'நான் கல்யாணத்தை நிறுத்த போறேன். அதுதான் என் ப்ளான்' என்று வருவோர் போவோரிடம் எல்லாம் சதிதிட்டம் தீட்டிக்கொண்டிருந்தாள். அதில் சிலர் பப்புவுக்கு ஐடியா தருவதாக எண்ணி, 'நீ கல்யாணத்தப்போ மாமாவோட சீப்பை எடுத்து ஒளிச்சு வைச்சுடு.' என்று சொல்லிக்கொண்டிருந்தனர். பப்பு அதையே பிடித்துக்கொண்டாள்.
நச்சு தாங்காமல் 'சீப்பை எல்லாம் ஒளிச்சு வைப்பாங்களா? அது கிண்டலுக்கு சொன்னது பப்பு' என்றதும், அவளது திட்டத்தை என்னிடம் விவரிக்கத் தொடங்கினாள்.
'எல்லா சீப்பையும் ஒளைச்சு வைச்சுட்டா என்ன ஆகும்? மாமா சீவ முடியாது. அப்போ, மாமாவோட தலை எப்படி இருக்கும்? அதை பார்த்துட்டு பிரைட்(bride) !!! "ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆ...யார்றா இந்த பையன் பேய் மாதிரி இருக்கான்னு"ன்னு சொல்லிட்டு கல்யாணம் வேணாம்னு சொல்லிடுவாங்க'
;-)
இரவு தூங்கும் நேரத்தில் "கதை
சொல்லு கதை சொல்லு" என்ற கேட்டு சலித்த பிறகு பப்பு 'சரி, நானே ஒரு கதை
சொல்றேன்" என்று தன் கையே தனக்குதவியாக ஆரம்பித்தாள்.
"ஒரு ஊர்ல தில்லையர்க்கரசின்னு (தில்லைக்கரசியை அப்படிதான் சொல்றா!) ஒரு குட்டி பொண்ணு இருந்துச்சாம். அந்த குட்டி பொண்ணு வளர்ந்து டீச்சர் ஆகிடுச்சாம்.அதுக்கு ஒரு டாட்டர் வந்துச்சாம். அந்த டாட்டர் பேரு சந்தனமுல்லையாம். அந்த டாட்டருக்கு குட்டி டாட்டர் வந்துச்சாம். அந்த பொண்ணு பேரு குறிஞ்சி மலராம். அது எப்போவும் கதை கேட்டுக்கிட்டே இருக்குமாம். அப்போ அவங்க ஆயா ஒரு கதை சொன்னாங்களாம்.
ஒரு ஊர்லே ஒரு குட்டி பொண்ணு இருந்துச்சாம். அந்த பொண்ணு செம வாலாம். ரொம்ப குறும்பு பண்ணுமாம். எல்லாரையும் ஹர்ட் பண்ணிடுமாம். அதுக்கு வால் முளைச்சுக்கிச்சாம். அது அவங்க ஆயாகிட்டே போய் எனக்கு ஏன் வால் முளைச்சுச்சுன்னு கேட்டுச்சாம். நீ வால்த்தனம் பண்றதால உனக்கு வால் முளைச்சுடுச்சுன்னு சொன்னாங்களாம். அப்போ அவங்க அப்பா, நீ யாரைல்லாம் ஹர்ட் பண்றியோ அப்பல்லாம் இந்த சுவரிலே ஒரு ஆணி அடின்னு சொன்னாராம். அது கொஞ்ச நாள்லே ஆணி அடிச்சு அடிச்சு சுவரே ஃபுல்லாயிடுச்சாம். அப்போ அவங்க அப்பா ஆணியெல்லாம் எடுத்துட்டு சொன்னாராம். அங்கே நெறைய ஓட்டை இருந்துச்சாம், ஆணி அடிச்ச இடத்துலே. 'நீ ஆணி அடிச்சுட்டு எடுத்தாலும் ஹர்ட் பண்ணது பண்ணதுதான்'னு சொல்லிட்டு ஒரு கதை சொன்னாராம்.
இப்படிதான் ஒரு ஊர்ல ஒரு பொண்ணு இருந்துச்சாம். அந்த பொண்ணுக்கு ஒரு வால் இல்ல...பல வாலுங்க இருந்துச்சாம். 20 30 வாலு. ஏன்னா அந்த பொண்ணு செம வால்த்தனம் பண்ணுமாம். அப்போ..."
அதுக்குள்ளே நான் தூங்கிட்டதாலே கதை எப்போ முடிஞ்சதுன்னு தெரியலை!
#நெவர்_எண்டிங்_வால் ;-)
"ஒரு ஊர்ல தில்லையர்க்கரசின்னு (தில்லைக்கரசியை அப்படிதான் சொல்றா!) ஒரு குட்டி பொண்ணு இருந்துச்சாம். அந்த குட்டி பொண்ணு வளர்ந்து டீச்சர் ஆகிடுச்சாம்.அதுக்கு ஒரு டாட்டர் வந்துச்சாம். அந்த டாட்டர் பேரு சந்தனமுல்லையாம். அந்த டாட்டருக்கு குட்டி டாட்டர் வந்துச்சாம். அந்த பொண்ணு பேரு குறிஞ்சி மலராம். அது எப்போவும் கதை கேட்டுக்கிட்டே இருக்குமாம். அப்போ அவங்க ஆயா ஒரு கதை சொன்னாங்களாம்.
ஒரு ஊர்லே ஒரு குட்டி பொண்ணு இருந்துச்சாம். அந்த பொண்ணு செம வாலாம். ரொம்ப குறும்பு பண்ணுமாம். எல்லாரையும் ஹர்ட் பண்ணிடுமாம். அதுக்கு வால் முளைச்சுக்கிச்சாம். அது அவங்க ஆயாகிட்டே போய் எனக்கு ஏன் வால் முளைச்சுச்சுன்னு கேட்டுச்சாம். நீ வால்த்தனம் பண்றதால உனக்கு வால் முளைச்சுடுச்சுன்னு சொன்னாங்களாம். அப்போ அவங்க அப்பா, நீ யாரைல்லாம் ஹர்ட் பண்றியோ அப்பல்லாம் இந்த சுவரிலே ஒரு ஆணி அடின்னு சொன்னாராம். அது கொஞ்ச நாள்லே ஆணி அடிச்சு அடிச்சு சுவரே ஃபுல்லாயிடுச்சாம். அப்போ அவங்க அப்பா ஆணியெல்லாம் எடுத்துட்டு சொன்னாராம். அங்கே நெறைய ஓட்டை இருந்துச்சாம், ஆணி அடிச்ச இடத்துலே. 'நீ ஆணி அடிச்சுட்டு எடுத்தாலும் ஹர்ட் பண்ணது பண்ணதுதான்'னு சொல்லிட்டு ஒரு கதை சொன்னாராம்.
இப்படிதான் ஒரு ஊர்ல ஒரு பொண்ணு இருந்துச்சாம். அந்த பொண்ணுக்கு ஒரு வால் இல்ல...பல வாலுங்க இருந்துச்சாம். 20 30 வாலு. ஏன்னா அந்த பொண்ணு செம வால்த்தனம் பண்ணுமாம். அப்போ..."
அதுக்குள்ளே நான் தூங்கிட்டதாலே கதை எப்போ முடிஞ்சதுன்னு தெரியலை!
#நெவர்_எண்டிங்_வால் ;-)
நேத்துலேருந்து பப்புவுக்கு என் மேலே ரொம்ப ஃபீலிங்ஸ்!! ஒரு கிளாசுக்கு
கொஞ்சம் லேட்டா போயிட்டோம். 2 நிமிஷம்தான். வீட்டுக்கு வந்ததும், "கிளாஸ்
ஆரம்பிச்சுடுச்சா நீ போறதுக்குள்ளே" ந்னு கேட்டேன். அது அவளுக்கு ரொம்ப டச்
ஆகிடுச்சு.
"எல்லாரும் அப்போதான் போய் உட்கார்ந்திருந்தாங்க. ஆரம்பிக்கல்லாம் இல்ல. நீ எப்படி கேக்கிறே...பாரு !! ..அதுலேருந்து தெரியுது. உனக்கு என் மேல அவ்ளோ அக்கறைன்னு. நீ எது சொன்னாலும் நான் செய்வேன் ஆச்சி!" என்றெல்லாம் ஒரே லவ்ஸ்! நானும், இதான் சான்சுன்னு, "காலையில நான் எழுப்பும்போது மட்டும் எழுந்துடு" என்று காதில் போட்டு வைத்தேன்.
(அதற்கு முதல் நாள்தான் 'உன்னை தவுஸண்ட் இயர்ஸுக்கு புடிக்கும், ஆனா, எல்லா டேஸ்லெயும் மார்னிங் மட்டும்தான் புடிக்காது'ன்னு ஒரு பல்பு குடுத்திருந்தா!)
அதுலேருந்து, "ஐ லவ் யூ ஆச்சி ," நீதான்ப்பா என் லைஃப்" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவள், ஒரு படி மேல் போய், அவளது அன்பை நிருபிக்க வேண்டி - ஒரு உதாரணத்தை சொன்னாள்.
'நான் தாட் ஃபார் த டேவுல என்ன எழுதினேன்..?.An intelligent son makes a father glad; But a foolish son makes his mother sad" ந்னு இருந்ததை, நான் எப்படி எழுதுனேன். An intelligent daughter makes her mother glad, but foolish daughter makes her father sad. எல்லாம், உனக்காகதான்..ஆச்சி!"
நேரமோ எட்டரை. அங்கே,ஆட்டோ வேற வெயிட்டிங்!
இதுக்கெல்லாம் 'என்ன கைமாறு செய்ய போகிறேன்' லுக்கோட, ஈஈஈஈன்னு சிரிச்சு - 'தேங்க் யூ'ன்னு சொல்லிட்டேன்!
#வீ_வான்ட்_மோர்_எமோசன்
"எல்லாரும் அப்போதான் போய் உட்கார்ந்திருந்தாங்க. ஆரம்பிக்கல்லாம் இல்ல. நீ எப்படி கேக்கிறே...பாரு !! ..அதுலேருந்து தெரியுது. உனக்கு என் மேல அவ்ளோ அக்கறைன்னு. நீ எது சொன்னாலும் நான் செய்வேன் ஆச்சி!" என்றெல்லாம் ஒரே லவ்ஸ்! நானும், இதான் சான்சுன்னு, "காலையில நான் எழுப்பும்போது மட்டும் எழுந்துடு" என்று காதில் போட்டு வைத்தேன்.
(அதற்கு முதல் நாள்தான் 'உன்னை தவுஸண்ட் இயர்ஸுக்கு புடிக்கும், ஆனா, எல்லா டேஸ்லெயும் மார்னிங் மட்டும்தான் புடிக்காது'ன்னு ஒரு பல்பு குடுத்திருந்தா!)
அதுலேருந்து, "ஐ லவ் யூ ஆச்சி ," நீதான்ப்பா என் லைஃப்" என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தவள், ஒரு படி மேல் போய், அவளது அன்பை நிருபிக்க வேண்டி - ஒரு உதாரணத்தை சொன்னாள்.
'நான் தாட் ஃபார் த டேவுல என்ன எழுதினேன்..?.An intelligent son makes a father glad; But a foolish son makes his mother sad" ந்னு இருந்ததை, நான் எப்படி எழுதுனேன். An intelligent daughter makes her mother glad, but foolish daughter makes her father sad. எல்லாம், உனக்காகதான்..ஆச்சி!"
நேரமோ எட்டரை. அங்கே,ஆட்டோ வேற வெயிட்டிங்!
இதுக்கெல்லாம் 'என்ன கைமாறு செய்ய போகிறேன்' லுக்கோட, ஈஈஈஈன்னு சிரிச்சு - 'தேங்க் யூ'ன்னு சொல்லிட்டேன்!
#வீ_வான்ட்_மோர்_எமோசன்
1 comment:
கடைசில பப்புவோட மாமா கல்யாணத்துல சீப்பு என்ன ஆச்சுனு சொல்லவே இல்லையே மேடம்
Post a Comment