Monday, December 11, 2006
அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்....
கற்கள் நிறைந்த கரடுமுரடான சாலையில் ஒரு பஸ் கிராமத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அதில் கண்பார்வை மங்கிய ஒரு கிழவர் கையில் புத்தம் புதிய மலர்க்கொத்துடன் அமர்ந்திருந்தார். ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஒரு பெண் கிழவனின் கையிலிருந்த மலர்களை திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள்.அவளால், மலர்கொத்திலிருந்து கண்களை அகற்ற முடியவில்லை! கிழவர் இறங்க வேண்டிய இடம் நெருங்கியது. மலர்க்கொத்தை அப்பெண்ணின் கைகளில் திணித்தவாறு கிழவர் சொன்னார், " உன் பார்வையிலிருந்து நீ மலர்களை எவ்வளவு நேசிக்கிறாய் என்பதை என்னால் அறிய முடிகிறது. நான் இதை உனக்கு கொடுத்தால் என் மனைவி ஆட்சேபிக்கமாட்டாள். உனக்கு கொடுப்பதையே அவளும் விரும்புவாள் !" அப்பெண்ணும் மலர்களை வருடியபடி ஜன்னல் வழியே நோக்கியபோது, அக்கிழவர் பஸ்சை விட்டிறங்கி சிறு கிராதிக் கதவினை கடந்து கல்லறையை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தார்!!!
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
nice and simple
மலரையும்;மழலையையும் ரசிக்காமல் இருக்கமுடியுமா??,
நன்று
யோகன் பாரிஸ்
வருகைக்கு நன்றி..யோகன் பாரிஸ்!
Post a Comment