பப்பு கையில் மணிகளாலான ஒரு பிரேஸ்லெட்டை அணிந்திருந்தாள். குளிப்பதற்காக அதை கழட்டும்போது அதிலிருந்த தொங்கல்கள் அவளது கையை கீறிவிட்டன (லேசாகத்தான்!).
“நீ ஒரு அம்மா மாதிரியா நடந்துக்கறே, குழந்தையை பத்திரமா பாத்துப்போம்னு இல்லாம...நீ உண்மையான அம்மாவே இல்ல!!”
இது நடந்து ஓரிரு நாட்கள் இருக்கும். தூங்குமுன்பு பேசிக்கொண்டிருந்த போது,
”அபிஷேக் என்னை இன்னைக்கு கிரௌண்ட்ல புஷ் பண்ணிட்டான் ஆச்சி, நான் விழுற மாதிரி போயிட்டேன்...அவன் ஏன் என்னை புஷ் பண்ணான்?”
”தள்ளிவிட்டானா?கீழே விழுந்தியா?”
”இல்ல ஆச்சி, நாங்க ஓடிபுடிச்சு விளையாடினோம்...அவன் என்னை வந்து வந்து தள்ளி விடறான். ”
“நீ உடனே ஆண்ட்டிகிட்டே சொல்ல வேண்டியதுதானே? ஏன் சும்மா இருந்தே?
தள்ளிவிடாம விளையாடணும்னு சொல்றது?”
“அபிஷேக் என் ஃபிரண்டு. பிரண்டையெல்லாம் ஆண்ட்டிக்கிட்டே மாட்டிவிடலாமா?”
:-) -தா :-( -தா என்று தெரியாமல் :-|
3 comments:
நல்ல ‘ஙே’:)!
nalla pappu...
akka akka palpu palpu
ungalukku ethanai palpukal.
posama oru electrical shop arampinga.
kulanthainka inniki sandai podum nalaikki sernthukum enra logic kooda illamal kelvi kettal ippadithan palpu kidaikkum.
Post a Comment