ஒரே கலக்கம்...தயக்கம்!!
மனம் நிறைய குழப்பங்கள்!!
ஆனால் ஆசை ஒருபக்கம்!! வேறு வழியில்லை!!
உள்ளே போய் அழ நேர்ந்தால்..! வேறு வழியில்லை..வெளியே வந்துவிடத்தான் வேண்டும்.
ஆனாலும், குடிக்க தண்ணீர் எடுத்து வைக்க வேண்டும் அவன் எடுத்து வைத்திருப்பான்.
நான் செய்வது சரியா..தவறா? யார் தான் சொல்ல முடியும்..?
எனக்கு முன்பும் பல பேர் செய்திருக்கிறார்கள்..இனிமேலும் செய்யத்தான் போகிறார்கள்!!
துணிந்து விட வேண்டியதுதான்...ம்ம்..
வருவது வரட்டும்..என் அம்மா, பாட்டி செய்யாததையா நான் செய்துவிட போகிறேன்..
பலவித எண்ணங்களுக்குப் பிறகு....போய் சேர்ந்தோம்..சத்யம் தியேட்டர் வாசலில் என்
குட்டிப்பெண் பப்புவோடு...முதல் முறையாக..நைட் ஷோ பில்லா 2008 பார்க்க!!
எதிர்பார்த்தபடி பிரச்சினை ஏதும் செய்யாமல் சமர்த்தாய் தூங்கிவிட்டாள்!!!
3 comments:
இது நச் போட்டிக்கா? :)
உவ்வே!
super... good choice of words...
Post a Comment