையும் இருக்கும் இல்லையா:):):)
சூப்பர் சூப்பர் சூப்பர்:):):)
நல்லா இருக்கு ஆச்சி நியமான கேள்விகள்
பாவம் முகிலுக்கு எவ்வளவு கஷ்டம், ஹும் .. ஒரு ஆம்பளை மனசு ஆம்பளைக்கு தானே தெரியும்
சமையல் கலைக்கு பல புரட்சிகள் பண்ணி இருக்கும் உங்களுக்கு உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்
//வீதிக்கொரு ஹோட்டல்/வீடு - அங்கிருப்பவர்கள் தேவையான சாப்பாட்டு வகைகளை வாங்கிச் செல்லும்படி ஒரு அமைப்பு இருந்தால்!!! (ஃபுட்கிங் சரத்பாபு இதை கருத்தில் கொண்டால் ஓட்டுகள் அதிகமாக கிடைக்கலாம், எங்களைப் போன்ற ஆட்களிடமிருந்து)//
அடுத்த தேர்தல் அறிக்கையிலே நிச்சயம் இடம் பெரும்
//
சமீபத்தில் கேட்கநேர்ந்தது, நாம் உபயோகப்படுத்தும் எல்லா பொருட்களும் ஆண்களால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது//
இட்லி,தோசை எல்லாமா எங்காளுங்க கண்டு பிடிச்சது ???
ரொம்ப ரசித்துப் படித்தேன்... அதிலும் //பைபிளில், கடவுள், “ஒளி உண்டாகட்டும்” என்றதும் ஒளி உண்டானதுபோல, “இட்லி உருவாகட்டும்” என்றோ, ”மசாலா தோசை வரட்டும்” என்றோ நாம் சொன்னதும், கிடைக்கும் சக்தியை கடவுள் ஏன் கொடுக்க வில்லையென்று கவலைப்பட்டிருக்கிறேன், சமையலறையில் நின்றுக் கொண்டு!//
படித்ததும் வாய்விட்டு சிரித்தேன். நன்றி. அதையும் தாண்டி சீரியஸான பல விஷயங்கள் கொண்ட, விவாதிக்கப்பட வேண்டிய பதிவு. வாழ்த்துக்கள்.
சேம் பிளட் முல்லை. நானும் நின்னு நின்னு சமைக்கிற ஆள் கிடையாது. அதற்கு உருப்படியா நாலு வேலை பண்ணலாம் எனத் தோன்றும்.
//யாருக்குத் தெரியும், இப்படி சமையலிலிருந்து விடுபட்டால், இன்னும் அதிகமாக பெண்கள் கண்டுபிடிக்கக் கூடும்.//
மிகச் சரி
:)) super
பாராட்டுக்கள் ஆச்சி! உண்மையை உடைச்சு சொல்லிட்டீங்க.. அப்புறம் இரண்டாம் பார்ட்டில் எங்க முகில் மாம்ஸ் உங்க சாப்பாட்டை சாப்பிட்டு பட்ட கஷ்டங்களை சொல்லுவீங்களா?
மீண்டும் பிரமிக்க வைத்திருக்கிறீர்கள். கனமான விஷய்ங்களை மிக இயல்பாக நகைச்சுவை இழையோடு... உங்கள் எழுத்துக்களிக் பெரிய ப்ளஸ் இது.
//எத்தனை தடவை கேட்டிருக்கிறேன், "கொஞ்சநேரம் சும்மா இருக்க மாட்டீங்களா, வேற எதுவும் யோசனை இல்லாம, அடுத்த நாள் என்ன சமைக்கலாம்னு இல்லன்னா கிளினீங் வேலை செஞ்சுக்கிட்டிருங்க"ன்னு. //
நானும் கேட்டிருக்கிறேன்.
//அதற்கு நிவர்த்தி செய்ய இன்னும் சில பங்கு அரிசி சேர்த்து அரைத்து - அந்த மாவு குண்டாவை பார்த்து மயங்கி விழுந்தேன்! // :-)))))))
தமிழிஷில் நானே 10 வோட்டுப் போடுவது எப்படி?
:-) சரி சரி அடிக்க வராதே
அருமையான சிந்திக்க வைக்க கூடிய பதிவு.. இங்க ராப் அக்கா கும்மியா :)
எனக்கு பல நாட்களாய் ஒரு சந்தேகம் ! அதை தீர்த்துவைக்கும் தலமாக இன்று இதை நினைக்கிறேன்!
ஊருக்கெல்லாம் தண்ணீர் விட்ட ஆண்டவன் ஏன் ஒரு பம்புல சோத்தையும் சேர்த்தே விட்டிருக்ககூடாது....?
:)
ஆம்பூர் பிரியாணி மட்டும் விட்டா இன்னும் நல்லா இருந்திருக்கும்ன்னு ஆச்சி ஃபீல் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன் !
//
“இட்லி உருவாகட்டும்” என்றோ, ”மசாலா தோசை வரட்டும்” என்றோ நாம் சொன்னதும், கிடைக்கும் சக்தியை கடவுள் ஏன் கொடுக்க வில்லையென்று கவலைப்பட்டிருக்கிறேன், சமையலறையில் நின்றுக் கொண்டு!
//
எனக்கும் இதே கவலை தான் :(
என் அத்தையும் அம்மாவும் என்ன சமைக்கனும்னு யோசிக்கிறது தான் பெரிய வேலை சமைப்பதை விடனு
சொல்லுவாங்க... எனக்கும் அப்படி தான் தோணுது... சமைக்கிறது என்னவோ 1மணி நேர வேலை தான்..
//
நான் கல்யாணம் பண்ணிகிட்டு வந்தப்போ உன்னை மாதிரிதான் இருந்தேன், சுத்தமா சமைக்கத் தெரியாது, எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா,அதனாலதான் சொல்றேன், நீயும் நேரம் இருக்கும்போதே கத்துக்கோ" என்று அட்வைஸூக்கு,
//
இதுக்கு நான் அப்போ சொன்ன பதில் அவ்வ்வ்வ்.... சமைக்க தெரிந்த ஒரு பையனை தான் கல்யாணம் பண்ணிக்குவேனு... இப்பவும் சொல்றேங்க... சொன்ன சொல் தவறலை... சமைக்கத் தெரிந்த கணவர் தான் ஆனால் நான் இல்லாத போது தான் அவங்க சமையல்....
//
ஆனால் எனக்கு இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை, அதாவது நாந்தான் சமைக்க வேண்டுமென்பதை!
//
ஹி ஹி ஹி! எனக்கு நானும் நான் சமைத்ததை சாப்பிட வேண்டும் என்பதை தான் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை :)))
//
யாருக்குத் தெரியும், இப்படி சமையலிலிருந்து விடுபட்டால், இன்னும் அதிகமாக பெண்கள் கண்டுபிடிக்கக் கூடும்..பெண்களின் பங்களிப்பு பற்றி பேசும் ஒருநாள் வரக்கூடும்!
//
உண்மைதான் முல்லை... ஹூம்...
ஆஹா, நல்லா எழுதி இருக்கீங்க! எதோ Lab-ல போய் ஆராய்ச்சி செஞ்சு கண்டுபிடிச்சாதான் கண்டுபிடிப்பா? அவங்கெல்லாம் எவ்ளோ புது சாப்பாட்டு Dishes கண்டுபிடிச்சிருப்பாங்க, திடீர் விருந்தாளிகளை சமாளிக்க திடீர் சமையல், குறைஞ்ச செலவில் மனம் நிறைய சாப்பாடு, மீந்து போன சாப்பாட்டை Recycle பண்றது - இப்படி எத்தனையோ வித்தைகள் அவங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம். பெண்கள் வீடுகளின் CEO-ன்னு நான் நினைக்கறேன். வீடு மட்டும் சரியாய் support பண்ணலைன்னா, ஆண்களாவது..கண்டுபிடிக்கறதாவது - நீங்க A Beautiful Mind படம் பாக்கலையா? ஹைய்யோ... ஹைய்யோ ..!
Double same blood!!!
டைட்டுலுக்கும் போஸ்டுக்கும் ஏமி சம்மந்தி??
சந்தனமுல்லை நல்ல பதிவு. நம் உணவை நாம் தயாரிப்பதில் எந்த தயக்கமும் வேண்டாம்.
:-))
முல்ஸ், செம போஸ்ட்.. சூப்பர்!! ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்கப்பா...
keep it up.! :))
போஸ்ட்..
சும்மா அதிருதில்ல... :-)
//
டைட்டுலுக்கும் போஸ்டுக்கும் ஏமி சம்மந்தி??
//
அதானே....
அப்புறம் முல்லை... என்ன இருந்தாலும் மனசுக்கு புடிச்ச கணவருக்கு நம் கையாலயே உணவு செய்து அதை அவங்க ருசிச்சு கேட்டு வாங்கி சாப்பிடுறப்போ வருதே ஒரு சந்தோஷம், பூரண திருப்தி அதுக்காகவே எத்தணை ஜென்மம் வேணாலும் சமைக்கலாம்...
இது ஆணுக்கும் பொருந்தும்... ஆனால் ஆண்கள் இதை செய்து பார்த்து உணர்ந்தாங்கனா நம்மள கிச்சன்கு விட மாட்டாங்க :)))
நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருள்களில் பலவற்றை ஆண்கள் கண்டுபிடித்து இருக்கலாம். ஆனால் பெண்களும் பல பொருள்களைக் கண்டுபிடித்துள்ளார்கள். அவர்களின் ஒரு சின்ன லிஸ்ட்
Randi Altschul
Virgie Ammons
Betsy Ancker-Johnson
Mary Anderson
Virginia Apgar
Barbara Askins
Patricia E. Bath
Miriam E. Benjamin
Patricia Billings
Katherine Blodgett
Bessie Blount
Sarah Boone
Rachel Fuller Brown
Josephine Garis Cochran
Martha J. Coston
Dianne Croteau
Marie Curie
Marion Donovan
Gertrude Belle Elion
Edith Flanigen
Helen Free
Sally Fox
Frances Gabe
Lillian Gilbreth
Sarah E. Goode
Bette Nesmith Graham
Temple Grandin
KK Gregory
Ruth Handler
Joycelyn Harrison
Elizabeth Lee Hazen
Beulah Henry
Dorothy Crowfoot Hodgkin
Krisztina Holly
Erna Schneider Hoover
Grace Hopper
Mary Phelps Jacob
Amanda Theodosia Jones
Marjorie Stewart Joyner
Anna Keichline
Mary Kies
Gabriele Knecht
Margaret Knight
Stephanie Louise Kwolek
Hedy Lamarr
Ada Lovelace
Sybilla Masters
Ann Moore
Krysta Morlan
Lyda Newman
Julie Newmar
Ellen Ochoa
Alice H Parker
Betty Rozier
Valerie Thomas
Ann Tsukamoto
Harriet Tubman
Lisa Vallino
Madame Walker
Mary Walton
Carol Wior
ஒரு டவுட்டு: சமையல் அறையிலேயே முடங்கி கிடந்த உங்க ஆயாவால் டிவி கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அப்படி முடங்கி கிடக்காத நீங்க இது வரை என்னென்ன கண்டுபிடிச்சிருக்கிங்க?
கைய கொடுங்க ஆச்சி,
பின்னி பெடலெடுத்துட்டீங்க... கனமான, முக்கியமான விஷயத்தை எவ்வளவு சரளமா நகைச்சுவையோட பொட்டுல அறைஞ்சுட்டீங்க?
கிரேட்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
good one.
தமிழ்ச்செல்வனின் “பெண்மையென்றொரு கற்பிதம்” படித்தீர்களா என்ன.
படித்துவிட்டு எனக்குள்ளாகவே நிறைய கேள்விகள், அதில் ஒரு கேள்வி இப்படித்தான் இருந்தது, அதாவது
//யாருக்குத் தெரியும், இப்படி சமையலிலிருந்து விடுபட்டால், இன்னும் அதிகமாக பெண்கள் கண்டுபிடிக்கக் கூடும்..//
பெண்களின் பங்களிப்பு பற்றி பேசும் ஒருநாள் வரக்கூடும்!
கண்டிப்பாக
அந்த தலைமுறையைக் கொண்டு வரும் பங்கு நமக்கு நிறையவே இருக்கிறது
இதில் நிறைய அட்வைஸ் ஆன்ட்டிகள் மற்றும் கிண்டல் கிருமிகளை கடந்து வர நேரிடும்.//
:)-
//அதற்கு நிவர்த்தி செய்ய இன்னும் சில பங்கு அரிசி சேர்த்து அரைத்து - அந்த மாவு குண்டாவை பார்த்து மயங்கி விழுந்தேன்! //
chanceless முல்லை
ரொம்ப ரசிச்சி சிரிச்சி...
முடியல.................
ஆயில்யன் said...
எனக்கு பல நாட்களாய் ஒரு சந்தேகம் ! அதை தீர்த்துவைக்கும் தலமாக இன்று இதை நினைக்கிறேன்!
ஊருக்கெல்லாம் தண்ணீர் விட்ட ஆண்டவன் ஏன் ஒரு பம்புல சோத்தையும் சேர்த்தே விட்டிருக்ககூடாது....?
:)
ஆம்பூர் பிரியாணி மட்டும் விட்டா இன்னும் நல்லா இருந்திருக்கும்ன்னு ஆச்சி ஃபீல் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன் !
கலக்கல் கமெண்ட்
அன்பு கேவிஆர்,
//ராஜா | KVR said...
இட்லி பூ மாதிரி இருக்க ஒரு சின்ன டிப்பு: 4:1 கணக்கில் அரிசி:உளுந்து, கொஞ்சம் வெந்தயம் சேர்த்து ஊற வச்சி அறைங்க. கூடவே ஒரு கைப்பிடி ஊற வைத்த அவல் சேர்த்து அரைச்சா இட்லி பூ மாதிரி இருக்கும்.
//
எனக்கா இந்த டிப்பு?
நாந்தான் சமையலில் ஆர்வமில்லை என்று முதலிலே சொல்லிவிட்டேனே! எனக்கு எதற்கு? வேறு ஏதாவது சமையல் தளங்களில் கொடுத்தால் ஆர்வமிருக்கிறவர்களுக்கு உபயோகமாக இருக்கும்!! புரிதலுக்கு நன்றி!
சந்தனமுல்லை!
அந்த டிப்பு எதுக்குன்னு புரியலையா? நம்ம கே.வி.ஆரு சமைக்கிறாராம் :-)
//வேறு ஏதாவது சமையல் தளங்களில் கொடுத்தால் ஆர்வமிருக்கிறவர்களுக்கு உபயோகமாக இருக்கும்!!//
I removed it mullai.
//சமையலிலிருந்து விடுபட்டால், இன்னும் அதிகமாக பெண்கள் கண்டுபிடிக்கக் கூடும்..//
பொதுவாகவே, கண்டுபிடிப்புகள் என்று வரும்போது இந்தியர்களில் ஆண்களின் பங்களிப்பும் மிக மிக குறைவே. அதற்கு காரணம் நமது வளர்ப்பு முறையும், பாடத் திட்டங்களுமாக இருக்கலாம். மதிப்பெண்களுக்காக படிப்பும், படித்ததை வாந்தி எடுக்கும் தேர்வு முறையும் இருக்கும் வரையில் கண்டுபிடிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
//இதில் நிறைய அட்வைஸ் ஆன்ட்டிகள் மற்றும் கிண்டல் கிருமிகளை கடந்து வர நேரிடும்.//
அவன் மாதிரி சூடா சொல்லியிருகீங்க :)
நாலு கறி வைக்கப் பழகிக்கோங்க அப்புறம் இப்படித் தான் பதிவு போடவேண்டி வரும்
பாட்டி பேரவை :0
கலக்கல் பாஸ்
சிறப்பான நகைச்சுவை நடையில் ஒரு முக்கியமான பதிவு. ரசித்தேன்.
“ஒளி உண்டாகட்டும்” என்றதும் ஒளி உண்டானதுபோல, “இட்லி உருவாகட்டும்” என்றோ// வரிகளில் சிரித்தேன்.
ஆனால் இது வெறும் நகைப்புக்குரிய பதிவு மட்டுமே அல்ல.. மாதவ்ராஜ் சொல்வது போல தொடர் விவாதங்களை கிளப்பக்கூடிய ஒன்று. உங்களது இறுதி வரிகளுக்கு நிரம்ப ஆர்வத்துடன் பெண்கள் பலரும் தலையாட்டியுள்ளனர். என்னிடம் மாற்றுக்கருத்துகள் உள்ளன. முடிந்தால் தனிப்பதிவாக இடுகிறேன்.
ராஜாவின் சமையல் குறிப்புக்கு இவ்வாறான பதில் தந்திருக்கவேண்டாம் என எண்ணுகிறேன்.
அவரின்..//அதற்கு காரணம் நமது வளர்ப்பு முறையும், பாடத் திட்டங்களுமாக இருக்கலாம். மதிப்பெண்களுக்காக படிப்பும், படித்ததை வாந்தி எடுக்கும் தேர்வு முறையும் இருக்கும் வரையில் கண்டுபிடிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.// இருபாலருக்கும் பொருந்தும் சரியான கூற்று.
Hilarious write up from an accomplished writer.
a laugh riot:-) :-) :-))))))
///சமீபத்தில் கேட்கநேர்ந்தது, நாம் உபயோகப்படுத்தும் எல்லா பொருட்களும் ஆண்களால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, சமூகத்தில் ஆணின் பங்களிப்பு அதிகம் என்பது போல்! யாருக்குத் தெரியும், இப்படி சமையலிலிருந்து விடுபட்டால், இன்னும் அதிகமாக பெண்கள் கண்டுபிடிக்கக் கூடும்..பெண்களின் பங்களிப்பு பற்றி பேசும் ஒருநாள் வரக்கூடும்!//
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு (கண்டுபிடிப்புக்கு) பின்னாலும், ஒரு பெண் இருக்கிறாள் இது உண்மையெனில். ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்கு பின்னாலும் பெண் இருக்கிறாள்.
ஒரு ஆணின் முயற்சியில் தாயாக,மனைவியாக,சகோதரியாக உதவி இருக்க கூடும்!
அதையே அவர்கள் தங்கள் வெற்றியாக நினைத்து மகிழ்ந்து இருப்பார்கள்!
//ஒரு டவுட்டு: சமையல் அறையிலேயே முடங்கி கிடந்த உங்க ஆயாவால் டிவி கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அப்படி முடங்கி கிடக்காத நீங்க இது வரை என்னென்ன கண்டுபிடிச்சிருக்கிங்க?//
இது சரியான அணுகுமுறை இல்லை திரு. கேவிஆர்.
”தனக்குச் சமையல் பிடிக்காது” என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு உரிமை இருக்கிறதா இந்தச் சமூகத்தில்?
அப்படிச் சொன்னால் அவள் எவ்வளவு படித்திருந்தாலும், என்ன உயர்பதவியில் இருந்தாலும் உடனே ”திமிர் பிடித்தவள், சமைக்கக் கூடத் தெரியாம இவ எல்லாம் என்ன குடும்பம் நடத்தப் போறா” என்று ஆயிரம் விமர்சனங்கள் நமது அம்மாக்களும் பாட்டிக்களுமே உங்களுக்குக் கூட வேலை வைக்காமல் பேசித் தீர்த்து விடுவார்கள்.
சரி போகட்டும். இந்த நச்சுப்பிடித்த வேலைகளிலிருந்து உங்கள் மனைவிமார்களுக்குக் கிடைக்காத விடுதலை நாளை உங்கள் மகள்களுக்காவது கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இவர்கள் இங்கே சொல்வது உங்களுக்குப் புரியும்.
முல்லை, எனக்கொரு டவுட். கொஞ்ச நாளா தவ்ளூண்டு விடுப்பட்டிருக்கப் பெண்கள் நித்தமும் ஒன்னொன்னு கண்டுப்பிடிச்சிருக்கனும்னா, அத்தனைப் பேரும் விஞ்ஞானி ஆகியிருக்கனும்னா, இவ்ளோ நாளா ஜாஸ்தி நச்சுப் பிடிச்ச வேலை செய்யாத ஆண்கள் அத்தனைப் பெரும் விஞ்ஞானிகளாவா இருக்காங்க?
”தனக்குச் சமையல் பிடிக்காது” என்று சொல்ல ஒரு பெண்ணுக்கு உரிமை இருக்கிறதா//
தீபாவின் கருத்துகள் ஏற்புடையன.. நிச்சயமாக அந்த உரிமை இருக்க வேண்டும்.
@தீபா & rapp: நான் சொல்ல வந்தது - கண்டுபிடிப்புகள் அதிகம் வராமைக்கு காரணம் சமையல் அல்ல. நமது வளர்ப்புமுறையும் கல்வித்திட்டமுமே. முல்லையைக் கேட்ட கேள்வியும் அதைச் சார்ந்ததே. கடந்த 25 வருடங்களில் ஓரளவுக்காவது பெண்களுக்கு இந்தியாவில் சுதந்திரம் வந்திருக்கிறது, ஆனால் கண்டுபிடிப்புகள் எதுவும் இல்லை. சமையல் (பெண்கள் மீதான அடக்குமுறை) மட்டுமே காரணமாக இருந்திருந்தால் இந்த 25 வருடங்களில் ஓரளவுக்காவது கண்டுபிடிப்புகள் வந்திருக்க வேண்டும், ஆனால் அப்படி இல்லை. எனது கேள்வி ஆணாதிக்க ரீதியில் தோன்றுமேயானால் என்னை மன்னிக்க.
@ஆதி: எனக்கு முல்லையில் பதிலைப் பார்த்த பிறகே அந்தப் பின்னூட்டம் அவசியமில்லாததாகத் தோன்றியது, அதனால் அழித்துவிட்டேன். என்ன ஒன்று: பதிவுக்கு அவசியம் இல்லாதது என்று தோன்றும் பின்னூட்டத்தை வெளியிடாமலே இருந்திருக்கலாம். வெளியிட்டு பின்னர் அப்படி சொல்லி இருக்க வேண்டாம். சல்தா ஹை :-)
மிக ஆழமான விடயத்தை அநாவிசயமாக சொல்லிவிட்டு போயேவிட்டீர்கள் முல்லை
சமையல் சாதனங்களை ஆண்கள் கண்டுபிடிக்கிறார்கள் சமையல் அறையையும் ஆண்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்
ஆனால் சமையலுக்கு தேவையான விளைபொருட்களை,விவசாயத்தை பெண்கள் தான் முதன் முதலாக கண்டுபிடித்தார்கள்
அப்போது ஆண் ஆதிக்கம் இருந்திருக்கவில்லை அது தாய்மை சமூகம், ஆதி பொதுவுடமை சமூகம் பெண்கள் ஆண்களின் ஆதிக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டபின்னர் நிச்சயம் அவர்கள் கண்டுப்பிடிக்கிற தன்மையை உடனே இழந்திருக்கவாய்ப்பில்லை அது ஒடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதிகாரம் அவர்களின் கண்டுபிடிப்புக்களை பறித்து ஆண்களின் முத்திரை குத்தப்பட்டிருக்கலாம் தொன்மங்களை ஊடுருவுகிற அதிகாரம் அதி பயங்கரமானது அது ஒரு நூற்றாண்டையே சப்பிட்டுவிடும் வல்லமை கொண்டது. அதை மீட்டெடுக்க இன்னொரு நூற்றாண்டுகூட தேவைப்படலாம் அதுவரைக்கும் சமையல் அறைகளில் ஒளிந்திருக்கிற, அடுப்புகளில்படிந்திருக்கிற அழுக்குகளிலிருந்து ஒரு பிள்ளையார் செய்து வைப்போம்
பதிவு அருமையா இருந்தது. சமையல் பத்தி பேசிட்டு அசைவ சாப்பாடு பற்றியும் பேசியிருந்தால் வாயில் எச்சில் ஊறியிருக்கும்.
:-)..நன்றி லக்கி! நீங்கள் சொல்வதும் சரிதான்!! தேவையில்லாத டிப்பு எதற்கு என்ற நெருடலே எனது கமெண்ட்-டிற்குக் காரணம்.
மீள்வருகைக்கும் அழுத்தமான கருத்துகளுக்கும் நன்றி தீபா & ராப்!
கருத்துகளை பகிர்ந்துக் கொண்ட, பாராட்டிய, பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்! :-)
கேவிஆர்/ஆதி - இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான், அப்படி சொல்லியிருக்கவேண்டாம் அல்லது இப்படி செய்திருக்கலாமென்று எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்......ஆயாசமாக இருக்கிறது!!
இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான், அப்படி சொல்லியிருக்கவேண்டாம் அல்லது இப்படி செய்திருக்கலாமென்று எங்களுக்குச் சொல்லிக் கொண்டிருப்பீர்கள்..//
மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிட்டுள்ளீர்கள் சந்தனமுல்லை. ஒவ்வொரு பதிவிலுமே பதிவுக்கு தேவையில்லாத கமெண்டுகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியிருக்கையில் ஒரு ஆர்வத்தோடு அல்லது நகைப்புக்காக தரப்பட்ட ஒரு Harmless பின்னூட்டத்தைப்பற்றி அவ்வாறு சொல்லியிருக்கவேண்டாம் என்றுதான் சொன்னேன். அதில் நீங்கள் ஒரு ஸ்மைலி கூட இடவில்லை, இல்லையெனில் நான்கூட அதைச்சொல்லியிருக்க வேண்டாம்தான். இதை ஒரு ஆண் பதிவர் சொல்லியிருந்தால் கூட நான் அப்படிச் சொல்லியிருப்பேன்தான். இதற்கும், காலங்காலமாய் பெண்களிடம் ஆண்கள் சொல்லிக்கொண்டிருப்பதற்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்கள்.. (அடடா எத்தனை.. 'சொல்லி.' எனக்கே ஆயாசமாக இருக்கிறதே.. :-)))
சூப்பர் சூப்பர். சும்மா தூள் கிளப்பிட்டீங்க. இதில் ஒருசில அனுபங்கள் எனக்கும் இருந்ததுண்டு. பள்ளி படிக்கையில் முதன் முறையா அம்மா இட்லிக்கு அரிசி ஊற வைக்க சொல்ல கறுப்பு உளுந்தையும் ஒண்ணா சேர்த்துப் போட்டு ஊற வச்சேன்:))!
//(ஃபுட்கிங் சரத்பாபு இதை கருத்தில் கொண்டால் ஓட்டுகள் அதிகமாக கிடைக்கலாம், எங்களைப் போன்ற ஆட்களிடமிருந்து)//
:))!
//யாருக்குத் தெரியும், இப்படி சமையலிலிருந்து விடுபட்டால், இன்னும் அதிகமாக பெண்கள் கண்டுபிடிக்கக் கூடும்..பெண்களின் பங்களிப்பு பற்றி பேசும் ஒருநாள் வரக்கூடும்!//
அப்படிப் போடுங்க:)!
ஆண்களை விட பெண்களுக்கு நிர்வாகத்திறமை அதிகம் என்று சொல்லக்காரணம், இந்த திட்டமிடலில் இருந்து வந்த அனுபவம் தானோ..
நன்றி ராப்! சேம் பிளட்! உங்கள் அனைத்து கமெண்ட்களும் செம ரகம்! //நான் நாளைக்குப் பரீட்சைக்கு கூட இன்னிக்குப் படிக்கலாங்கர ஐடியால இருந்ததே இல்ல. // ரசித்தேன்! மிகப் பொறுமையா ரசித்து கமெண்ட்டுகள் இட்ட உங்கள் கடமைக்கு நன்றி! :-))
நன்றி வித்யா மணிநரேன்!!
நன்றி நசரேயன்!!
நன்றி மாதவராஜ், தங்கள் பின்னூட்டம் மிகவும் உற்சாகப்படுத்துகிறது!
நன்றி தீஷூ..ஆமா, நீங்க சொல்றதும் சரிதான்! //அதற்கு உருப்படியா நாலு வேலை பண்ணலாம் எனத் தோன்றும். // இபப்டிதான் அம்மாகிட்டேயும் சொல்லுவேன்! :-)
நன்றி முத்து!!
நன்றி நசரேயன்!!
நன்றி மாதவராஜ், தங்கள் பின்னூட்டம் மிகவும் உற்சாகப்படுத்துகிறது!
நன்றி தீஷூ..ஆமா, நீங்க சொல்றதும் சரிதான்! //அதற்கு உருப்படியா நாலு வேலை பண்ணலாம் எனத் தோன்றும். // இபப்டிதான் அம்மாகிட்டேயும் சொல்லுவேன்! :-)
நன்றி முத்து!!
நன்றி தமிழ்பிரியன் அண்ணா, நான் அந்த கஷ்டத்தையே கொடுத்ததில்லையே!
நன்றி தீபா, ரொம்ப புகழ்கிறீர்கள்! :-)
நன்றி சென்ஷி, ஆயில்ஸ்!
சமைப்பதில் ஏனோ ஆர்வமிருந்ததே இல்லை, சாப்பிடுவதற்கு இருக்கும் அளவிற்கு! //
இப்படி சரியாச் சொல்லுங்க.
"காபி எப்படி போடணும்" என்றும், துவரம்பருப்பு கழுவி வை என்றபோது, "அது எப்படி இருக்கும்" என்றும் கேட்டு அசத்தியிருக்கிறேன். //
பாவம் முகில்.
ஹிஹிஹி... நானும் பள்ளி, கல்லூரி நாட்களில் வீட்டில் சமைத்ததில்லை. அதே தப்பித்தல் தான்.
“இட்லி உருவாகட்டும்” என்றோ, ”மசாலா தோசை வரட்டும்” என்றோ நாம் சொன்னதும், கிடைக்கும் சக்தியை கடவுள் ஏன் கொடுக்கவில்லையென்று கவலைப்பட்டிருக்கிறேன் ///
ஹாஹாஹா.... எப்படி முல்லை இப்படியெல்லாம்.
அந்த மாவை பத்து நாட்களுக்கு வைத்திருந்து காலியாக்கினோம். ///
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா.
இப்படி சமையலிலிருந்து விடுபட்டால், இன்னும் அதிகமாக பெண்கள் கண்டுபிடிக்கக் கூடும் //
கடைசில பாயின்ட்டோட முடிச்சுட்டீங்க. கரீக்டு.
நன்றி ஆகாயநதி, நகைச்சுவை உணர்வு அதிகம் உங்களுக்கு! :-)
நன்றி திரு, மிக அழகாக உங்கள் கருத்துகளைக் கூறியிருக்கிறீர்கள், நீங்கள் சொல்லும் சினிமாவை பார்த்ததில்லை, இன்னும்!
நன்றி பைத்தியக்காரன், உங்கள் பாராட்டுக்கு!
நன்றி லக்கி!
நன்றி அருணா, கும்மாச்சி,அமுதா!
நன்றி ஜியா, கேவிஆர் ரொம்ப சரியா புரிஞ்சுகிட்டு சொல்லியிருக்காரே, உங்கள் கேள்விக்கான விடையும் அதிலே இருக்கிறது! :-)
நன்றி கவிதா! ரொம்ப புகழாதீங்க கவிதா..ஹிஹி!!
நன்றி அமித்து அம்மா, இரண்டு பகுதிகள் படித்தேன்! இது முன்னர் எழுதி வைத்தது, எப்போது என்பது உங்களுக்கே தெரியுமே! ;-)
நன்றி கானாஸ், ஜீவன்!
Thanks Vetrimagal!
நன்றி naathaari, உங்கள் மறுமொழி ஆழமானது, அர்த்தமானதும் கூட!
நன்றி குடுகுடுப்பை, உழவன்!
நன்றி ராமலஷ்மி, நீங்களும் சேம் பிளட்டா..கூல்! :-) தங்கள் உற்சாகமான பாராட்டுக்கு நன்றி!
ஏதாவது எக்கு தப்பா கமெண்ட் போட்டா முதுகில் டின் கட்டும் அபாயம் இருப்பதால் மீ தி எஸ்கேப்!
பதிவுடன் என்னால உடன்பட முடியலை. எல்லா கமெண்டையும் படிச்சிட்டு திரும்ப வரேன்.
:)
/
rapp said...
//சமைப்பது என்பது என்னை சார்ந்த ஒரு விஷயமென்று//
ஆமா, நான்கூட கொஞ்ச நாள் முன்ன புரிஞ்ச்ஜிட்டு அதிர்ச்சியாயிட்டேன். அதுக்கு மேல பெஞ்சமின் அதை சாப்டு அதிர்ச்சியாகிட்டாப்ல :):):)
/
ROTFL
:))))))))))))
பதிவை விட குறிப்பாக பின்னூட்டங்களை அதிக நேரம் படித்தேன்.
/
குசும்பன் said...
ஏதாவது எக்கு தப்பா கமெண்ட் போட்டா முதுகில் டின் கட்டும் அபாயம் இருப்பதால் மீ தி எஸ்கேப்!
/
ரிப்பீட்டு
Post a Comment