';

Internation play school

வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் Internation play schoolஎப்படி இருக்கிறது எனப் பார்க்க சென்றேன்.வீடு. வெளியே ஒரு பெரிய பேனர் இருந்தது.
மாடிப்படிக்கு அருகில் இருந்த இடத்தில் நாற்காலி போட்டு அமரச் சொன்னார்கள்.
பேச ஆரம்பித்தோம்..

"என் குழந்தைக்கு 2 வயது 8 மாதங்கள். உங்கள் பள்ளியைப் பற்றி சொல்லுங்கள்."

அந்த இன்ஸ்டரக்டர்/பெண்

"கோர்ஸ் ஃபீஸ் 18000. அதை நீங்கள் தவணை முறையில் கட்டலாம்..
6000..6000..6000. பள்ளி சீருடை, தண்ணீர் பாட்டில், பை, காலணி எல்லாம் நாங்கள்
கொடுத்து விடுவோம்"

ஷாக்!!!

டைமிங்ஸ் என?

ஒரு வருடம்.

!!!

இல்லை. ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம்?

காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை

ஒரு கிளாஸ்-க்கு எவ்வளவு பேர்? இப்போ எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

20-24 பேர். 30 பேர் இருக்கிறார்கள்.

குழந்தைகளை எப்படி எங்கேஜ் செய்கிறீர்கள்?

2 மணி நேரம் எழுத்துகள், எண்கள், பாடல்கள் சொல்லிக் கொடுப்போம்.
1 மணி நேரம் விளையாட்டு.

ஷாக்!!!

ஓ..இப்போவே எழுத்துகள், எண்கள் சொல்லிகொடுத்துவிடுவீர்களா?
ஒகே. என்ன விளையாட்டுகள்?

இரண்டு கார்கள், ஒரு ஊஞ்சல், ஒரு ரோலர்கோஸ்டர் இருக்கிறது.
அதில் விளையாட விடுவோம்.

ஷாக்!!!

நான் உங்கள் கிளாஸ் ரூம், விளையாடும் அறையை பார்க்க வேண்டும்.

சாரி. தனியாக வந்தால் அனுமதிக்கமாட்டோம். குழந்தையோடு வந்தால்தான் பார்க்க முடியும்.

ஷாக்..ஷாக்!!!

ஏன்..பார்த்தால் தானே எனக்கு ஒரு ஃபீல் வரும். முடிவு எடுக்க முடியும்.

இல்லை மேடம். இது எங்கள் ரூல்!! குழந்தையை அழைத்து வாருங்கள். அப்போது அனுமதிக்கிறோம்.

--------x--x--x-------

அந்த பெண், எடுத்தவுடன் ஃபீஸை பற்றி பணம் கட்டுவதுதான் முதலில் எனபது போல் பேசியதும் எனக்கு பிடிக்காமல் போயிற்று. அதுவும் ஒருவருடத்திற்கு 1800 டூ மச்!!!

கடைசி வரை அவள், ஆண்குழந்தை என்றே நினைத்து பேசியது அதைவிட எரிச்சல்.
ஆண்தானா என்றுகூட கேட்டுக் கொள்ளவில்லை!!

கிளாஸ்ரூமை பார்க்க விடாதது மேலும் கடுப்பு! அந்த வீட்டில், மாடிப்படி அருகே ஒரு சிறிய கேட் போட்டிருந்தது. ஹாலில் மட்டுமே கிளாஸ் நடக்க முடியும்.அதில் 30 பேர்!!

இதில் இப்போதே படிப்பு என்றால்...ஒரு ஒப்புவிக்கும் இயந்திரமாகவே மாற்றி விடுவார்கள்!!!

--------x--x--x-------

சரியான அணுகுமுறை இல்லாததாலும், போதுமான இடவசதி இல்லாததாலும், அந்த பள்ளி பப்புவை இழந்து விட்டது!!

Updations :

எனது வீட்டிற்கு அருகில் இருக்கும் இந்த கிளை புதிதாக தொடங்கப்பட்டதாக, நண்பர் மூலமாக அறியப் பெற்றேன். அந்தக்கிளயில் எனக்கேற்பப்பட்ட அனுபவமே இந்தப் பதிவு!
இதில் யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க பள்ளியின் பெயரும், சுட்டியும் நீக்கப்பட்டுள்ளது. ஒரு பெற்றோராக,
எனது உணர்வுகளை வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறேன். ஏனெனில், அவள் வளரும் சூழலை
நல்லதாக அமைத்துத் தர வேண்சிய கடமை எனக்கிருக்கிறது, without spoiling her childhood.

';

"கண்ணும் கண்ணும் " படத்திலிருந்து "பதினெட்டு வயசு பட்டாம்பூச்சி" என்ற பாடலை இப்போது எல்லா ம்யூஸிக் சானல்களிலும் ஒளிபரப்புகிறார்கள். ( கொஞ்சம் "உலக அழகி நாந்தான்" டைப் பாடல். )

பப்பு, "கரப்பான் பூச்சி-ன்னுதா, பட்டாம்பூச்சி-ன்னுதா அக்கா"!!

!!!

ரெஃபரன்ஸுக்காக பாடல்!



அவளது மாமா, கை வைக்காத நீளமான டீ சர்ட் ("பொல்லாதவன்" பாடலில் வரும் யோகி B போட்டிருப்பதைப் போல)
அணிந்திருந்தான்.

பப்பு அவனைப் பார்த்துவிட்டு, "மாமா, ஏன் குண்டு ட்ரெஸ் போட்டிருக்கான்?"

!!!

அவளது மாமாவை அடித்து விட்டாள். சிறிது நேரம் கழித்து, அவன் கடைக்கு செல்வதற்கு கதவைத் திறந்தான்.எப்போதும் பப்புவையும் அழைத்து செல்வது வழக்கம். இப்போது அடித்து விட்டதால், அவன் கூப்பிடவில்லை!!அவன் செல்வதை பார்த்த பப்பு, கதவருகில் சென்று sing song tone-ல் சொன்னாள்,

"இனிமே நான் உன்னை அடிக்க மாட்டேனே....கிள்ள மாட்டேனே"

வேறென்ன..சாதித்துவிட்டாள்!!!


கிண்டல் செய்யவோ, அடிக்கவோ சொல்லிக்கொடுப்பதில்லை யாரும்!! ஆனாலும்..

';

கமலின் "பார்த்த முதல் நாளே" பாடல் வந்த நாளிலிருந்து பப்புவுக்கு மிகவும் இஷ்டம்.
அவளுக்காகவே நாங்கள் சன் மியுசிக் சானலில் டீவியை வைத்திருப்போம்.அந்த பாடல் இசைக்க ஆரம்பித்த உடன் தலையை ஆட்டி ரசிப்பாள். இது ஒரு ஒன்றேகால் வயதிலிருந்து தொடர்ந்தது. பாடலில் அவர்கள் இருவரும் தண்ணீரில் குதிக்கும்போது,பாட்டு முடிய போது என்பாள், அந்த இசையை வைத்து!

யாராவது சானலை மாற்றிக்கொண்டிருக்கும்போது அந்த பாடல் வந்துவிட்டால், ஒரு மைக்ரோ செகண்ட் கேட்டால் கூட பாடலை வைக்க சொல்லுவாள். நாங்களும், அந்த பாடல் வரும்போது, அவள் வெளியில் இருந்தால் கூப்பிட்டுவிடுவோம். இது ஒரு இரண்டு வயது வரை தொடர்ந்தது!!
ஒரு நாள், அந்தபாடல் ஓடிக்கொண்டிருக்கும்போது,

"மாமா அக்காவ ஏன் தூக்கறாங்க"
"மாமா அக்காவ ஏன் தொரத்தறாங்க?"
"மாமா அக்காவ ஏன் தண்ணில தூக்கிப்போடாறங்க"

என்று கேட்க ஆரம்பித்தாள். அன்றிலிருந்து ஆரம்பித்தோம், அந்த பாடலுக்கு சென்சார் !!!


சின்னசிறு கேள்விகள்தான்..ஆனால் பப்புவின் வளர்ச்சிப்படிகளை எப்படி உணர்த்திவிடுகின்றன!!!

';

Mahia - பாடல்

ஃபார்வர்ட் மெயிலில் வந்த பாடல்.
IIT பெண் என்று ஒரு சிலரும், பாகிஸ்தான் பாடகி ஆனி என்று பலரும் இந்த பெண்ணின் பூர்விகம் பற்றி அடித்துக் கொள்கிறார்கள். யாராயிருந்தாலென்ன..
அந்த குரலும், பாடும் ஸ்டையிலும், நடன அசைவுகளும் நம்மை கட்டிப்போடுவதை மறுக்கமுடியாது!! தினமும் ஒரு தடவையாவது கேட்டு விடுவேன்!!




பாடல் வரிகள்
------------


i wish u could see urself the way i see ya
u shine juss like a star mahia
cuz ur my only pyar mahia

maine tujh ko he dil may basaya
tu hi mera pyar mahia X2

tu nay aisee adda say mujhay dekha
dil ho gya nisaar mahia
tu hi ha mera pyar mahia x2

tu nay aisee adda say mujhay dekha
dil ho gya nisaar mahia
tu hi ha mera pyar mahia x2

y dont u tell me mahi
ma mid at ease
how do u wish to see the loyalty in me
appnee wafa iqrar kya karoon
mar jaoon hudh ko jo tujh say juda karoon

tu nay aisee adda say mujhay dekha
dil ho gya nisaar mahia
tu hi ha mera pyar mahia x2

mahai u r i set ma soul on fire
i felt juss like a rose mahia
when i was in ur arms mahia

i cant imagine that like without u where i'd be
im ur lady i'll go where ever u take me
terey beghair jeenay ki khaish nahin
main terey saath hoon lay chal mujh ko kahin

tu nay aisee adda say mujhay dekha
dil ho gya nisaar mahia
tu hi ha mera pyar mahia x2

mahia ur i set ma soul on fire
i felt juss like a rose mahia
when i was in ur arms mahia

i don't care where we go or stay or wut we do
ill take u r bain consider becuz i love u
jaisay bhi haal main rakhoo gay main rahoon
dukh bhi milay to pyar main haans kay sahoon

tu nay aisee adda say mujhay dekha
dil ho gya nisaar mahia
tu hi ha mera pyar mahia x2

i wish u could see urself the way i see ya
u shine juss like a tar mahia
ur my only pyar mahia

maine tujhh ko he dil may bhasaya
tu hi mera pyar mahia X2

mahai ur i set ma soul on fire
i felt juss like a rose mahia
when i was in ur arms mahia

';

பப்புஸ் டே அவுட்

மருத்துவமனையில் :

சளி பிடித்திருந்ததனால் பப்புவின் மருத்துவரிடம் போயிருந்தோம்.
எங்களுக்கு முன் சென்ற குழந்தை உள்ளே அழுதுக்கொண்டிருந்தது.
எங்கே பப்புவும் அழுவாளோ என நினைத்தேன்.
ஸ்டெத் வைத்து பார்த்தார். காதில் வைத்து வெப்பநிலையை கண்டறிந்தார்.
பப்பு மறுப்பேதும் சொல்லாது அவர் திரும்பசொன்னபோது திரும்பி, சொல்வதையெல்லாம் கேட்டாள். மருந்துகள் எழுதிகொடுத்தார்.

பில் வாங்கும்போது, பப்பு டாக்டரிடம்,

"டாக்டர், ஊசி போடு, டாக்டர்"

"ஊசி போடுங்கன்னு சொல்லு!!" - நான்.

"டாக்டர், ஊசி போடுங்க, டாக்டர்"

"ஊசியா..நாலு வயசுக்கு மேலதான் ஊசி உனக்கு" - டாக்டர்.

கடைசிவரை அவள் இருக்கையிலிருந்து எழுந்துக்கொள்ளாமல்,
அவரை ஊசி போட சொல்லிகொண்டிருந்தாள். கூப்பிட்டாலும் வரவில்லை.
டாக்டர் "நீங்க போங்கம்மா, அவள் தானா வருவாள்" என்றார்.
நாங்கள் எழுந்து வந்துவிட்டோம். அடுத்ததாக இருந்தவர்க்ளும் உள்ளே சென்றபின்னரும் பப்பு வரக்காணோம்.
பிறகு கதவை திறந்து கூட்டி வரும்படி ஆயிற்று.

நல்லா சாப்பிடலன்னா, டாக்டரிகிட்ட போய் ஊசிதான் போடனும் என்று அடிக்கடி சொன்னதன் விளைவு இது!!

உணவகத்தில் :

பப்புவின் முதல் பஃப்பே லஞ்ச். ஒன்லி வெஜிடபிள்ஸ் - கேரட்டும், பீட்ரூட்டும்.
கொஞ்சம் பிரியாணி மற்றும் சூப்! மற்றபடி, வேடிக்கை பார்த்தபடி!!

கடையில் :

குழந்தைகள் பிரிவில் சென்றதும் நான் அவளுக்கான துணிகளை பார்த்து, விலைகளை பார்த்துக்கொண்டிருந்தேன்.பொம்மைகள், சிடி, மற்றும் விளையாட்டுபொருட்களையும் பார்த்து, அவளிடம் இங்க பாரு, இது நல்லாயிருக்கா என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன். ( ஆனால் ஒன்றும் வாங்கவில்லை..அது வேறு விஷயம்!)





அவளும் ஒரு கரடிபொம்மையை எடுத்துக்கொண்டு, என்னைப் போலவே ஓவ்வொரு பிரிவாகச் சென்று கரடிபொம்மையுடன் பேசிகொண்டிருந்தாள்....அருகே சென்று அவளுடய சிந்தனையை கலைக்க மனமில்லாமல்..கிளிக்கிக்கொண்டேன்!!

';

பப்பு-சைக்கிள்-நான்

பப்புவின் முதல் சைக்கிள் மியூஸியத்தில் வைக்கும் நிலையையடைந்தது, ஒன்றரை வருடங்களுக்கு பிறகு.அவள் எவ்வளவோ முயற்சித்தாள், சீட்டை பிரித்தெடுப்பதற்கு! கடைசிவரை முடியவில்லை!!

வேளச்சேரி பை-பாஸ் ரோட்டில் இருக்கிரது BSA சைக்கிள் கடை. குட்டீஸ் ட்ரை-சைக்கிளிலிருந்து, ட்ரெட்மில் வரை கிடைக்கிறது. பப்புவை அழைத்து சென்றதால், உயரம் , பெடலிங் எல்லாம் பார்த்து முடிவு செய்ய வசதியாயிற்று!

பேக் செய்வதற்காகக் கூட, சைக்கிளை விட்டு இறங்கமறுத்துவிட்டாள்!!
அந்த மாடலில் மற்றொன்றை வெளியில் நிறுத்தியபோதும், அந்த சைக்கிளை விட்டு ம்ஹூம்..இறங்கவேயில்லை!

வீட்டிற்கு வந்தபின், சீரியஸாக குனிந்து சைக்கிள் பாரில் இருந்த காற்றுகுமிழ் பேப்பரை ஒவ்வொன்றாக உடைக்க துவங்கியிருந்தாள்!!

ஃப்ளாஷ்பாக்

முதல் சைக்கிள் என் பன்னிரண்டாம் வயதில் கிடைத்தது. BSA SLR பெண்கள் சைக்கிள்.
அதை வாங்குவதற்க்கு நான் போகவேண்டியிருக்கவில்லை! நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் வரை என்னிடம் இருந்தது. அதன் விலை பப்புவின் தற்போதைய
சைக்கிள் விலையில் பாதி!!

';

gestures

ப்பு ஊஞ்சலில் அமர்ந்து ரைம்ஸ் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அருகில் நின்றுக் கொண்டிருந்த என்னை அமர சொன்னாள்.
காலை நேரம்....கிளம்ப வேண்டும்...ம்ம்ம்....சிறிது நேரம் அவளுடன்
அமர்ந்தபின், சரி, நான் போய் கிளம்பறேன்" என்றேன்.

உடனே என் மடியில் படுத்து கொண்டு,
"நீ இப்ப போக முடியாது" என்ற போது வாயடைத்து போனது!!


(ஒன்றரை வருடத்திற்கு முன்பு வாங்கிய ரைம்ஸ் சிடி, இப்போது புண்ணியம்
கட்டிக்கொள்கிறது, அவள் கவனத்தை திசை திருப்ப! )




"பீஸ் போகாதே" என்று காலியிலிருந்து அழுகை. (திங்கள் கிழமை காலை!!)

ஆபீஸ் வருவதற்காக கிளம்பி கதவருகில் நின்றேன். பப்பு
திடீரென ஓடி வந்து கிரில் கதவில் கால் வைத்து ஏறி இரண்டு கதவுகளையும்
சிரமப்பட்டு இணைத்து தாழ்ப்பாள் போட்டுவிட்டு, என்னை திரும்பி பார்த்து
சிரித்த போது எனக்கும் தோன்றியது.. "போகத்தான் வேண்டுமா?"


Thanks baby, என் வாழ்வின் அவசியம் மிச்சமிருக்கிறது உன்னிடம்!!

';

ஐ ஸ்கிரீம்......

அலுவலக உணவுக்கூடத்தில் காதில் விழுந்தது இது:

இஸ்ரவேலில், குபா என்பது ஒரு தன்னிறைவு பெற்ற இடம். அதாவது, ஒருவருக்கு தேவையான எல்லாமே அந்த ஒரு இடத்திலேயே கிடைத்து விடும். ஒரு ஏரியா போன்ற இடம், ஆனால் வேறு எங்கும் சார்ந்து இருக்கத் தேவையின்றி! அது போல பல குபாக்கள் இருக்குமாம்.

வேளச்சேரியும் ஒரு குபா போலவே!! you name it and you have it..and the latest addition is Baskin Robbins with dazzling pink!!

அடையார் எனக்கு ஒரு சில காரணங்களுக்காக பிடிக்கும். கிராண்ட் ஸ்வீட்ஸ், கோகுல் ஆர்கேட் லெண்டிங் லைப்ரரி இன்னும் பிற. அதில் ஒன்று பாஸ்கின் ராபின்ஸ்.

flashback :
பப்புவின் முதல் ஸ்பூன் Baskin Robbins-லிருந்துதான்!!

ப்ராஜக்ட்டுக்காக, ஐந்து வருடங்களுக்கு முன் சென்னை வந்த புதிதில்தான் அடையார் baskin Robbins அறிமுகம். Baskin 31 Robbins இருக்கும் 31 என்பது வெரைட்டி
என நினைத்துக்கொள்வேன். ஒரு ஸ்கூப் 30 ரூபாய். அப்போது என் பேவரிட் banana split. அதுவும் டாப்பிங்....மேலே ஊற்றப்படும் சாஸ் நம்ம சாய்ஸ்.
ஒருமுறை பபிள்கம் ஐஸ்கிரீம் என்று சாப்பிட்டிருக்கிறேன்..பபிள்கம் போல, கொஞ்சம் chewy--ஆக குட்டி குட்டி துண்டுகள் இருக்கும்.yummy!!அதற்குப்பின் அந்த ப்ளேவர் கிடைக்கவே இல்லை..

ஓக்கே..ப்ளாஷ்பேக் ஓவர்!!

வேளச்சேரி கிளை கொஞ்சம் சிறியதுதான்! பப்புவுக்கு சாக்லேட் ஆல்மண்ட் மிகவும் பிடித்திருந்தது. பிளாக் கரண்ட் அண்ட் ப்ரூட் ஓவர்லோடட்-ம் நன்றாக இருந்தது.

டேஸ்ட் பார்க்க ஒரு ஸ்பூனில் கொஞ்சம் கொடுப்பார்கள்.
நாம் டேஸ்ட் பார்த்து தெரிவு செய்து ஆர்டர் கொடுக்கலாம்!!
ஒரு ஸ்கூப் 40 ரூபாய். வாட் எக்ஸ்ட்ரா!

';

மகளிர் மட்டும்!!

எப்போதும் ஆண்கள் டீ சர்ட்தான் கிடைக்கும், ரிலீஸ் முடிஞ்சாலும் சரி, இல்ல ஆனுவல் ஃபங்ஷன்னாலும் சரி!!அதுவும் நம்ம சைசுக்கு இருக்காது. உள்ள நாலு பேர் புகுந்துக்கலாம் போல இருக்கும்.என்ன பண்றது..அத வாங்கி ரங்கமணிக்கோ, தம்பிக்கோ குடுக்க வேண்டியதுதான்!

போன தடவை தாங்க முடியாம கம்பெளெய்ன் பண்ணினதோட பலன் இப்போ WestSide-லேர்ந்து சல்வார் டாப்ஸ்.இதுவும் நாங்களே போய் செலக்ட் செஞ்சதுதான். மூணு ஷேட்ஸ்...பிஞ்க், பச்சை மற்றும் வெந்தயக் கலர். அதுல,ஸ்லீவ்-ல கம்பெனி லோகோ போட்டிருக்கு. (ஒரு தடவை உடுத்திக்கிட்டு, மெகா ஸ்லீவ்ஸ் ஆக்கிடலாமான்னு ஒரு யோசனை ;-)!!)

ஒரே மாதிரி எங்க கிடைக்கும்னு பார்த்தா, இந்த மூணுதான் தேறுச்சு.
1. Fabindia
2. Westside
3. Anokhi


Fabindia-ல ஒரே மாதிரி உடனே கிடைக்காது. ஆனா, டைம் கொடுத்தா (மினிமம் 2 வாரம்), நம்ம measurementக்கேத்தமாதிரி கிடைக்கும். இது வுட்ஸ் ரோடு கிளைல விசாரித்தபோது தெரிந்தது. அடுத்தவருடம் கண்டிப்பா இங்கதான். (கம்பெனி இருந்தா!!)
ம்ம்..பட்டு டாப்ஸ் எல்லாம் ரொம்ப அழகா இருந்தது!! எல்லாமே பொதுவாக பார்ட்டி வேர் மாதிரி. தனியா ஒரு படையெடுப்பு நடத்தனும்!!


Westside-ல (Spencer Plaza) புது ஸ்டாக் வந்தாதான் தெரியும்னு சொன்னாங்க. கண்டிப்பா 20க்கு மேல வேறவேற சைஸ்களிலும் கிடைக்கும்னும் சொன்னாங்க. ஆனா ரெண்டு நாளாகும். ஓக்கே..ரெண்டுநாள்-னா பொறுத்துக்கலாம்.

Anokhi - இது ஆழ்வார்பேட்டைல இருக்கும் பொட்டிக். ஆனா, எல்லாம் பிரிண்டட் மாடல். plain fabric-ல இல்ல.

ஒதுக்கப்பட்ட நிதி - 600 ரூபாய் ஒருவருக்கு.
ஆனால், ரூ 499க்கு WestSide-லே கிடைத்துவிட்டது.

பப்புஸ்பீக்

பப்புவுக்கு ஒரு ஸ்லைஸ் பிரட் கொடுத்தேன். சில சமயங்களில் வெறும் பிரட்டை அப்படியே,
சாப்பிடுவாள்.

"ஆச்சி, ஜாம் வேணும்"

(ஜாம் பாட்டிலை கண்ணில் காட்டாமல்)தடவியாயிற்று.

"ஆச்சி, ஜாம் வேணும்"

பிரட்டில் இருந்த ஜாமை எல்லாம் கையால் சுரண்டி சுரண்டி..

"பப்பு, அப்படி செய்யக் கூடாது. எறும்பு கையை கடிக்கும், டர்ட்டி..டர்ட்டி.. மடிச்சு சாப்பிடு"


ம்ஹூம், கேட்டபாடில்லை. ஜாம்தான் காலியாகிக்கொண்டிருந்தது.

"அவ்ளோதான், ஜாம் காலியாயிடுச்சு"

பிரட் சாப்பிட்டபின், இன்னொரு ஸ்லைஸ் கேட்டாள். அதில், ஜாம் தடவியிருந்ததை பார்த்து கேட்டாள்,

"கொஞ்சூண்டு ஜாம் இருந்துதா ஆச்சி.."


ஓ காட்...நீ எவ்ளோ innocentடா..(உன்னை போய் ஏமாத்தறேனே)!!

';

நீயா நானா @ விஜய் டீவி

விஜய் டீவியின்,"நீயா நானா" வில் கடந்தவார விவாதம் மணமகள் Vs மணமகன்.
வரன் தேடும் மணமகன்களும் மணமகள்களும்.
பேச்சு சுவராசியமானதாக இருந்தது எப்போதும்போலவே.

"நீங்கள் மணமகளி/னின் ப்ரொபைல் பார்க்கும் போது, முதலில் பார்க்கும் மூன்று முக்கிய விஷயங்கள் என்ன ?" என கோபி கேட்டபோது வேலை,சம்பளம், குடும்பம்,சாதி, ஊர் etc என்று இரண்டு பக்கங்களிலிருந்தும் கூறினர்.

அந்த சமயத்தில், "சாதி எவ்ளோ பேர் முக்கியமா பார்ப்பீங்க" என்ற போது, சிலர் பதில் கூறினர். இதில், ஒருவர் மட்டும், "நான் கண்டிப்பா சாதி பார்ப்பேன், ஏன்னா நான் பிராமின். வேறயா இருந்தா வெஜிடேரியனான்னு தெரியாது"என்றார். பெண்கள் பகுதியில் ஒரு பெண்ணும், "நான் பிராமின். ஆனா வேற சாதியிலதான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்றார்.

இதில், என்னை உறுத்திய விஷயம் என்னவெனில், எல்லாருக்குமே வாய்ப்பு கொடுக்கப்பட்டு, எல்லாருமே அவரது விருப்பு/வெறுப்புகளை பேசினர். ஆனால் இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் அவரவர் சாதியை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

அவர்கள் மட்டும் "நான் பிராமின்" என தம் சாதியை பொதுவான சபையில் சொல்லிக் கொள்ள வைத்தது எது அல்லது யார்?

நிகழ்ச்சியில் பேசின மற்றவர்கள் யாரும் தம் சாதியை சொல்லிக்கொள்ளவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. அவர்களை தம் சாதியை சொல்லாமல் மவுனம் காக்க வைத்தது எது அல்லது யார்?

';

பப்பு - Word Power

தமிழ்நாடு சென்னை
கர்நாடகா - பெங்களூரு
மகாராஷ்ட்ரா - மும்பை
கோவா - பாலாஜி

பனாஜி..

பாலாஜி!

பி.கு:
பப்பு மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள் சரியாக சொல்கிறாள்.
And she intentionaly says panaji as balaji.



(பப்பு @ 11 மாதங்களில்)


பப்பு, ஏன் அத்தைய கிள்ளறே?

"சும்மா, விளையாட்டுக்கு!"

(புதிதாக, இப்பொழுது, பாராட்ட கற்றுக்கொண்டிருக்கிறாள். )

"ஆ..சூப்பரா இருக்கே...!" - நான் படுக்கைவிரிப்பை மாற்றிய போது!

"இந்த ட்ரெஸ் நல்லா இருக்கே!" - என் புது உடுப்பை பார்த்து!


வார்த்தையை கற்றுக்கொள்வது ஆச்சரியமாய் இருக்கிறது அதைவிட,
சரியான வார்த்தையை சரியான நேரத்தில் உபயோகிக்கும் விதம் இன்னும் ஆச்சரியமாய்
இருக்கிறது!!

';

பப்புவுக்கு ஏதாவது கார்ட்டூன் ஷோ வைக்கலாம் என்று சுட்டி டீவிக்கு மாறியபோது,
ஒளிபரப்பப்பட்டிருந்தது..'குளோரியாவின் வீடு"! வாவ்..பாத்திரப் படைப்புகள், நகைக்க
வைக்கும் குரல்கள் - குழந்தைகளுக்கு மட்டுமில்லை..எல்லா வயதினருக்கும்
ஏற்றதான ஒரு கார்ட்டூன் ஷோ!



முக்கிய கதாபாத்திரம் "குளோரியா". அவர்களது அண்டை வீட்டார் ஷோபி குடும்பத்தார். நகரத்தில் குடியேறும் குளொரியாவின் குடும்பத்தினர் சந்திக்கும் அன்றாட நிகழ்ச்சிகள்.குளோரியாவும், ஷோபியும் ஒரே வகுப்பு. குளோரியாவின் அக்காவுக்கு எப்போதும் ரூட் விட்டுக்கொண்டு அலையும் ஷோபியின் அண்ணன். இரு குடும்பங்களும் பழக வேண்டிய சூழல். ஷோபியின் லைஃப் ஸ்டைல்-கு நேர் மாறானது குளோரியாவின் லைஃப் ஸ்டைல்.சுவாரசியம் கூட்ட, குளோரியாவின் அப்பா ஒரு விஞ்ஞானி. அதாவது, வித்தியாசமான உபயோகப்பொருட்கள்.மீனு என்றொரு பூனை வேறு.






ஒவ்வொரு எபிசோடும் ஒரு நல்ல முடிவோடு இருக்கும். நட்சத்திரங்களுக்கு கீழ், குளோரியா மீனுவோடு,அன்று வாழ்க்கை கற்றுக்கொடுத்ததை அசை போடுவதாய் முடியும்.
இப்போது நான் குளோரியாவின் ரசிகை! முக்கியமாய் அந்த கதாபாத்திரங்களின் குரல்.

என்ன..பப்புவா..ம்ம்..அவள் எப்போதும் போல், யெஸ்யெஸ்/இசையருவி அல்லது சன் மியுசிக்கில் பொல்லாதவன் ரீ-மிக்ஸையோ, கத்தாழ கண்ணாலயோ பார்த்து கொண்டிருப்பாள்.

நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம் : திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணிக்கு!