Thursday, September 04, 2008

Princess Messy's

Bright and Messy pictures!!




***************************************************************************
நேற்று அதிகாலை எனது அம்மா வந்திருந்தார்கள். பப்பு வழக்கம் போல ஏழு மணிக்கு எழுந்து விட்டாள்.
இன்னும் கொஞ்சம் தூங்கலாமேயென்று நான் புரண்டுக்கொண்டிருதேன்...பப்பு விடவில்லை!

பப்பு, வடலூர் ஆயா வந்திருக்காங்க, போய் பாரேன்!!

நீயும் வா...

நீயே போய் பாரு பப்பு!!

கதவைத் திறந்து வெளியே சென்று, ஆயாவை பார்த்த பப்பு,

"ஆயா வந்திருக்காங்கன்னு அம்மா சொன்னாங்க! நெஜமாத்தான் இருக்கு!! "

(நெஜம், பொய் என்ற வார்த்தைகளை நான் கற்றுக்கொடுக்கவில்லை!!!)


***************************************************************************

ரோல் மாடல்!!

பப்புவிடம் ஒரு சிறிய துடைப்பம் உண்டு! . அவளது வீடு பெருக்கும் ஆசைக்காக !!
(துடைப்பத்திலிருந்து ஒடித்த துண்டு!!)

பெருக்கிக் கொண்டே

"ஆயா, நாந்தான் வசந்தா!! நாந்தான் வசந்தா, ஆயா!!"

(வசந்தாம்மா, எங்கள் காம்பவுண்டை பெருக்கி தூய்மை செய்பவர்!!)

9 comments:

said...

:)))

said...

The picture speaks thousand words....:)

said...

நன்றி மங்களூர் சிவா வருகைக்கு!!

ராஜா : வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

said...

so so cute

said...

நெஜம், பொய் என்ற வார்த்தைகளை நான் கற்றுக்கொடுக்கவில்லை!!!)

//

குழந்தைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டுமா? நாம் தான் அவர்களிடம் நிறைய கற்க வேண்டும் சகோதரி. :)

said...

நன்றி ராப்!!

அப்துல்லா..அது என்னவோ உண்மைதான்!!

said...

//ஆயா, நாந்தான் வசந்தா!! நாந்தான் வசந்தா, ஆயா!!"//

;-))

said...

// ஆயா வந்திருக்காங்கன்னு அம்மா சொன்னாங்க! நெஜமாத்தான் இருக்கு//

கிகிகி... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது :)

பப்பு வரைந்த படங்கள் அழகா இருக்கு :)

said...

இந்த வயசிலேயே என்னமா மாடர்ன் ஆர்ட் வரையிறாங்க‌ :)