டியர் பப்பு,
நீ சிடி பார்க்கும் நேரத்தில் நான் வீட்டின் ஏதாவதொரு மூலையில்தான் இருப்பேன். என் துணிகளை மூட்டைக் கட்டிக் கொண்டு, வீட்டை விட்டு ஓடி விட மாட்டேன், சர்வநிச்சயமாக! (I wish I could do that..**siiighhh**..My wishlist is big you knw!!) வேலை முடிந்ததும் உன்னோடு வந்து அந்த சிடி நிமிடங்களைப் பகிர்ந்துக் கொள்வேன். பார்ப்பதை விட்டுவிட்டு நீ என்னை வந்து கூப்பிட்டுக்கொண்டு இருப்பது, மகிழ்ச்சியாக, பெருமிதமாகத்தான் இருக்கிறதெனக்கு எனினும்... வரையும்போதும், பொம்மைகளுடன் விளையாடும்போதும், மற்ற நேரங்களில் இண்டிபெண்டண்ட்-ஆக இருப்பது போல, சிடியும் பார்த்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்குமெனக்கு! நீ என்ன நினைக்கிறாய்??
அன்புடன்
அம்மா!!
21 comments:
Me the First.
பேசாம நட்டுவை கட்டி போடுவது போல கட்டி போட வேண்டியதுதான்!
குறிப்பு: கட்டி போட சொன்னது பப்புவை அல்ல!:-))
பப்பு கூட சிடி பார்ப்பதை விட வேற என்ன அத்தன முக்கியம்!
பாவம் பப்பு:(!
பப்பு சொல்லுவாள்:
"நான் வரையும் பொழுது, விளையாடும் பொழுதும் நீ வீட்டில் ஏதாவதொரு மூலையில்தான் இருப்பாய், உன்னை டிஸ்டர்ப் செய்யாமல். நான் சி.டி பார்க்கும் பொழுது மட்டும் என்னுடன் நீ இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்குமெனக்கு!!!"
;-)
பப்புகூட C.D. பார்க்கவில்லையென்றால் கொடி தூக்கப்படும்.
பப்பு பேரவை.
சிங்கப்பூர்
பாவம் பப்பு :(((
//பாவம் பப்பு:(!/
pappu peravai
qatar
டியர் ஆச்சி
படம் வரையும் போதும், விளையாடும் போது என் கற்பனைகளோடு நான் தனித்து இருந்துவிடுவேன். சி.டி. மற்றவர்களின் கற்பனை. அதனை பகிர்ந்து கொள்ள நான் உன்னை தேடுவேன், நீ வீட்டின் எந்த மூலையில் இருந்தாலும்.
அன்புடன்
பப்பு
சிடி பார்க்கும் போது
நான் ரசிப்பதை நீ ரசிக்கனும் பக்கத்தில்!!
ஏன்'ன்னு கேள்வி கேட்க நீ வேணும் பக்கத்தில்!!
பதில் சொல்லவும் நீ வேணும் பக்கத்தில்!!
கட்டிக்கொண்டு பாக்க நீ வேணும் பக்கத்தில்!!
இதை எல்லாம் செய்ய முடியாட்டா நீ ஆபிஸிக்கு போ ..நான் தனியா இருந்துக்கறேன். .நீ திரும்ப வீட்டுக்கும் வராதே..!!
உன் கூட இனிமே நான் பேசமாட்டேன் போ..!!
ஆச்சியோட பப்பு!!
Mullai she needs your company rey.. !! why dont u consider her wish..!! then vayasana kalathula neenga avaloda company venumnu nenaikkum bothu ethai ellam solli solli engage pannikalam... make it a record for your future.. !
தனியாக சிடி பார்ப்பது படு போர்.முல்லை எங்கே நீங்க ஒரு படத்தை யாரோட கம்பெனியும் இல்லாம பாருங்க பார்ப்போம்.
இதுல பப்புவுக்கு அட்வைஸா??
பப்பு ஆண்ட்டி உன் கட்சி...
//
வரையும்போதும், பொம்மைகளுடன் விளையாடும்போதும், மற்ற நேரங்களில் இண்டிபெண்டண்ட்-ஆக இருப்பது போல, சிடியும் பார்த்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்குமெனக்கு! நீ என்ன நினைக்கிறாய்??
//
நல்ல பழக்கம் தான்.... :)
பொழிலன் அப்படி தனியாக இருக்க விரும்புவதில்லை... எப்பவுமே அவருக்கு நான் அருகிலேயே இருக்க வேண்டுமென்பதே விருப்பம்... என்னால் சில தவிர்க்க இயலாத வேலைகளுக்குக்குக் கூட அவரை விட்டு செல்லமுடியவில்லை... இந்த பழக்கத்தினை மாற்ற ஏதாவது வழிமுறை கூறுங்களேன்....
நியாயமான அட்வைசா தெரிலையே ...பப்பு கூட சி.டி பார்க்க நாங்க வேணா வரவா?
வீட்ல வேலை எல்லாம் முடிச்சுட்டு பப்பு ஸ்கூல் விட்டு வரும் போது டெய்லி சி.டி பார்க்க வந்துடறோம்...இலவச இணைப்பா நாங்களே சி.டி யும் கூட கொண்டு வந்திடறோம்.
//அபி அப்பா said...
பேசாம நட்டுவை கட்டி போடுவது போல கட்டி போட வேண்டியதுதான்!
குறிப்பு: கட்டி போட சொன்னது பப்புவை அல்ல!:-))//
அரசியல் புரியுது சித்தப்பா
பப்புக்கும் கஷ்டம். உங்களுக்கும் கஷ்டம்:(
பப்பு பரவாயில்லை. தனியா விளையாடுகிறா. தீஷுவிற்கு விளையாடும் பொழுது கூட நான் வேண்டும். வேலையைத் தொடர்ந்துயிருந்தால் இன்னும் கொஞ்சம் independentடா இருந்திருப்பாள் என்று தோன்றும்.
என்ன பப்புவுக்கு அன்பு கலந்த அறிவுரையா?
பாவம் பப்பு.. என் பெண்ணாக இருந்தால் "அம்மாவை குப்பையிலே போடனும்முன்னு சொல்லுவா"
பாவம் பப்பு, அவ கூட கொஞ்சம் உக்காந்து, அந்த சிரிப்ப தான் கொஞ்சம் பாருங்களேன் :))
பப்புவோடு சி.டி பார்க்க வலியுறுத்தி நாளை உண்ணாவிரதம்
புப்பு பேரவை
சென்னை.
ஹா ஹா ஹா உள்ளத்திலிருந்து வந்த உண்மையான வார்த்தைகள்:):):) சூப்பர்:):):)
//then vayasana kalathula neenga avaloda company venumnu nenaikkum bothu ethai ellam solli solli engage pannikalam... make it a record for your future.//
same old guilty game:):):)
Post a Comment