Wednesday, September 08, 2010

மேஜிக் ஸ்டிக்

பப்புவுக்கு, அவளது வடலூர் ஆயா வாங்கி வந்த டிராயிங் நோட்டு புத்தகம் இது. மேஜிக் ஸ்டிக் என்று எழுதியிருந்தது. நோட்டு புத்தகத்தோடு வாட்டர் கலரும் இருந்தது. காகிதத்தில் கண்ணுக்குத் தெரியாத அவுட்லைன் வரையப்பட்டிருக்கும். தீட்டும்போது வண்ணங்கள் விரவி வடிவம் புலப்படும். இதுதான் மேஜிக் போல!

பப்புவும், வடலூர் ஆயாவோடு வரைந்தது கீழே.



ஆமை

ஸ்கெட்ச் கொண்டு வரைந்திருக்கிறாள்.

என்னன்னு தெரியலை.....பப்புவுக்கும்!

இதுவும் தான்..ஆனால் அந்த வண்ணத்தேர்வுகள் பிடித்திருந்தது. கலைக்கண் கொண்டு என்னதுன்னு சொல்லுங்க பார்ப்போம்!


Hungry caterpillar

யானைக்குட்டி.....இப்போ எல்லாமே குட்டிதான்..ஆச்சிக்குட்டி...ஆயாக்குட்டி..ன்னு கொஞ்சல்ஸ்...இதுவும் ஒரு phase போல! எங்கே போய் முடியுமோ!!

9 comments:

ராமலக்ஷ்மி said...

பப்புக் ‘குட்டி’ வரைந்தவை எல்லாமே அழகு:)!

என்னவென்று தெரியாத படங்களில் முதலாவதில் ஒரு சிறுவன் தன் வலப்பக்கம் தலையைத் திருப்பியபடி, இரண்டாவதில் ஒயிலாக ஒரு பெண்மணி.. தெரிகிறார்கள் என் கலைக்கண்ணுக்கு:)!

thamizhparavai said...

இப்பவே பின் நவீனத்துவ ஓவியமா... வாழ்த்துக்கள்...

நசரேயன் said...

//கலைக்கண் கொண்டு என்னதுன்னு சொல்லுங்க பார்ப்போம்!//

தயிர் சாதமா ?

நட்புடன் ஜமால் said...

தெரியாத படத்தில்

அணில் குட்டி தெரியுதெனக்கு

கங்காரு பங்காரு போலவும்

மதுரை சரவணன் said...

வரைந்துள்ள அத்தனைப்படங்களும் அருமை. வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\ஒரு சிறுவன் தன் வலப்பக்கம் தலையைத் திருப்பியபடி, இரண்டாவதில் ஒயிலாக ஒரு பெண்மணி.. தெரிகிறார்கள் என் கலைக்கண்ணுக்கு:)!//

:)

அது எனக்கு ஒரு ஆண் மீன் பெண் மீன் மாதிரி இருக்கு.. :)) ஓவர் ஆ இருக்கோ..

Dhiyana said...

ப‌ட‌ங்க‌ள் அழ‌கு

Deepa said...

ஹை! மேஜிக் கலரிங் சூப்பர்.
அந்தப் படத்தைக் கலைக்கண்ணோட பாத்தா ஒரு ஆளு நடக்கறது மாதிரி தெரியுது.

ஹூம்ம்....என்னையும் ஆன்டிக்குட்டின்னு கூப்பிடு பப்பு!
:)

எண்ணங்கள் 13189034291840215795 said...

எனது மெத்தனத்தாலேயும், எதிர்நோக்காத தன்மையாலுமே உன்னை பலநேரங்களில் அவஸ்தைக்கு உள்ளாக்கியிருக்கிறேன், பப்பு. அது முற்றிலும் எனது கவனமின்மையே. மன்னிப்பு கேட்பது ஒருநாளும் சரியான தீர்வல்ல என்று அறிந்திருந்தாலும் என்னை நீ மன்னிப்பாயாக!

------------------------------------


இந்த ஒண்ணுலயே எல்லாம் புரிய முடிகிறது முல்லை..

உங்க தாய்ப்பாசம் அழகான அதிர்வை உண்டாக்குகின்றது..

குழந்தைகள் நம்மிடம் வந்து அதே மன்னிப்பை கேட்டு கொஞ்சுவதும் மிக அழகு...

" சீக்கிரம் கொஞ்சிமுடியுங்கள் ஏனெனில் அவர்கள் வளர்கிறார்கள்.."

ஏண்டா வளருகின்றாய் என என் குழந்தையை நான் கேட்பதுண்டு..


அலுப்பே தட்டாத வேலை அம்மா வேலைதான் இவ்வுலகில்...

எத்தனை ஜென்மம் என்றாலும் பெண்ணாய் பிறக்கணும் இப்படி கொஞ்சிக்கொஞ்சி மகிழணும்...

:)