Thursday, September 03, 2009

50:50

சமையல் செய்யும் அம்மா ‘அவசரமா ஊருக்குப் போகவேண்டியிருக்கு, வர எவ்ளோ நாளாகும்னு தெரியல, போய்ட்டு ஃபோன் பண்றேன்'னென்றுச் சொல்லிவிட்டு திண்டிவனத்திற்குச் சென்றார். ஒரு வாரமாகியும், எந்தத் தகவலுமில்லை. பத்துநாட்கள் கழித்து வந்தவரிடம் ‘ஃபோன் பண்ணிச் சொல்றேன்னு சொன்னீங்களே” என்றதற்கு,

”ஊரிலே கரெண்ட்டே இல்லம்மா, ஃபோனே எடுக்கலை”







பப்பு தனியாக விளையாடிக்கொண்டிருந்தாள். சடசடவென சரிந்து விழுவது போல சத்தம் கேட்டது. அலமாரியில் ஏதோ கை வைத்திருக்கிறாள், எல்லாம் விழுந்திருக்கிறது என்று புரிந்தது. நானும் போய் பார்க்கவில்லை. ஒன்றும் கேட்கவுமில்லை.


என்னிடம் வந்த பப்பு,

“ஆச்சி, புக்லாம் அதுவே விழுந்துடுச்சு...வந்து பாரு” என்றாள். நான் அசையாமலிருந்தது அவளதுக் கூற்றை நான் நம்பவில்லை என்றெண்ண வைத்தது போலும். என்னை ஒருமாதிரியாக பார்த்து சொன்னாள்,


”ஆச்சி, குள்ளநரி வந்து எல்லாத்தையும் தள்ளி விட்டுடுச்சு, புக்லாம் கீழே கிடக்கு” !!

29 comments:

கானா பிரபா said...

pappuva kokka

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))) அவங்க செல்ஃபோன் சார்ஜாகலையோஒ ?

Anonymous said...

Crack (jack) மாதிரி சிரிச்சேன். :)

☀நான் ஆதவன்☀ said...

//”ஆச்சி, குள்ளநரி வந்து எல்லாத்தையும் தள்ளி விட்டுடுச்சு, புக்லாம் கீழே கிடக்கு” //

ஹி..ஹி..புத்திசாலி பொண்ணு. பொழச்சுக்குவா :)

☀நான் ஆதவன்☀ said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
:))) அவங்க செல்ஃபோன் சார்ஜாகலையோஒ ?//

”சார்ஜா கலை”ன்னு இங்க சார்ஜாவுல யாரும் இல்லீங்கோ....

சந்தனமுல்லை said...

ஆகா..பெரிய பாண்டி..யூ டூ?!! :-)


நன்றி முத்து, அவங்ககிட்டே மொபைல் இல்லே, ஊர்லே போய் காயின் ஃபோன்லேர்ந்து கால் பண்றேன்னு சொன்னாங்க..:-)


சின்ன அம்மிணியா..கொக்கா..சூப்பர்!! :-)

நன்றி நான் ஆதவன்...கலைக்கு இது தெரியுமா?!! :-)))

அமிர்தவர்ஷினி அம்மா said...

:))))))))))

1. அவங்ககிட்டயும் பல்பு வாங்கிட்டீங்களா ஆச்சி
2. பப்பு புத்திசாலியாகிக்கொண்டே வருகிறாள் ஆச்சி. அதிகவனமாக இருங்கள்.

மேலும் ஒரு கேள்வி, And, Now பதிவுக்குப் பிறகு நியுமராலஜிப்படி நீங்கள் பதிவின் தலைப்புகளை மாற்றி அமைத்துவிட்டீர்களா ஆச்சி ? :)))))))

ஈரோடு கதிர் said...

//குள்ளநரி வந்து எல்லாத்தையும் தள்ளி விட்டுடுச்சு//

இது சூப்பர்....

கலையரசன் said...

50:50, 20:20 போல அதிரடியால்ல இருக்கு!!

//"சார்ஜா கலை”ன்னு இங்க சார்ஜாவுல யாரும் இல்லீங்கோ//
ஆதவா.. இனிமே நான் சார்ஜா கலைதான்! டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்கப்பா!!

அமுதா said...

:-))

ஆயில்யன் said...

//☀நான் ஆதவன்☀ said...

//”ஆச்சி, குள்ளநரி வந்து எல்லாத்தையும் தள்ளி விட்டுடுச்சு, புக்லாம் கீழே கிடக்கு” //

ஹி..ஹி..புத்திசாலி பொண்ணு. பொழச்சுக்குவா :)
///

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்! :)))

துபாய் ராஜா said...

அம்மா மற்றும் பப்புவோட
'நியாயமான' காரணங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.... :))

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

Deepa said...

:-))

முல்லை! பப்புவும் அவங்களும் டீம் போட்டு உங்களைக் கலாய்கறாங்க!
உஷாரா இருங்க.

பழமைபேசி said...

மழலைய நீங்களும் இரசிச்சு, எங்க கூடவும் பகிர்ந்துகிறீங்க... மிக்க நன்றி!

பதி said...

:-)))

குள்ளநரி படாதபாடு படுது போல !!!!

நட்புடன் ஜமால் said...

”ஆச்சி, குள்ளநரி வந்து எல்லாத்தையும் தள்ளி விட்டுடுச்சு, புக்லாம் கீழே கிடக்கு” !!]]

ஹா ஹா ஹா

Shakthiprabha (Prabha Sridhar) said...

:))))))) "வெகுளித்தனம்" க்கு நிகர் எதுவுமே இல்லை.

பின்னோக்கி said...

50:50 ன்னு தலைப்பு வெச்சி ஸ்வீட்டான விஷயங்களை எழுதியிருக்குறீர்கள்.

அடுத்த தடவை குள்ள நரி விஷமம் பண்ணுனா zoo க்கு அனுப்பிடுவேன்னு சொல்லுங்க என்ன சொல்றான்னு பார்ப்போம் :-)

சென்ஷி said...

//”ஆச்சி, குள்ளநரி வந்து எல்லாத்தையும் தள்ளி விட்டுடுச்சு, புக்லாம் கீழே கிடக்கு” !!//

சூப்பர்.. ஏதாச்சும் ஒண்ணை நம்பித்தான் ஆகணும் ஆச்சி இப்ப :))

Anonymous said...

We owe it to someone else's achievements in health and thus feel joy, depending on the success of others as if their achievements, and this is the Buddha mind. Always hold the interests of all sentient beings of the heart, we can not leave the joy forever.
www.cosmifilm.com.tw
www.cosmifilm.com.tw/index.htm
www.cosmifilm.com.tw/pro1.htm
www.cosmifilm.com.tw/product2.htm
www.pandora-mall.com
www.pandora-mall.com/default.asp
www.pandora-mall.com/info/guide.asp
www.pandora-mall.com/info/view.asp?id=1

கோமதி அரசு said...

பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது.

//சேவகராற் பட்டசிரமமிக வுண்டு, கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ,செய்கை நடக்கவில்லை.//


மீண்டும் பப்புவின் குள்ளநரி தந்திரம்,
ரசித்து சிரித்தேன்.

சந்தனமுல்லை said...

நன்றி அமித்து அம்மா, ஹிஹி...ஆமா..பல்பு வாங்கறதே தொழிலா போச்சி...அப்புறம் நியுமராலஜி..LOL...நானே இப்போதான் கவனிக்கிறேன்!

நன்றி கதிர்!

நன்றி கலை..சாரி..சார்ஜா கலை! :-)


நன்றி அமுதா!

நன்றி ஆயில்ஸ்!

நன்றி துபாய் ராஜா!

நன்றி உலவு, முயற்சி செய்கிறேன்!


நன்றி தீபா, :-))

நன்றி பழமைபேசி!

நன்றி பதி..:-))

சந்தனமுல்லை said...

நன்றி ஜமால்!

நன்றி Shakthiprabha! உங்க கவிதையெல்லாம் படிச்சு ரசிச்சிருக்கேன்! வாழ்த்துகள்!

நன்றி பின்னோக்கி!

நன்றி சென்ஷி...நம்பிட்டேன் ரெண்டு பேரு சொன்னதையும்! :-)

நன்றி நிஜம்ஸ் அண்ணா!!

thiyaa said...

குட்டிக்கதை நல்லாயிருக்கு
வாழ்த்துக்கள்

ஆகாய நதி said...

:))))))

மாதேவி said...

"நான் அசையாமலிருந்தது அவளதுக் கூற்றை நான் நம்பவில்லை என்றெண்ண வைத்தது போலும்".

நன்றாகப் புரிந்துவிட்டாள்.

மங்களூர் சிவா said...

//”ஆச்சி, குள்ளநரி வந்து எல்லாத்தையும் தள்ளி விட்டுடுச்சு, புக்லாம் கீழே கிடக்கு” //

:)))))))

நாதாரி said...

பப்பூ கலக்கு நீ