Monday, May 24, 2010

கொஸ்டின் பேங்க்!

மின்சாரம் இல்லாத இரவில் மாடிக்கு சென்றோம். தூங்காமல் பப்பு ஏதோ பேசிக்கொண்டே இருந்தாள். பக்கத்துவீட்டு மாடியிலும் இதே கதைதான். அங்கிருந்த ஒருவயது குழந்தையும் முழு குஷியில் சத்தம். அந்த குழந்தையின் அப்பா குழந்தையை அதட்டியதும் அழத்தொடங்கியது.


“நீயும் தூங்காம இருந்தா அந்த வீட்டுக்குதான் போணும்” - பப்புவிடம் முகில்.


“நானா பேபி மாதிரி அழறேன்?”


“நான் அந்த வீட்டுலேயா பொறந்தேன்?”


”நானா அவங்க பேபி?”


“அவங்களா எங்க அப்பா?”


”போதும் பப்பு, நான் என்ன சொன்னேன்...அதுக்குள்ளே இத்தனை கேள்வி கேக்கறியே” - முகில்!

15 comments:

Unknown said...

இப்பிடி ஒரு ஆளு வேணும்.. அப்பத்தான் அதட்ட மாட்டீங்க.. :))

கவிதா | Kavitha said...

ம்ம்ம்...குட்!!

உங்களை எல்லாம் இப்படி கேள்வி கேக்காட்டி அடங்குவீங்களா?

அடுத்துவீட்டுக்கு இல்ல எங்களை அனுப்பிடுவீங்க....

சென்ஷி said...

:)

நல்லாயிருக்குங்க

ராமலக்ஷ்மி said...

:))!

Deepa said...

:))) LOL!!!
Apdiye record panni irukkalaam!

Unknown said...

//”போதும் பப்பு, நான் என்ன சொன்னேன்...அதுக்குள்ளே இத்தனை கேள்வி கேக்கறியே” - முகில்!
//

மனசுக்குள்ளே “அம்மா மாதிரியே”ன்னு சொன்னாரா :-)?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ச்சோ ஸ்வீட் பப்பு!!!
பப்பு பேரவை ஆரம்பிச்சது வீண்போகல!!!

KVR said...

// மனசுக்குள்ளே “அம்மா மாதிரியே”ன்னு சொன்னாரா :-)?//

அது மைன்ட் வாய்ஸ், வெளிய கேக்காது!!!

Dr.Rudhran said...

இப்போதுதான் கேள்விகள்! வளர்ந்துவிட்டால் பதில்கள் மட்டுமே வெளிப்படும். கேட்கட்டுமே, நாளை கேள்விகளை எதிர்கொள்ள.
வாழ்த்துகளும் நன்றியும் முல்லை, பகிர்விற்காக.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

\\மனசுக்குள்ளே “அம்மா
மாதிரியே”ன்னு சொன்னாரா//
hahhaa...
இது நல்லா இருக்கே..

எங்க பேங்க் ம் ஓவர் .. அம்மா நானும் இப்படியா பேசின்னேன்னு கேக்கறா பெரியவ.. :) ஆமாம்ன்னு சொன்னேன்.. என்னை பாவமா பாக்கறா..

க.பாலாசி said...

குட் கொஸ்டின்ஸ்....

Anonymous said...

அப்பா அம்மா வாயை அடைக்கணும்னா கேள்வி மேல கேள்வி கேக்கணுமா :)

ஜெயந்தி said...

ஒரு வார்த்தைக்கு எத்தன கேள்வி.

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html

நசரேயன் said...

//மனசுக்குள்ளே “அம்மா மாதிரியே”ன்னு சொன்னாரா :-)?//

கண்டிப்பா சொல்லி இருப்பார்

Prasanna said...

:)

Anna said...

:)