Tuesday, April 23, 2013

பப்புவும் கண்ணகியும்

பப்புவுக்கு கண்ணகி கதையை சொல்லியிருந்தோம். கேரளாவுக்குச் சென்றபோது, அருகில் கண்ணகி கோயில் இருப்பதாகவும், அங்கு செல்ல வருடத்தில் ஒருமுறை மட்டுமே அனுமதிப்பதாகவும் சொல்லியிருந்தார்கள். சமீபத்தில், அண்ணா சாலை வழியே வரும்போது கண்ணகி சிலையையும் காட்டியிருந்தேன். எல்லாம் நிகழ்ந்தது ஓரிரு வார காலத்துக்குள்ளேயே! ஆனாலும், கண்ணகி பப்புவை ரொம்பவே டிஸ்டர்ப் செய்து விட்டாள்.

கண்ணகியை பிடிக்கவில்லை என்று ஒரே பொருமல்! தாங்க முடியவில்லை.முக்கியமாக கண்ணகி மதுரையை எரித்ததுதான் அவளால் தாங்க இயலாமல் இருக்கிறது. "அப்புறம், இப்போ எப்படி மதுரை இருக்கு" என்று கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டு பொருமி தள்ளிவிட்டாள்.

"அவளை யாரு எரிக்க சொன்னாங்க? அவளோட ஹஸ்பெண்ட கொன்னுட்டாங்கன்னா, வேற ஹஸ்பென்ட் வைச்சுக்க வேண்டியதுதானே!!" ‍

அவ்வ்வ்வ் என்று ஜெர்க்காகி, "அவ இவன்னு சொல்லக்கூடாது பப்பு, அவங்கன்னுதான் சொல்லணும்" என்றதும்,

"அவங்க எதுக்கு மதுரையை எரிக்கணும்? அந்த ஊர்லே எத்தனை குழந்தைங்க இருப்பாங்க?அவங்கல்லாம் பாவம் இல்ல? அவங்களும்தானே எரிஞ்சிருப்பாங்க. கண்ணகி, அவங்க அம்மா ஊரை போய் எரிக்க வேண்டியதுதானே?" -  பச்சைமொளகா ரொம்ப கோபத்துடன் படபடத்தது.

சுனாமியில்,போரில்,நில நடுக்கத்தில் குழந்தைகள் பாதிக்கப்படுவது பப்புவால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று!!

"அவங்க அம்மா ஊரை மட்டும் எரிக்கலாமா?"  என்றேன், லாஜிக்காக கேட்டுவிட்ட  பெருமையுடன்! அப்புறம்தான் புரிந்தது,  பப்புவின் எண்ணத்தில், யாரும் தன் அம்மா இருக்கும் ஊரை எதுவும் செய்துவிட மாட்டார்கள் என்பது!!

"அதான், அவங்க அம்மா இருக்க ஊரை எரிக்கலைல்ல? ஆமா, ராஜாகிட்டேருந்து அவங்க நேரா எங்க போனாங்க? வத்திக்குச்சி வாங்க கடைக்கு போனாங்களா? ஏன் வத்திக்குச்சி கொடுத்தாங்க அவங்களுக்கு? குடுத்தே இருக்கக்கூடாது!!" - பப்பு

அவ்வ்வ்வ்வ்வ்!

"எரிச்சுட்டு எங்க போனாங்க?அவங்களை யாரும் திட்டலையா?" - பப்பு

"அதான் எல்லாரும் எரிஞ்சிபோயிட்டாங்களே!எரிச்சுட்டு கேரளா போயிட்டாங்க‌"

"அங்க யாரும் எதுவும் சொல்லலையா?" - பப்பு

"அவங்க, அப்புறம் 'புஷ்பக விமானத்துல' வானத்துக்கு போயிட்டாங்களாம்!"

"ஓ! அதான் இப்போ ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்ல்லாம்  அவங்களை தேடிக்கிட்டு இருக்காங்களா?!! - பப்பு

எப்படியும், நைட் சாப்பாடு கண்ணகி புண்ணியத்தில் ஓடிவிடும்! :-)

ஐயம் வெரி சாரி இளங்கோவடிகள்! நீதி இப்படி backfire ஆகும்னு எதிர்பார்க்கவேயில்லை!!  ;-) ;-)

4 comments:

இரசிகை said...

:))

Anonymous said...

So nice..I am surprised to see her wisdom. Please also share the list of books you introduced to puppu. This will surely help us.
- SP

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

பப்புவுக்கு சொல்லிவிட்டு நீங்கள் மட்டும் கண்ணகியை 'ள்' போடலாமா? (முதலாவது பந்தி கடைசி வரி)?? :O)

Dhiyana said...

//ஓ! அதான் இப்போ ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்ல்லாம் அவங்களை தேடிக்கிட்டு இருக்காங்களா?//

Best :-))