Tuesday, July 15, 2008

நினைவுகளின் பிரதிபலிப்புகள்

ஆண்டுத் தேர்வுகள் முடிந்ததும் விடுமுறைக்கு வடலூர் செல்வது வழக்கம்.
பன்னிரண்டம் வகுப்பு பரீட்சைகள் முடிந்ததும், நுழைவுத்தேர்வுக்கான கோச்சிங் கடலூரிலோ அல்லது நெய்வேலியிலோ என்று முடிவானது. நெய்வேலி செயின்ட்.பால்ஸ் பள்ளியின் கோச்சிங்கில் சேர்ந்தேன். பொதுவாக பள்ளியில் நடக்கும் கோச்சிங் கிளாஸில் அந்த பள்ளி மாண்வர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமே சேருவார்கள். இப்படி ஊர் விட்டு ஊர் வந்து படிப்பவர்கள் மிகவும் அரிது! அந்த மாணவர்கள் எல்லாம் ஒரு குருப்பாக, அல்லது ப்ரெண்ட்சாக இருப்பார்கள். நான் மட்டும் odd girl(!!) out!! ஒரு பதினைந்து-இருபது பெண்கள் இருந்தார்கள். எல்லாம் நெய்வேலி பெண்கள் கான்வென்ட் பள்ளி! ஒரு சிலர் கடலூர் க்ளூனியிலிருந்து!! கோச்சிங் ஒரு 30 நாட்கள் மட்டுமே! ப்ரேக் டைம் 15 நிமிடங்கள்!!
அனைவருடைய பெயர்களும் தெரிவதற்குள்ளாகவே நாட்கள் முடிந்து போயின! I made some wonderful friends there...and lost contacts!

நேற்று மாலை எனது ஆர்குட் பக்கத்தில் ஒரு மின்னழைப்பு!! அதில், "செயின்ட் பால்ஸ் கோச்சிங்கில் படித்த அதே சந்தனமுல்லையா?" என்று ஸ்கிராப்!! பெயரோ, பேசியிருக்கிறேனாவென்றும் ஞாபகத்தில் இல்லையென்றாலும், பத்து நீண்ட வருடங்களுக்கு (என் வயதை கணக்கிட்டு விட்டீர்களா!?!) முன்னால் சந்தித்த நபர் என் பெயரை நினைவு கொண்டிருப்பது, எதிர்பாராத தருணத்தில் ஒரு பூங்கொத்தை பெறுவதைப் போல் மகிழ்ச்சி தருவதாயிருந்தது. தொடர்பை விட்டுப் போன எத்தனையோ எனது பால்ய கால நண்பர்களையும் என் தொடர்பு எல்லைக்குள் கொண்டு வந்த ஆர்க்குட்டுக்கு நன்றி!!

x-----x-----x-----x------x----x
சாலையில் எனக்கு முன் செல்லும் ஆட்டோவில் வாசகங்கள் இருந்தால் எப்படியேனும் சந்து பொந்துக்களில் புகுந்து படித்துவிட முயல்வேன். பல நேரங்களில் பைபிள் வசனங்கள், கீதோபதேங்கள் அல்லது "சுருக்" வசனங்கள்/வாழக்கை தத்துவங்கள், சுயபுலம்பல்கள்/கவிதை போன்றவை மற்றும் random thoughts!! இன்று படிக்கக் கிடைத்தது,

" உங்கள் வழிச்செலவு எங்கள் வாழ்க்கைச் செலவு!"

how true!! ப்ளாக்குக்கு முன்னோடி இந்த ஆட்டோ வாசகங்கள்.. :-))!!

1 comment:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ இப்படியாக அண்ணாமலை பல்கலைகழகத்தில் தொலைதூரப்படிப்பில் 4 நாள் பயிற்சிவகுப்பில் எனக்கு கிடைத்த அற்புதமான நட்புகளையும் இழந்திருக்கிறேன்.. உங்களுக்கு திரும்ப கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி..