இன்று காலை எவ்வளவு எழுப்பியும் பப்புவின் உறக்கம் கலையவில்லை. ”இப்போ எந்திரிக்கலைன்னா அடிச்சுடுவேன்” என்று மிரட்டியதும் தூக்கம் கலைந்தது. நிஜமாகவே அடித்துவிட்டதை போல எழுந்தவள் சொன்னாள்,
“நீ ஒரு ஆச்சியா நீ? இனிமே உன் பேரு ஆச்சி இல்ல, உன் பேரு அடிச்சி”
:-)))
**********************************
“நிலாவாசைக்கு சிக்கன் சாப்பிடக்கூடாதுன்னு ஏன் வடலூர் ஆயா சொல்றாங்க, சிக்கன் கடைக்காரங்கதான் எல்லா சிக்கனையும் சாப்பிடணுமா?” என்றாள், ரொம்ப சீரியசாக.
கொஞ்ச நேரம் முழித்தபிறகுதான் பல்பு எரிந்தது, அது அமாவாசையென்று!!
யாரங்கே, இனி ’அமாவாசையை’ ‘நிலாவாசை’யென்று மாற்றுங்கள்,உடனே!!
3 comments:
பப்பு முதலில் சூட்டிய பெயர் சூப்பர்:))!
2 names -um sema...
pappu vaazhka:)
பப்பு ராக்ஸ் :-))))
Post a Comment