Friday, July 25, 2014

ராஜேந்திர சோழனோடு சிலமணித்துளிகள்

நினைவு தெரிந்து, முதன்முதலில் கங்கைகொண்ட சோழபுரம் பற்றி கேள்விப்பட்டது அத்தை சொல்லிதான். தஞ்சாவூர் கோவிலைவிடவும், அவரை ஈர்த்தது, கங்கை கொண்ட சோழபுரம்தான். அவருக்கு மட்டுமில்லை, மாமா, ஆயா என்று  பெரும்பாலும் , கங்கைகொண்ட சோழபுரம் ‍ கோவில் மட்டுமில்லை, ஊரும் அழகு என்றே சொல்வார்கள்.  'அமைதியான இடம், தஞ்சாவூரை விட பெரிய கோவில், ரொம்ப அழகான கோவில்' என்பதே அபிப்ராயம். அவர்களை பொருத்தவரை, பொதுவான எண்ணம்.
 'ராஜேந்திர  சோழன் ' பெரிதும் பேசப்படவில்லை என்பதே!
 
அதுவும் உண்மைதான்....தஞ்சை பெரியகோவிலை பற்றியும், ராஜ ராஜ சோழனைப்பற்றியும்தான், நாங்கள் பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறோம். ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் பற்றியெல்லாம் வரலாறு பாடத்தில் வந்தாலும் ஒரு சிறு பத்தி அளவுக்குத்தான். அதில், அவர்களது பிறபெயர்கள், போர்கள் பற்றிதான். ராஜேந்திர சோழனின் இன்னொரு பெயர்  'கடாரம் வென்றான்' என்று மட்டும் தெரியும். ஏனென்றால், ஒருவேளை தேர்வில், 'கடாரம் வென்றான் பற்றி குறிப்பு வரைக'  என்று வரலாம் என்பதால்!


 
'இந்திய சின்னங்கள்' பற்றிய பட்டியலில் பப்பு, 'பிக் டெம்பிள்' பற்றி தெரிந்துக்கொண்டிருந்தாள். அதை நேரில் பார்க்க கேட்டுக்கொண்டிருந்தாள். கடந்த டிசம்பர் விடுமுறையை அதற்காக பயன்படுத்திக்கொண்டோம். எப்படியோ, 'கங்கை கொண்ட சோழபுரம்' என்பது கடற்கரையோரத்தில் அமைந்த ஊர் மற்றும் கோவில் என்பதாகவே மனதில் சிறுவயதிலிருந்து பதிந்துவிட்ட சித்திரம்.  ஏனென்று தெரியவில்லை, கடலலைகளை பின்னணியாக   கோவிலாகவே கங்கைகொண்ட சோழபுரத்து கோவில் எனக்குள் பதிந்திருந்தது. ஒருவேளை, கடல்கடந்து போன சோழ அரசன் என்பதால், பஸ் பிடித்து போவதுபோல், அங்கிருந்து கப்பல் பிடித்து போயிருப்பான் என்று உருவகப்படுத்துக்கொண்டேனோ என்னவோ! அங்கு போனபிறகுதான் தெரிந்தது, கடலுக்கும் கோவிலுக்கும் எந்த சம்பந்தமுமில்லையென்று.

நாங்கள் போன சமயம், உச்சிவேளை. கோவில் சாத்தியிருந்தார்கள். என்னசெய்யவென்று தெரியாமல், ஜெயங்கொண்டம் சென்றோம்  உணவுக்காக. 'ஏசி ஹோட்டல்ல கூட அப்படி இருக்காது...இங்கே அவ்ளோ நல்லா இருக்கும்' என்று வழிசொன்னார் ஒருவர். 'அலமேலு மெஸ்'சை தவறவிடாதீர்கள், ஜெயங்கொண்டத்தில். முக்கியமாக, மீன் வருவல் மற்றும் குழம்பு!

திரும்பிசென்றது, கங்கைகொண்ட சோழபுரத்துக்கோவிலுக்கு எதிரில் இருந்த ராஜேந்திர சோழன் அருங்காட்சியகத்துக்கு. அங்கு இருந்த பொருட்களெல்லாம் பெரும்பாலும், மாளிகைமேடு மற்றும் கங்கைகொண்டசோழபுரத்து கோவில் மற்றும் சில கோவில்களிலிருந்து சேகரித்தவை. என்னை மிகவும் ஈர்த்தது ஓலைச்சுவடியில் இருந்த திருக்குறள்தான்.  'ஓலைச்சுவடியிலே எப்படி எழுதுவாங்க? காஞ்சுபோயிட்டா எழுத்தெல்லாம் எப்படி தெரியும்?' என்று ஆயாவை அடிக்கடி கேட்டிருக்கிறேன். வடலூர் வீட்டை சுற்றி 20 ‍‍-25 பனமரங்கள் இருக்கும். வெயில்காலமானால், தினமும் காலை ஆகாரம் நுங்குதான்.  நுங்கு வெட்டிய பின்னர் கூடவே வெட்டிப்போடும் பனைஓலைகளை எடுத்து கிழித்து, ஓலைகள் அது பங்குக்கு என் கையை கொஞ்சம் கீறி 'இதுலே எழுத முடியுமா'  என்று ஆணியால் எங்கள் பெயரை எழுத முயற்சி செய்ததெல்லாம் வரலாறு! (அப்புறம்தான் தெரிந்தது, அதற்கு தனி பனைஓலைகளாம். அந்த மரம் இது போல இருக்காதாம். )


அந்த திருக்குறள் சுவடிகள், 'ராஜேந்திர சோழன் அரண்மனையிலிருந்து 'என்றார் அருங்காட்சியகத்திலிருந்தவர். எனக்கோ, படத்தில், திருவள்ளுவர் கையில் இருக்கும் 'ஒரிஜினல்'  சுவடிகளே அவைதான் என்று தோன்றியது. பப்புவுக்கு திருக்குறள் பற்றியெல்லாம் என்னைப்போல எந்த பந்தபாச பிணைப்புகளும் இல்லை. ஏதோ சிறுவயதில் ஒன்றிரண்டு திருக்குறள்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தாள். அதைத்தாண்டி, 'அகர முதல்' மட்டும்தான் திருக்குறள் என்று நம்பிக்கொண்டிருக்கிறாள்.

அவளை ஈர்த்தவை, பாடம்பண்ணப்பட்ட‌ சங்குகள், செப்புக்காசுகள், கத்தி கப்படா வகையறாக்களே! பெரிம்மாவை ஈர்த்தவை, வரைபடங்களும், அவர்கள் சட்டமிட்டு மாட்டியிருக்கும் பட்டியல்கள் கொண்ட படங்கள்.  யாருமே  எட்டிப்பார்க்காத அந்த அருங்காட்சியகத்துக்கு, இப்படி ஒரு கூட்டம் அதுவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான‌ ஆர்வத்தோடு, வந்ததிருந்து சலசலப்பை எழுப்பிக்கொண்டிருப்பதை பார்த்ததும், அந்த அதிகாரிக்கும் உற்சாகம் பீறிட்டிருக்க‌வேண்டும்.  ஆர்வமேலிட்ட அவர் , பப்புவுக்கு கொஞ்சம், எனக்கு கொஞ்சம், பெரிம்மாவுக்கு கொஞ்சம் என்று தானாகவே செய்திகளை பகிர்ந்துக்கொண்டார். அந்த இடத்தில், ஆயிரம் ரூபாவுக்கு புத்தகங்கள் வாங்கியது நாங்களாகத்தான் இருக்கும்.  அவர் பரிந்துரைத்தன் பேரில், அடுத்த நிறுத்தம் "மாளிகை மேடு".
 
சந்துபொந்துகளில், செல்லும்போது இங்குதானா ராஜேந்திரசோழன் படைகளோடு வசித்திருப்பான் என்று தோன்றியபோது நாங்கள் வந்து நின்ற இடம் ஒரு பொட்டல்காடு. தொல்லியல்துறையின் அறிவிப்பு பலகை இல்லையென்றால், அது மாளிகை இருந்த இடம் என்று நம்புவது கடினமே! 
 
அங்கும், யாருமே பாதுகாக்காத ஒரு அருங்காட்சியகம் ஒரு கூரையின் கீழ் இருந்தது. சிலைகள். பூட்டியிருந்தாலும் திறக்கவேண்டிய அவசியம் இல்லை.
அதை முடித்துவிட்டு, இடப்புறம் திரும்பினால், மாளிகை மேட்டுக்கு வழி. செங்கற்களால் ஆன அடித்தளம் மற்றும் சில பாறைக்கற்கள். ஆடுகள் அந்த பக்கம் மேய்ந்துக்கொண்டிருக்க, இந்த பக்கம் நாங்கள். 'இதுதான் பேலஸா' என்று நம்பமுடியாமல் கேட்டுக்கொண்டிருந்தாள் பப்பு. பார்பி மற்றும் டிஸ்னியில் மாடமாளிகளை போலிருக்கும் என்றெண்ணியிருப்பாள் போலும்.

'ஒருகாலத்துல' என்று சொன்னால் கற்பனை குதிரையை தட்டிவிடக்கூடிய  நிலையை எட்டியிக்கிறாள் அவள். 'ஓ அந்த காலத்துல இப்படி இருந்துருக்கும்...ராஜா இருந்தப்போ எப்படி இருந்துருக்கும்..இங்கே என்ன இருந்திருக்கும் என்ன செஞ்சிருப்பாங்க‌' என்று மேலும் கதைகளை எடுத்துவிடுவாள். அதற்கு,  சென்னையின் ஆலம்பறை கோட்டைக்கும், தில்லியின் பழைய கோட்டைக்கும், கோவாவின் சப்போரா கோட்டைக்கும், கன்னியாகுமரியின் வட்டக்கோட்டைக்கும் அங்கிருந்தபடியே நன்றிகளை உரித்தாக்கினேன்.   


இது அரண்மனையின் அடித்தளம், இதற்கு மேலே உப்பரிகை மற்றும் மாடங்கள் என்று நாங்களாகவே மேஸ்திரி வேலையை செய்தோம். சற்றுநேரத்தில், 'தங்கக்காசுகள் புதைந்திருக்கும்,  தேடுகிறேன்' என்று ஆரம்பித்தாள். கோவில் திறக்கும் நேரமாகிவிட்டதால், பெயர்ந்துகிடந்த சில செங்கற்துண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டோம். பிற்பாடு, அருங்காட்சியகத்தில் வாங்கிய நூலிலிருந்து தெரிந்துக்கொண்டது, மாளிகைமேட்டிலிருந்து வண்டி வண்டியாக செங்கற்களை எடுத்து சென்று வீடுகளை கட்டிக்கொண்டார்களாம் சென்ற நூற்றாண்டில். வண்டிக்கு இரண்டு அணாக்கள்.  ராஜ செங்கற்கள் கொண்ட வீடுகள்!!

கோவில் திறந்திருந்தது. அத்தை சொன்னதன் காரணம் விளங்கியது. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு நான் பொழிப்புரை தரப்போவதில்லை. அது ஒரு அனுபவம். முன்னேறியதற்கான எந்த ஒரு அடையாளத்தையும் அந்த ஊர் கொண்டிருக்கவில்லை.  ஆனாலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மன்னனின் கனவுக்கு முன்,  நாங்கள் நின்று கொண்டிருப்பதை உண்ர முடிந்தது. அணைக்கரை என்ற  (பாலத்தை?) கட்ட ஆங்கிலேயர்கள் இந்தகோவிலின் கற்களை உடைத்து எடுத்து சென்றிருக்கிறார்கள். உலகப்போரின்போது, இந்த கோவிலை தங்களது தங்குமிடமாக உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். எஞ்சியது போக, கண்முன் நின்றுக்கொண்டிருக்கும் அந்த பிரம்மாண்டமான கோவிலின் உள்ளே சென்றபோது எழுந்த வியப்பை எழுத்தில் கடத்தமுடியுமா என்று தெரியவில்லை.


 
இன்று ராஜேந்திரசோழன் அரியணை ஏறிய 1000மாவது விழாவை கொண்டாடுகிறார்கள். இந்த நினைவுகூரல் வரவேற்கத்தக்கதுதான். அதேசமயம், தொல்லியல்துறை, குழந்தைகளுக்காக சிலவற்றை செய்யலாம்.  அவர்களுக்கு ஏற்ற வகையில் புத்தகங்கள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் ‍ வரலாற்று நடைகள், மேலும், ஒலிஒளிக்காட்சிகள் என்று முயற்சிகள் எடுத்தால் நல்லது. 

Monday, July 07, 2014

பாதி கதை அங்கே...மீது கதை இங்கே!

பப்புவுக்கு ஒரு வீட்டுப்பாடம். ஏதோ ஒரு கதையை சொல்லியிருக்கிறார்கள். கதையின் முடிவை இவர்கள் கொடுக்க வேண்டும்.  இரண்டு முடிவுகள் என்று சொல்லியிருப்பார்கள் போல! ஃபோல்டரில் இருந்த பேப்பர்களை எடுத்து படித்துவிட்டு, என்ன கதை என்று கேட்டேன்.

"ஒரு ஊர்ல ஒரு நரி இருந்துச்சாம்...அதோட கதை சரியாம்"


முடிவை படித்ததிலிருந்து, ஊருக்குள் வந்து தொல்லை கொடுக்கும் ஒரு நரியை கூண்டுக்குள் அடைத்து வைக்கிறார்கள், கிராம மக்கள். சிங்கத்தை காவலுக்கு வைத்திருக்கிறார்கள் என்றும் ஊகிக்கிறேன். நரி எப்படி தப்பிக்கிறது என்பதை இவர்கள் எழுத  வேண்டும்.

Ending  - I

How the fox escaped

The lion came near and near and asked the fox, "why are you sad?The fox said, "I am sad because I am stuck.My twin brother use to come and troble the vilagers. I came here to take him home and make sure he dosnot troble teh villagers again. I will be
happy if you if you open the latch and there is a mystery game if you open the latch. The foolish lion opened the latch and the fox came and said , "the game is hide and seek".

The lion said "I love that game". The fox said "you close your eyes and I will hide".

The foolish lion agreed. The fox hide behind a stone, witch lion can not see.

The  villagers came near an asked the lion, "where is the fox" The lion said what happened.  The villagers got shocked and stared beating it. The fox ran away but the poor lion could not even walk.


Ending - II

The fooloish lion came closer and closer and stood in front of the fox and laghed and laghed. The fox was quite. But the foolish lion cept on laghing. At last the fox said, "I know you are hungry".

The lion said "yea. I am hungry. How did you know?". The inteligent fox said "I can not tell you that and all but If you open the latch I will get you food".

The lion said, "if you tell me where can I get my food?". The fox said "I can never tell you where you can get food.

The lion said, "if the vilagers know that I freed you, the strong villagers will kill me."

The fox asked, "Do you want food or not?" The lion said "yes" and oped the latch. The fox said, "I will hunt and come".

The fox escaped.









Saturday, June 21, 2014

லேண்டர் போனா டோன்ட் மிஸ்....

லேண்டர்/Landour  - முன்குறிப்பு

எங்கள் உத்ராகாண்ட் பயணத்தில், லேண்டர் ஓர் அழகிய கனவு. ஒரு சின்ன‌
நட்சத்திரம். இந்த பயணத்தில், குறித்த திட்டங்களோ அல்லது பார்க்க வேண்டியவைகள் என்று எதுவும் எங்களிடம் இல்லை. முற்றிலும், புதிய இடத்தை, அந்த இடம் எங்களுக்கு என்ன அனுபவங்களை கொடுக்கிறதோ எதை அப்படியே எடுத்துக்கொள்ளும், எண்ணத்தில்தான் இருந்தோம்.

கடந்த டிசம்பர் மாதத்தில், சென்ற கோயில் பயணத்தில், இன்ன கோயில்களை  பார்த்தாக  வேண்டும் என்ற பட்டியல்  எங்களிடம் இருந்தது. ஆனாலும், பயணத்தை, பாதைகளிடமே முழுக்க ஒப்புக்கொடுத்துவிடுவது எங்கள் வழக்கம். இந்த முறையும் அப்படியே! மசூரியின் சாலைகள் எங்களை கைப்பிடித்து அழைத்துச்சென்றன.

பொதுவாக, மனிதர்களை எங்களுக்கு பிடிக்கும்தான் என்றாலும், அதிக மனித நடமாட்டமில்லாத இடங்களில் நேரத்தை செலவழிப்பதே பிரியம்.நாங்கள் சென்றது கோடை விடுமுறையில். மசூரி நிரம்பி வழிந்தது. சுற்றுலா கூட்டம்.

மசூரியிலிருந்து,  கொஞ்சம் மேலே, 4கிமீ தூரத்தில் உள்ளது லேண்டர். டேராடூனிலிருந்து லேண்டர் செல்ல வேண்டுமானால், பிக்சர் பேலஸ் என்ற இடத்தில் இறங்க வேண்டும்.உத்ராகாண்ட் பேருந்து நிலையத்தில், பிக்சர் பேலஸ் என்று கேட்டு டிக்கெட் வாங்க வேண்டும், டேராடூனிலிருந்து ஒன்று அல்லது ஒன்றரை மணிநேர பயணம். ஒரு மலைபாம்பு போல வளைந்து நெளிந்து செல்லும் சாலையில்கண்களை மூடிக்கொண்டு பயணித்தால், பிக்சர் பேல்ஸ்  - ஒன்றரை மணிநேரத்தில் வந்துவிடும்.

பிக்சர் பேலஸ், பேருந்து நிறுத்தத்துக்கு அருகிலேயே, ஒரு டாக்ஸி கவுண்டர் உண்டு. லேண்டர் என்று சொன்னால் போதும்.  முன்பணம் கொடுத்து டிக்கெட் எல்லாம் வாங்க வேண்டாம். 200 ரூபாய்.  டாக்ஸிக்காரர்களின், வரிசைப்படி ஒருவர் வருவார்.

பிக்சர் பேலஸிலிருந்து, சாலை குறுகல் நெடுகலாக இடித்து ஒடித்து செல்கிறது. டாக்ஸி, ஒரு ஏற்றமான சாலையில், திடீரென பிரேக் அடித்து நிற்கிறது. எங்களுக்கு, எங்கே பின்னாலேயே வழுக்கிக்கொண்டு சென்றுவிடுமோ என்பதுபோல திகில். மெதுவாக, வெளியே வந்தோம். லேண்டர், ஓர் அமைதியான, சுத்தமான, இதமான குளிர்காற்றுடனான சிற்றூர். 


அறைக்கு வந்து, சற்று ஓய்வு. வயிற்றுக்கு வேலை. பின்பு, கால்களுக்கு சக்கரம். விடுதியில், ஒரு வரைப்படத்தை கொடுத்திருந்தார்கள். நாமே, அந்த ஊரை சுற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

லேண்டர், ஒரு கன்டோன்மென்ட் பகுதி. அந்த காலத்து ஆங்கிலேய போர்வீரர்களுக்கான ஊர் போல. ஒரு சர்ச், ஒரு மருத்துவமனை,சிஸ்டர்ஸ் பஜார், ஒரு கல்லூரி, ச்சார் துகான் , பனிபடர்ந்த இமாலய மலைகளை காண ஒரு லால் டிப்பா...இவை எல்லாம் வரிசையாக இருக்கும் என்று நினைத்துவிடக்கூடாது.  வரைப்படத்தில்,  குறிக்கப்பட்டு இருந்தது.

1. ச்சார் தூகான்

லேண்டரிலிருந்து இடம் வலமாக சாலைகள் பிரியும். இதில், எப்படி நடந்தாலும், வந்து சேருமிடம், ச்சார் தூகானாக இருக்கும். நான்கு கடைகள்தான். மிஞ்சிபோனால் ஐந்து கடைகள் இருக்கும். ஒவ்வொன்றும் கடந்த நூற்றாண்டாக இயங்கி வருவன. இதில், நாங்கள் சென்றது, டிப் டாப் கடைக்கு.நான்காவது தலைமுறையாக இந்த கடையை நடத்திவருகிறாராம்.
இரண்டு மரமேஜைகள்,  பெஞ்சுகள்,சில நிழல்குடைகள்,  பூந்தொட்டிகள் மற்றும் சில நாய்கள். எதிரில் ஒரு பூங்கா.  மற்றபடி, மசூரியின் மால் ரோடு போல கூட்டம் எதுவும் இல்லை. ஒரு சில வெளிநாட்டினர். சில சுற்றுலா பயணிகள். நமது உணவு மேஜைக்கருகிலேயே, நாலைந்து நாய்கள் படுத்திருக்கும்.அப்படியே விட்டுவிடுங்கள். கண்டுக்கொள்ளவேண்டாம்.அந்த நாய்களோடு சேர்ந்ததுதான், ச்சார் தூகானும். :-)

"மேகி" என்று பப்பு கேட்டதும், "சீஸ் போட்டதா, காய்கறிகளுடனா அல்லது சாதாவா" என்று கேள்விகளை அடுக்கினார், கடைக்காரர்.  பப்பு , சாதா மேகியை வாங்கிக்கொள்ள, நான் பன் அன்ட் ஆம்லெட்டை தேர்ந்தெடுத்தேன். ஆம்லெட்டுக்கும், "சீஸ் போடுவதா வேண்டாமா", "வெங்காயமும்,மிளகாயும் போடலாமா" என்று கேள்விகளை அடுக்கினார். பெரிம்மா, சாயோடு நிறுத்திக்கொண்டார். அடுத்தடுத்த நாட்களில், நாங்கள் பான் கேக்குகளையும், ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்குகளையும் இந்த கடையிலேயே ருசி பார்த்தோம். பப்பு, மேங்கோ மில்க் ஷேக்கை கேட்க, மாம்பழத்தை எடுத்துவர ஆளனுப்பினார் அவர். அதுதான் லேண்டர். :‍)

இங்கு, ரஸ்கினின் கையொப்பமிட்ட அவரது வாழ்க்கைச்சரிதத்தை வாங்கலாம்.பன் அன்ட் ஆம்லெட்டும், பான் கேக்குகளும், சாயும் கண்டிப்பாக உண்ண வேண்டியவை. அதோடு, உள்ளூர் தயாரிப்பான, வண்ண வண்ண பெப்பர்மின்ட்டுகளும். (அவற்றை சுவைத்ததும், எனது குழந்தைபருவ நினைவுகள் அலைமோதின.  அதன்பிறகு, காணாமல்போன அவற்றை லேண்டரில்தான் கண்டேன்.)

2. செயின்ட் பால்'ஸ் சர்ச்

ச்சார் தூகானிலேயே, டிப் டாப் கடைக்கு அடுத்ததாக,சற்று உயரத்தில், இருக்கிறது, இந்த சர்ச்.சுற்றிலும், தேவதாரு மரங்கள் சூழ, அழகான ஒரு சிறிய‌ சர்ச்.  மதியம், ஒரு மணிநேரம்  தவிர, எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.

வாசலிலேயே, சர்ச் பற்றிய சிறுகுறிப்பு இருக்கிறது. வளைவு வளைவான வாசல்கள். உள்ளே நுழைந்ததுமே, சில்லென்று இருக்கின்றது. மரக்கதவுகளை திறந்துக்கொண்டு, உள்ளே சென்றதுமே, ஏதோ சிறுகதையில் வரும் சர்ச்சுக்குள் இருப்பதுபோல் தோன்றுகிறது.

ஓவியங்கள், தீட்டப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள். வரிசை, வரிசையாக மர பெஞ்சுகள். ஒவ்வொரு ஜன்னலுக்கும் ஒரு உபயதாரர் இருந்திருக்கிறார்.  உபயதாரரின் விபரங்களும், காரணங்களும் எழுதி வைத்திருக்கிறார்கள். பெரும்பாலும், ஆங்கிலேய படையணியினர் அல்லது படைத்தளபதிகள். ஒருகாலத்தில்,  ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த சர்ச் மிகுந்த கோலாகலமாக இருந்திருக்கும் என்ற சித்திரம் தோன்றுகிறது.

எதிரில், மெழுகுவர்த்திகள் ஏற்றுமிடம் தெரிகிறது. பப்பு, ஒரு பெஞ்சில் அமர்ந்து, சற்று நேரம் தவம் புரிகிறாள். பின்பு, மெழுகுவர்த்தி ஏற்றுமிடத்துக்கு செல்கிறாள். திரும்பி வந்து, என்னிடம் பத்து ரூபாய் கேட்கிறாள். மெழுகுவர்த்திகள் கீழேயே இருக்கின்றன. அவற்றை எடுத்து ஏற்ற, நீங்கள் பத்து ரூபாய் நன்கொடை கொடுக்கவேண்டும். சந்தோஷமாக, ஒரு பத்து ரூபாயை நீட்டுகிறேன். மெழுகுவர்த்தியை ஏற்றி சில நிமிடங்கள் கண்மூடி நிற்கிறாள்.

திரும்பி வந்தவளிடம், என்ன செய்தாய் என்றதும், 'விஷ் பண்ணேன்...அஞ்சு விஷ்" என்றாள். "என்ன விஷ்ப்பா, எனக்கும் சொல்லுப்பா" என்று நைச்சியமாக கேட்கிறேன். "அதெல்லாம் சொல்ல முடியாது, போப்பா" என்கிறாள், அதே தொனியில்.   :‍)

3. லால் டிப்பா

சார் தூகானிலிருந்து, வலது பக்கம் பிரிந்து, கிட்டதட்ட அரைமணி நேரம் நடந்தால், நாம் வந்தடைவது லால் டிப்பா.மசூரியிலேயே, உயரமான இடம் கிட்டதட்ட 7000 அடிகள் உயரம். இந்த உயரத்தை விட, இங்கு வருவதற்கான பாதைதான் அழகு. திடீர் திருப்பங்களும், சடார் சடாரென்று மாறும் மலை முகடுகளும், பள்ளத்தாக்குகளும் கொடுக்கும் அனுபவங்கள், நேராக காரில் வந்து இறங்குவதில் இருக்காது.

 இந்த வளைவு நெளிவான, நீண்ட சாலைகளின் முடுக்குகளில் அறிஞர் பெருமக்களின் வார்த்தைகளை எழுதி வைத்திருக்கிறார்கள். எல்லாமே, இயற்கையை, தனிமையை கொண்டாடி தீர்ப்பவை. ஒவ்வொரு முடுக்கிலும் இருப்பவற்றை பப்பு படித்து அவளாக அர்த்தம் கற்பித்துக்கொண்டும், சிலவற்றை கேட்டுக்கொண்டும் வந்தாள்.

 

ஓக் மரங்களும், ஓங்கி வளர்ந்த தேவதாரு மரங்களும்தான் அதிகம். குளிர்காலங்களில், இந்த தேவதாரு மரங்களில், பனி படர்ந்து தொங்கிக்கொண்டிருப்பதை போன்ற சித்திரம் மனதில் வந்து போனது.ஆனால், அதைக்காண, அந்த குளிரை நாம் தாங்க வேண்டுமே!



வழிகள் முழுக்க, குருவிகளின் அழைப்புகள். ஒரு சில குரல்களை பப்பு அடையாளம் காண்கிறாள். அடர்த்தியான மரங்களும், இளந்தென்றலும், குருவிகளின் மொழியும், மலையின் மொழியான மௌனமும் இந்த சாலைப்பயணத்தை இனிய அனுபவமாக்குகின்றன.அருகிலேயே, ஒரு வீடு இருந்தால் வசிக்கலாம் என்றும் தோன்றுகிறதுதான். ஒரு சில இடங்களில், பயணிகள் இளைப்பாற மாடங்கள் கட்டி வைத்திருக்கிறார்கள். சில பள்ளிக்கூட சிறுவர்கள் உள்ளே விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

லால் டிப்பா ‍ - ஒரு  வெள்ளைமாடிகட்டிடத்தில், சிவப்பு வண்ண கோடுகள்.
மூன்றடுக்குத்தளம்.  இரண்டு கட்டிடங்கள் இதே போல் இருக்கின்றன. ஒரு வயதான பெண்மணி,நம்மை பார்த்ததும், குரல் கொடுத்து கூப்பிடுகிறார். சென்று, தலைக்கு பத்து ரூபாய் கொடுத்து டிக்கெட் பெற்றுக்கொண்டதும் உள்ளே செல்கிறோம்.

மேல்தளத்தில், ஒரு தொலைநோக்கி இருக்கிறது. இமாலய மலைத்தொடர்களை இங்கிருந்து காண்பது இதன் சிறப்பு. பெரும்பாலும், காலை நேரங்களிலும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் மிகத் தெளிவாகவும் தெரியுமாம். நாங்கள் சென்றநேரம்,  முழுவதும் மேகம். எங்கள் காலடிகளில் மேகம் மிதப்பது போல தோன்றியது.
பப்பு, தொலைநோக்கியை அங்குமிங்கு திருப்பியவாறு இருந்தாள். அங்கிருந்தவரும், "தூரத்தில தெரியுதா? ஒரு கிராமம், ஒரு கோயில்" என்றவாறு படம் காட்டிக்கொண்டிருந்தார். நாங்கள் மும்முரமாக படமெடுத்துக்கொண்டிருந்தோம்.

நிறைய மலைகள் வெறும் மண்மேடாகவே காட்சியளித்தன. பெரும்பாலும், பனிமூடியிருக்குமாம். பள்ளத்தாக்குகளையும், மலைமுகடுகளையும், அதனினூடாக மனிதன் கடந்து சென்ற பாதையும் காணும்போது ஆச்சரியமாக இருந்தது. இரண்டாம தளத்திற்கு வந்ததும், கார்வால் பகுதியின் உடைகளை வைத்துக்கொண்டு படமெடுக்க தயாராக இருந்தார் ஒருவர். எனக்கும் பப்புவுக்கும் பெரிதாக ஆர்வமில்லை.
கீழே, அழகழகான காட்டுப்பூக்கள் கொத்துகொத்தாக மலர்ந்திருந்தன. அதோடு, கீழிருந்து மேலே வரும் மெல்லிய தென்றல். அங்கேயே சற்று நேரம் அமர்ந்திருக்கிறோம். கிட்டதட்ட ஏழெட்டு கிமீ நடந்து களைத்திருந்தன கால்கள். நேரம் போவதே தெரியாமல், அமர்ந்து பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறோம். திடீரென, மேகம் நம்மை மூடுகையில், நடக்க வேண்டிய தூரம் நினைவுக்கு வருகிறது. எழுந்தபின்னும், போகத்தோன்றாமல், நின்றபடி காற்று வாங்கிக்கொண்டிருக்கிறோம்.
 
 பப்பு, சில கற்களையும், பூக்களையும் சேகரிக்கிறாள். இறுதியாக,  லால்டிப்பாவிலிருது,மனதை பிய்த்துஎடுத்து கொண்டு வெளியே வருகிறோம். எதிரில், இருந்த கடையிலிருந்து மேகி-காகவும், பெப்சி-காகவும் ஓடி வருகிறான் பையன். அவனை தவிர்த்துவிட்டு நடக்கத்தொடங்குகிறோம், அவரவர் எண்ணங்களில் மூழ்கியபடி.

உயர்ந்து நிற்கும் இமாலய மலைகள் நமக்குள் உண்டு பண்ணும் மாற்றங்கள் அப்படி. அந்த மலை முகடுகள், உயரங்கள், இயற்கையின் அழகு நம்மை சுத்திகரிக்கின்றன போலும்!

4. எமிலிஸ் ரெஸ்டாரெண்ட்

ச்சார் தூகானிலிருந்து இடப்புறமாக நடந்தால், சில திருப்பங்களிலே, எமிலி உணவகத்தைக்காணலாம். அங்கிருந்து, மேலே நடக்கவேண்டும். ஆங்கிலேய பாணியிலான அருமையான வீடு. விஸ்தாரமான வீடு என்று ஆயா சொல்வார். அதுபோன்று, இருந்தது. பழங்காலத்து வீடு.
 
 இன்று அது விடுதியாகவும், உணவகமாகவும் செயல்பட்டு வருகிறது. உணவகம் மேலே. பால்கனி போன்று இருந்த இடத்தை தேர்வு செய்து அமர்ந்தோம். குளு குளு காற்றும், மலைமுகடுகளும், வீட்டை சுற்றியிருந்த மரங்களுமாக மனதுக்கினிமையான சூழல்.

ஒரு பெரிய அட்டையை கொடுத்து, மெனு என்றார்கள். முற்றிலும், ஆங்கிலேய மற்றும் ஆங்கிலோ இந்திய உணவுகள். பப்பு, தக்காளி சாஸுடனான பாஸ்தாவை தேர்வு செய்ய, நாங்கள் பிட்சாவை தேர்வு செய்தோம். அருந்த, சில ஸ்மூதிகள். உணவு அருமை!

லேண்டர் செல்பவர்கள் மறக்காமல் செய்ய வேண்டியது, எமிலியில் ஒரு வேளையாவது உணவு அருந்துவதுதான். இறுதியாக, ஒரு ஆப்பிள் க்ரம்பிள். பப்பு, தனக்கு ஆப்பிள் க்ரம்பிள் செய்வது எப்படியென்று தெரியும் என்றும், வீட்டில் வந்து செய்து தருவதாகவும் வாக்குகொடுத்தாள். ஆனால், அவள் அதை தொடக்கூட இல்லை. நானும் பெரிம்மாவும் ஆப்பிள் க்ரம்பிளுக்கு தகுந்த மரியாதை செய்தோம். ;)
ஆங்கிலேய படைத்தளபதி, ஒருவர் பணிஓய்வு பெற்று இங்கு வசித்திருக்கிறார். மனைவி எமிலிக்காக, மனைவியின் பெயரில் கட்டியிருக்கிறார். அந்த எமிலியின் , மார்பளவு உருவ பொம்மையை
வைத்திருக்கிறார்கள்.  அழகான பெண்ணாக இருந்திருக்கிறார், எமிலி.

வீட்டின் கலைப்பொருட்களும், கணப்படுப்பும் நம்மை கடந்தகாலத்துக்கே அழைத்துச் செல்கின்றன. ரிசப்ஷனில், ரஸ்கினின், ஒரு அழகிய கவிதை சட்டமிட்டு மாட்டியிருக்கிறார்கள்.

ரஸ்கின் பாண்ட், லேண்டரின் முதல் குடிமகனாம்.

ச்சார் தூகானில், ஒரு புத்தகம் வாங்கியிருந்தோம். அதில், ஒரு படம் இருந்தது. ரஸ்கினின் தாயும், அவரது சகோதரியும். அந்த சகோதரியின் பெயர் எமிலி. ஒருவேளை, அந்த எமிலிதான் இவரா என்றும், அவர் மாதிரிதான் இருக்கிறார் என்றும் பேசிக்கொண்டோம். சுவாரசியமாகத்தான் இருக்கிறது, உணவும், அதன் வரலாறும்!

5. கெலாக்ஸ் சர்ச் மற்றும்  மொழிகளை பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடம்

எமிலி உணவகத்திலிருந்து, மேலே நடந்து வந்தால், உட் ஸ்டாக் பள்ளிக்கூட வழியையும், ஒரு எஸ்டேட்டையும் கடக்க வேண்டியிருக்கும். அங்கிருந்து இன்னும் மேலே நடந்தால், ஒற்றை சக்கரத்தோடு கூடிய ஸ்கூட்டர் நின்றுக்கொண்டிருக்கும். அதையும் தாண்டி சென்றால், ஒரு அமைதியான சாலை. அந்த சாலையின், இறுதியின், ஒரு வீடு, வீட்டின் முகப்பு முழுக்க பெட்டூனியா மலர்கள். அதன் வழியே சென்றால், இடப்புறம், ஒரு சர்ச்.  மெத்தடிஸ்ட் சர்ச். பூட்டியிருந்தது.


மாலை நேரத்தில் சென்றால், உள்ளூர் பெண்கள், கையில் கம்பளிநூல்கண்டுகளை வைத்து பின்னியபடி, கதை பேசி சிரித்துக்கொண்டிருப்பார்கள். மாலை மங்கும் நேரத்தில், பின்னியபடியே, அவரவர் வீடு நோக்கி நடக்கத்துவங்குவார்கள். என்ன செய்தாலும், அவர்கள் கை மட்டும் கம்பளியும் ஊசியுமாக இருக்கிறது. ஆச்சரியம்தான்!


அவர்களை சுற்றி சென்றால், அடுத்த வாசலே, இந்திய மொழிகளை பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடம். அந்த காலத்தில், மிஷனரிகள், இங்கு வந்து இந்தியை கற்றுக்கொண்டு நாட்டில் பல பாகங்களுக்கு செல்வார்களாம். இன்று, அது வளர்ந்து இந்திய மொழிகளை கற்றுக்கொடுக்கும் நிறுவனமாக இருக்கிறது.

நாங்கள் சென்றபோது இருவர் பேசிக்கொண்டிருக்கும் சப்தம் கேட்டது. வெளியில், நிழல்குடையில், ஒரு திபெத்திய பெண்மணி நோட்டுப்புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு, மொபைலை தட்டிக்கொண்டிருந்தார். எனக்கு வயதாகிவிட்டால், இங்கு வந்து மொழிகளை கற்றுக்கொள்வேன் என்று சொல்லிக்கொண்டேன்.

6. சிஸ்டர்ஸ் பஜார்

லேண்டர் லேங்குவேஜ் நிறுவனத்திலிருந்து, எதிரில் நீளும் பாதையில் நடந்தால், தேவதாரு வுட்ஸ் என்றொரு வீடு வரும். நீங்கள் சப்தமாக பேசியபடி சென்றால், நாய்கள் அந்த வீட்டிலிருந்து குலைக்கும். அதைத்தாண்டி சென்றால், ஒரு அடர்ந்த வனம்.அடியும் முடியும் காணமுடியாதபடி, தேவதாரு வனம்.

அங்குதான், மழைக்காலங்களில், சிறுத்தை வந்து நாய்களை கவ்விக்கொண்டு போகும். உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால், மாலைவேலைகளில் சில சமயம் தென்படும். ;-) ஆனால், சிறுத்தை மிகவும் கூச்சமான விலங்கு. இரண்டு முறை சென்றும் காணமுடியவில்லை.அந்த சாலை, கைவிடப்பட்ட வீடுகளிடம் கொண்டுபோய் சேர்க்கும். என்றால், சிஸ்டர்ஸ் பஜார் வந்துவிட்டோம் என்று பொருள்.

அதன் முடுக்கில், உள்ளது, ப்ரகாஷின் கடை. அந்த இடமும், சாலையும் எனக்கு அந்தோன் செகாவின் "பள்ளத்து முடுக்கில்" கதையை நினைவுப்படுத்தின.
ப்ரகாஷின் கடை மட்டும்தான் அந்த பஜார். ஸ்ட்ராபெர்ரி, ரஸ்பெர்ரி,மல்பெர்ரி ஜாம் வகைகள், நிலக்கொட்டை மசியல் (பீநட் பட்டர்) இங்கு வாங்க வேண்டிய ஒன்று. ஒவ்வொரு வகையிலும், 200கி வாங்கிக்கொண்டோம். ஹோம்மேட்  சாக்லேட்டுகள் 200கி. பப்புவுக்கு சில லாலிபப்புகள்.

ஜாம்கள், வாங்கியது வீணல்ல என்று வீட்டுக்கு வந்ததும் தெரிந்துக்கொண்டோம். இனிப்பை கொட்டிச் செய்யாமல், பழங்களில் துண்டுகளோடு, சுவையாக இருந்தது. ப்ரகாஷ், இந்த ஜாம்களை தபாலில் அனுப்புவாரா என்று கேட்காமல் விட்டுவிட்டோமே என்று எண்ணிக்கொண்டோம்.
 


இவை எல்லாம், எந்த சுற்றுலா கையேட்டிலும் இருக்குமென்று சொல்வதிற்கில்லை. ஆனால், முற்றும் புதிய, ஒரு சிறிய ஊரை, அங்கு தங்கி அறிந்துக்கொள்ளும் முயற்சி -  எங்கள் அனுபவங்கள்.

நாங்கள் தங்கியது, ஒரு திபெத்தியர் வீட்டில். மோமோ பிரியராக இருந்தால், வகைவகையான மோமோக்களை இங்கு ருசிக்கலாம். ரசனையோடு, தங்க்கா வகை ஓவியங்களோடு கூடிய அறைகள்.

இந்த காட்டேஜின், அடுத்த முனையில்தான் ரஸ்கின் பாண்ட் வசிக்கிறார்.  அவரது எழுத்துகளைப் போலவே எளிமையான குடில். ஒரு பெயர் பலகையோ அல்லது பெரிய வாசல்கதவுகளோ இல்லை. பெரும்பாலும், காலையில் எட்டரைக்கு தூங்கிவிடுவார்.

முடிந்தால், ஒரு எட்டு போய் பார்க்கலாம். அல்லது, அவர் கதைகளூடாக சித்தரித்த ஊரையும்,  வீடுகளையும் சிறுவர் சிறுமிகளையும்,மனிதர்களையும் சந்தித்து உலாவிய திருப்தியில் பயணத்தை தொடரலாம்.

Wednesday, June 18, 2014

A world of innocence (பெரிம்மாவின் டைரியிலிருந்து) ;-)

மசூரியிலிருந்து நைனிடால் பயணம். மசூரியிலிருந்து கிளம்பி, டேராடூனில் காத்திருந்தபோது பெரிம்மா எழுதியது.

A world of innocence

I and my daughter packed
    clothes,Jerkins,woolen-wares and shoes;
My granddaughter did her own packing with
    innumerable crayons,eight pencils,six pens,
    seven sharpeners,five erasers,
    three scissors and one geometry box (I don't know what for)
besides storybooks,notebooks and drawing books
-We left for Mussoorie
    we enjoyed cool breeze that comes through tall deodar trees
exotic aromatic air from white chestnut blossoms
we walked uphill,downhill till our knees ached;
we tasted aloo parantha,apple crumble,sweet lassie
at 'Char Dukans' (Estd in 1910)
Lo! The day came for departure
Our case is added more with
    Tibetan styled purses,bags and bangles;
    Kashmiri jacket and stoles
    -Heavier than before!
I stealthily checked my granddaughter's bag
Little pink and white flowers from the weeds,
    -a small bark of a deodar tree,
    -a green fern twig for preservation
    - dried leaves of some unknown trees,
    - an unshaped stone chip from the mountain rock
    - a round white pebble,
oh,what a world of innocence!
    What a world of non-materialism!
    What a world of non-consumerism!
I wish to go back there.
Can I?




 இந்த படம், நைனிடாலில் தங்கியிருந்த விடுதியில் எடுத்தது. உதிர்ந்த பூவிதழ்களை சேகரிக்கிறாள் பப்பு.

Tuesday, June 17, 2014

தந்தையர் தினப் பதிவு - லால் டிப்பாவிலிருந்து ஐவி காட்டேஜ்(ரஸ்கின் பாண்ட்) ‍வழியாக‌

இரண்டாம் முறையாக, லால் டிப்பா வரை நடைபயணம். திரும்பி வந்துக்கொண்டிருந்தோம். தேவதாரு மரங்களும், பூத்துக்குலுங்கும் செஸ்ட் நட் மரங்களும் அடர்ந்த சாலை. பள்ளத்தாக்குகளிலிருந்து, மேலெழும்பி வரும் ஈரக்காற்று மதிய வெயிலைக்கூட சிலிர்ப்பாக மாற்றியிருந்தது. இங்கொன்றும் அங்கொன்றுமாக பறவைகள் சப்தம். இதைத்தவிர, நாங்கள் நடக்கும் சப்தம் மட்டுமே. அந்த அமைதியை அவ்வப்போது உடைக்கும் பப்புவின் மெல்லிய‌ குரல்"ட்வென்டி சிக்ஸ்...ட்வென்டி செவன்". உதிர்ந்து கிடக்கும் ஜக்ரந்தா மலர்களை சேகரித்துக்கொண்டிருந்தாள், பப்பு.
ச்சார் தூகான் வந்ததும், ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாம‌லேயே அந்த‌ கடையில் அமர்ந்தோம். தான் சேகரித்த, ஊதா வண்ண‌ மலர்களை மேஜையின் மேல் பரப்பிவிட்டு, கண்ணாடி அலமாரிக்குள்ளிருந்த சாக்லெட்டுகளை பராக்கு பார்க்க துவங்கினாள் பப்பு. அவளை பின் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, அலமாரிக்குள்ளிருந்த புத்தகங்கள் ஈர்க்க, வெளியே எடுத்து பார்த்தோம்.  எல்லாம் ரஸ்கின் பாண்டின் புத்தகங்கள்.அவர் எழுதிய புத்தகங்கள்  சில ,அவரைப் பற்றி எழுதிய புத்தகங்கள் சில!

ச்சார் தூகான் -  பெயருக்கேற்றாற்போல், நான்கே நான்கு கடைகள்தான். ஒரு நூறாண்டு வரலாறு இந்த நான்கு கடைகளுக்கு உண்டு.  மேகியும், பான் கேக்குகளும், பன் ‍ஆம்லெட்டுகளும் சுறுசுறுப்பாக பரிமாறப்படும் கடையில், புத்தகங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. சில சமயங்களில், உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ரஸ்கினை ச்சார் தூகானில் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார்கள்.

நான்காவதோ, ஐந்தாவதோ தலைமுறையாக நடத்திவரும், இந்த கடைக்காரர் ரஸ்கினுக்கு குடும்ப நண்பர். அவரது கையெழுத்திட்ட பிரதிகள் அங்கிருந்தன. ஆட்களிலில்லாத மாலைநேரத்தில், நீங்கள், ச்சார் தூகானுக்கு சென்றால், அந்த கடைக்காரர் பழங்கதைகளை உங்களுக்கு சொல்லக்கூடும். கூடவே, ஒவ்வொரு சனிக்கிழமையும் ரஸ்கின், மசூரியிலிருக்கும் கேம்ப்ரிட்ஜ் புத்தக கடைக்கு வந்து இரண்டு மணிநேரம் வாசகர்களை சந்திப்பதையும்.

மில்க் ஷேக்குக்காக,  லால் டிப்பா வரை இரண்டாம் முறையாக நடந்திருந்த பப்புவை ஏமாற்றாமல், ஆர்டர் கொடுத்துவிட்டு புத்தகத்தை பிரித்தால் விரிந்தது, இந்த பக்கம் - " The funeral". 



வாசித்துவிட்டு, எதிரில் இருந்த அந்த பூங்காவையே வெறித்துக் கொண்டிருந்தேன், நீண்ட நேரம். செஸ்ட்நட் மரநிழலில், உறங்கிக் கொண்டிருந்தன, நான்கைந்து நாய்கள். ச்சார் தூகானின் பிரிக்க முடியாத அங்கம், அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும் அதன் நாய்கள். சாதாரண தெருநாய்கள் என்று அவற்றை சொல்லிவிட முடியாது. உயர்வகை நாய்கள்.தங்கள் உரிமையாளர்களை நூறாண்டுக்கு முன்பே தொலைத்தவை. மெல்லிய காற்று, மேஜையில் பப்பு பரப்பியிருந்த  ஜக்கரந்தா மலர்களை கலைத்துபோட்டது.

ரஸ்கினின் பெற்றோர், இந்தியாவில் பிறந்த ஆங்கில வம்சாவளியினர். ரஸ்கினின் தந்தை, ஏதோ விடுமுறைக்காக லேண்டர் வந்தபோது, ரஸ்கினின் தாயை சிஸ்டர்ஸ் பஜாரில் சந்திக்கிறார். மலேரியா மற்றும் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட போர்வீரர்களுக்கு ஓய்வளிக்க ஏற்படுத்தப்பட்ட சிற்றூர்தான், லேண்டர். அந்த  மருத்துவமனை 1947 வரை செயல்பட்டும் வந்திருக்கிறது. அங்கு, செவிலியர்ப்பயிற்சியும் உண்டு. அதானாலேயே அந்த பகுதிக்கு 'சிஸ்டர்ஸ் பஜார்' என்றும் பெயர். அங்கு, செவிலியர் பயிற்சி படிக்க வந்தவர்  ஈடித். ஆப்ரே - ஈடித் சந்திப்பு காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிகிறது. அந்த தம்பதியினரின்  இரண்டாவது மகன்தான் ரஸ்கின்.

ரஸ்கினின், குழ்ந்தை பருவ நினைவுகள் ஜாம்நகரிலிருந்து தொடங்குகிறது. அங்கு அவரது தந்தை, இந்திய ராஜகுடும்ப‌ குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்றுநராக பணியாற்றுகிறார். இரண்டாம் உலகப்போர் சூழல், ரஸ்கினின் குடும்ப சூழலை மாற்றுகிறது. தந்தை கல்கத்தாவுக்கு செல்ல, தாயாரோடு ரஸ்கின் டேராடூனுக்கு செல்கிறார்.

சிலநாட்களிலேயே, குடும்பம் இரண்டாக‌ பிரிகிறது. ரஸ்கின், தந்தையாரோடு டெல்லிக்கு அழைத்துச்செல்லப்படுகிறார். ரஸ்கினின் இனிமையான நினைவுகள் என்றால் அதுதான். சிறிது காலமே ஆனாலும், அவரது தந்தையாரோடு அவர் தினமும் செலவழித்த நேரங்கள், பயணித்த இடங்கள், அவரது தந்தையார் அறிமுகப்படுத்திய இசை என்று ரஸ்கினின் வாழ்க்கை ஒரு அழகான குழந்தைபருவமாக நகர்கிறது.

சிம்லாவின் ,உறைவிட பள்ளியில் ரஸ்கின் சேர்ந்துவிட, தந்தையார் கல்கத்தாவுக்கு இடம் பெயர்கிறார். பெரும்பாலும், இருவருக்கும் தொடர்பு கடிதங்கள்தான். ரஸ்கின் அவ்வளவாக எழுதாவிட்டாலும், தந்தையாரி டமிருந்து அடிக்கடி கடிதங்கள் வரும் ரஸ்கினுக்கு. அந்த கடிதங்கள்தான் ரஸ்கினின் மகிழ்ச்சியான தருணங்கள். ரஸ்கினை ஒரு குழந்தையாக பார்க்காமல்,குழந்தைக்கு என்ன புரியும் என்று எண்ணாமல் கடிதம் மூலமே பேசியிருக்கிறார் அவரது தந்தை. மலேரியாவில்,ரஸ்கினின் தந்தை இறந்துவிட, இருள் சூழ்கிறது ரஸ்கினின் வாழ்க்கை.

தந்தையின் மறைவு, ரஸ்கினின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவருகிறது.தந்தை மறையும்போது,ரஸ்கினுக்கு ஒன்பது அல்லது பத்து வயதுதான். இழப்பை புரிந்துக்கொள்ளகூடிய வயதில்லையே அது!  ரஸ்கினை  தந்தையின் இறுதி சடங்கிற்கு,ரஸ்கினை அழைத்து செல்ல வேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை. 'வருடங்கள் பல சென்றாலும், இப்போதுகூட, அவரை இற‌ந்தது போல எனக்கு தோன்றவில்லை' என்கிறார், ரஸ்கின்.

தந்தையார் எழுதிய கடிதங்களும், ரஸ்கினிடம் தற்போது இல்லை. அது ஒரு சோகக்கதை. தந்தையிடமிருந்து வரும் கடிதங்கள் நின்றுவிட,பழைய கடிதங்களோடு திரிந்துக்கொண்டிருந்த ரஸ்கினிடமிருந்து அந்த கடிதங்களை வாங்கியிருக்கிறார், ஒரு தலைமையாசிரியர், அந்த வருடப்படிப்பு முடிந்ததும் வந்து வாங்கிக்கொள்ளலாம் என்ற நிபந்தனையோடு. இறுதியாக, ரஸ்கின் சென்று கேட்டபோது, அந்த தலைமையாசிரியருக்கு ரஸ்கின் எதைப்பற்றி பேசுகிறார் என்றே புரியவில்லையாம். மறதி! பத்து வயது சிறுவனுக்கு காலம் கொடுத்த கொடூரமான‌ தண்டனை!

தனது பள்ளி விடுமுறைகளை டேராடூனிலுள்ள‌ தாயாரோடு கழிக்கிறார். தாயாரோடும், தாய்வழிபாட்டியோடும்தான் அவரது விடுமுறை கழிகிறது. தாயின், இரண்டாம் கணவர் பற்றி கசப்பான எண்ணங்கள் எதுவும் இல்லை யென்றாலும், ரஸ்கினுக்கு உவப்பாக எதுவும் இல்லை.

படிப்பை முடித்து, இங்கிலாந்து சென்றாலும், ஆங்கிலேயராக அவரால் ஒன்றமுடியவில்லை. இமாலயத்தின் மலைகளின் பிள்ளை அவர். மலைகள் அவரை அழைக்கவே, திரும்பவும் மசூரிக்கு குடிபுகுந்து, எழுத்தாளராக வாழ்கிறார். எழுத்தாளராக ஆகவே, சிறுவயதிலிருந்து விரும்பியிருக்கிறார்.

எழுதவும், எழுத்தில் ஆர்வத்தையும் விதைத்தவர் அவரது தந்தையார்தான். ரஸ்கினோடு வாழ்ந்தது சிலகாலமேயானாலும், இன்றுவரை ரஸ்கினால் மாற்றிக்கொள்ள முடியாத குணநலன்களை போதித்தது அவரது தந்தைதான்.  சிறுவனாக இருந்த ரஸ்கினை, டைரி எழுத ஊக்குவித்த தந்தையால் நமக்கு கிடைத்தவைதான் ரஸ்கினின் இந்த கதையுலகம். ஆரம்பத்தில், பார்த்த நாடகங்களையும், பயணக்குறிப்புகளையும் எழுதத்தொடங்கியவர், தந்தையின் மறைவுக்குப் பின் புனைவாக எழுத ஆரம்பிக்கிறார். ஆனால், 'குழந்தைகளுக்காக, தான் எழுத ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் பிரேமின் குழந்தைகளே' என்கிறார்.

 பிரேம், அவரது உதவியாளரின் உறவினர். உதவியாளர், டெல்லி சென்றுவிட, பிரேம் வேலை கேட்டு உள்ளே வருகிறார். அப்படியே, ரஸ்கினோடு தங்கிவிட, இன்று ரஸ்கின் ஒரு பெரும் குடும்பத்தின் தாத்தா.  பிரேமின் குழந்தைகளுக்கே குழந்தைகள் இன்று வந்துவிட்டாலும், ரஸ்கினின் பாடல்களும், கதைகளும் தான் அவர்களை தூங்க வைக்கின்றன. பிரேமின் குழந்தைகளை மட்டுமின்றி, நம் அனைவரின் குழந்தைகளையும்தான்!

காமிக்ஸ் என்றால் கொள்ளை விருப்பம் பப்புவுக்கு.அதை அடுத்து, அவள் விரும்பி படிப்பது ரஸ்கினின் கதைகளைதான்.அதற்காகவே, நாங்கள் மசூரியை இந்த வருடம் தேர்ந்தெடுத்தோம். அவரை சந்திக்க நாங்கள் பிரயத்தனப்படவில்லை. அவர் அறிமுகப்படுத்தியவற்றை நாங்கள் நேரில் காண ஆசைப்பட்டோம்.  ரயில்களையும், சிங்கத்தையும், கரடியையும், பூக்களையும், குருவிகளை, மலைகளையும் - முக்கியமாக மசூரியையும், வெயிலும் புழுதியும் படிந்த இந்திய தெருக்களை அவளுக்கு அறிமுகப் படுத்தியதற்கு நான் நன்றி சொல்லவிரும்புவது, ரஸ்கினுக்கும் அவரது தந்தைக்கும்தான்.

 
இதோ, அவள் , டெல்லி நிஜாமுத்தீன் ரயில் நிலையத்தில் ஓய்வு அறையில், ரஸ்கினின் புனைவுலகத்தின் பிடியில்!









தந்தையர் தினத்தன்று, இந்த தந்தையை நினைவு கூராமல் இருக்க முடியவில்லை. அப்படியே,நமது பிரியத்துக்குரிய  தாத்தாவாகிவிட்ட  ரஸ்கினையும்தான்! :-)

RUSKIN, OUR ENDURING BOND 
          by : Ganesh Saili
Pages : 144
Price : Rs 395.00

Monday, June 16, 2014

my adventer (பப்புவின் டைரியிலிருந்து) ;-)


 பப்புவோட முதல் விமான பயணம். அவளோட, இத்துபோன டைரியில இருந்து, அவளுக்கு தெரியாம சுட்டது. :-)




19/5/14

my adventer

In 19/5/14 me and my mother and my grandmother woke up so early because we are going on a wonderful trip. We got ready and my mother had a surprice for me.  It was, we are going on airoplane. Ao, auto arrived, we got ready.

I packed my lucage, I helped my mother to get ready.  In exsitment, we went to the airport.We took our lucage and got our boarding pases.

They checked our bags.They told us not to bring sisors  and liquids. We put our bag tags.

We waited. They tour (tore) our boarding pases and send us in. The plane started moving.

I thought I would get whoumit. The airoplane took off, when we went up. I was really enjoying,  but I did not womit. We went high. A whole city looked like a sime (SIM) card and the houses looked like memoryis in the sim card.

We went high and high.We went top of every cloud.We saw it is moving so closer.

You know, we could almost touch it. We saw the clouds changing its shapes. I loved the view.amazing. That was the best part of my life. That was best of all. I felt so happy. Then I felt how much she takes care of me. I wanted to be thank full to her and at last we landed on
Deli (Delhi) in tow hours. I thanked my mother.

Saturday, June 14, 2014

ஒரு விமானப்பயணமும், ஐந்து கத்தரிக்கோல்களும்

இந்திய மாநிலங்களை, அதன் தலைநகரங்களைப் பற்றி, பப்பு, படித்த சமயத்தில் கேட்டது, இன்றும் நினைவில் நிற்கிறது.

"ஆச்சி, நாம ஒவ்வொரு ஸ்டேட் கேப்பிடலுக்கும்  போலாமா...என்னை கூட்டிட்டு போறியா?"

இந்த கோணத்தில் நான் என்றைக்கும்  நினைத்தே பார்த்ததில்லை. இந்த நாட்டில் பிறந்து இத்தனை வருடங்கள் வாழ்ந்திருந்தாலும், தமிழ்நாட்டை தாண்டி செல்ல என்றைக்கும் தோன்றியதில்லை.  சாகித்திய அகாதமியில் வெளியாகும், மாநில வாரியான கதைபுத்தகங்களை, ஒவ்வொரு புத்தக சந்தையிலும் வாங்கி மிகுந்த விருப்பத்தோடு வாசித்திருக்கிறேன். அதைத்தாண்டி, அந்த மாநிலங்களுக்கு, அவற்றின் தலைநகரங்களுக்கெல்லாம்  செல்லலாம் என்று  தோன்றியதில்லை.

அந்த வருட இறுதியில், ஹைதராபாத் சென்றோம்.

அடுத்து, சில மாதங்கள் கழித்து, பப்புவிடமிருந்து இன்னொரு கேள்வி.இந்தியாவின் வரலாற்று சின்னங்களை அப்போது கற்றுக்கொண்டிருந்தாள். அதோடு, நமது முக்கிய நதிகளையும். அன்றிரவு, அவள் கேட்டது, இன்னும்  காதில் எதிரொலிக்கிறது.

"ஆச்சி, யமுனா ரிவர் எப்படி இருக்கு தெரியுமா? மாஸ்டர் காட்டினார்ப்பா...எங்க ஸ்கூல் மெட்டிரீயல்ல இருக்கு. ஃப்புல்லா தண்ணி....எப்படி, போகுது தெரியுமா? அதோட ஓரத்துலேதான் தாஜ்மகால் இருக்கு. நாம யமுனா வழியா தாஜ்மகால் பார்க்க போலாமா?"

யமுனாவின், படத்தைதான் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள்.

அவளது கண்களில் மினுமினுத்த ஆர்வம் ஒரு நட்சத்திரத்தின் ஜொலிஜொலிப்புக்கு இணையானது. அந்த ஒளியை மறுதலிக்க இயலாமல், நானும் தலையாட்டி வைத்தேன். அதன்பிறகு, ஒருநாள், அவளாகவே பெரிம்மாவிடம் ஒன்றை அறிவித்தாள், "என் பர்த்டேவுக்கு நான் இந்தியாவோட கேபிடல்லேதான் இருப்பேன்."

அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு. :‍)

அன்றிலிருந்து, பப்புவின் இந்த ஆசையை, தக்க வைக்க  இந்தியாவின் வரைபடத்தை உற்று நோக்க தொடங்கினேன். இடமிருந்து வலம், மேலிருந்து கீழ்! தெரியாத ஊர்களின் ரயில் நிலையங்களை தடவித் தடவி அறிந்துக்கொள்கிறேன்.. அந்த ரயில் நிலையங்களை அவளுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

இந்த ரயில் நிலையங்களின், வலையமைப்பு என்றுமே எனக்கு ஒருவித பிரமிப்புதான். பப்புவுக்கும் அதை கடத்த முற்பட்டேன்.ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடமாக  ஒரு  தேர்ந்த தையல்காரரைப் போல இணைக்க தலைப்பட்டேன். வெளிநாடுகளுக்கு போவது பற்றி நினைப்பதற்கு முன், உன் நாட்டை பற்றி நீ அறிந்துக்கொள்ள வேண்டும் என்று அவளுக்கு சொல்லாமல் சொல்ல நினைக்கிறேன்.

இந்தியாவின் வரலாற்று சின்னங்களை மட்டுமல்ல... காடுகளையும், கடல்களையும்,மலைகளையும், நதிகளையும் அவள் அறிந்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  நாகரிகமும்,வரலாறும், சுவாரசியமும் புகழ் பெற்ற நகரங்களுக்கு மட்டுமே சொந்தமில்லை, அந்த நகரங்களின் பல மைல்களுக்கு அப்பால் உள்ள  சாதாரண கிராமத்திலும் கூட இருக்கிறது என்பதையும், அதை நாம்தான் தேடி கண்டடைய வேண்டும் என்பதையும் அவள் உணர விரும்புகிறேன். ஊர்களையும், அவற்றின் பாதைகளோடும் கூட.. மக்களை, அவர்களின் உணவை, அவர்களது போக்குவரத்தை, கலாசார அடையாளங்களையே இயன்றவரை பின்பற்றக்  கற்றுக்கொண்டிருக்கிறோம்..

அதனாலேயே,கிழக்கிலும் மேற்கிலும், தெற்கிலும், வடக்கிலும் இருக்கும் ஊர்களை பற்றி கனவு காண்கிறோம். அந்த ஊர்களுக்கு எங்கள் வீட்டிலிருந்து பாதையை வரைகிறோம். சிலநாட்களே விடுமுறை கிடைத்தாலும், அந்த ஊர்களை நோக்கி, எங்கள் பைகளை தூசிதட்டி சுமக்கிறோம்.

அப்படி, இந்த விடுமுறைக்கு நாங்கள் நாங்கள் தடம் பதித்தது உத்தராகாண்ட் மாநிலம். முற்றும் முழுவதுமாக, இணையத்தில் தேடி தேடி, இந்த பயணத்தை வடிவமைத்து, பப்புவின் நாடகம் அரங்கேறும் நாளுக்காக காத்திருந்தேன். அவளது, நாடகம் முடிந்த அடுத்த நாள் பயணம். சென்னையில் இருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து டேராடூனுக்கும் செல்வதாக திட்டம். விமானத்தில் செல்ல ஆசையாக இருப்பதாக வேறொரு பயணத்தில் அவள் கூறியிருந்தது சரியாக நினைவுக்கு வந்து, சென்னையிலிருந்து டெல்லிக்கு மட்டும் விமானத்தில் பயணம்.

பெரிய சூட்கேஸ்களை கொடுத்துவிட்டு, அவரவர் கைப்பைகளோடு செக்கிங்க்கிற்கு வந்தோம். செக்கிங் முடிந்து, திரும்ப கைப்பைகளை பெற்றுக்கொள்ள வருமிடத்தில், பப்புவின் பையை தனியாக வைத்திருந்தார்கள். எங்களுடையதை எடுத்துக்கொண்டு, அவளது பைக்காக காத்திருக்கையில், ஒரு பெண் வந்து 'இந்த பை யாருடையது ?'என்றார். பப்பு என்னுடையது என்றதும், 'எதற்காக இதில் ஐந்து கத்தரிக்கோல்கள் வைத்திருக்கிறாய்?' என்றார்.  அப்போதுதான், எனக்கு தூக்கி வாரிப்போட்டது.  அவர் பார்த்த பார்வையோ, நாங்கள் ஏதோ திட்டத்துடன் வந்தது போல இருந்தது.

ஒவ்வொரு பயணத்துக்கும், பப்பு அவளது பையை தயார் செய்வாள். அதில், சகல சொத்துகளும் இருக்கும். க்ரேயான்கள், நோட்டு புத்தகங்கள், கதைபுத்தகங்கள், க்யூப், தாயம், சிலசமயங்களில் பல்லாங்குழியும் புளியங்கொட்டைகளும், நூல்கண்டும் ஊசியும்,ஓரிகாமி பேப்பர்கள்...அதோடு பைனாகுலர். ஒருமுறை, ஆக்ஸ்ஃபோர்டு சின்ன அகராதி கூட இருந்தது.

இந்த பையை தயார் செய்தல் என்பது,மிகுந்த‌  கடமையாக பொறுப்புணர்வோடு நடைபெறும். இடையில், புகுந்தால் தேவையற்ற சண்டைகள் வருமென்பதால், எல்லாம் முடிந்தபின்  கிளம்புவதற்கு முன்பாக  நான் மட்டும் (பப்புவின் நம்பிக்கையை பெற்று) ஸ்கீரினிங் செய்வது வழக்கம்.

முக்கியமாக, பயணத்தின் இடையில், எங்காவது நடக்க வேண்டிய இடங்களில் அது என் முதுகைதான் தேடி வருமென்பதால், முடிந்த அளவு, இரக்கமேயில்லாமல், விடைத்திருத்தும் ஆசிரியரைப்போல் நடந்துக்கொள்வேன். அதேபோன்று, இந்த முறையும் செய்திருந்தேன். ஆனால், அதன்பிறகு, அவள் சிறு சில்லறை சாமான்களை ஏற்றியிருந்தாள். அது பரவாயில்லை, பெரிய அளவில் ஒன்றும் கனமாகயிராது என்று விட்டுவிட்டேன்.அது இப்போது என்னை ஏமாற்றியிருக்கிறது. பார்த்திருந்தாலும், கத்தரிக்கோலை கொண்டு செல்லக்கூடாது என்று எனக்கு தெரியாததால், ஒன்றை மட்டும் விட்டுவிட்டு மீதத்தை காப்பாற்றியிருப்பேன்.

"ஐந்து" என்றதும், 'அய்யய்யோ..வீட்டில் ஒன்றுமே இருக்காதா' என்றுதான் முதலில் தோன்றியது. எதற்கு எடுத்து வந்தாய் என்று சந்தேகத்தோடு அந்த  பணியாளர் கேட்டதும், "நான் கிராஃப்ட் செய்வேன்" என்றாள் பப்பு. புன்னகையோடு அவர்,"எங்கே, விமானத்திலா?" என்றதும் "ஆமாம்" என்றாள். பிறகு, தேடி எடுத்து அனைத்தையும் அவர்களிடம் தாரை வார்த்துவிட்டு, விமானத்துக்கு காத்திருந்தோம். 

வீட்டுக்கு சென்றால், பால் கவர் கத்தரிக்ககூட ஒரு கத்தரிக்கோல் இருக்காதே என்ற நினைப்பு வந்ததும், "ஒன்னு எடுத்துட்டு வந்தா பத்தாதா?" என்று அவளிடம் சொன்னதற்கு, "கத்தரிக்கோல் எல்லாம் எடுத்துக்கிட்டு வரக்கூடாதுன்னு உனக்கு தெரியாதா?" என்று லாஜிக்காக கேட்டாள். எனக்கும், இப்போதுதான் தெரியும் என்பது அவளுக்கு எப்படி தெரியும்! :‍)

விமானத்துக்கு,உள்ளே செல்ல அழைத்ததும், உற்சாகமாக  கிளம்பியவள், விமானத்தில் ஏறி அமர்ந்து ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வெளியே பார்த்ததும் ஒருமாதிரியாகி விட்டாள். வழக்கமான உற்சாகம் குறைந்தாற்போலிருந்தது.மேலும், அவளது பையை வேறு மேலே வைக்கவேண்டியிருந்தது. பப்புவின் சொத்தே, அவளது பைதான். ஒரு நொடி கூட அதை விடாமல் பாதுகாப்பாள். ரயிலில், அமர்ந்த மறுநிமிடம், அவளது பெர்த்தில் கடைவிரித்து மும்முரமாக வரைய, எழுத, வெட்டி ஒட்ட தொடங்குவாள்.

இங்கோ, உட்கார மட்டுமே இடம். கால்களை நீட்ட கூட முடியாது. ஜன்னல் வழியாக பார்த்தால் விமானங்கள் வருவதும், பணியாளர்கள் ஊர்திகளில் செல்வதுமாக இருந்தனர். "எனக்கு ட்ரெயிந்தான்ப்பா பிடிக்கும், அப்போதான், ஜாலியா ஜன்னல் வழியா ஊரெல்லாம் பார்த்துக்கிட்டு போலாம். இனிமே ட்ரெயின்லேயே போலாம்" என்றாள். எல்லாம் விமானம் கிளம்பும் வரைதான். அதன்பிறகு, ரசிக்க ஆரம்பித்துவிட்டாள். விமானம், தரையில் இறங்கும் சமயம் உறங்கிவிட்டாள்.

குதூப்மினாரை, மேலிருந்து பார்க்க வேண்டுமென்பது பப்புவின் ஆசை. குதூப்மினாரின் கைடு ஒருவர், மேலிருந்து குதூப்மினாரை பார்த்தால் ஒரு விரிந்த தாமரையைபோல் இருக்கும் என்று சொல்லியிருந்தார். அதிலிருந்து, டெல்லியை பற்றி பேசினால், குதூப்மினாரைப் பற்றிய இந்த விவரிப்பு இருக்கும். ஆனால், இப்போது, குதூப்மினாரை மேலிருந்து   பார்த்தது நாந்தான். பப்புவின் கண்களுக்கு ஒருவேளை, அந்த‌ விரிந்த தாமரை தெரிந்திருக்குமோ என்னவோ?! :‍)

Saturday, March 29, 2014

பப்பு டைம்ஸ்

நேற்று இரவு, படுக்கையில் ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டிருந்தாள், பப்பு. அவளது பள்ளியில் பழங்கள் தினம். ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை பழங்கள் கொண்டு வந்து அவர்களே தோல்நீக்கி, வெட்டி, விதைகள் நீக்கி கலவை செய்யவேண்டும். நடந்த கலாட்டாக்களை சொல்லிக்கொண்டிருந்தவள், அவளது வகுப்பு தோழர்களுக்கிடையிலான பாலிடிக்சையும் சொல்ல ஆரம்பித்தாள். அது வழக்கமான ஒன்றுதான். கேட்டு கேட்டு எனக்கே அத்துபடி. ஆனால்,யார் எப்போது கட்சி மாறுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாததுதான் அதன் சுவாரசியம்.அப்படி, எல்லோரும் ஒரு குழுவாகி ஒரே பையனை மட்டும் டார்கெட்டாக்கியதை சொல்லிக்கொண்டிருந்தாள். இதற்கெல்லாம், பப்புவும் விதிவிலக்கல்ல என்றாலும் மற்றவர்கள்  தவறு செய்யும் போது நாம் புனிதர்கள் ஆகி தத்துவங்கள் உதிர்ப்பதில் குறைந்தவர்க‌ளல்லவே! ;-) அப்படி, பப்பு உதிர்த்த தத்துவம்

"we can even live without brother or sister. But, can we live without friends?""

:-)

 என் கால்களை பிடித்து ஆடிக்கொண்டிருந்தபோது, பப்பு சிந்தித்தது

"ஆச்சி, நம்ம‌ காலை முன்னாடி மடக்க முடியாது, கையை பின்னாடி மடக்கமுடியாது....இல்ல‌ ஆச்சி? "

#வில்லேஜ்_விஞ்ஞானி ;-)


 

                                                        "ஆச்சி......நான் முஸ்லீம்ப்பா!" 

பப்புவும் பொன்மொழிகளும்

பப்பு, எப்போது தத்துவங்களையும், பொன்மொழிகளையும் வீசுவாள் என்று கணிக்கவே முடியாது. 'கடையில பொருள் வாங்கிவிட்டு எப்போவும் பில் வாங்கணும்' என்று சொல்லியிருப்பேன். என்றைக்காவது காசை கொடுத்துவிட்டு பேச்சு சுவாரசியத்தில் திரும்புகையில் "இந்தாங்க பில்" என்பார் கடைக்காரர். அதை சுட்டி காண்பித்த, அடுத்த நொடிகளில் ஒரு பொன்மொழி தயாராக இருக்கும். 'நாம செஞ்சுட்டுதான் அடுத்தவவங்களுக்கு சொல்லணும்" என்பதாக!

"மேக் ஹே வென் த சன் ஷைன்ஸ் என்றால், நிறைய பேர், 'சன் வந்ததும் "ஹேய்"ன்னு கத்துறதுன்னு' நினைச்சுக்கிறாங்க. ஆனா அது இல்ல. சன் வரும்போது, நாம பயிரிட்டு ஹே செய்யணும்" என்றெல்லாம் பொன்மொழிகளும் விளக்கங்களும் வந்து விழுந்துக்கொண்டே இருக்கும்.

 எனக்கோ, இந்த பொன்மொழிகள் எல்லாம்  எதிர்பாராத நேரங்களில் வீசப்படும் பந்து போல...சிலது நேராக நம் கைக்கு வந்துவிடும். பலது, மூக்கை பதம் பார்த்துவிட்டு போகும். இன்று அப்படியான ஒரு நாள். ஒன்றை சரியாக கேட்ச் பிடித்தாலும், இன்னொன்றுக்கு எனது மூக்கை கொடுத்தேன்.

பள்ளிக்கூடத்துக்கு கிளம்பியாகிவிட்டது. ஆனாலும், ஊரிலிருந்து வந்திருந்த மாமாவுடன் ஒரே கதை. பப்புவின் பள்ளியில் டீச்சர்களை "ஆன்ட்டி" என்று அழைக்கும் முறை பற்றி மாமாவும் கிண்டலடித்துக் கொண்டிருந்தார். கதவை திறந்து வெளியே வருவதும்ம, பின்னர் திரும்பி உள்ளே சென்று மாமாவை கிண்டல் செய்வதுமாக இரண்டுமூன்று முறை நடந்துவிட்டது.  இந்தமுறை, வெளியே வந்தவள், என்னை நிமிர்ந்து பார்த்து, சொன்னாள்.

 "Parents are the first teachers; teachers are the second parents."

"நீ வந்தா வா , இல்லேன்னா போ, நான் ஸ்கூலுக்கு போறேன்"(!) என்று வண்டியை துடைக்கலானேன். பேசி முடித்து, வண்டியில் வந்து ஏறிக்கொண்டவள், கேட்டாள்,

"ஆச்சி, படிப்பு முக்கியமா, உயிர் முக்கியமா?"

நேரமாகிவிட்ட‌ அவசரத்தில்,  எதை தேர்ந்தெடுத்து சொல்வது என்று தெரியாமல், பொதுவாக‌ "ரெண்டுமே தான்" என்று சொல்லிவிட்டு, "நம்ம கண்ணு மாதிரி" என்றேன். நல்லவேளையாக தப்பித்தேன் என்று என்னை நானே மனதுள் மெச்சிக்கொள்ளவும் செய்தேன். ஆனால், இதற்குமுன் இப்படி ஒரு பொன்மொழியை கேள்விபட்டதும் இல்லை!

"கரெக்ட்" என்று பாராட்டும் கிடைத்தது. அடுத்ததாக, "எப்படிப்பா உனக்கு தெரியும்?", என்று ஒரு கேள்வியை வீசினாள், ஏதோ பொன்மொழிகளுக்கெல்லாம் தானே காப்புரிமை வைத்திருப்பதுபோல்.

"அதுக்குதான் எதையும் சொல்றதுக்கு முன்னாடி யோசிக்கணும்", என்று நானும் எனக்கு கிடைத்த‌ வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டேன். ;)

இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை...

"உயிர்  இருந்தாதானே படிக்க முடியும்? இல்லேன்னா எப்படி படிக்க முடியும்? ஆனா, படிச்சாதானே வாழ முடியும்? இல்லேன்னா எப்படி வாழ முடியும்?" என்று விளக்கம் கொடுத்தவள், சற்று நேர அமைதிக்குப்பின்,

"நாலெட்ஜ் முக்கியமா? உயிர் முக்கியமா? என்று அடுத்த ஆயுதத்தை வீசினாள். திரும்பவுமா....இந்தமுறை நீயே ஜெயிச்சுக்கோ என்பது போல, "தெரியலையே" என்றேன்.

கையில் காசு;வாயில் தோசை என்பதுபோல், கை மேல் விளக்கம்.... 'தெரியாது' என்றதும் உற்சாகக்குரலில் விளக்கம், "போத் ஆர் லைக் டூ ஐஸ். உயிரோட இருந்தாதானே நாலெட்ஜை ப்ராக்டிஸ் பண்ண முடியும். நாலெட்ஜ் இருந்தாதானே உயிரோட வாழ முடியும்"

:‍)  

மன்னிப்பும் கூடவே ஒரு ஞானமும்

வெளியில் கிளம்ப வேண்டும். நேரமாகியும், அதைப்பற்றிய அக்கறை கொஞ்சமும் இன்றி விளையாடிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தாள்.  "முகம் கை கால் கழுவு" "பையை எடுத்து வை" "பாட்டில்லே தண்ணி எடுத்து வை" ம்ஹூம்! காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. அட்வைஸ் கலந்த திட்டுகளோடு சில பல மிரட்டல் கலந்த அடிகளோடு ஒருவழியாக கிளம்பியாயிற்று.

எவ்வளவு நேரம்தான் உர்ரென்று இருப்பது. அவளுக்கு பேச வேண்டும்.  ஏதோ சொன்னாள். எனக்கு சரியாக கேட்கவில்லை. "என்ன சொன்னே" என்று திரும்ப கேட்டேன். "நீயே யோசிச்சு பாரு. நீ செஞ்சதுலே என்ன தப்பு இருக்குன்னு" என்றாள். அவ்வ்வ்வ்...'எங்கேயோ கேட்ட குரல் மாதிரி என் டயலாக் எனக்கேவான்னு' நினைத்தபடி "என்ன" என்றேன். அப்புறம்தான் புரிந்தது, அவள் முதலில் முணுமுணுத்தது, "சாரி கேக்கணும்னு தெரியாதா" என்பது. 'சாரி' என்றேன். நொடிகளில் சகஜமாகி கதையளக்க ஆரம்பித்துவிட்டாள்.

வீட்டுக்கு திரும்பி வரும்வழியில்தான் எனக்கு இந்த சந்தேகம் தலைதூக்கியது. பப்பு என்னைப் பற்றி நினைக்கும்போது அவளது மனதில் உடனடியாக  நினைவுக்கு வரும் என்னைப்பற்றிய பிம்பது எது?கோபமான ஆச்சியா அல்லது ஃப்ரெண்ட்லியான ஆச்சியா? அவளிடமே அதை கேட்க முடிவு செய்தேன்.

"என்னை பத்தி  நினைச்சா உனக்கு என்ன தோணும்?"

...... பதிலில்லை.

"நீ என்னை பத்தி திங்க் பண்ணுவே இல்ல‌...அப்ப உனக்கு எப்படி ஞாபகத்துக்கு வருவேன்?"


"நீ கோவ மூட்ல இருந்தா இது என்ன லூசு அம்மா?  நினைச்சுப்பேன்.நீ ஜாலியா எனக்கு ஏதாவது இன்ட்ரஸ்டிங்கா சொல்லிக்கொடுக்கும்போது, "நல்லவேளை.... இது எனக்கு அம்மாவா வந்துச்சு...ப்பா..நான் இதுகூட வாழ்ந்துக்கறேன்ன்னு நினைப்பேன்."

:-)

பப்பு டைம்ஸ்

"ஆச்சி, உனக்கு தெரியுமா ? அ  தி மு கா"

"அப்படின்னா என்னப்பா...எனக்கு தெரியாதே?!"

"தி மு கா மாதிரி அ  தி மு கா...ஜெயலலிதா கட்சி...நேத்து வீட்டுக்கு வந்துச்சு"


"வீட்டுக்கு வந்துச்சா?எப்போ? எனக்கு தெரியாதூ!!"

"வீட்டுக்குன்னா வீட்டுக்கு இல்ல...பாஸ் பண்ணி போனாங்க..ரோட்ல எல்லாருக்கும் லெட்டர்ஸ்.."

"நீ வாங்கினியா?  உனக்குதான் ஜெயலலிதா புடிக்குமே.."

"இல்லே....ஜெயலலிதா கொண்டு வந்து குடுத்தா வாங்கிக்கலாம். அதுதான், தூத்துக்குடி போயிருக்காங்களே!"

!!!





"ஆச்சி,ஒரு கேம்.யெஸ் ஆர் நோ?" - பப்பு

"யெஸ்" - பலியாடு

"யெஸ் சொல்லலாம்..ஒரே ஒரு நோ அலவுட்" -பப்பு

"ம்ம்ம்" - அதே பலியாடு

"ஜனவரி ஐ பீட் யூ?"-பப்பு

ஙே...."யெஸ்"

"பிப்ரவரி ஐ பீட் யூ?" -பப்பு

"யெஸ் "

"மார்ச்சு ஐ பீட் யூ" -பப்பு

"யெஸ்"

ஏப்ரல் மாதத்துக்கு ஏதோ இருக்கும் போல இருக்கு...கவனமாக இருக்கும்.

"ஏப்ரல் ஐ பீட் யூ"

எதுக்கும் யெஸ் சொல்லி வைப்போம்.

"யெஸ்"

"மே ஐ பீட் யூ?"-பப்பு

"ஓ நோஓஒ"

ஆகா...நல்லவேளை தப்பிச்சேன்!



 I had a wife
Her name is life
In my life,
I stay with my wife!

 -  பப்புவுக்கு உதித்த தத்துவம்

#ஆர்டரின்_பேரில்_இங்கு_கவிதைகள்_செய்து_தரப்படும்:)

டெரரா இல்ல இருக்கு!!

 கடையிலிருந்து வெளியில் வந்தோம். வழியில், ஆங்காங்கே சிலர் கும்பலாக நின்றுக்கொண்டிருந்தார்கள். சில இளைஞர்கள் தங்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். வழி, குறுகலாக இருந்ததால், நாங்கள் கடக்கும்போது அவர்கள் சிரித்தது மிக சத்தமாக கேட்டது.

"ப்பா....ஏன் இவங்க இப்படி சிரிக்கிறாங்க!காதே வலிக்குது"  என்றேன்.

"ஏன்னா, கேர்லும் கேர்லும் நடந்துபோனா அப்படிதான்" - பப்பு

என்ன்னாது?? இதெல்லாம், அதுக்குள்ளே உனக்கு தெரியுதா என்று மனதுள் நினைத்தபடி....ஆர்வக்குட்டியாகிவிட்டேன்.

"ஓ! அப்படி சிரிப்பாங்களா என்ன?" என்றேன்.

"இல்லல்ல...சும்மா சொன்னேன்."  - பப்பு

"அப்போ பாயும் பாயும் போனா நீங்கள்ளாம் சிரிப்பீங்களா"  - நாந்தான்.

"இல்ல...பாயும் கேர்லும் போனாதான் நாங்க சிரிப்போம்! தே போத் ஆர் இன் லவ்னு"  - பப்பு

அவ்வ்வ்வ்! அராஜகமா இல்ல இருக்கு இது!

"அப்போ கேர்லும் கேர்லும் போனா?"  - மீ தி அப்பாவி

"அவங்க ஃப்ரெண்னட்ஸ்"  - பப்பு

"பாயும் பாயும் போனா?" - நாந்தான்.

"அவங்க எனிமீஸ்"  - பப்பு

"அப்புறம், பாயும் கேர்லும் இப்படி பார்த்துகிட்டா சிரிப்போம் ஆச்சி... க்ளாஸ்லே, இங்கே பாரு,  ‍‍ ஒரு பையன் மற்றும் இன்னொரு பெண்ணின் பேரை சொல்லி, அவங்க அப்படி பார்த்துக்கிட்டாங்க. அப்போ, நாங்க சிரிப்போம். அப்புறம், வெட்னஸ்டே வெட்டிங்டேன்னு சொல்லுவோம்"  - பப்பு

அவ்வ்வ்வ்வ்வ்!எகொச‌!!

" வேற யார் யாரை அப்படி சொல்லி சிரிப்பீங்க?"  - நேரடியா கேக்கமுடியாத சோகம் எனக்கு!

இன்னொரு பையன் மற்றும் பெண் பெயரை சொல்லி,  எப்படி பார்த்துக்கொள்வது என்றும் டெமோ.

"அப்புறம், உனக்கு? நீ யாரை அப்படி பார்த்து சிரிப்பே?"  - மீ

"நான் (இன்னொரு பையன் பெயரை சொல்லி) அவனும் அப்படி பார்த்துக்கிட்டோம். அவன் இல்ல ஆச்சி, இப்படி பார்த்தான் (கொஞ்சம் ஸ்டைலாக கழுத்தை எல்லாம் திருப்பி காட்டி) அப்போ, எல்லாம் சிரிச்சாங்க. வெட்ன்ஸ் டே வெட்டிங் டே!"  - பப்பு

எனக்கு எப்படி இருந்திருக்கும்!!  :-)))

ஆச்சரியமாகவும்,  ரொம்ப சிரிப்பாக இருந்தது. நான் சிரிப்பதை பார்த்து, அவளே தொடர்ந்தாள்.

" இங்க பாரு ஆச்சி, ஸ்னாக்ஸ் ஷேர் பண்ணுவோம் இல்ல..அப்புறம், ஏதாவது திங்க்ஸ் தொலைச்சுட்டா குடுக்கும்போது பார்த்து சிரிப்பாங்க இல்ல...அப்போ, எல்லாரும் சிரிப்போம்!"

டெரரா இல்ல இருக்கு!!

பப்பு டைம்ஸ்

இரண்டு நாட்களுக்கு முன், ரத்த பரிசோதனைக்கு செல்ல வேண்டியிருந்தது. காலையிலேயே செல்ல வேண்டியிருந்ததால், இரவே பப்புவிடம் தயார்படுத்த ஆரம்பித்தேன்..

"பப்பு, நீயேதான் காலையில ரெடியாயிருக்கணும். நான், காலையிலேயே டெஸ்ட்க்கு போணும். உனக்கு கிளம்ப ஹெல்ப் பண்ண முடியாது. எழுப்புனவுடனே எழுந்துக்கோ...நான் வந்ததும், நீ ரெடியா இருந்தாதான், ஸ்கூலுக்கு போக சரியா இருக்கும்..இல்லேன்னா, நீ லீவ்தான்..அப்புறம், ஸ்கூலுக்கு போக முடியாது"

.......

மாலையில், பரிசோதனை ரிப்போர்ட்டுகளை வாங்கிக்கொண்டு வந்தேன். அந்த ரிப்போர்டுகளை கையில் வைத்து புரட்டியபடி,  பெரிம்மா கேட்டவற்றிற்கு பதிலளித்துக்கொண்டிருந்தேன். என் கைகளில் இருப்பதை பார்த்துவிட்டு ஓடிவந்தவள், மூச்சிரைக்க கேட்டாள்..

"ஹேய், ரிசல்ட் வந்துடுச்சாப்பா....எவ்ளோ நாள் உயிரோட இருப்பே?"

அவ்வ்வ்வ்வ்வ்!

 
"ஆச்சி,இங்க பாருப்பா... மாடு, டாக்ல்லாம் இருக்குல்லப்பா.... அது கண்ணுக்குல்லாம் கலர்சே தெரியாது. எல்லாம் பிளாக் &ஒயிட்டாதான் தெரியும். தெரியுமா? குடையெல்லாம் அது முன்னாடி நாம ஓபன் பண்ணா அதுக்கு எப்படி தெரியும்? கருப்பாக தெரியும் இல்ல ஆச்சி!ஆனா,மாடு க்கு ரெட் கலர் பார்த்தால் எப்படி முட்ட வரும்... அதுக்குதான் கலர் தெரியாதே? எப்படி ஆச்சி?"

??

இப்போ பப்புவோட டர்ன்னு நினைக்கிறேன்... #இது_கூடவா_உனக்கு_ தெரியாது?

"ஆச்சி,நானே ஒரு proverb உருவாக்கியிருக்கேன்ப்பா.சொல்லட்டா..

A kite without its tail can't fly.
Meaning-
A man without knowledge can't work."

#அவ்வ்வ்வ்வ்

"bye Pappu! Have a good day! I laaave you!  - Me

"I can not say anything now because I Love you and I hate you"  - Pappu

#அவ்வ்வ்வ்வ்



ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தோம். நேற்றைய இரவில் நடந்த கொடூரமான விபத்தை பற்றி சொல்லி அப்போதுதான் சொல்லிமுடித்திருந்தார் , ஆட்டோக்காரர். கொஞ்ச தூரம் தள்ளி வந்துவிட்டாலும், அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்ததாலோ என்னவோ, "என்னா பப்பு" என்று என்னையறியாமலேயே சொல்லிவிட்டேன். அவள் பாட்டுக்கு வேடிக்கை பார்த்தபடி இருந்தவள், "ஏன் ஆச்சி? ஏன் 'என்னா பப்பு'னு சொன்னே?" என்று குடைய ஆரம்பித்தாள். ஒன்றுமில்லை என்பது போல தலையசைத்தேன்.

சமாதானமாகாமல், 'ஏன் அப்படி சொன்னே?' என்று இழுத்தவள், "நான் நினைக்கிறது உனக்கு தெரிஞ்சுடுச்சா?அது ஆ- லே ஆரம்பிக்கும்தானே" எனக் கேட்டாள்.

பல்ப்!! இந்த விளையாட்டு நல்லா இருக்கே!

ஆமாம் என்பது போல தலையாட்டினேன்.

"என்ன நினைச்சேன் சொல்லு" - பப்பு

"நான் சொல்ல மாட்டேனே?" -  நான்

"அப்போனா உனக்கு தெரியாதுன்னு அர்த்தம்"  - பப்பு

"சரி, நீயே சொல்லு, என்ன நினைச்சேன்னு"  - நான்

"அந்த லாரியிலே ஒரு ஆடு இருந்துதே, அதை பத்தி நினைச்சேன், எல்டர்ஸ் பண்ணலாம் இல்ல, அந்த வேலையை. ஏன் அந்த குட்டி பையன்தான் ஆட்டுக்கு வைக்கோல் எடுத்து ஃபீட் பண்ணிக்கிட்டிருக்கான்"

#அவ்வ்வ்வ்

"ஆச்சி, எனக்கு வரும் இல்ல...அடுத்த பர்த்டே, அதுக்கு நாம இங்லேண்ட் போலாமா?"

#அவ்வ்வ்வ்வ்



புரந்தர் கோட்டை முகவரி தெரியுமா உங்களுக்கு?

காலையில தட்டுல இட்லியை வைச்சுட்டு, 'நான் குளிச்சுட்டு வர்றதுக்குள்ள சாப்பிட்டுட்டு ரெடியா இருக்கணும்"னு சொல்லிட்டு போறேன்.

"சிவாஜீஈஈஈ...வீ ஹாவ் கேப்சர்ட் யுவர் புரந்தர் ஃபோர்ட்"

"ஏய்...இப்ப நிறுத்த போறியா இல்லையா? என்ன சொன்னேன் உன்கிட்டே?"

"யெஸ், ஐ நோ! ஐ ஹாவ் டூ திங்க் அபவுட் இட்.சம்பாஜிஈஈஈ..."

"நிறுத்து...அஞ்சு நிமிசத்துல வருவேன்...தட்டு காலியா இருக்கணும்"

......

#ஸ்ப்ப்ப்பா


இது முடிஞ்சுதுன்னு ஸ்கூலுக்கு போய்க்கிட்டு இருக்கோம்.

"ஆச்சி, சிவாஜியும், அக்பரும் ஒரே காலத்துல இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?யாரு வின் பண்ணியிருப்பா?" - பப்பு

"...சிவாஜிதான்!"

"எப்படி சொல்றே?" - பப்பு

"சும்மாதான்...சிவாஜி clever இல்ல.அதான் அப்டி தோணுச்சு"

"ஹிஹிஹி...இல்ல,ஆச்சி..ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆகியிருப்பாங்க." - பப்பு

'அட.... இது எனக்கு தெரியாம போச்சே லுக் '

"சிவாஜி மவுடெய்ன் ராட்- னாலும்,  அக்பர்தான் வின் பண்ணியிருப்பார்.   அக்பர், வெறும் கையாலயே வாளை எல்லாம் உடைச்சிடுவார். ஔரங்கசீப்பை புடிக்கவே புடிக்காது. உனக்கு?" -  பப்பு


#இதுவேறையா...ஸ்ப்பாஆஆஆஆ

ஆமா, புரந்தர் ஃபோர்ட் எங்க இருக்கு?
போகணுமாம்!!

பப்பு டைம்ஸ்

மின்சார ரயில் நிலையத்தில் அவள் கைகாட்டிய ஹல்திராம்ஸ் பாக்கெட்டுகளை மறுக்காமல் வாங்கி கொடுத்திருந்தேன்.  ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்தபிறகு, மூன்று பாக்கெட்டுகளையும் ஒருதரம் பார்த்து, ஒன்றை தேர்ந்தெடுத்தபின், "

"ஆச்சி, நாம ரெண்டு பேரும் ஷேர் பண்ணி சாப்பிடலாம். நாம ஃப்ரெண்ட்ஸ்.  எல்லா அம்மாவும், "அம்மா"னு கூப்பிடுன்னுதானே சொல்றாங்க....நீ? நீ என்னை ஃப்ரெண்ட் மாதிரிதானே வைச்சுக்கறே. you give me freedom right! "

அட! ஆமாம், அவளை ஒருநாளும் அம்மான்னு கூப்பிடுன்னு சொன்னதேயில்லை!! :‍-) :-)

அது இருக்கட்டும்! ‍வாங்கியதும், "உனக்கு - எனக்கு" என்று அடித்து பிடித்து - எடுத்துக்கொள்வதுதானே நமது குடும்ப கலாச்சாரம்! அவளிடம்,  "நீயெல்லாம் ஒரு அம்மாவா?" என்று திட்டு வாங்கினால்தானே, எனக்கு நிம்மதியாக இருக்கும்! இன்னைக்கு என்ன ஒரே ஃபீலிங்ஸ்!! ;-)

அதைவிட, எல்லா பாக்கெட்டுகளையும் தீர்த்தபிறகு, சொன்னதுதான் ஹைலைட்!

"ஆச்சி, இனிமே இதெல்லாம் வாங்க வேண்டாம்ப்பா! வாங்கவே கூடாது!!புரிஞ்சுதா!"

 
நூற்றாண்டுகள் என்பது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இப்போதுவரை, முழு ஆண்டையும் 'ஒன் தவுசண்ட் அன்ட் ..' அல்லது 'டூ தவுசண்ட் அன்ட் ...' என்று சொல்லிதான் பழக்கம். பல்லவர்களைப் பற்றி வேறு சமீபத்தில் பேச்சு வந்திருந்தது. அவர்கள் 8ஆம் நூற்றாண்டு என்றதும்,

"ஆச்சி, எனக்கு ரொம்ப புடிச்ச கிங்க்ஸ் அக்பரும், சிவாஜியும்தான். ஏன் ஆச்சி, நாம இயர்சை அக்பர் இயர்ஸ், ஜோதா இயர்ஸ், சிவாஜி இயர்ஸ், நர்சிம்ம பல்லவா இயர்ஸ்ன்னு வைச்சிக்கலாம் இல்ல. அப்போ 1350ன்னு சொல்றதை விட நல்லா இருக்கும் இல்ல. இதை, அப்படி வைச்சிக்கலாம்னு யாரும் யோசிக்கலையா?" -  பப்பு

"சொல்லுவாங்களே, 'அக்பர் காலத்துலே' இல்லேன்னா 'பாண்டியர்கள் காலத்துலே'ன்னு சொல்லுவாங்களே...அப்பன்னா என்ன அர்த்தம்...அவங்க இருந்த இயர்ஸ்ன்னுதானே அர்த்தம்."

"அது இல்ல ஆச்சி...இயர்சே இல்லாம, அப்படியே மாத்திட்டா நல்லா இருக்கும் இல்ல...ஈசியா"  - பப்பு

#நாட்டாம_தீர்ப்பை_மாத்து





 வேளச்சேரி ரயில் நிலையம். ஓடிப்போய் வரிசையில் இடம் பிடித்தவளால் பின்னுக்குத் தள்ளப்பட்ட ஒரு ஆன்ட்டி "ம்ம்...ஸ்மார்ட்டா நடந்துக்கறே" என்று சிரித்து, அவளையே முன்னால் நிற்க சொன்னார்.

சிரித்தபடி, பப்புவை பின்னுக்கு இழுத்து, 'நீங்க வாங்கிக்கோங்க' என்று அவரிடமும், "அவங்கதானே முன்னாடி வந்தாங்க' என்று பப்புவிடமும் சொல்லிவிட்டு, டிக்கெட் எடுத்து பெட்டியில் அமர்ந்தோம்.

எப்பவும்,வேகமா போய் இடம் பிடிக்க சொல்லும் ஆச்சி ஏன் இன்னைக்கு  ரொம்ம்ம்ப நல்லவளாட்டாம் ஆக்ட் பண்ணுது (?!)என்று குழம்பிய பப்பு கேட்டாள்,

"யூ குட் யூஸ் தட் ஆர்ப்பசுனிட்டி, ரைட்?"

;-)))