யார் உங்கள மொட்ட அடிச்சா, முகிலப்பா?! - அவள் தூங்கிக்கொண்டிருக்கும் சமயம் முடித்திருத்திக்கொண்டு வந்த முகிலைப் பார்த்து!
“குள்ளநரி, பப்பு” - முகில்! (நான் புஜ்ஜி என்பதை நினைவிற் கொள்க!!)
”அதுக்குத்தான் ஓரத்துலே படுக்கக்கூடாது, அப்பா ஓரத்துலே படுத்திருந்தாங்க இல்ல, அதான் குள்ளநரி வந்து கட் பண்ணிடுச்சு”- இது நான்!
அதிலிருந்து பப்புவை காலையில் எழுப்பவும் சில சமயங்களின் கட்டிலின் மறுஓரத்தில் படுக்க அடம் பிடிக்க பப்புவை சமாளிக்கவும் “குள்ளநரி” உதவி செய்தது.
காலை 6.15-க்கு அப்படி சத்தம் கொடுத்துவிட்டு (யாராவது ஒருவர்தான்...ஹிஹி!) "குள்ளநரி வந்துடுச்சு போலிருக்கு” என்று சொன்னதும் எழுந்து உட்கார்ந்து விடுவாள்-குள்ளநரிதான் வந்துவிட்டது என்று நம்பி்!அப்புறம் என்ன...குள்ளநரியை தேடுகிற படலம் பாத்ரூமில் முடியும்!!
எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு, இன்றுக்காலை ஏழு மணிக்கு அவள் என்னை எழுப்பும் வரை -
”ஸ்ஸ்..ஸ்ஸ்...குள்ளநரி வந்திருக்கு பாரு!!"
..என்று குள்ளநரி சத்தத்தைக் கொடுத்து!!
குறிப்பு :
இன்று பப்பு அவளது பள்ளியிலிருந்து முதல் ஃபீல்ட் ட்ரிப் சென்றுவிட்டு வந்திருக்கிறாள். (அதைப்பற்றி பிறிதொரு இடுகையில்!)
22 comments:
ஹா ஹா குள்ள நரி கட்சி மாறிடுச்சு போல இருக்கு..:))
பப்புக்கே அல்வாவே?
பப்பு பேரவை
சவுதி அரேபியக் கிளை
//குள்ளநரி சத்தத்தைக் கொடுத்து!!//
:))!
நீதி என்ன? நாம் பொய் சொன்னால் நம் குழந்தைகளும் அதையே செய்யும். இது சம்பந்தமாக எங்கள் வீட்டில் நிறைய சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் ஹரிணி கேட்கும் பல கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை. அவங்க அம்மா தான் சமாளிப்பாங்க.
:-)) என்றும் மனதுக்கு ரம்மியமானது பப்பு டைம்ஸ்.
//ஃபீல்ட் ட்ரிப் சென்றுவிட்டு வந்திருக்கிறாள். //
பதிவுக்கு வெயிட்டிங்
ஆஹா......
குள்ள நரிகள் எவ்வளவு நல்லவை?
:)))))))))
சூட்டிகைதான் உங்கள் செல்லப் பப்பு
//எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு, இன்றுக்காலை ஏழு மணிக்கு அவள் என்னை எழுப்பும் வரை -
”ஸ்ஸ்..ஸ்ஸ்...குள்ளநரி வந்திருக்கு பாரு!!"
..என்று குள்ளநரி சத்தத்தைக் கொடுத்து!!//
பப்புக்கு என்னோட ஸ்பெஷல் வாழ்த்துக்கள்...சூப்பர் பப்பு....
// தமிழ் பிரியன் said...
ஹா ஹா குள்ள நரி கட்சி மாறிடுச்சு போல இருக்கு..:))//
:)))))
/
தமிழ் பிரியன் said...
ஹா ஹா குள்ள நரி கட்சி மாறிடுச்சு போல இருக்கு..:))
/
ரிப்பீட்டு
:)))))))))))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............
பப்பு இம்புட்டு நாள் நம்புறாப்டி நடிச்சா, பாவம் நீங்கல்லாம் ஏமாந்திருக்கீங்க. அவளும் எவ்ளோ நாள்தான் நடிக்கிறது:):):)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............பீல்டு டிரிப்பா, நானெல்லாம் இந்த வார்த்தையக் கேட்டதே ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போதுதான்.
//
அதிலிருந்து பப்புவை காலையில் எழுப்பவும் சில சமயங்களின் கட்டிலின் மறுஓரத்தில் படுக்க அடம் பிடிக்க பப்புவை சமாளிக்கவும் “குள்ளநரி” உதவி செய்தது.//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...............என்ன ஒரு வில்லத்தனம்:):):)
//”அதுக்குத்தான் ஓரத்துலே படுக்கக்கூடாது, அப்பா ஓரத்துலே படுத்திருந்தாங்க இல்ல, அதான் குள்ளநரி வந்து கட் பண்ணிடுச்சு”- இது நான்!
//
//”ஸ்ஸ்..ஸ்ஸ்...குள்ளநரி வந்திருக்கு பாரு!!"
..என்று குள்ளநரி சத்தத்தைக் கொடுத்து!!
//
நீங்க புக்கு படிக்க, 'ஆச்சி இங்க இல்லன்னு' பப்புவ பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... ஆக்க பாத்தப்பவே பப்பு உஷாராகியாச்சே:):):)
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
பப்பு-வுக்கு சமீபத்தில் பிடித்த பாடல்
:)
//எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு, இன்றுக்காலை ஏழு மணிக்கு அவள் என்னை எழுப்பும் வரை -//
குள்ள நரி பப்புக்கு நண்பானாயிருச்சு
பப்பு வச்ச ஆப்புன்னு தலைப்பு போடவும் ;)
பாட்டி பேரவை
சிட்னி
//குள்ளநரி சத்தத்தைக் கொடுத்து!//
இனி குள்ளநரிக்கு பப்பு பயப்பட வேண்டியது இல்லை.
அஃகஃகா....
//”ஸ்ஸ்..ஸ்ஸ்...குள்ளநரி வந்திருக்கு பாரு!!"
..என்று குள்ளநரி சத்தத்தைக் கொடுத்து!!
//
நல்ல பல்பா இருந்திருக்குமே :-)))
பப்புகிட்டயே இல்ல இல்ல பப்பு கிட்ட கூட பல்பா. ஆச்சி !!!!!!!!!!!!!!!
ஆச்சி,
குழந்தைகளிடம் பல்பு வாங்குவதில் இருக்கும் சுகமும், திருப்தியுமே தனிதான் இல்லையா :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
Post a Comment