”அது எப்படி பிடிக்காம இருக்கும்? அவங்க மேல நெறைய கேஸ் இருக்கு, பெங்களூர் கோர்ட்ல இப்போஅவங்களை கேள்வி கேட்கிறாங்க, எப்படி உங்களுக்கு இவ்ளோ சொத்து வந்துச்சுன்னு” என்றதும், “ஓ..அவங்க நெறைய கொள்ளையடிச்சதாலதான் ஏழைங்க உருவாகறாங்களா” என்றாள். ”ஆமாம்” என்றதும் ”நான் சீஃப் மினிஸ்டராகி கொள்ளையடிக்காம இருக்கேன், இல்லனா நான் பிரைம் மினிஸ்டரா ஆகிடவா” என்றாள்.
ஆனாலும், கொள்ளையடித்தவரை போலீஸ் எப்படி ஒன்றும் செய்யாமல் விட்டு வைத்திருக்கிறது என்று அவளுக்கு புரியவே இல்லை. எனக்கும் அவளுக்கேற்றமாதிரி விளக்கத் தெரியவில்லை. இறுதியில், ”நான் போலீஸ் கிட்டே சொல்றேன், நாம வர்ற வழியில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் பார்த்திருக்கேன்” என்றாள். ‘இப்படி நாம் போய் சொன்னா, எப்படிம்மா சொல்றே, ஆதாரம் குடுன்னு போலீஸ் சொல்லுவாங்க” என்றதும் ”நான் நோட்டுல எழுதி வைச்சிக்கிட்டு, அதை காட்டுவேன்” என்றாள். (ஏற்கெனவே ஒரு முறை போலீஸ்
கம்ப்ளெயிண்ட் எழுதிதான் கொடுக்க வேண்டுமென்று சொல்லியிருந்தேன். மெயிட் அனுப்பும் ஏஜென்ஸி பணத்தை வாங்கிக்கொண்டு அனுப்பவில்லை, அதை போலீசிடம் சொல்ல வேண்டுமென்று துளைத்து எடுத்தபோது அப்படி சொல்லியிருந்தேன்)
இரவு வீட்டுக்கு வந்ததும், பழைய தினமணியை எடுத்து ஜெயலலிதா பற்றிய தலைப்புச் செய்திகளை வாசித்து, நோட்டில் தப்பும் தவறுமாக எழுதிக்கொண்டிருந்தாள்.
ஜெயலலிதா பற்றிய போலீஸ் கம்ப்ளெயிண்ட் :
*********************************
கூட்டத்தில், கூடங்குளத்திலிருந்து வந்த மக்களுக்கு பின்வரிசையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். மேடைக்கு அவர்களை அழைத்ததும், மேடையிலேறி பாடல்களை பாடியும், வீர முழக்கங்கள் இட்டும் அணு உலைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை காட்டினர். ”அடுத்து நாம போய் அங்க போராடணுமாப்பா? எல்லாரும் மேடையில போய் போய் போராடணுமா” என்று பப்பு மிகுந்த ஆவலாக இருந்தாள். கூப்பிட்டால் செல்ல ரெடியாக எழுந்து வேறு நின்றுக்கொண்டாள். ஆனால், ஏன் மற்றவர்களைக் கூப்பிடவில்லை என்று அவளுக்கு புரியவே இல்லை. :-)
2 comments:
:) குழந்தைகள் உலகமே தனியழகு தான்.
தொடர்ந்து எழுதுங்கள். அவ் உலகத்துக்குள் உலாவர மிக ஆவல்
இதுதான் ஜெ.வையே புன்னகைக்க வைக்கும் அவர் மீதான அழகான புகார்..!! :))
Post a Comment