Wednesday, July 22, 2009

பப்புவின் குரலில் ஒரு கதை!

Get this widget | Track details | eSnips Social DNA


"(ஒரு காட்டுலே) ஒரு சிங்கம் இருந்துதாம். அந்த சிங்கம் ...ஆங்..ஒரு ஒரு அனிமல்ஸா வர சொல்லி சாப்பிட்டிட்டுருந்துதாம். அப்பறம், ஆங்...அப்புறம் வந்து ஒரு நாள் முயல் வந்துதாம். அப்பறம், ஒன்னை மாதிரி ஒரு கிணத்துல சிங்கம் இருக்கு, வா காமிக்கறேன் அப்படி சொல்லுச்சு எங்கே வா பாரு அப்டி சொல்லிட்டவுடனே அப்பபறம் கிணத்துலே போய் காமிச்சுது. அப்பறம் சிங்கம், குதிச்சு, நான் ஒன்னை கொல்றேன்...அப்படி சொல்லுச்சு. கிணத்துக்குள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே...போச்சா...சிங்கம் செத்துபோச்சு!"

பப்பு அவளது அத்தையிடமிருந்து கற்றுக்கொண்டது - இந்தக் கதை!

28 comments:

நட்புடன் ஜமால் said...

அப்புறம் ...


ச்சோ குயூட் ...

நட்புடன் ஜமால் said...

”அப்புறம்” ...


சோ! ச்சூவீட் ...

ராமலக்ஷ்மி said...

’அப்புறம் அப்புறம்’ என நம்மைக் கேட்க வைக்காமல் அவளே கேட்டுக் கொண்டு...:)!

ஏற்ற இறக்கத்துடன் அழகாய் சொல்லியிருக்கிறாள்!

நேயர் விருப்பம்: அடிக்கடி தரலாம் பப்புவின் குரலில்!

மணிகண்டன் said...

குட் அத்தை. கடைசில ட்விஸ்ட் உள்ள கதை பப்புக்கு சொல்லி தராங்க :)-

பப்பு டைம்ஸ் வெரி ஸ்வீட்.

Deepa said...

சான்ஸே இல்ல! ரொம்ம்ம்ப அழகு பப்புவோட குரலும் அவ கதை சொன்ன விதமும். கிறங்கடித்தது!

//ராமலக்ஷ்மி said...
நேயர் விருப்பம்: அடிக்கடி தரலாம் பப்புவின் குரலில்!//

A biiiiig repeat!

Deepa said...

ஆங்! ஆங்! என்று பப்பு சொல்லும் போதெல்லாம் இங்கு ஒரு ஆள் கூடவே சொல்கிறாள்!
:-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எங்காள் ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் ந்னு மூணு தடவைக் கேட்டாச்சு.. :)
ஆங்க் ஆங் நல்லாருக்கு..:)))

Anonymous said...

பப்பு குரல்ல கதை கேட்க சூப்பரா இருக்கு.

Dhiyana said...

கதை நல்லாயிருக்கு.. அப்பறம்..ஆங்... பப்பு குரலும் நல்லாயிருக்கு.. :-)).

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........மீ தி லேட் கம்மர்:(:(:( இதை வெறும் ஆடியோவாக மட்டுமே கொடுத்த முல்லையைக் கன்னாபின்னாவெனக் கண்டிக்கிறேன். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........வீடியோவும் சேர்த்துக் கொடுத்தா என்னவாம்?

rapp said...

செம செம செம சூப்பர்:):):) இங்க இருக்க எல்லாரையும் வழிமொழிகிறேன்:):):)

அமுதா said...

/*அப்பறம், ஆங்...அப்புறம் */
அழகு

செல்வநாயகி said...

good job pappu.

ச.பிரேம்குமார் said...

நடுவுல கதையோட சேர்ந்து அவுங்களும் Excite ஆயிட்டாங்க. அப்புறம் உணர்ச்சிபூர்வமா வேற கதை சொல்றாங்க. கலக்கல் பப்பு :)

butterfly Surya said...

So sweet..

Very nice..

மணிநரேன் said...

ரசித்தேன்.
அடிக்கடி வலையேற்றவும்.

Anonymous said...

மறுபடி ஒருக்கா பப்பு கதை கேட்டாச்சு. க்யூட்

தமிழன்-கறுப்பி... said...

அட, அழகு..!

தமிழன்-கறுப்பி... said...

ஒரு கதையை மனனம் பண்ணி மேடையில சொல்லச்சொல்லி- அதுல இந்த அழகு கிடைக்கிறதில்லை..

இது அப்படியே பிடிச்சிருக்கு என்னோட மருமக்கள் கதை சொன்ன ஞாபகம் வருது...
'அப்பறம்'கிறதுக்கு பதிலா 'பிறகு' அப்படின்னு வரும்.

நாமக்கல் சிபி said...

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
மழலைச் சொல்கேளா தவர்!

ப்ரியமுடன் வசந்த் said...

very smart........

Divyapriya said...

என்னால கேக்க முடியல :( flash player இல்லை...அந்த file அ அப்படியே மெயில் அனுப்பறீங்களா? முதல்ல பதிவ படிச்சிட்டு, ரொம்ப ஆசையா பப்பு குரலை கேக்கப் போனேன்...ஆனா கேக்க முடியல :(

Anonymous said...

super pappukutti :))

கே.என்.சிவராமன் said...

ச்சோ க்யூட் :-)

அப்புறம் பப்பு?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

மங்களூர் சிவா said...

அட அட அட
கலக்கல் பப்பு.

இன்னும் இது மாதிரி நிறைய கதை சொல்லுவியாம் எங்களுக்கு ஓக்கே!
:)

"உழவன்" "Uzhavan" said...

அடடா.. சிங்கம் செத்துப்போச்சாக்கும்.. ஐயோ

Thamiz Priyan said...

வாவ்! நல்ல ஏற்ற இறக்கம்... கிணத்துக்குள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்.... கிணறு ரொம்ப ஆழம் போல.. :)))

நிஜமா நல்லவன் said...

ச்ச்சோ ஸ்வீட் பப்பு!